articles

img

இந்தியா ‘மாநிலங்களின் ஒன்றியம்’ என்பதைப் பாதுகாத்திட ஒன்றுபடுவோம்!

கூட்டாட்சித் தத்துவத்தையும்,  மாநிலங்களின் உரிமைகளையும் பாதுகாத்திட நாட்டிலுள்ள அனைத்து ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றுபட்ட நிலைபாட்டினை மேற்கொள்வது கட்டாயமாகும். இந்தத் திசைவழியில் பாஜக அல்லாத அனைத்து முதலமைச்சர்களின் மாநாடு காலத்தே எடுக்கப்பட்டுள்ள அவசியமான நடவடிக்கையாகும்.

ஒன்றிய-மாநில உறவுகளின்மீது மோடி அரசாங்கம் மேற்கொண்டுவரும் தாக்குதல் களை முறியடித்திடவும், கூட்டாட்சித் தத்து வத்தின் கீழ் இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என்னும் அமைப்புமுறையைப் பாதுகாத்திடுவதற்கு ஓர் ஒன்றுபட்ட நிலைப்பாட்டின் அவசியம் குறித்தும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்க ளில் சிலர் விவாதங்களை மேற்கொண்டிருக்கிறார்கள். மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாத்திட மாநில அரசுகளின் ஒன்றுபட்ட நிலைபாட்டுக்கான தேவை என்பதை மிகைப்படுத்தப்பட்ட ஒன்று எனக்கூற முடியாது. மோடி அரசாங்கம், தன்னுடைய இரண்டா வது முறையிலமைந்த ஆட்சிக்காலத்தில், நாட்டின் அனைத்து அதிகாரங்களையும் மத்தியத்துவப்படுத்தி, தன் கைகளுக்குள் கொண்டு வருவதற்கான நட வடிக்கைகளை முடுக்கி விட்டிருக்கிறது. ஒன்றிய அரசின் அட்டூழியங்கள் மாநில அரசின் எந்தத் துறை யையும் விட்டுவைக்கவில்லை. 

மிக மோசமான நடவடிக்கை

இவற்றில் மிகவும் மோசமான நடவடிக்கை என்பது ஒன்றிய அரசு, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைக் கலைத்தது என்பதாகும். காஷ்மீரையே இரு கூறு களாக்கி இரு யூனியன் பிரதேசங்களாக மாற்றிய மைத்தது. அரசமைப்புச்சட்டம் மாநிலங்களுக்கு வரி  வசூலிப்பதற்காக அளித்துள்ள பல்வேறு அதிகாரங்க ளையும், பெட்ரோலியப் பொருட்களின் மீது சர்சார்ஜ் வரிகள் மற்றும் செஸ் வரிகள் விதிப்பது போன்ற பல்வேறு அதிகாரங்களையும் ஒவ்வொன்றாகப் பறித்துக் கொண்டிருக்கிறது. நிதி ஆணையத்தின் விதி முறைகளையும் ஒன்றிய அரசு தன் நிகழ்ச்சிநிரலுக்கு ஏற்ப மாற்றி அமைத்திருக்கிறது. முன்பு நிறைவேற்றப்பட்ட (இப்போது ரத்து செய்யப் பட்டுள்ள)  மூன்று வேளாண் சட்டங்களும் வேளாண் சந்தைகளை மாநில அரசுகளின் பட்டியலில் இருந்ததை, ஒன்றிய அரசின் வசம் எடுத்துக்கொண்டி ருந்தது.  புதிய கல்விக் கொள்கை கல்வியை பல்வேறு மட்டங்களிலும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதைப் பிரதிபலிக்கிறது. பாஜக அல்லாத மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள் அம்மாநிலங்களில் ஆட்சி புரியும் அரசுகளுக்கு எதிராக, ஒன்றிய அரசின் ஏஜண்டாகவே செயல்படும் போக்கு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. 

அண்மைக்கால அடாவடி

இதில் சமீபத்திய முன்மொழிவு, மாநிலங்களில் பணியாற்றும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை, மாநில அரசாங்கங்களைக் கேட்காமலேயே ஒன்றிய அரசுக்கு எடுத்துக்கொள்ளும் விதத்தில் அகில இந்திய பணி விதிகளில் மாற்றத்தைக் கொண்டுவர முன்வந்திருப்பதாகும். இவ்வாறு ஒன்றிய அரசின் பட்டியலுக்கு முடிவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. மாநில அரசாங்கங்களின் நிதி நிலைமைகள், பொருளாதாரம் மற்றும் சட்டமன்ற உரிமைகள் அனைத்தையும் பாதிக்கும் விதத்தில் கூட்டாட்சித் தத்துவத்தின் மீது பொதுவான தாக்கு தல் தொடுக்கப்பட்டிருக்கிறது.

தில்லி பிரதேச உரிமை பறிப்பு

மேலும் வித்தியாசமான அரசியலுடன் செயல்படும் சில மாநில அரசாங்கங்கள் மீது, அல்லது ஒன்றிய அரசின் கட்டளைகளைப் பின்பற்றாத அரசுகளின் மீது, குறிவைத்துத் தாக்குதல்கள் தொடுக்கப்படுகின்றன.  இவ்விருவிதமான தாக்குதல்களுக்கும் எதிராக, பாஜக அல்லாத மாநில அரசாங்கங்கள் ஒன்றுபட வேண்டியது அவசியமாகும். 2021 ஏப்ரலில் ஒன்றிய அரசு, தில்லி -  தேசிய தலைநகர் பிரதேச சட்டத்தில் (National Capital Territory of Delhi Act) திருத்தங்க ளைக் கொண்டுவந்து, தில்லி அரசாங்கத்தின் அதி காரத்தை துணை ஆளுநருக்கு மாற்றியும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தில்லி மாநில அரசாங்கத்தின் அதிகாரங்களை செல்லாததாக்கியும் நடவடிக்கை எடுத்தபோது, இவ்வாறான தாக்குதல் தில்லியில் ஆட்சி செய்து வந்த ஆம்ஆத்மி அரசாங்கத்தின் மீதான தாக்குதல் மட்டுமல்ல, மாறாக இது அரசமைப்புச் சட்டத்தின் கீழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கத்தின் செயல்பாடுகளையே அடியோடு வெட்டிவீழ்த்தும் ஒரு நடவடிக்கை என்று பார்த்திருக்க வேண்டும்.  இவ்வாறு நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்தையும், மாநிலங்களின் உரிமைகளையும் பாதுகாத்திட நாட்டி லுள்ள அனைத்து ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றுபட்ட நிலைபாட்டினை மேற்கொள்வது கட்டாயமாகும். இந்தத் திசைவழியில் பாஜக அல்லாத அனைத்து முதலமைச்சர்களின் மாநாடு காலத்தே எடுக்கப்பட்டுள்ள அவசியமான நடவடிக்கையாகும்.

விலகிச் செல்லும் வழியில் கூடாது

இவ்வாறு கூட்டப்படும் முதலமைச்சர்களின் மாநாடு கூட்டாட்சித் தத்துவம் மற்றும் மாநிலங்களின் உரிமை கள் மீது மட்டுமே கவனம் செலுத்திட வேண்டும். மாறாக அது இத்தகைய மாநாடுகளைப் பயன்படுத்திக் கொண்டு அதில் பங்கேற்கும் கட்சிகளுக்குள்  அரசியல் கூட்டணிகளை  உருவாக்குவதற்காகப் பயன்படுத்தி,  கூட்டாட்சித் தத்துவம் மற்றும் மாநிலங்களின் உரிமை கள் மீதான பிரச்சனைகளின் முக்கியத்துவத்தை அரித்துவீழ்த்தும் விதத்தில் நடந்துகொள்ளக்கூடாது. அவ்வாறு செய்தால் அது எதிர்விளைவுகளையே ஏற்படுத்திடும்.  இந்த விதத்தில்தான் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, முதலமைச்சர்களின் மாநாட்டை, தான் விரும்பும்விதத்தில் மாநிலக் கட்சிகளின் மாற்றுக் கூட்டணியாக உருவாக்குவதற்கு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறார். இது, கூட்டாட்சித் தத்து வத்தைப் பாதுகாப்பதற்கான முக்கியமான நடவடிக்கை யிலிருந்து விலகிச் செல்வதற்கே இட்டுச்செல்லும். தெலுங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவ் பேசிடும் கூட்டாட்சி முன்னணியோ (federal front) அல்லது மம்தா பானர்ஜி தன்னுடைய தலைமையில் ஒரு மாற்றுக் கூட்டணி அமைய வேண்டும் என்று மேற்கொண்டிருக்கிற முயற்சியோ அந்தந்தக் கட்சிகளின் அரசியல் சங்கதிகளாகும். அதனை பாஜக அல்லாத மாநில அரசாங்க முதலமைச்சர்களின் மாநாடுகளுடன் கலந்திடக் கூடாது. நாட்டிலுள்ள பெரு முதலாளிகளின் தலைமையில் உள்ள ஆளும்  வர்க்கங்கள் ஆட்சி அதிகாரத்தை மத்தியில் குவிப்ப தற்கான முயற்சியில் பல பத்தாண்டுகளாக நடவடிக்கை கள் எடுத்து வருகின்றன. 

கூட்டு மேடையாக  அணிதிரள்வது அவசியம்

ஒன்றியத்தில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சியும் மாநில அரசாங்கங்களின் அதிகாரங்க ளை ஒன்றிய அரசில் குவித்திட பல்வேறு சமயங்களில் நடவடிக்கைகள் எடுத்தது என்பதும் உண்மையேயா கும். ஆனால், இப்போது, மாநிலங்களில் ஆட்சி செய் திடும் காங்கிரஸ் அரசாங்கங்கள்கூட, ஒன்றிய அரசின் இத்தகைய அதிகாரங்கள் குவிப்பு நடவடிக்கைகளால் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன. ஆகையால், பாஜக அல்லாத அனைத்து மாநில அரசாங்கங்களும் ஒரு கூட்டு மேடைக்காக அணிதிரள்வது அவசிய மாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறி வருவதைப் போன்று, கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான ஒன்றிய அரசின் தாக்குதலுக்கு எதிராக ஒரு விரிவான ஒற்றுமை யைக் கட்டி எழுப்புவதற்கான காலம் கனிந்திருக்கி றது. இந்தத் திசைவழியில் இதை மட்டுமே நிகழ்ச்சி நிரலில் முன்வைத்து  பாஜக அல்லாத முதலமைச்சர்க ளின் மாநாட்டைக் கூட்டுவது கட்டாயமாகும்.

(பிப்ரவரி 16, 2022), 
தமிழில் : ச.வீரமணி