articles

img

யோகி விளையாட கேரளம் கிடைக்காது! - கொடியேரி பாலகிருஷ்ணன்

இந்தியா எங்கே செல்கிறது? மிகவும் கவலை யளிக்கக்கூடிய இந்தக் கேள்விக்கு மிகவும் ஆபத்தான பதில்தான் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்தின்  கேரளத்தைக் காயப்படுத்துகிற நிலை பாடுகள். தேர்தல் பிரச்சாரச் சூட்டில் ஆலோசித்து உறுதிப்படுத்தி வெளியிட்ட வீடியோவில்தான் கேர ளத்தை அவமதிக்கிற வகையில் மோடி பேசியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடது ஜனநாயக முன்னணியும் தேசிய அளவில் பாஜகவிற்கு தத்து வார்த்த ரீதியிலும் மாற்று அரசியல் நடவடிக்கைகளி லும் சவால்விடுகின்ற வலிமையான இயக்கமாகும்.அத னால்தான் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித்ஷாக்க ளின் ஆதரவோடு யோகி கேரளத்தின் மீது தாக்குதல் தொடுக்கிறார்.  மக்கள் சமாதானத்துடன் வாழும் கேரளத்தை வன்முறை தேசமாகப் படம்பிடித்துக் காட்டியும் பாஜக -வை வெற்றிபெறச் செய்யாவிட்டால் உ.பி.,கேர ளத்தைப் போல் மாறிவிடும் என்றும் அச்சுறுத்தும் வகை யில் யோகி பேசியிருந்தார். நவீன காலத்தின் ஜொலிக் கும் ஒளியாகக் கேரளம் மாறியதையும் இங்கு நிலவும் சமூக-வளர்ச்சி முன்னேற்றத்தையும் சுட்டிக்காட்டி யோகியின் நிலைபாடுகளிலுள்ள வாய்மையற்ற தன் மையை முதலமைச்சர் பினராயி விஜயன் வெளிச்சம் போட்டுக் காட்டியிருந்தார். மதச்சார்பற்ற முற்போக்குச் சிந்தனையாளர்கள் அனைவரும் யோகியின் பேச்சை ஒரு பொருட்டாகவே கருதவில்லை.

கேரளத்தின் வளர்ச்சியைப் பட்டியலிட்டு சமாஜ் வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் யோகிக்கு பதி லுரைத்தார். ஆனால், இதையெல்லாம் செவி மடுக்கா மல் தனது நிலையிலேயே நின்று கொண்டிருக்கிறார். கேரள அரசின் குழப்பநிலையை நான் தெரிவிக்கிறேன் என்றும் ஷரியத் இந்திய அரசியலமைப்புச் சட்ட மல்ல என்றும் அவர் கூறினார். மலையாள தேசத்தை ஆட்சேபித்ததில் யோகிக்கு எந்தவொரு வருத்தமு மில்லை. உண்மையில் யோகிக்கு மட்டுமல்ல பிரதமர் முதல் மாநிலத்தின் பாஜக தலைவர்வரை கேரளம் என்றால் அவ்வளவு வெறுப்பு. இந்தியாவிற்கே ஒரு முன்மாதிரியான ஆட்சி நடத்துகிற இடது முன்னணி அரசை குற்றவாளிக்கூண்டில் ஏற்றுவதற்கு நூறு ஜென்மம் எடுத்தாலும் இவர்களால் முடியாது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும் ஷரியத்தையும் குறித்த அவர்களது விவகாரமான பேச்சுக்கள் ஹிஜாப் போன்ற விசயங்களில் வன்முறை அரசியலுக்குத் துணை போவதாகும். ஆடையின் பெயரால் கர்நாடகாவில் ஒரு சமூ கத்தைச் சார்ந்த மாணவர்கள் வகுப்பறை மற்றும் கல்வி நிலையங்களிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள். இதற்காக காவித்துண்டைக் கழுத்தில் சுற்றி சங்பரி வார் அமைப்பினர் கலவரம் செய்கிறார்கள். கழுத்துப் பட்டை அணிந்து வந்தவர்களைத் தாக்குவதற்கும் அவர்கள் துணிந்தார்கள். கர்நாடக பாஜக அரசு தாக்குதல் நடத்துபவர்களுக்கு உறுதுணையாக இருக் கிறது. பாஜக ஆட்சி நடைபெறும் மத்தியப்பிரதேசத்தில் ஹிஜாப்பிற்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரங்களை நடத்தினார்கள்.

உத்தரகண்ட் மாநில பாஜக முதல்வரோ மீண்டும் ஆட்சி அதிகாரம் கிடைத்தால் மாநிலத்தில் ஆடைகள் விசயத்தில் மட்டுமல்ல தனிமனிதச் சட்டத்தையும் மாற்றி ஒரே சிவில் சட்டத்தை நடப்பாக்குவோம் என்று அச்சுறுத்தினார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஹிஜாப் பிரச்சனைக்கு தங்கள் எதிர்ப்பைத் தெரியப்படுத்தினார்கள். இவ்வளவு நடந்த பிறகும் பிரதமர் நீண்ட மவுனத்தில் இருக்கிறார். இது இந்துத்துவ மதவாத சக்திகளின் வன்முறைகளை உற்சாகப்படுத்தும் செயலாகும். ஹிஜாப் எதிர்ப்புக் கூச்சல்களை நாடு முழுவதும் பரப்புவதற்கு மத்திய ஆளும்கட்சியும் அவர்களுக்கு ஆதரவளிக்கும் மதவாத சக்திகளும் பெரும் ஆர்வத் துடன் முயற்சிக்கும்போது கேரளம் அதை எவ்வாறு எதிர் கொள்கிறது என்பதை உலகம் உற்று நோக்குகிறது. ஹிஜாப் விவகாரம் நாட்டை பிளவுபடுத்துவதற்கான நிகழ்ச்சி நிரல் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் முதலமைச்சர் பினராயி விஜயனும் தெளிவுபடுத்தி னார்கள். 

எல்டிஎஃப் அரசின் நூறுநாள் செயல்திட்ட நிகழ்ச்சி யின் ஒரு பகுதியாக53 பள்ளிக்கூட கட்டிடங்களின் துவக்க நிகழ்ச்சியை திருவனந்தபுரம் பூவச்சலில்  பிப்ரவரி 10 ஆம் தேதி முதலமைச்சர் பினராயி விஜயன் துவக்கிவைத்தார். அந்த நிகழ்வானது ஹிஜாப் அணிந்த மாணவிகளின் வாழ்த்துப் பாடல்களுடன் துவங்கியது குறிப்பிடத்தக்கது. ஹிஜாப் எதிர்ப்பு என்ற பெயரில் மதவாத உணர்வுகளைத் தூண்டிவிட சங்பரிவார் சக்தி கள் ஆவேசத்துடன் களத்தில் இறங்கும்போது தனது செயல்பாடுகளால் எல்டிஎஃப் அரசு தக்க பதிலடி கொடுத்தது. மனித மேம்பாட்டைச் சொல்லி பாஜக வெற்றி பெற இயலாது. காரணம் அந்தத் துறைகளில் எல்லாம் பாஜக ஆட்சி நாட்டை பின்னுக்கு இழுத்துச் செல்கிறது. உத்தரப் பிரதேச மக்கள் தொகையின் 37.79 சதவீதம் பேர் பரம ஏழைகள் என்று நிதி ஆயோக் தெளிவுபடுத்தி யுள்ளது. இது கேரள மக்கள் தொகையின் மூன்று மடங் காகும். அதாவது ஒன்பது கோடி பேர். இந்தியாவில் பட்டினி மிகவும் குறைந்த மாநிலம் கேரளம் ஆகும். வெறும் 0.79 சதவீதம். மாநிலத்தில் மிகவும் ஏழையான வர்களைக் கண்டறிந்து அவர்களின் நிலையை மேம் படுத்துவதற்கான சிறப்புத் திட்டங்களை இரண்டாவது பினராயி விஜயன் அரசு நடைமுறைப்படுத்துகிறது. அதற்கான கணக்கெடுப்புகள் நிறைவடைந்துள்ளன. இதுவரையிலும் ஒரு லட்சத்திற்கும் குறைவானவர்கள் மட்டுமே அவ்வாறு கண்டறியப்பட்டுள்ளார்கள். தங்க ளது ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் பட்டினியின் நரகத்தைக் கட்டமைத்துள்ள பாஜக தலைவர்கள்தான் பொதுவாகப் பட்டினி இல்லாத கேரளத்தின் மீது வெறுப்பை விதைக்கிறார்கள்.

இந்த நிலையில் மனிதவள மேம்பாட்டுப் பட்டிய லில் போட்டியிட இயலாத மோடியும் யோகியும் அவர்க ளின் கூட்டாளிகளும் தேர்தலில் வெற்றிபெறுவதற்கு தீவிர மதவாதத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள். உத்த ரப்பிரதேசத்தின் மக்கள் தொகையில் இந்துக்கள் எண்பது சதவீதம், சிறுபான்மையினர் இருபது சதவீதம் என்ற விகிதத்தில் உள்ளனர். எனவேதான் மதவாதத் தைத் தூண்டிவிட முயற்சிக்கிறார்கள். இதற்கு வலுச் சேர்க்கத்தான் கர்நாடகாவில் ஹிஜாப் வேட்டையைத் துவங்கியுள்ளார்கள். இதன் மற்றொரு வடிவம்தான் இந்தியாவின் வானம்பாடி லதா மங்கேஷ்கரின் மறை விற்கு அஞ்சலி செலுத்திய ஷாரூக்கான் மங்கேஷ்கரின் உடல் மீது எச்சில் துப்பினார் என்ற பொய்ப் பிரச்சாரமும் மருத்துவ அறிவியல் துறையில் சரகர் உறுதிமொழி  கொண்டுவருவதும். ஷாரூக்கான் உலகமே போற்றக்கூடிய ஒரு மாபெரும் நடிகராவார். உலகம்போற்றும் ஈடு இணை யில்லாத இசைக்கலைஞரான லதா மங்கேஷ்கர்க்கு அஞ்சலி செலுத்தியபோது முகக் கவசத்தை அகற்றி விட்டு குரான் வசனத்தை உச்சரித்து பிரார்த்தனை செய்ததைத்தான் எச்சில் துப்பியதாக சங்பரிவாரைச் சேர்ந்தவர்கள் பொய்ப்பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டார்கள். நவீன மருத்துவத்தில் பட்டம் பெறுபவர் கள் இதுநாள்வரை ஹிப்போகிராட்டிக் பெயரில் உறுதி மொழி எடுப்பதுதான் வழக்கம். புகழ் பெற்ற கிரேக்க மருத்துவ அறிஞரான ஹிப்போகிராட்டின் பெயரிலான இந்த உறுதிமொழி 1948ஆம் ஆண்டு உலக மருத்துவக் கழகம், பொது சபை ஆகியவை இணைந்து ஜெனீவா வில் வடிவம் கொடுக்கப்பட்டதாகும். மனித நேயம், அர்ப் பணிப்பு, நோயாளிகளின் தனித்தன்மை ஆகியவற்றி ற்கு வலுச்சேர்ப்பதாக இந்த உறுதிமொழி அமைந்துள் ளது.

வயது, மதம், தேசியம், அரசியல் இவையெதை யும் பார்க்காமல் பாரபட்சமின்றி நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான அறிவைப் பகர்வதுதான் இந்த உறுதிமொழி. இதற்கு மிகப்பெரிய அர்த்தமுள்ளது. ஜெனீவாவில் உறுதிசெய்யப்பட்ட உறுதிமொழிக்குப் பதிலாக ‘சரகர் சபதம்’ ஏற்படுத்துவதற்கான தேசிய மருத்துவக் குழுவின் சிபாரிசு பொருத்தமற்றதாகும். சரகர் இந்தியத் தத்துவவியலில் பொருள்முதல்வாத நிறையிலுள்ள சிந்தனையாளர் ஆவார். ஆனால் பொருள்முதல்வாதத்தில் அல்ல அறிவியல் எதிர்ப்பில் உறுதியாக உள்ளதுதான் சரகர் சபதம்.  அதில் கிழக்கு திசைநோக்கி உறுதிமொழி எடுக்க வேண்டும் என்பது ஒன்று. பிராமண ஸ்துதி வேறு. பெண்களை அவரின் கணவர் அல்லது அவரின் உறவினர் முன்னிலையி லேயே பரிசோதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள் ளது. பெண்களை மருத்துவர் பரிசோதிக்கும் போது  வேறொரு பெண் அங்கு இருக்க வேண்டும் என்பது தான் தற்போதுள்ள விதி. அதை மாற்றி பெண்ணின் உற வினரான ஆண்களை பரிசோதனை அல்லது சிகிச்சை யின் போது சாட்சியாக இருக்கச் செய்வதென்பது பெண்களுக்கு எதிரானதும் தனிமனித சுதந்திரத்தைப் பறிப்பதுமாகும். இவ்வாறு சரகர் சபதம் இந்தியாவின் மானத்தைக் கெடுப்பதாக உள்ளது.

இவ்வாறாக பல்வேறு வகைகளில் இந்தியாவை இந்து நாடாக மாற்றி வீழ்ச்சியடையச் செய்வதற்கான நிகழ்ச்சி நிரலை பாஜக ஆட்சியும் அவர்களது நிழலில் வன்முறை சக்திகளாக வலம்வரும் சங்பரிவார் சக்திக ளும் தீவிரமாக நடைமுறைப்படுத்துகின்றன. சிறு பான்மையினர் மீது வெறுப்பை உமிழ்ந்து அச்சுறுத்தி அவர்களை அவமதிப்பதுதான் காவிக்கூட்டத்தின் கூட்டுச் செயல்முறையாகும். இத்தகைய நடவடிக்கை களுக்கு கேரள மண்ணில் இடம் கிடைக்காததினால் ஏற்பட்ட எரிச்சல்தான்  மீண்டும் மீண்டும் கேரளத்திற்கு எதிரான யோகியின் வாய்ச்சவடாலில் தெரிகிறது.  ஒரு  முஸ்லீம் பெண்ணோ அல்லது வேறு மதத்தைச் சார்ந்த வர்களோ எந்தவகையான ஆடைகளை அணிய வேண்டுமென்றும் தலைப்பாகை அணிய வேண்டுமா வேண்டாமா என்றும் தீர்மானிக்கும் உரிமை அவரவர்க ளுக்கு உள்ளதாகும். ஹிஜாப் பெண் சுதந்திரத்தின் ஆடையாகும் என்ற விவாதத்தைச் சிலர் நடத்துகிறார் கள். காவிப்படை ஹிஜாப்பின் பேரில் துள்ளிக் குதிக் கும்போது இத்தகைய விவாதங்கள் கொஞ்சமும் ஆறுதல் அளிப்பதல்ல.

தனிநபர் சட்டங்கள் இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை என்பதன் பலனாகும். நாட்டில் ஒரு நபர் சட்டம் என்ற ஆர்.எஸ்.எஸ்ஸின் சாசனம் சிறந்தது என்ற  தவறான கண்ணோட்டத்தை உருவாக்கப் பார்க்கிறார் கள். ஆனால் இன்றையச் சூழலில் இது இந்தியாவின் கலாச்சாரத்திற்கு ஊறுவிளைவிப்பதாகும். பலவண்ண மலர்கள் நிறைந்த பூங்காவைப் போன்றதாகும் இந்தியா. இந்த உலகமும் அவ்வாறுதான்.  இங்கு ஒரு மொழி, ஒரே வகையான ஆடைகள், உணவு பழக் கங்கள், திருமண முறைகள், நம்பிக்கைகள், வழிபாட்டு முறைகள் என்பது சாத்தியமல்ல. அதற்காக வற்புறுத்து வது அவர்களின் நம்பிக்கை சார்ந்த உரிமைகளை இல்லாமல் செய்வதாகும். அதனால்தான் இந்திய அரசி யலமைப்புச் சட்டத்தின் இருபத்தி ஐந்தாவது பிரிவு ஒருவர் அணியும் ஆடைகள் உள்பட பல்வேறு விசயங்க ளில் உள்ள வேறுபாடுகளை உறுதி செய்கிறது.

இங்கு ஒரு விசயத்தை நினைவுபடுத்த வேண்டி யுள்ளது. ஹிஜாப்பை மதவாத ’விஷத் தீ’ ஆக்குவ தற்கு சங்பரிவார் முயற்சிக்கும்போது மதச்சார்பின்மை யால் அதைத் தடுக்க வேண்டும். அல்லாமல் பதிலுக்கு தீவிர மதவாதத்தை பரப்புவதால் அல்ல.  ஆர்.எஸ்.எஸ்ஸின் ஒரே கலாச்சாரம் என்ற அறிவிப்புகள் பாசிசத்தின் ஊது குழல்களாகும். இந்த நிலைபாடு இருப்பதனால்தான் ஹிஜாப் விசயத்தில் கர்நாடகா வில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் இந்திய மாணவர் சங்கமும் ஆடை அணியும் சுதந்திரத் திற்காக வெளிப்படையான முகாம்களுடன் களத்தில் இறங்கின. மதச் சுதந்திரம், ஆடை-உணவு ஆகிய வற்றைத் தேர்ந்தெடுக்கும் உரிமை ஆகியவற்றை நமது அரசியலமைப்புச் சட்டத்தின் 25வது பிரிவு நமக்கு வழங்கியுள்ளது. இதை மீறுவதற்குத்தான் ஷரியத் என்ற பெயரில் அரசியலமைப்புச் சட்ட நெறிமுறை களை தகர்ப்பதற்கு யோகி அச்சுறுத்தல் பாணியைக் கையாளுகிறார்.

யோகி காவி உடையும் காவித் துண்டும் அணிவது, சீக்கியர்கள் டர்பன் அணிவது ஆகியவை பகத்கீதை, குருநானக் ஆகிய வேத நூல்களின் கூற்றுப்படி யல்ல. மாறாக இந்திய அரசியலமைப்பு வழங்கும்  சுதந்திரத்தின் அடிப்படையிலாகும். அதுபோல் பிற மதத்தைச் சார்ந்தவர்களுக்கும் இதுபோல் உரிமையை நமது அரசியமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது. ஒருவர் எந்த ஆடையை அணியவேண்டும் என்ற விசயத்தில் அத்துமீறி செயல்படுவது இந்தியாவைப் பிளவுபடுத்து வதற்கான வெறுப்பை ஏற்படுத்தும் விஷ விதையைத் தூவுவதாகும். யோகி மற்றும் அவர்களின் கூட்டாளி களின் இத்தகைய விளையாட்டுகளுக்கு கேரள மண்ணில் இடம் கிடைக்காது.

தேசாபிமானி (18.2.2022), 
தமிழாக்கம்: மு.சங்கரநயினார்