articles

img

பாபர் மசூதி இடிப்பைக் காட்டிலும் மிக மோசமான நிலையில் இந்தியா - க.உதயகுமார்

பாபர் மசூதியை இடித்து இன்று 30 ஆண்டுகள் ஆகின்றன .தற்போது ஞானவாபி மசூதியை இடிக்க அதே கூட்டத்தினர் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு சம்பவங்களுக்கும் இடையில் பல்வேறு வேறுபாடுகள் உள்ளன. பாபர் மசூதி இடிப்பு சம்பவத்திற்கு முன்னர் தான் 1991இல் வழிபாட்டுத்தலங்கள் சட்டம் இயற்றப் பட்டது.  இந்த சட்டத்தின்படி 1947இல் வழிபாட்டுத் தலங்கள் என்ன நிலையில் இருந்தனவோ அதே நிலை தொடர வேண்டும். யாராவது ஒரு பிரச்சனை யைக் கிளப்பினால் நீதிமன்றங்கள் வழக்குகளை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று சட்டம் தெளிவாக கூறு கிறது. ஆனால் இந்தச் சட்டம் பாபர் மசூதி பிரச்ச னைக்குப் பொருந்தாது என்பது அன்றிருந்த நிலை. இருப்பினும் வழிபாட்டுத் தலங்கள் சட்டம் குறித்து உச்சநீதிமன்றம் வெகுவாக பாராட்டியது .இந்த சட்டம் நமது அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படை விழுமியங்களை பாதுகாக்க உதவியாக இருக்கு மென உச்சநீதிமன்றம் கருதியது. இந்த சட்டம் குறித்து கருத்து தெரிவித்த 5 நீதிபதிகள் கொண்ட  பெஞ்ச் வழிபாட்டுத் தலங்கள் சட்டம் நமது அரசியல் அமைப்புச் சட்டத்தின் நமது நாட்டின் மதச்சார்பற்றத் தன்மையை பாதுகாத்திட உதவுமென புகழாரம் சூட்டியது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்தச் சட்டத்தை புகழ்ந்துரைத்து  மூன்று ஆண்டுகள் தான் ஆகின்றன. அதற்குள் இந்த சட்டத்தை பயனற்றதாக செய்யும் வகை யிலும் நம் எல்லோரையும் கவலையில் ஆழ்த்தும் வகை யிலும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஞானவாபி பிரச்சனையை மீண்டும் கிளறுவது என்பது ‘பண்டோரா பாக்ஸை’ (தீமைகளின் பெட்டி) திறக்கும் கதை தான்.  இந்தியாவில் உள்ள குதுப்மி னார் உள்ளிட்ட இதர கோயில்களைப் பற்றியும் சர்ச்சை களைக் கிளப்பி மிகப்பெரிய அளவில் மத வெறி அரசி யலைக் கிளப்பிடவே இந்த பிரச்சனை தூண்டு கோலாக அமையும். அயோத்திப் பிரச்சனை வந்த பிறகு 1991 இல் கொண்டுவரப்பட்ட சட்டத்தின் நோக்கம் இந்தியாவில் இதுபோன்ற பிரச்சனைகள் மீண்டும் எழுப்பப்பட்டு மதக் கலவரம் ஏற்படக் கூடாது என்பதை கருத்தில் கொண்டுதான். 30 ஆண்டுகளுக்குப் பிறகு அயோத்திப் பிரச்சனை யில் பல கொடூர வன்முறைகளைப் பார்த்த நாம்,  ஞானவாபி பிரச்சனையை மீண்டும் கிளப்பிட  அனு மதித்தால்,  நமது அரசியல் அமைப்புச் சட்டம் தீர்வு கண்ட ஒரு பிரச்சனையை மீண்டும் கிளப்புவது என்பது போலாகும்.

இந்தியாவின் ஜனநாயக நிறுவனங்கள் தற்போது அயோத்தியா போன்ற பிரச்சனைகளை கிளப்பாமல் தடுக்கின்றன. இன்றைய நவீன அமைப்புகள்தான் ஜன நாயகத்தையும், கும்பல் ஆட்சியையும் பிரித்து வைத்துள்ளன. இந்தியாவின் சுதந்திரமான அமைப்பு கள்,  அரசு நிர்வாகம் தவறு செய்யும்போது அதை தடுத்து நிறுத்த அரசியல் சட்டத்தை பயன்படுத்துகின்றன. ஆனால் இந்தியாவில் இத்தகைய ஜனநாயக அமைப்புகளின் சுதந்திரத் தன்மை மேலும் மேலும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. இந்தியா தற்போது ஒரு தேர்தல் எதேச்சதிகாரம் நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது .   பத்திரிகை சுதந்திரம் என்ன நிலையில் உள்ளது என்று ஆய்வு செய்யும்போது 180 நாடுகளில் 30 மோசமான நாடு களின் பட்டியலில் இந்தியா இடம் பெற்றுள்ளது. 2015க்கு பிறகு இந்தியாவின் ஜனநாயகத்தன்மை வெகுவாகக் குறைந்து வருகிறது என இத்தகைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஞானவாபி பிரச்ச னையை மீண்டும் கிளப்பினால் அதனால் ஏற்படும் பாதிப்புகளை தடுத்து நிறுத்த இன்றைய ஜனநாயக அமைப்புகளுக்குப் போதுமான வலு இல்லை. அயோத்தியாவில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது பொருளாதார தாராளமய கொள்கையின் விளைவுகள் பெரிய பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. தாராள மய பொருளாதாரக் கொள்கையின் விளைவாக இத்த கைய பத்தாம் பசலித்தனமான அடையாள அரசியல் படிப்படியாக தகர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப் பட்டது.

ஆனால் இந்த எதிர்பார்ப்புக்கு மாறாக தாராள மயக் கொள்கை வந்த பிறகு அடையாள அரசியல் மேலும் தீவிரமாகி உள்ளது. இன்றைய இந்தியாவில் பொருளாதார நெருக்கடி  நிலைமை ஏழை பணக் காரர் என்ற வேறுபாட்டை அதிகரித்து,  வேலையில் லாத் திண்டாட்டம் கடுமையாக உயர்ந்துள்ளது. பொரு ளாதார தாராளமயக் கொள்கைகள் எதிர்பார்த்த பலனை தராத நிலையில்,  தாராளமயக் கொள்கை கள் அனைத்தும் மக்களின் அனைத்து நோய்களுக் கும் தீர்வு என உலகம் எதிர்பார்த்திருந்த நிலையில்,  அது ஏமாற்றத்தையே  தந்தது.  ஞானவாபி பிரச்சனை தற்போது தூண்டப்பட்டு வரும் நிலையில் அது மிக மோசமான விளைவு களை ஏற்படுத்தப் போகிறது .1980களில் பிஜேபி அயோத்தியா பிரச்சனையை கிளப்பி வெகுஜன இயக்கத்தை நடத்தியபோது அதன்மூலம் அது அரசியல் லாபம் பெற்றது. அடுத்தடுத்து இரண்டு தேர்தல்களில் பிஜேபி வெற்றி பெற்று ஆட்சியில் நீடிக்கும் நிலையில் தனது பொருளாதார தோல்வியை திசை திருப்புவதற்காக மட்டும் அல்லா மல் தனது மதத்தீவிரவாத அடிப்படை நிலைப்பாட்டி லிருந்து ஞானவாபி பிரச்சனையை தற்போது பிஜேபி கிளப்புகிறது.

பெரும்பான்மை கும்பலின் விருப்பப்படி நீதி மன்றங்கள் தீர்ப்பு வழங்க வேண்டும் என ஆளும் கட்சி எதிர்பார்க்கிறது. முன்னதாக அயோத்தியா பிரச்ச னையில் மிகப்பெரிய வெகுஜன இயக்கம் மூலம் இத்தகைய நிர்ப்பந்தத்தை உருவாக்கியது. ஆனால் ஞானவாபி பிரச்சனையை அவ்வாறு கையாளவில்லை. ஞானவாபி பிரச்சனையை கிளப்புவது வரலாறு  தொடர்புடைய பிரச்சனையால் அல்ல. இந்திய  வர லாற்றை இந்து முஸ்லிம் வரலாறாக மட்டும் சுருக்கி விட முடியாது. இந்த சமுதாயத்தில் சைவர்களுக் கும்- வைணவர்களுக்கும் இடையில் ஆயிரம் பிணக்குகள், ஸ்மரணர்களுக்கும் - பிராமணர்க ளுக்கும் இடையில் பல வழக்குகள், பௌத்த ஜெயின மதத்தினருக்கும் இதற்கெதிரான மதத்தின ருக்கும் இடையில் பல பிரச்சனைகள் உள்ளன. பழைய வரலாற்றை மீட்பது என்ற பெயரால் ஞானவாபி பிரச்சனை கிளப்பப்படுகிறது. இது பிஜேபி தற்போது மேற்கொண்டு வரும் மதமாற்ற தடைச் சட்டம், பசுவதை தடை என்ற பெயரால் நடைபெறும் அராஜ கங்கள், கும்பலாகச் சேர்ந்து அடித்துக் கொல்லுதல், இந்தியாவின் அதிகாரப்பூர்வ வரலாற்றை தங்கள் நோக்கத்திற்காக  திருத்தி எழுதுவது,  முஸ்லிம்க ளுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகள் ஆகிய வற்றின் ஒரு பகுதியாகத்தான் ஞானவாபி பிரச்சனை யையும் பார்க்கவேண்டியுள்ளது. 

இந்தியாவிற்குள் பல்வேறு தரப்பினர் பல காலகட்டங்களில் புலம்பெயர்ந்து வந்து உள்ளனர். முஸ்லிம்கள் மட்டுமல்ல.  இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்தியாவில் உள்ளவர்கள் அனைவருக்கும் சுதந்திரம் அளித்துள்ளது. ஆனால் இன்றைய ஆட்சி யாளர்கள் இந்தியா குறிப்பிட்ட பிரிவினரான இந்துக்க ளுக்கு மட்டும்தான் சொந்தம் என்ற வகையில் நமது மரபுகளையும் மாண்புகளையும் சிதைத்து வருகின்ற னர். முஸ்லிம் பிரிவினைவாதிகள் பாகிஸ்தானில் செயல்படுவது போன்று இவர்களும் செயல்படுகின்ற னர். 2014 க்கு பிறகு இந்தியாவில் நடைபெறும் சம்பவங் கள் அனைத்தும் இந்தியாவின் பெருமையை உலக அளவில் சிறுமைப்படுத்தி வருகின்றன. தெற்கு ஆசியா வில் உள்ள ஒரு இன மேலாதிக்க வாத நாடு என்ற அளவி லேயே உலக அரங்கில் இந்தியா பார்க்கப்படுகிறது.

1992 இல் இருந்து நமக்கு ஒரு விஷயம் தெளிவாகப் புரிகிறது. ஆளும் கட்சியும் அதன் ஆதரவாளர்களும் கோல்வால்கரின் நோக்கத்தை நிறைவேற்றத் துடிக்கிறார்கள். இந்துக்கள் அல்லாதவர்களுக்கு எவ்வித சலுகைகளோ, முன்னுரிமைகளோ, அல்லது குடி உரிமையோ கூட இல்லை என்ற நிலையை உரு வாக்கி வருகிறார்கள். 

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சி, பாகிஸ்தானில் ஸுன்னி முஸ்லிம்களின் தேசிய வாதம், இலங்கையில் இனவாத மேலாதிக்கம் , பர்மா வில் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் ஆகிய வற்றை எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டுமே  தவிர அதை நாங்களும் பின்பற்றுவோம் என்று செயல் படக்கூடாது. ஞானவாபி பிரச்சனையை கிளப்புவது பாபர் மசூதி துயரச் சம்பவத்துக்கு பிறகு மீண்டும் இந்தியாவை ஒரு இருண்ட காலத்திற்கு அழைத்துச் செல்லும்.

தி ஹிந்து நாளிதழில் சீமா சிஸ்டி எழுதிய 
கட்டுரையை தழுவி எழுதப்பட்டது