84 வயதிலும் ஜாகியா ஜாப்ரி நீதிக்காக நடை யாய் நடந்து கொண்டிருக்கிறார். 2002 பிப்ரவரி 28 அன்று நடந்த குஜராத்தின் அகம தாபாத் குல்பர்க் சொசைட்டியில் நடந்த படுகொலை யில் காங்கிரஸ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பின ரும், ஜாகியா ஜாப்ரியின் கணவருமான இஷான் ஜாப்ரி உட்பட 68 பேர் கொல்லப்பட்டனர். அன்றைக்கு முதல்வ ராக இருந்த மோடி தான் கலவரத்திற்கு அதிகாரப் பூர்வமற்ற முறையில் உத்தரவு போட்டார் என ஜாகியா ஜாப்ரி குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் குஜராத் உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது. குஜராத் வன்முறை குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு புல னாய்வுக்குழு 2012ல் தனது அறிக்கையை தாக்கல் செய்தது. மோடி உட்பட 64 பேர் மீது எந்த குற்றமும் இல்லை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. ஜாகியா ஜாப்ரி உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கு விசாரணைக்கு தகுதியற்றது என சமீபத்தில் தெரிவித்துள்ளது.
படு பயங்கரமான குஜராத் படுகொலைகள் குறித்து உச்சநீதிமன்றத்தின் கருத்து மிகவும் அபாயகர மானது. உச்சநீதிமன்றக் கருத்து வெளியானதும், அந்த வழக்குகளில் முன் நின்ற டீஸ்டா செதல்வாத், ஆர்.பி.ஸ்ரீகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள் ளனர். 2002 குஜராத் இனப் படுகொலை குறித்து விசாரிக்க அப்போதைய குஜராத் மாநில அரசு உச்சநீதி மன்ற நீதிபதி நானாவதி தலைமையில் ஆணையம் அமைத்தது. இந்த ஆணையம் தனது அறிக்கையை 2014இல் மாநில அரசிடம் சமர்ப்பித்தது. ஆனால் மாநில அரசு அதனை வெளியிடவில்லை. அறிக்கையை சட்ட சபையில் முன் வைக்க வேண்டும் என ஆர்.பி.ஸ்ரீகுமார் குஜராத் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதன் பின் 2019இல் அறிக்கை சட்ட சபையில் முன் வைக்கப்பட்டது. அந்த அறிக்கை வன் முறைக்கும் அரசுக்கும், மோடிக்கும் தொடர்பில்லை என்று கூறியது.
உண்மையில் 2002 பிப்ரவரி 27 முதல் மார்ச் 3 வரை குஜராத் கொழுந்து விட்டு எரிந்தது. தடுப்பார் யாரும் இல்லாமல் வன்முறையும் படுகொலை பயங்க ரங்களும் ஏப்ரல் இறுதி வரையிலும் தொடர்ந்தது. ஆனாலும் அரசுக்கும், அரசுக்கு தலைமையேற்ற மோடிக்கும் தொடர்பில்லை என்றே அரசுத் தரப்பு விசாரணைக் குழு கூறியது. கலவரம் நடந்த போது குஜராத் மாநில காவல்துறை யில் உயர் பொறுப்புகளில் இருந்த சஞ்சீவ்பட், ராகுல்சர்மா, ஆர்.பி.ஸ்ரீகுமார் ஆகியோர் பல்வேறு விபரங்களை ஆதாரத்தோடு விசாரணைக்குழு முன்பாகவும், நீதிமன்றத்திலும் தாக்கல் செய்தனர். ஆனால் அவை அனைத்தும் குப்பைகளாக தூக்கி வீசப்பட்டன. “இந்த தாக்குதல்கள் எந்தவொரு அமைச் சராலும் தூண்டப்பட்டவை அல்லது அவர்களது ஆதிக்கத்தால் நடத்தப்பட்டவை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை” என நானாவதி கமிஷன் அறிக்கை கூறியது.
உண்மையை உரத்துப் பேசியவர்கள்
முன்னதாக கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடை பெற்ற 2002 பிப்ரவரி 27 அன்று இரவு முதலமைச்சர் மோடி இல்லத்தில் நடந்த அதிகாரிகளின் கூட்டத்தில் மோடி இவ்வாறு கூறியிருக்கிறார்: “வகுப்புக் கலவரங்க ளின் போது போலீசார் பொதுவாக இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் எதிராக, முஸ்லீம்களில் ஒருவரை கைது செய்தால், இந்துக்களில் ஒருவரை கைது செய் தல் என்ற முறையில் நடவடிக்கை எடுப்பார்கள். இப்போது அவ்வாறு செய்யாதீர்கள். இந்துக்களுக்கு அவர்கள் தங்கள் கோபத்தை காட்ட அனுமதித்தி டுங்கள்”. மோடி இவ்வாறு கூறியதை அக்கூட்டத்தில் கலந்து கொண்ட டிஜிபி சக்ரவர்த்தி தன்னிடம் கூறியதாக ஆர்.பி.ஸ்ரீகுமார் தெரிவிக்கிறார். இது போன்ற தகவல்க ளையும், ஆதாரங்களையும் திரட்டி ஒன்பது பிரமாண வாக்குமூலங்களை நீதித்துறை ஆணையம் முன்பாக ஆர்.பி.ஸ்ரீகுமார் தாக்கல் செய்துள்ளார். இதே போன்று குஜராத் கலவரங்களுக்கு மாநில அரசாங்கமும், பல அதிகாரிகளும் எப்படியெல்லாம் உடந்தையாக இருந்தார்கள் என்பதை ராகுல் சர்மா, சஞ்சீவ் பட் இருவரும் நீதிமன்ற ஆணையத்தில் சமர்ப்பித் தார்கள். அதனால் சஞ்சீவ் பட், தனது 52 வயதில் பணியில் இருந்து நீக்கப்பட்டார். 1990இல் நடந்த காவல் மரணம் தொடர்பாக 2019இல் குற்றச்சாட்டு புனையப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். சஞ்சீவ் பட் போட்டு உடைத்த முக்கிய தகவல் என்னவெ னில், பிப்ரவரி 27 அன்று மோடி வீட்டில் நடந்த கூட்டத்தை வெளியில் தெரிவித்த அமைச்சர் ஹரேன் பாண்டியா கொல்லப்பட்ட வழக்கின், சாட்சியங்களை மூடி மறைக்க வேண்டும் என மோடியும், அமித்ஷாவும் தன்னிடம் கேட்டுக் கொண்டனர் என்பது தான்.
ஸ்ரீ குமார் பட்ட வேதனைகள்
“கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தை தொடர்ந்து ஏற்பட்ட வகுப்புவாத கலவரங்கள், அந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக நிகழ்ந்தவை. கோத்ரா சம்பவத்தின் காரணமாகவே இந்து சமூகத்தின் பெரும்பகுதியினர் மிகவும் கோபமடைந்தனர். இறுதியில் முஸ்லீம்கள் மற்றும் அவர்களின் சொத்துக்கள் மீது வன்முறைத் தாக்குதல்களில் ஈடுபட்டனர். இது திட்டமிட்ட சதி அல்ல, திட்டமிட்ட வன்முறை அல்ல” என நானாவதி கமிஷன் அறிக்கை கூறுகிறது. ஆர்.பி.ஸ்ரீகுமார் திட்ட வட்டமாக இதனை மறுக்கிறார். 1995இல் குஜராத்தில் கேசுபாய் பட்டேல் தலை மையில் பாஜக அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. இதனைத் தொடர்ந்து சங் பரி வாரத்தின் பல்வேறு அமைப்புகளும் இந்து சமூகத்தி னரை மிகப்பெரிய அளவில் காவிமயமாக்குவதற்காக தங்களுடைய திட்டங்களை வெறித்தனமாக முடுக்கி விட்டன என ஸ்ரீகுமார் கூறுகிறார்: அவர் சில காலம் மத்திய பணிக்கு சென்று விட்டு 2000த்தில் குஜரா திற்கு திரும்பினார். அப்போதைய குஜராத் நிலமையை இவ்வாறு கூறுகிறார்: “வேறெந்த மாநிலங்களிலும் இல்லாத அளவிற்கு ஆட்சியில் அமர்ந்திருந்த அர சியல்வாதிகளுக்கும் அதிகார வர்க்கத்திற்கும் அவர்க ளின் இழிவான ஆசைகளை பூர்த்தி செய்திடும் விதத்தில் அனைத்தும் நடந்து கொண்டிருந்தன”. கல வரத்தின் போது குஜராத்தில் பணியாற்றிய முஸ்லீம் சமூகத்தை சேர்ந்த 6 ஐஏஎஸ், 7 ஐபிஎஸ் அதிகாரிகள், முஸ்லீம்கள் படுகொலை செய்யப்பட்டதைப் பற்றி எதுவுமே கூறாது மவுனம் கடைப்பிடித்தார்கள். இதே போன்ற நிலை தான் தில்லியில் சீக்கியர்கள் படு கொலை செய்யப்பட்ட சமயத்திலும் இருந்தது; முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியான கிரண்பேடி கூட, கலவரங்களில் ஈடுபட்டவர்கள் குறித்து உருப்படி யான சாட்சியம் எதனையும் அளிக்கவில்லை என்றும் ஸ்ரீகுமார் கூறுகிறார்.
ஸ்ரீகுமார் உண்மையை பகிரங்கமாக கூறுகிறார் என்பது மட்டுமல்ல, சங் பரிவார அமைப்புகள் எவ்வாறு திட்டமிட்டுச் செயலாற்றி வருகின்றனர் என்பதையும் தெளிவுபட எடுத்துரைக்கிறார் என்பதால்தான், தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். வதந்திகளை பரப்புதல், வெறுப்பை கக்கும் பேச்சுகள், ஊடகச் செய்திகள், கோவில்களை கட்டுதல், பண்டிகைகளை புதுப்பித்தல், கூட்டு வழிபாட்டு நடவடிக்கைகளை அதி கரித்தல், யாத்திரை தலங்களுக்கு அரசு நிதி ஒதுக்கு தல், பூகோள, வரலாற்றுப் பெயர்களை புராணங்க ளில் உள்ள பெயராக மாற்றுதல், ஆர்எஸ்எஸ் கூட்டங்க ளில் யாரும் பங்கேற்கலாம் என அனுமதி அளித்தல் போன்ற காரியங்கள் எல்லாம் இந்து சமூகத்தை காவி மயமாக்கும் நடவடிக்கை என ஸ்ரீகுமார் அம்பலப் படுத்துகிறார். வன்முறை நடந்த போது, தான் கையறு நிலையில் இருந்ததாகக் கூறுகிறார். நிலமைகளை விளக்கி குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். குடியரசுத் தலைவர், பிரதமர் வாஜ்பாய்க்கு கடிதம் எழுதி இருக்கிறார் எனும் செய்தியும் ஸ்ரீகுமா ருக்கு கிடைத்திருக்கிறது. ஏதேனும் ஒன்று நடந்ததே என தான் சற்று ஆறுதல் அடைந்ததாகவும் கூறுகிறார். ஆனால் அதனால் ஏற்பட்ட பயன் ஏதுமில்லை என்பது எல்லோரும் அறிந்த ஒன்று தான்.
இடைவிடாது போராடி வந்த ஆர்.பி.ஸ்ரீகுமார் இறுதி யில் தற்போது கைது செய்யப்பட்டு உள்ளார். நீங்கள் உண்மைகளைப் பேசினால், மோடி மீது குற்றம் சாட்டினால் கைது செய்யப்படுவீர்கள் என்ற செய்தி தான் இதன் உள்ளடக்கம். தான் ஏன் அமைதியாக இருக்கவில்லை என்பதையும் ஸ்ரீகுமார் குறிப்பிடு கிறார்: “குஜராத் மதக் கலவரங்கள் கருவுறத் தொடங் கிய காலத்தில் இருந்தே, சிவில் சமூகத்தைச் சார்ந்த வர்களில், ஒரு சில சமூக ஆர்வலர்களைத் தவிர பெரும் பாலானவர்கள் அமைதிப் பார்வையாளர்களாகவே இருந்தார்கள்” என்று வேதனைப்படுகிறார். தமது கண்ணுக்கு எதிரே நடைபெற்ற கொடூரமான படுபாத கச் செயலை பார்த்து வாளாதிருக்க முடியவில்லை என்கிறார்.
சங் பரிவாரங்களின் கலகக் காலிகள், மாநில அரசு எந்திரத்தின் உதவியுடன் மேற்கொண்ட வெறுக்கத் தக்க, வெறித்தனமான நடவடிக்கைகளின் மூலமாக முஸ்லீம்களுக்கு ஏற்பட்ட அவல நிலமை குறித்து மிகவும் மன வேதனையும், விரக்தியும் ஏற்பட்டதாக கூறு கிறார். ஸ்ரீகுமாரின் தாத்தா பாலராமபுரம் ராமன் பிள்ளை, கேரளாவில் காங்கிரஸ் கட்சியை ஸ்தாபித்த தலைவர்களில் ஒருவர். அவரிடமிருந்து அரசியல் விழுமியங்களை கற்றதாக கூறுகிறார். அவர் வளர்ந்த கேரளாவில் கிறிஸ்தவமும், இஸ்லாமும் நன்கு வளர்ந்திருந்த போதிலும், மத நல்லிணக்கம் வரலாற்று ரீதியாக மிகவும் செம்மையாக அமைந்திருந்த பின்ன ணியில் வளர்ந்தவன் என்கிறார். மற்றொருபுறம், குஜராத் இனப்படுகொலைச் சம்ப வங்களில் மோடிக்கு தொடர்பில்லை எனக்கூறிய சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவரான ஆர்.கே. ராகவன், 2017இல் சைப்ரஸ் நாட்டில் இந்தியாவின் உயர் ஆணையராக நியமிக்கப்பட்டார் என்பது தனிக்கதை!
கண்ணீர் சிந்திய நீதிபதி
குஜராத் இனப் படுகொலைகளின் போது 2100 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன. பல்வேறு சம்பவங்களும் தனித்தனியாக அல்லாமல் மொத்த மாக, ஒரே அறிக்கையாக பதிவு செய்யப்பட்டது. இதில் சில வழக்குகளில் தான் டீஸ்டா செதல்வாத் தொடர்ந்து போராடி 120 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்துள்ளார். குஜராத் படுகொலைகள் தொடர்பாக, தேசிய மனித உரிமை ஆணையத்தின் சார்பாக விசாரணை நடத்தச் சென்ற நீதியரசர் வர்மா, முகாம்களில் இருந்த பெண்களிடம் வாக்குமூலங்களை பதிவு செய்தார். தமக்கும் உறவினர்களுக்கும் இழைக்கப்பட்ட பாலியல் வன்முறை குறித்து வாக்குமூலங்களை அடுத்தடுத்து அவரும் டீஸ்டா செதல்வாத்தும் கேட்க நேர்ந்தது. ஒரு சிறுவன் தனது தாயும், சகோதரியும் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளானதை முகத்தில் எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் குழந்தைமைக்குரிய இயல்புணர்ச்சியுடன் விவரித்தி ருக்கிறான். தான் என்ன சொல்கிறோம் என்பது கூட புரியாதவனாக அவன் பேசியதைக் கேட்டுக் கொண்டி ருந்த நீதிபதி வர்மாவின் கன்னத்தில் கண்ணீர் வழிந் தோடியது. அவரால் அதை தாங்கிக் கொள்ள முடிய வில்லை. நாளை இந்தச் சிறுவன் பயங்கரவாதி ஆக வில்லை என்றால் வேறு யார் ஆவார்கள் என அருகில் இருந்த டீஸ்டாவிடம் அவர் கேட்டாராம்.
தற்போது தேச விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் 150க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பத்தாயிரத்திற்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். தேச பாதுகாப்பு சட்டத்தின்படி 50க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பல நூறு பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். மோடி அரசின் கொடுமைகளுக்கு எதிராக குரல் எழுப்பிய போராளிகளால் நமது சிறைச் சாலைகள் நிரம்பிக் கொண்டிருக்கின்றன. சிறையில் இருக்கும் தந்தைக்கு, தந்தையர் தினத் தன்று சஞ்சீவ் பட்டின் மகள் எழுதிய உருக்கமான தொரு கடிதத்தை வாசிக்கும் எவரொருவரும் கண் கலங்குவதோடு, ‘இப்போது இல்லை எனில், பின் எப்போது நாம் அதிகாரத்திற்கு எதிராக குரல் எழுப்பப் போகிறோம்’ என ஆவேசம் கொள்ளும்படி அக்கடித வரிகள் அமைந்திருக்கும். சிறையில் அடைக்கப்பட்டு உள்ள பேரா. ஆனந்த் டெல்டும்டேவின் மனைவி எழுதிய கடிதத்தின் கடைசி வரிகளும் அப்படித்தான் இருக்கும்: “இப்போது பேசவில்லை இனில் எப்போ தும் பேச முடியாத சூழல் அனைவருக்கும் வரும்”.
கட்டுரையாளர் : மாநிலக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)