articles

பேரறிஞர் காரல் மார்க்ஸ் பற்றி ஆளுநர் இரவியின் பிதற்றல் - பேரா.மு.நாகநாதன்

சாதியத்தைப் போற்றும் சனாதனத் திற்கு வால் பிடிக்கிறார்!தமிழகம் என்று தான் குறிப்பிட வேண்டும், தமிழ்நாடு எனக் கூறக்கூடாது என்றார்!தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் மாமன்னர் போலப் பல ஏக்கர் நிலத்தில் சொகுசு வாழ்க்கை? இந்தியாவில் எந்த ஆளுநருக்கும் இல்லாத வாய்ப்பு? 75 ஆம் ஆண்டு குடியரசு விழாவை அடுத்த ஆண்டு  காணப்போகிறோம். ஆனால்  ஆளுநர் இரவி  பிரித்தானிய முடியாட்சிக் கால ஆளுநராகத் தன்னை நினைத்துக் கொண்டு ஆணவத்தின் உச்சியில் நின்று கொண்டு நாளும் தமிழ்நாட்டு மக்களை இழி வுப்படுத்துகிறார். வாய் திறந்தால் முடை நாற்றம் வீசும் பொய்கள்! இறுதியாக உலகப்பேரறிஞர் காரல் மார்க்ஸ் பற்றி அவதூறு கிளப்புகிறார். சில மாதங்களுக்கு முன்பு காரல் மார்க்ஸ் இந்தி யாவைப் பற்றி எவ்வளவு துல்லியமாகக் கணித்து இருந்தார் என முகநூலில் பதிவு செய்திருந்தேன். இந்தியாவில் மாட்டை விட மனிதனைச்  சாகடிப்பது எளிது -மதம் வழங்கும் கொடுமையான அறிவுரை  எனும் தலைப்பில் பேரறிஞர் காரல் மார்க்சின் கருத்தை வெளியிட்டிருந்தேன்

மார்க்ஸ் என்ன குறிப்பிட்டார்?

“விவசாயிகள் பட்டினியால் வாடும் போது, அவனுடைய மாடுகள் நன்றாக வாழ்கின்றன. நாட்டில் மழை மீண்டும் மீண்டும் பெய்தது. கால்நடை களின் உணவு பெருமளவில் இருந்தது. கொழுத்த மாடுகள் ஒரு புறமிருக்க, இந்து விவசாயி பசியால் இறந்து போவான். உழைக்கும் கால்நடைகள் பாது காப்புடன் உள்ளன. அவை விவசாயத்திற்கு வலி மையையும் எதிர்கால வாழ்க்கை மற்றும் வருமா னத்திற்கு ஆதாரங்களையும் பெற்றுத் தருகிறது. இத்தகைய சூழலில், தனிமனிதனுக்கு மதம் வழங்கும் அறிவுரை கொடுமையானது. சமுதா யத்தைப் பிற்போக்குத்தனமாக மாற்றுகிறது. இந்தி யாவில் ஒரு மாட்டைவிட மனிதனைச் சாகடிப்பது எளிது. இதைச் சொல்வதற்கே கொடுமையா னது என்றாலும் சொல்லியாக வேண்டும். (I-மூலதனம், தொகுதி-II, அத்தியாயம் 12, பக்கம் 142) என மார்க்ஸ் குறிப்பிட்டார்.  மேற்குறிப்பிட்ட கருத்து 17-18 ஆம் நூற்றாண்டு களில் பெரும் பஞ்சம் ஏற்பட்டபோது மத மயக்கத்தில் மூழ்கியிருந்த மக்கள் குறிப்பாக,விவசாயிகள் மாடுகளைக் காப்பாற்றாமல் அவற்றிக்குத் தேவை யான உணவைக் கொடுக்காமலிருந்தால்  பல ஆயிரம் மனிதர்கள் இறந்திருக்கமாட்டார்கள்‌.  மாட்டிறைச் சியை உணவாக உண்டு இருந்தால் மக்களுக்குப்  போதிய புரதச் சத்து கிடைத்திருக்கும். பஞ்சக்காலத்தி லும் மனிதர்கள் காப்பாற்றப்பட்டிருப்பார்கள்.

இன்று நடப்பது என்ன?

மாட்டிறைச்சியை உணவாக உண்ணும் மக்க ளைத் தேடிப் போய் அடிக்கும், கொலை செய்யும் மத அரசியல் இன்றும் சங்கிகளால் தொடர்கிறது அல்லவா? அன்றே இந்த மதவெறி அரசியலை இனம் கண்டவர் பேரறிஞர் மார்க்ஸ்! எச்சரிக்கை செய்தவர் மார்க்ஸ்! மார்க்ஸ் காலத்தில் வாழ்ந்த பெரும்பாலான மேற்கத்தியப் பொருளாதார அறிஞர்கள் இந்தியத்  துணைக் கண்டத்தில் கிழக்கு இந்தியக் குழு மங்கள் நடத்திய சுரண்டல் முறையை மார்க்ஸ்  போல் யாரும் எடுத்துரைக்கவில்லை. பிரித்தானிய ஆட்சியில் இந்திய நிலங்கள், மூல வளங்கள் கொடு மையான முறையில் எப்படிச் சூறையாடப்பட்டது. வரி வருவாய் உட்பட நிதியாதாரங்கள் இங்கி லாந்து நலனுக்காகக் கொள்ளையடிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டன என்பதை மூலதன நூலிலும், அமெரிக்க ஏடுகளுக்கு எழுதிய கட்டுரைக ளிலும் மார்க்ஸ் எடுத்துரைத்துள்ளார். பிரித்தானிய அரசிடம் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்ட சாவர்க்கர் வழிவந்த இரவிக்கு இது பற்றிய அறிதலோ புரிதலோ இருக்க‌வாய்ப்பில்லை. ஆனால் வாயில் கொழுப்பு! மூளையில் சுளுக்கு! இந்தியாவின் குடியரசுத்தலைவராக மிகச் சிறந்த முறையில் பணியாற்றிய கே.ஆர்.நாராய ணன், பேராசிரியர் ஹெரால்டு இலாஸ்கியின் மாணவர். நேரு உட்பட இந்தியத் தலைவர்களால் போற்றப்பட்ட அரசியல் வித்தகர் இலாஸ்கி.

உலகப் புகழ் பெற்ற “அரசியல் இலக்கணம் “(Grammar of Politics) என்ற நூலை எழுதியவர். ஹெரால்டு இலாஸ்கி‌, “காரல் மார்க்சுப் பற்றி ஒரு கட்டுரை” ( Karl Marx An Essay) எனும் ஒரு நூலை யும் எழுதியுள்ளார். அந்நூலின் முதல் வரியில் அறிஞர் இலாஸ்கி குறிப்பிட்டது என்ன தெரியுமா? “சமூக சிந்தனை வரலாற்றில் காரல் மார்க்சைப்  போன்று எந்தப் பெயரும், பெருமளவில் குறிப்பி டத்தக்க வகையில்   இடம் பெறவில்லை.” ஹெரால்டு இலாஸ்கி‌ காரல் மார்க்ஸ் பற்றிய ஒரு கட்டுரையில் விளக்கியிருந்த பல கருத்துக்க ளையும், கணிப்புகளையும் கடந்து இன்று உலக முதலாளித்துவ நாடுகள் பொருளாதார வீழ்ச்சியை அடைந்து வருகின்றன. இங்கிலாந்து பொருளாதார அறிஞர் ஜேம்ஸ் ஓ கொனார் குறிப்பிட்டது போல நலப்பொருளாதார அரசுகள் போர்ப் பொருளாதார‌அரசுகளாக உரு மாற்றம் அடைந்து வருகின்றன.  வேலைவாய்ப்பின்மை, வருமான ஏற்றத் தாழ்வு, விலைவாசி உயர்வு, கடன் சுமை ஆகிய பேரியல் பொருளாதார காரணங்களால்  மக்கள் பெரும் துயரங்களைச் சந்தித்து வருகின்றனர். இன்று காரல் மார்க்ஸ் உலகளவில் மறு வாசிப்பு செய்யப்படுகிறார். இந்த உண்மைகள் இரவிக்குப் புரியாமல் இருக்கலாம். தெரியாமல் இருக்கலாம்! ஆனால் ஆளுநர் என்பது அரசமைப்புச் சட்டத்தின் படி உருவாக்கப்பட்ட ஒரு பதவி! அப்பதவியை வகிப்பவர்  சில மரபுகளையும்  மாண்புகளையும் பின்பற்ற‌ வேண்டிய கடமைகள் உள்ளன. இவை துறந்து சங்கி அரசியலின் அடியாளாக ஆளுநர் இரவி மாறலாமா?