articles

img

ஜம்மு அரசுப் பள்ளியில் முதல் விண்வெளி ஆய்வகம்

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள மலை மாவட்டமான கிஷ்வார் அரசு மேல்நிலைப் பள்ளியில் முதல் விண்வெளி ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த ஆய்வகம் உயர்தொழில்நுட்ப தொலைநோக்கி, இஸ்ரோ ராக்கெட், செயற்கைக் கோள் விளக்க மாதிரிகள், டிரோன்கள் மற்றும் விமானம் உள்ளிட்ட பல்வேறு மாதிரிகளைக் கொண்டுள்ளது. திறப்பு விழாவில் ஆணையர் தேவன்ஷ் யாதவ் பேசுகையில், “சிறப்பு வாய்ந்த இந்த ஆய்வகத்தை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது விண்வெளி குறித்த ஆழமான புரிதலை அளிப்பது மட்டுமின்றி, விண்வெளியில் பணியாற்றிய வேண்டும் என்ற உந்துதலையும் மாணவர்களுக்கு அளிக்கும். பள்ளிகளில் வானியல் சம்பந்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ள இது உதவும். வானியல் துறையை நோக்கி மாணவர்கள் பயணிப்பதற்கான வழிகாட்டியாக இந்த ஆய்வகம் அமையும்” என்றார். இந்த ஆய்வகத்தின் மூலம், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சிகளை பெற வாய்ப்புள்ளது. வயோமிகா விண்வெளி அகாடமியின், இஸ்ரோ விண்வெளி பயிற்சி திட்டத்தின்கீழ் இந்த ஆய்வகம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதியை ஜம்மு கல்வி இயக்குனரகம் வழங்குகிறது. வயோமிகா விண்வெளி அகாடமியின் தலைமை நிர்வாக அதிகாரி கோவிந்த் யாதவ் கூறுகையில், “இந்த ஆய்வகத்தின் செயல்பாடுகள் மற்றும் திறன்கள், மாணவர்களின் விண்வெளி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிவை வளர்ப்பதற்கு ஊக்கமளிக்கும். அரசுப் பள்ளியில் விண்வெளி ஆய்வகம் அமைக்கப்பட்டி ருப்பது, கல்வி (கல்வித்துறை) தொழில்நுட்பத்தில் ஏற்பட் டுள்ள மிகப்பெரிய முன்னேற்றம். அறிவியல், விண்வெளி, தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்க நினைக்கும் மாணவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். அக்டோபர் 15 முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு, மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையேயான ஹைட்ரோ ராக்கெட் மற்றும் வானியல் பயிற்சிப் பட்டறையை நடத்த வயோமிகா விண்வெளி அகாடமி திட்டமிட்டிருக்கிறது” என்றார்.