articles

img

தொழிலாளி வர்க்கத்துக்கு சிஐடியு அறைகூவல்

மீண்டும் அடிமை நிலைக்கு தள்ளும் முயற்சியை முறியடிப்போம்!
தொழிலாளர் விரோத மோடி அரசை 2024 தேர்தலில் வீழ்த்துவோம்!

உழைக்கும் வர்க்கத்தை மீண்டும் அடிமை நிலைக்குத் தள்ளும் முயற்சிக்கு எதிராக பொது வேலை நிறுத்தம் செய்யவும் 2024 பொதுத் தேர்த லில் தொழிலாளர் விரோத மோடி அரசை வீழ்த்த வும் தயாராக வேண்டுமென சிஐடியு அறை கூவி அழைக்கிறது. அகில இந்திய சிஐடியுவின் மேதின பிர கடனம் வருமாறு: 8 மணி நேர வேலை மற்றும்  தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகளை நிலை நாட்டுவதற்கான போராட்டத்தில் தங்கள் இன்னுயிரை ஈந்த சிக்காகோ தியாகிகளுக்கு சிஐடியு தனது வீர அஞ்சலியை தெரிவித்துக்  கொள்கிறது. உலகம் முழுவதும் தொழிலாளி களின் உரிமைகளுக்காக மற்றும் வர்க்கச் சுரண்டலில் இருந்து தொழிலாளிகளை விடுவிப்பதற்காக போராடி உயிர் நீத்த அத்  தனை தியாகிகளுக்கும் சிஐடியு தலை  வணங்கி அஞ்சலி செலுத்துகிறது.

இந்த ஆண்டு, நமது நாட்டில் சிஐடியு- வின் நூறாவது மே தினம் கொண்டாடுகிறோம்! 1923 ஆம் ஆண்டு தோழர்  சிங்காரவேலர் சென்னை மாநகரில் முதன் முதலில் செங் கொடி ஏற்றி மே தினத்தை கொண்டாடினார். இப்படிப்பட்ட தொழிலாளி வர்க்க இயக்கத்தின் முன்னோடிகளுக்கு சிஐடியு தனது வணக்கங் களை உரித்தாக்குகிறது! அவர்களின் போராட்டப் பாரம்பரியத்தை  முன்னெடுத்துச் செல்வது மற்றும் காட்டு மிராண் டித்தனமான முதலாளித்துவச் சுரண்ட லில் இருந்து சமூகத்தை விடுவிப்பது என்ற அவர்களது பூர்த்தியடையாத கனவை பூர்த்தி செய்வதற்கான போராட்டத்தையும்  சிஐடியு முன்னெடுக்கும். உலகம் முழுவதும் ஆளும் வர்க்கங்க ளுக்கு எதிராக, தொழிலாளிகளின் வேலை, ஊதியம், பணி நிலைமைகள் மற்றும் போராடிப் பெற்ற உரிமைகள், சலுகைகள் ,அடிப்படை பலன்களை பாதுகாப்பதற்காக வீரமிக்க போ ராட்டங்களை நடத்தி வரும் உலகத் தொழி லாளி வர்க்கத்திற்கு சிஐடியு தனது சகோத ரத்துவ வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கி றது. அனைத்துக் கண்டங்களிலும் ,அனைத்து  நாடுகளிலும் பல்வேறு பகுதி தொழிலாளிகள் வர்க்கப் போராட்டத்தை அலை அலையாக நடத்தி வருவதை நாம் காண முடிகிறது. ஏகாதி பத்தியம் மற்றும் முதலாளித்துவச் சுரண்ட லுக்கு எதிராக உலகம் முழுவதும் நடைபெறும் களப்போர்களில் முன்னணியில் செயல்படும் உலகத் தொழிற்சங்க சம்மேளனத்துடன் இணைக்கப்பட்ட சங்கங்களுக்கும், உலகத் தொ ழிற்சங்க  சம்மேளனத்திற்கும் சிஐடியு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

உலகத் தொழிலாளி வர்க்கத்தின் போராட்டங்கள்

பல நூறு ஆண்டுகள் நீண்ட போராட்டம் நடத்தி தொழிலாளி வர்க்கம் பெற்ற 8 மணி நேர வேலை, வாழ்க்கை ஊதியம், சமூகப் பாதுகாப்பு பலன்கள் உள்ளிட்ட தொழிலாளர்க ளின் உரிமைகளைப் பறிப்பதற்கு உலகம் முழுவதும் முதலாளி வர்க்கம் எடுத்து வரும் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளை சிஐடியு கவலையுடன் கவனத்தில் கொள்கிறது.உலகம் முழுவதும் முதலாளித்துவம் அமைப்பு ரீதியிலான தீவிரமான நெருக்கடியைச் சந்தித்து வருகிறது .முதலாளித்துவ அமைப் பிற்குள் நெருக்கடிக்குத் தீர்வு காண முடியா மல் முதலாளித்துவம் தத்தளிக்கிறது. உழைக் கும் வர்க்கத்தை திரும்பவும் அடிமை நிலைக்கு தள்ளுவதற்கான மோசமான செயல்களில் முதலாளித்துவம் ஈடுபடுகிறது. முதலாளித்துவ நெருக்கடியின் நாசகர விளைவுகள் அம்பல மாகியிருக்கின்றன. அரசு நிர்வாகத்தின் துணை யுடன் சுரண்டும் வர்க்கங்கள் தொடுத்து வரும் தாக்குதல்களை உலகம் முழுவதும் தொழி லாளி வர்க்கம் உலகின் ஒவ்வொரு பகுதியிலும் கிட்டத்தட்ட இடைவிடாமல் போராடி வருகிறது.

இன்றைய உலகம் சந்திப்பது என்ன? அமெரிக்கா, பிரான்ஸ், கிரீஸ், இத்தாலி ,இங்கி லாந்து  ஜெர்மனி மற்றும் பல நாடுகளில் தொழி லாளி வர்க்கத்தின் பெருந்திரளானோர் கலந்து  கொள்ளும் வேலை நிறுத்தங்களும் போராட் டங்களும் நடைபெறுகின்றன. ஆலைத் தொழி லாளிகள், போக்குவரத்துத் தொழிலாளிகள், சுகாதாரம்,கல்வி ,தபால் ,அரசு மற்றும் இதர சேவைத்துறை ஊழியர்கள், சில்லரை வணிகத் தொழிலாளர் ,கிக் ஒர்க்கர்ஸ் என அனைத்துத் துறைகளிலும் உள்ள தொழிலாளிகள் வேலை நிறுத்தப் போராட்டங்களில்  இணைந்திருக்கின் றார்கள். பிரான்சில் தொழிலாளிகளின் ஓய் வூதிய வயதை 62 இலிருந்து 64 ஆக்கும் மேக்ரான் அரசின் முடிவுக்கு எதிராக நடை பெற்ற பெருந்திரள் பொது வேலை நிறுத்தம் சமீபத்திய உதாரணம் .பிரான்ஸ் முழுவதும் 200 மாநகரங்கள் /நகரங்களில் 40 லட்சம் தொழிலாளிகள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட னர். பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகள் எல்லா இடங்களிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி யானவை:- விலை உயர்வு ,குறிப்பாக உணவு மற்றும் எரிபொருள் விலை உயர்வு, வீழ்ந்து வரும் வாழ்க்கைத் தரம், மோசமாகி வரும் பணி நிலைமைகள், சமூகப் பாதுகாப்பு வெட்டு, தொழிற்சங்க உரிமைகள் பறிப்பு, வளர்ந்து வரும் வேலையின்மை, ஒரு சில ஏகபோ கங்கள், பெரும் கார்ப்பரேட்டுகளுக்காக பொ துச் சொத்தை சூறையாடுவது.

இஸ்ரேலில் அதிதீவிர வலதுசாரி அரசு பிரத மர் நேதன் யாகூ தலைமையில் தொழிலாளி வர்க்கத்தை தாக்கி வருகிறது .அதற்கு எதிராக தொழிலாளி வர்க்கம் ஒரு மாபெரும் பொது வேலை நிறுத்தத்தை நடத்தியது. உச்ச நீதி மன்றத்தின் அதிகாரத்தை பலவீனப்படுத்தி, அர சியல்வாதிகளுக்கு விருப்பப்பட்டவரை நீதிபதி களாக்கும் அதிகாரத்தை வழங்கும் சட்டத் திருத் தத்தை நேதன்யாகூ  கொண்டு வருவதற்கு எதி ரானது.போராட்டங்களால் நேதன்யாகூ  உத்தே சித்த சட்டத்திருத்தம் மீதான வாக்கெடுப்புக் கான தேதியை அறிவிக்காமல் தள்ளி வைத்துள்ளார். மனித குலம் உருவாக்கியுள்ள,

வரலாறு காணாத விஞ்ஞான தொழில்நுட்ப முன்னேற்றங்களின் உதவியுடன், தொழி லாளி வர்க்கமும் விவசாயிகளும் இணைந்து பெரும் அளவிலான செல்வத்தை  படைத்து வரு கிறார்கள். இச்செல்வங்களை சில முன்னேறிய நாடுகளும், ஒரு சில பெரிய ஏகபோகங்களும், பெரும் கார்ப்பரேட்டுகளும் தங்கள் வசப் படுத்திக் கொள்கின்றனர். அசமத்துவம் மிக அசிங்கமான  மட்டங்க ளை எட்டி உள்ளது. வேலை இழப்புகள்,வேலை யின்மை, தகுதிக்கு குறைவான வேலை பெரு மளவில் அதிகரித்துள்ளது. செல்வத்தைப் படைத்தவர்கள் வறுமை நிலை, துயரங்க ளுக்கு உள்ளாகிறார்கள். மனிதர்கள் என்ற முறையில் பெற வேண்டிய அடிப்படைத் தேவை களைக் கூட அவர்களால் பூர்த்தி செய்ய முடிவ தில்லை .அதே நேரம் பெரும் பணக்காரர்கள் மிக ஆடம்பரமாக வாழ்கிறார்கள் .முதலா ளித்துவ நாடுகளில் ,அரசாங்கங்கள் பெரு முத லாளி வர்க்கத்துடன் பகிரங்கமாக கைகோர்த் துச் செல்கிறது. அவர்களின் நலன்களை பாது காப்பதற்காக நவீன தாராளமயக் கொள்கை களை தீவிரமாக அமலாக்குகிறது . மக்கள் மத்தியில் நவீன தாராளமயக் கொள்கைகள் வெறுக்கத்தக்கவையாக மாறி உள்ளன .கண்ணியமான வேலை/ ஊதியம் ,வீட்டு வசதி ,கல்வி போன்றவைகளை உத்தர வாதப்படுத்த முடியாத நிலையில் முதலாளித்து வம் உள்ளது. இன்றைய உலகில் தேவையான வளங்கள் உள்ளன .ஆனால் அந்த வளங் களை எல்லாம் ஒரு சிலர் பயன்படுத்தி ஆதாயம் அடைகின்றனர் . அமைப்பு ரீதியான நெருக்கடியில்  முதலாளித்துவ அமைப்பு இன்று உள்ளது. இதிலிருந்து வெளியே வர மக்கள் மீது மேலும் சுமைகளை சுமத்துவதை தவிர  வேறு தீர்வு இல்லை.

சோசலிச நாடுகளுக்கு வாழ்த்து  கியூபா, பாலஸ்தீனத்துக்கு ஒருமைப்பாடு

உலகளாவிய நெருக்கடி காரணமாக சீனா ,வியட்நாம் ,கியூபா, வடகொரியா ஆகிய சோசலிச நாடுகள் கடும் சவால்களைச் சந்திக் கின்றன. ஆனாலும் மக்களின் வாழ்க்கைத் தரம், அனைவருக்கும் சுகாதாரம், அனை வருக்கும் கல்வி வழங்குவதில் சோசலிச அமைப்பு  முறையின் செயல்பாடுகள் மேன்மை மிக்கதாகவே உள்ளது .அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமையில் சோசலி சத்திற்கு எதிரான துஷ்பிரச்சாரங்கள் செய்யப் பட்ட போதிலும் ,சதிகள், பொருளாதாரத் தடை கள் விதித்த போதிலும் இவற்றிற்கு எதிராக உறுதியாகப் போராடி சோசலிச அமைப்பை பாதுகாப்பதற்காக நிற்கின்ற மக்களை சிஐடியு வாழ்த்துகிறது. ஐநா தீர்மானங்கள் மற்றும் உலக பொதுக் கருத்தை புறக்கணித்து அமெ ரிக்க ஏகாதிபத்தியம் கியூபா மீது தொடர்ந்து பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறது. இருந்த போதும் அதை எல்லாம் எதிர்த்து வீரமாகப் போராடி சோசலிசத்தைப் பாதுகாப்ப தற்காக நிற்கின்ற கியூபா மக்களுக்கு  சிஐடியு    தனது ஒருமைப்பாட்டை தெரிவித்துக் கொள்கிறது. தங்கள் தாய் நாட்டிற்காக உரிமையைப் பெற போராடிவரும் பாலஸ்தீன  மக்களை சிஐடியு வாழ்த்துகிறது. பாலஸ்தீன நிலப்பகுதி யில் இஸ்ரேலியர் குடியிருப்புகள் விரிவாக்கம் செய்யப்படுவதை சிஐடியு வன்மையாகக் கண்டிக்கிறது.  பெண்கள்  குழந்தைகள் உள்ளி ட்டு அப்பாவி பாலஸ்தீனர்கள் கொலை செய் யப்படுவதை சிஐடியு கண்டிக்கிறது. அமெ ரிக்கா,இத்தாலி, பிரான்ஸ் ,ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளில் நவீன தாராளமயக் கொள்கைக ளுக்கு எதிராக அதிருப்தி அதிகரித்து வரு கிறது. இந்த அதிருப்தியை  வலதுசாரி சக்தி கள் பயன்படுத்திக் கொள்கின்றன. நிறவெறி, இனவெறி, தேசவெறியின் பேரால் புலம்பெயர்ந் தோர்க்கு எதிரான நடவடிக்கைகளை வலது சாரி சக்திகள் ஊக்குவிக்கின்றன. ஆனால்  அதே கொள்கைகளைத் தான்  அதிகாரத்திற்கு வரும்பொழுது அமலாக்குகிறார்கள் .ஒன்று பட்ட போராட்டங்களை பலவீனப்படுத்து கிறார்கள். எதிர்க்கட்சிகளை அடக்கக் கூடிய வகையில்  எதேச்சதிகார, சர்வாதிகார நட வடிக்கைகளை எடுக்கின்றார்கள் . இதற்கெல்லாம் நேர் எதிராக, தொழிலா ளிகள் மற்றும் மக்களின் போராட்டங்கள், அர சியல் ரீதியாக உணர்வு பெற்ற தலைமை யின் கீழ், மக்கள் நல மாற்றுக் கொள்கை களை முன்வைத்துப் போராடும் தென் அமெரிக்க நாடுகளில் மக்கள் ஆதரவு அரசு கள்  அதிகாரத்திற்கு வருவதை காண முடிகிறது. சமீபத்திய உதாரணம், பிரேசிலில் லூலா பெற்ற வெற்றி. ஆனால் இத்தகைய நாடுக ளில் பெரு, பொலிவியா, பிரேசில் போன்ற  நாடுகளில் வலதுசாரி சக்திகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவுடன் அரசாங்கங்க ளை கவிழ்க்க முயற்சிக்கின்றன. வெனிசுலா, பிரேசில், பெரு, பொலிவியா போன்ற நாடுக ளில் அமெரிக்க ஏகாதிபத்தியத் தலையீடுகளை எதிர்த்து தங்கள் விருப்பம் போல்  அரசுகளை அமைத்துக் கொள்ள   போராடும் மக்களுக்கு சிஐடியு தனது ஒருமைப்பாட்டைத் தெரிவித்துக் கொள்கிறது.

சர்வதேச நிதி மூலதனம் மற்றும் ஏகாதிபத்தி யம் நிர்பந்தப்படுத்தி திணிக்கும் நவீன தாராளமய ஆட்சிகளுக்கு எதிரான உணர்வு வளர்த்திட வேண்டிய தேவையை நமது அனு பவங்கள் சுட்டிக்காட்டுகின்றன. மக்களிடையே வர்க்க அரசியலை அம்பலப்படுத்தி விழிப்பு ணர்வு உருவாக்க வேண்டும். அமெரிக்கா மற்றும் இதர ஏகாதிபத்திய நாடுகள்  நடத்தி வரும் ஏகாதிபத்திய யுத்தங்கள் மற்றும் ராணுவத் தலையீடுகளை சிஐடியு வன்மையாகக் கண்டிக்கிறது. சமீபத்திய உதாரணம் நேட்டோவை விரிவாக்குவதற்கான ஏகாதிபத்திய முயற்சியின் ஒரு பகுதியாக தூண்டி விடப்பட்ட உக்ரைன் யுத்தம் .லிபியா, ஆப்கானிஸ்தான் ,இராக் மற்றும் யுகோஸ்லா வியா தற்போது உக்ரைன்   யுத்தங்களுக்கு நேட்டோ காரணமாக உள்ளது. அப்பாவி மக் களை ஆயிரக்கணக்கிலே கொன்று குவிக்கி றது. இந்த நாடுகளில் எல்லாம் ஆழமான அழிவுகளை, மிகப்பெரும் சேதாரங்களை உருவாக்கி வருகின்றன. நேட்டோ உடனடி யாக கலைக்கப்பட வேண்டும்; உலகில் அமைதி யை திரும்பக் கொண்டு வர உடனடி நடவடிக்கை கள் தேவை என சிஐடியு வலியுறுத்துகிறது. 

கேரள அரசுக்கு வாழ்த்து

இந்த மே நன்னாளன்றுகேரள இடது ஜன நாயக முன்னணி அரசை சிஐடியு வாழ்த்து கிறது. மக்கள் நலக் கொள்கைகளை கேரள அரசு அமல்படுத்தி வருகிறது. வெளிமாநில தொழிலாளிகள் உள்ளிட்டு உழைக்கும் மக்களின் பரந்துபட்ட பிரிவினருக்கு பல்வேறு நலத்திட்டங்கள் கேரளாவில் அமலாக்கப்படு கின்றன.  தற்போதைய அமைப்பு, ஏற்படுத்தி உள்ள பல கடுமையான சிக்கல்களுக்கு மத்தி யில்,ஒன்றிய பாஜக அரசின் பாரபட்சமான அணுகுமுறை இருப்பினும், தொழிலாளிக ளின் உரிமைகளை கேரள அரசு பாதுகாத்து வருகிறது. 5 ஆண்டுகளாக பாஜக அரசை எதிர்த்து போராடக்கூடிய திரிபுராவின் மக்கள் மற்றும் சிஐடியு ஊழியர்கள், சிஐடியு உறுப்பினர்க ளுக்கு சிஐடியு தனது உறுதியான ஒருமைப் பாட்டைத் தெரிவித்துக் கொள்கிறது. திரிபுரா வில் பாஜக குண்டர்களின் கொடூரமான தாக்கு தல்களை சந்தித்து வருகிறோம். சமீபத்திய சட்ட மன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பாஜக குண்டர்கள் நமது தோழர்களின் வீடுகளை எரிப்பது, மீன்பிடிக்  குளங்களில் விஷம் கலப்பது, பலரை கொலை செய்வது உள்ளிட்ட தாக்குதல்களில் இறங்கினர் . இப்படிப்பட்ட மனி தாபிமானமற்ற பாஜக மாநில அரசின் தாக்கு தல்களை தைரியமாக எதிர் கொண்டு போராடி வரும் இடதுசாரி சக்திகளுக்கு ஆதரவளித்த மக்களுக்கு சிஐடியு வாழ்த்துக்களை தெரி வித்துக் கொள்கிறது.

2023 ஏப்ரல் ஐந்தில் தேசிய தலைநகரம் தில்லியில் நடைபெற்ற தொழிலாளி - விவசாயி சங்கமத்தில் கலந்து கொண்ட தொழிலாளர், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளி களை சிஐடியு வாழ்த்துகிறது. இந்த மூன்று அமைப்புகளின் ஆயிரக்கணக்கான ஊழியர் கள் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை,  கோரிக் கைகளை ஆயிரக்கணக்கான கிராமங்கள், நகர்ப்புற  வார்டுகளில் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு தீவிரப் பிரச்சாரம் மூலமாக எடுத்துச் சென்றனர். இவர்களை சிஐடியு வாழ்த்துகிறது. தில்லி சங்கமத்திற்கு பல்வேறு வழிகளில் ஆதரவளித்த மாதர் ,மாணவர், இளைஞர் மற்றும் இதர வெகுஜன அமைப்பு கள்,அறிவாளிகள்   ஆயிரக்கணக்கானோ ருக்கு சிஐடியு தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

மோடி அரசுக்கு கண்டனம்

மக்களின் அதிகரித்து வரும் துயரங்க ளை கண்டுகொள்ளாத மோடி அரசை சிஐடியு வன்மையாகக் கண்டிக்கிறது . நாடாளுமன்றத் தில் மக்கள் சந்திக்கும் பற்றி எரியும் பிரச்சனை கள் குறித்து விவாதம் நடத்த மோடி அரசு அனுமதிப்பதில்லை. அதானி குரூப் பங்குச் சந்தையில் தில்லுமுல்லு செய்ததை அம்ப லப்படுத்திய ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவில்லை. இப்பிரச்சனை குறித்து கூட்டு நாடாளுமன்ற குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் ஒன்றிய அரசு கண்டு கொள்ளவில்லை. அமலாக்கப் பிரிவு ,தேசிய ஆய்வு முகமை, வருமான வரித்துறை, காவல் துறை உள்ளிட்டவை  அரசின் கொள்கைக ளுக்கு எதிராக வந்த குரல்களை அடக்கி ஒடுக்கு வதற்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன .நாடா ளுமன்ற நடைமுறைகளும் கோட்பாடுகளும் மீறப்படுகின்றன .தகவல் தொழில்நுட்ப விதி களில் அரசு திருத்தம் கொண்டு வருவதன் மூலமாக சமூக ஊடகத்தை தணிக்கை செய்வது போலியான செய்திகள் என்று அரசு  கருதுவதை சமூக ஊடகத்தில்  இருந்து அப்புறப் படுத்துவதற்கு அதிகாரம் அளிக்கின்றது.

மக்களைப் பிளவுபடுத்தும் மனுவாதி பிராமணிய அணுகுமுறை

பல மாநிலங்களுக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளன. அடுத்த ஆண்டு நாடாளு மன்றத்திற்கு தேர்தல் நடைபெறுகிறது .மதரீதி யாக மக்களை பிளவுபடுத்த ,பாஜகவும் ஆர்எஸ்எஸ் பரிவாரக் கும்பலும் தங்களது முயற்சிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. லவ் ஜிகாத், ஹிஜாப் ,மசூதிகளில் வழிபாட்டுக்கு ஒலி பெருக்கி மூலம் அழைப்பது, பொது இடங்க ளில் நமாஸ் செய்வது, முஸ்லிம் வியாபாரிக ளுக்கு இந்து கோயில்கள் முன் வணிகம் செய்ய அனுமதி மறுப்பது ,பசு பாதுகாப்புக் கூடங் கள், மதமாற்றங்கள்  மக்கள் தொகை கட்டுப் பாடு,ராமநவமி, அனுமன் ஜெயந்தி போன்ற மத ரீதியான பண்டிகைகள் போன்ற அனைத் தும் மதவாத கலவரங்களை, வன்முறைக ளை உருவாக்க/ தூண்டிவிட பயன்படுத்தப்படு கின்றன. நமது மதச்சார்பற்ற பாரம்பரியங்க ளை, அம்பேத்கரால் எழுதப்பட்ட அரசியல் சட்டத்தை புறக்கணித்து, பெரும்பான்மை என்ற அடிப்படையில் இந்து ராஜ்யம் நிறுவு வதற்கான முயற்சிகள் வேகமாக நடைபெறு கின்றன. ஆர் எஸ் எஸ் மற்றும் மதவாத சக்தி களின் இத்தகைய பிளவுவாத சூழ்ச்சிகளுக்கு எதிராக தொழிலாளி வர்க்கம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் .மக்களின் ஒற்றுமையைப் பாதுகாக்க வேண்டும் என்று சிஐடியு அறை கூவி அழைக்கின்றது. பெண்கள் மற்றும் குழந்தைகள், தலித்து கள் மற்றும் ஆதிவாசிகளுக்கு எதிராக அதி கரித்து வரும் வன்முறைகளை சிஐடியு வன்மை யாகக் கண்டிக்கிறது. பல்வேறு மட்டங்களில் உள்ள பாஜக, ஆர்எஸ்எஸ் தலைவர்கள் பெண் களை வெறுக்கக் கூடிய அறிக்கைகளை அடிக்கடி வெளியிடுவது ,மனுவாதி பிராமணிய அணுகுமுறையை காட்டுகிறது.

பொருளாதாரத்தை, அரசியலை முற்றி லும் மாற்றி அமைப்பதற்கு கார்ப்பரேட் - மத வாத கூட்டணி எடுத்து வரும் தீவிர நடவடிக்கை கள் குறித்து உழைப்பாளி மக்கள்  முழுவதின் கவனத்தை ஈர்க்க சிஐடியு விரும்புகிறது. தெளி வான பாசிச நோக்கத்துடன் ,எதேச்சதிகாரமான திசைவெளியில், மூர்க்கத்தனமாக மதவாத அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தி சமூ கத்தில் மேலாண்மை செலுத்த வலதுசாரி சக்தி கள் முயற்சிக்கின்றன. ஆழமடைந்து வரும்  பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் நாட்டின் ஆதாரங்களை ,சொத்துக்களை, உள் கட்டமைப்புகளை தனியார் கார்ப்பரேட் வர்க்கம் தடையற்ற வகையில்  கொள்ளையடிப்பதற்கு அரசு வசதி செய்து கொடுக்கிறது. நாட்டின் உற்பத்தி பொருளாதாரத்தை இது அழித்து வருகிறது. இதனால் மேலும் வேலை இழப்பு கள், வறுமை விரிவடைதல் , மக்களின் துயரங் கள் அதிகரித்தல்,வேலையின்மை - தகுதிக்கு ஏற்ற வேலையின்மை செங்குத்தாக வளர் கின்றன. அனைத்தும் தனியார் மயம் என்ற  வகையில் தேசிய பணமாக்கல் திட்டம் அமலாக் கப்படுகிறது. ஒட்டுமொத்த உள்கட்டமைப்பு துறையை கிட்டத்தட்ட இலவசமாக தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அரசு தாரை வார்த்து வருகிறது.

கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்யும் பாஜக

தொழிலாளர்களை அடிமைப்படுத்தக் கூடிய வகையில் அவர்களின் உரிமைகளை பறித்து ,இருதரப்பு, முத்தரப்பு ஏற்பாடுகளை சீர் குலைத்து தொழில் உறவுகள் மாற்றப்படு கின்றன.தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் இதற்கான களத்தை தயாரித்துள்ளது. நிர்வாக ரீதியான  சட்டரீதியான நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு தீவிரப்படுத்தி வருகிறது. பல மாநிலங்களிலும் நெளிவு சுழிவான வேலை நேரம் மற்றும் பணி நிலைமைகள் அமலாக்கப் படுகின்றன. அதே நேரம் அனைத்து ஜனநாயக நடைமுறைகளும் மீறப்படுகின்றன; நீதிமன்ற நிறுவனங்களின் தலையீடுகள் அரசுக்கு சாத கமாகவே உள்ளன; நாடாளுமன்ற அமைப்பு களும், அரசியல் சட்டத்தின் அடிப்படை சரத்து களும் ஓரங்கட்டப்படுகின்றன. மோடி ஆட்சியின் கீழ் தேர்தல்கள் என்பது ஒரு மோசடியாக மாற்றப்பட்டுள்ளது .ஆள்  பலம், பண பலம் வரலாறு காணாத மட்டங்க ளை எட்டி உள்ளது .தேர்தல்கள் கேலிக் கூத்தாக உள்ளன. தேர்தல் பத்திரங்கள் மூல மாக மிகப் பெரிய பங்கை பாஜக பெறுகிறது. பிரதானமாக தங்களுடைய அஜண்டாவை முன்னெடுத்துச் செல்வதில் பாஜக சிறப்பாக பயன்படும் என்று அதற்கு பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் அதிக அளவில் நன்கொடை வழங்குகின்றன. மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் அதிருப்திகளின் பின்னணியில் நடைபெறும் போராட்டங்களை அடக்குவதில்,  ஏழை எளிய மக்களுக்கான மாற்றுக் கொள் கைகளுக்காக போராடக்கூடிய இடதுசாரிகள்  போராட்டங்கள் மூலம் பலமடைவதை தடுப்பதி லும் பாஜக சிறப்பாக  செயல்படக் கூடியது என்று பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் கருது கின்றன.


கூட்டுப் போராட்டங்களை வலுப்படுத்துதல்

இந்த மே நன்னாளில், இத்தகைய சீரழிவு களுக்கு எதிராக, மக்கள் விரோத ஆளும்  வர்க்கத்தின் எதேச்சதிகார நடவடிக்கைக ளுக்கு எதிராக ,அவர்களின் அரசியல் ஏஜெண் டுகளுக்கு எதிராக பரந்து விரிந்த தொழிலாளி வர்க்கத்தின் ஒன்றுபட்ட போராட்டத்தை, ‘அடங்க மறு’ மற்றும் ‘எதிர்த்து நில் ‘ என்ற மட்டத் திற்கு கொண்டு செல்வது என்று சிஐடியு உறுதி ஏற்கிறது. தொழிலாளிகளின் நலன்களை பாதுகாப்ப தற்கான, தொழிற்சங்கங்களின் கூட்டுப் போராட்டங்களை வலுப்படுத்துவதில் சிஐடியு உறுதியாக உள்ளது .ஜனவரி 30இல் நடை பெற்ற தொழிற்சங்கங்களின் கூட்டு சிறப்பு மாநாடு எடுத்த அறைகூவல்களை திறம்பட நிறைவேற்ற வேண்டும் என சிஐடியு அறை கூவி அழைக்கிறது. மாவட்ட அளவில் ஆகஸ்ட் 9 முதல்  (மகா பாதவ்) மாபெரும் கூட்டு தர்ணா போராட்டங்களை நடத்துவதற்கு திட்டமிட வேண்டும் .ஆண்டு முழுவதும் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லவும் பொது வேலை நிறுத்தம் இந்த ஆண்டிற்குள் செய்யவும் 2024 நாடாளு மன்றத் தேர்தலில் தொழிலாளி விரோத மோடி அரசை வீழ்த்திடவும் நமது முழு அமைப்பும் தயாராக வேண்டும் என சிஐடியு அறைகூவி அழைக்கின்றது.

ஏப்ரல் ஐந்தில் தில்லியில் நடைபெற்ற தொழிலாளி - விவசாயி சங்கமம் 2024 நாடா ளுமன்றத் தேர்தலில் மோடி அரசை தோற் கடிப்பதன் மூலம் நாட்டையும் மக்களையும் பாதுகாக்க முன்வர வேண்டும் என்று அறை கூவல் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு அறைகூவல்களையும்  பரந்து பட்ட தொழிலாளிகள் மற்றும் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வதன் மூலமாக தொழிலாளி ஆதரவு, மக்கள் ஆதரவு கொள்கைகளுக்கான போராட்டங்களை தீவிரப்படுத்த முடியும். அந்த திசைவழியில் செயல்பட சிஐடியு தனது ஊழியர்களை அறைகூவி அழைக்கின்றது ! இந்த மே நாளில் தொழிலாளி வர்க்க ஒற்று மையை வலுப்படுத்த சபதமேற்போம் ! ஆளும்  வர்க்கங்களின் அனைத்து மத வாத பிரிவினைவாத சூழ்ச்சிகளை தீர்மானகர மாக தோற்கடிப்போம்! தொழிலாளி- விவசாயி ஒற்றுமையை வலுப்படுத்த முயற்சிப்போம்! இந்த ஒற்றுமையை அடிமட்டம் வரை கொண்டு செல்வோம்! பொதுக் கோரிக்கைகள் மீது கூட்டுப் போராட்டங்களை வளர்த்தெடுப்போம்! தொழிலாளி வர்க்கத்திடம் வளர்ந்து வரும் அதிருப்தியை நண்பர்கள் யார், எதிரிகள் யார் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த பயன் படுத்துவோம்! தொழிலாளி வர்க்க பலம் முழு வதும் கார்ப்பரேட் - மதவாத கள்ளக் கூட்ட ணிக்கு எதிராக திரட்டுவோம்! தொழிலாளி விரோத, மக்கள் விரோத, தேச விரோத மோடி அரசை தோற்கடிப்போம் !

மக்கள் ஆதரவு மாற்றுக் கொள்கைக ளுக்கான போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்!

மே தினம் வாழ்க!
தொழிலாளி வர்க்க ஒருமைப்பாடு வாழ்க!
தொழிலாளி -விவசாயி ஒற்றுமை வாழ்க!
சோசலிசம் வாழ்க !
முதலாளித்துவம் வீழ்க !
ஏகாதிபத்தியம் வீழ்க!
பாட்டாளி வர்க்க சர்வதேசியம் வாழ்க!

தமிழில் : ஆர்.சிங்காரவேலு