articles

img

நோய்களை கண்டறியும் இடத்தில் கோட்டை விடலாமா? - வீ.பார்த்தசாரதி

மருத்துவக் கல்வி, மருத்துவம், பொது சுகாதாரம், முன்தடுப்பு களப்பணி, தொழு நோய், காசநோய் கட்டுப்பாடு மற்றும் நோய் ஒழிப்பு, அனைத்து மருத்துவத்துறையின் உட்பிரிவுக ளிலும்  ஆய்வக வல்லுநர்கள்  பணி மிக முக்கியமான தாகும். நுண்ணுயிரியல் துறை, நோய்க்குறியியல் துறை, உயிர்வேதியியல் துறையிலுள்ள நோய் காண் ஆய்வகங்களில் சுமார் 400க்கும் மேற்பட்ட பரிசோத னைகளையும், நோயாளிகளிடமிருந்து சோதனை மாதிரிகளையும் சேகரித்து பரிசோதித்த பின்னர் முடிவு களை மருத்துவர்களிடம் உடனுக்குடன் சேர்ப்பதும், ஆய்வக நுட்பனர்களின் முதன்மையான பணியாகும்.   சிகிச்சை முடிந்த பின்பும் நோயாளிகளின் ரத்தம், மலம், சிறுநீர், நிணநீர், சளி உள்ளிட்ட பல்வேறு மாதிரி களின் உயிர்வேதியியல் பண்புகளின் அளவீடு கட்டுப்பாட்டு அளவிற்குள் இருப்பதை உறுதி செய்வ தும், நோய் காண் ஆய்வகத்தின் தொடர்பணியாகும். அதே போன்று பொது சுகாதாரத்துறையின் முன் தடுப்பு களப்பணி பரிசோதனைகள் மற்றும் தொற்று நோய், தொற்றா நோய் குறித்த தொடர் சிகிச்சை முறைகளின் நோய் பரவல் தன்மை, கட்டுப்பாடுகளில் ஆய்வக வல்லுநர்களின் பணி இன்றியமையாததாகும்.

அரசு தொழுநோய் கட்டுப்பாடு நிலையங்களில், தோல் சோதனை மாதிரிகளை சேகரித்து, நோய் தாக்கத் தினை உறுதி செய்யும் பரிசோதனையும், நோயற்றவர் என்ற நிலையை எட்டும் வரை பரிசோதனைகள் தொ டர்வதும், காசநோய் கட்டுப்பாடு மற்றும் நோய் பரவல் நிலை அறிவதற்கும், ரத்த வங்கிகளில் அனைத்து  பணிகளும் ஆய்வக நுட்பனர்களின் பணியாகும். ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனை கள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், தொழிலாளர் காப்பீட்டு ஈட்டுறுதி (இஎஸ்ஐ) மருத்துவமனைகள், இந்திய முறை மருத்துவமனைகள் போன்ற சிகிச்சை அளிக்கும் பல்வேறு பிரிவுகளிலும் ஆய்வக நுட்பனர் பணி என்பது படிப்படியாக 24 மணி நேரப்பணியாக தமிழகத்தில் பெரும்பகுதி அரசு மருத்துவமனைகளில் நடைமுறைக்கு வந்துள்ளது. ஆனால் தமிழக அரசு நோய்காண் ஆய்வகங்களை 24 மணி நேர பணித்தளமாக அறி விக்காத நிலை இன்றுவரை தொடர்கிறது. கூடுதலாக, தற்போது கொரோனா பெருந்தொற்று கண்டறிவதும், கட்டுப்பாட்டுப் பணிகளும் தொடர்கிறது.

மருத்துவம் சார்ந்த, மருத்துவம் சாராத 50 எம்பிபிஎஸ் பயிற்சி மாணவர்களைக் கொண்ட மருத்து வக் கல்லூரிகளில், 600 உள்நோயாளிகள், படுக்கை  வசதிகளுடைய ஒரு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் 1948 க்குப் பின்னர், 100 படுக்கை வசதிக்கு, நிலை-2 மற்றும்  நிலை-1 என்ற அளவு கோலில், சிப்டு அல்லாத பணித்தள அமைப்பில் 55 ஆய்வக நுட்பனர் பதவிகள் உருவாக்கப்பட்டன. அரசு வட்ட மருத்துவ மனைகள், தலைமை மருத்துவமனைகளிலும் இந்த அளவுகோல் ஒரே இயக்குனர் கட்டுப்பாட்டில் அனைத்து துறைகளும் நடைமுறையிலிருக்கும் போது நடை முறைப்படுத்தப்பட்டது. மருத்துவக்கல்வி, மருத்துவம், பொது சுகாதாரம் என இயக்ககங்கள் 1950 க்குப் பின்னர் பிரிக்கப்படும்போது இந்நடைமுறை அளவுகோல் மாறுபட்டன.

இன்றைய நாளில் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஊரகநல பணிகள் கட்டுப் பாட்டில் 30 க்கும் மேற்பட்ட மாவட்ட தலைமை மருத்துவ மனைகள் உருவானபோது மேற்கண்ட அளவுகோல் ஏதுமின்றி ஆய்வக நுட்பனர் பணியிடங்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் உருவாக்கப்பட்டன. ஆனால் நடைமுறையில், மக்கள் தொகைப் பெருக் கத்திற்கு ஏற்ப மருத்துவமனைகளின் தேவை அதி கரித்ததின் காரணமாக இன்றையநாளில் 1,74,000 படுக்கை வசதிகளுடன், பன்மடங்கு வெளி நோயாளர்க ளின் எண்ணிக்கையும் லட்சக்கணக்கில் அதிக ரித்துள்ள சுழலில் ஆய்வக நுட்பனர் பதவி உருவாக்கம் என்பது 30 படுக்கை வசதிக்கு ஒருவர் என்ற அளவு கோல்படி உருவாக்கம் செய்யப்படவில்லை.

பொது சுகாதாரத்துறையில் ஆய்வக நுட்பனர் 3ஆம் நிலை பணியிடங்கள் (சுமார் 2000) கடந்த பத்தாண்டு களாக உருவாக்கம் செய்யப்பட்டு, நடைமுறையி லுள்ளது. ஒட்டுமொத்தமாக 24 மணிநேர சுழற்சிமுறை நோய் காண் ஆய்வகங்களில் மட்டும் 10,800 ஆய்வக நுட்பனர்கள் பணியிலிருக்க வேண்டிய சூழலில் தற்போது 2100 பேர் மட்டும்தான்  உள்ளனர். இதனால் ஆய்வக நுட்பனர்களின் பணிச்சுமை அதிகரித்து  பணித்தளங்களில் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். ஒன்றிய அரசோ, தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு ஏற்றார்போல, இந்திய மருத்துவப் பேரவையின் கட்டுப்பாடுகளில் பலதளர்வுகளை உருவாக்கியுள்ளது. உண்மையில் இந்த நடவடிக்கை யானது, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக ளுக்கு பொருந்தாத ஒன்று, மேலை நாடுகளில் இருப்பது போன்று மருத்துவத்துறையின் உட்கட்டமைப்பில் மனிதசக்திகளின் எண்ணிக்கையை மேம்படுத்த, ஒன்றிய , மாநில அரசும் கூடுதல் நிதியை ஒதுக்கிட வேண்டும், அதற்கான நிதியை ஒன்றிய அரசிடம் மாநிலஅரசு கேட்டுப் பெறவேண்டும்.

ஒருங்கிணைந்த எச்.ஐ.வி தடுப்பு சிகிச்சை,  ஒருங்கிணைந்த காசநோய் சிகிச்சை மற்றும் தடுப்பு திட்டம், தொழுநோய் கட்டுப்பாட்டுத்திட்டங்களை ஒருங்கிணைத்து, உரிய கல்வித்தகுதியுடைய, அனைத்து பணியாளர்களையும் மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் பணி நியமனம் செய்திட வேண்டும். ஒப்பந்த முறை புறஆதாரமுறைப் பணிநிய மனங்களை முற்றிலும் கைவிடவேண்டும். நோய் காண் ஆய்வகங்கள் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட உட்பிரிவுத்துறைகள் அடங்கிய மருத்து வத்துறையில், அனைத்து பிரிவுவாரித்துறைகளிலும் அத்தியாவசியப் பணியிடமாக ஆய்வக நுட்பனர் பணி யிடங்களிருக்கின்றன. மருத்துவத்துறை உள்ளிட்ட அரசுத்துறைகளில் பணியாற்றும் பிற அரசு ஊழியர்க ளுக்கு இருப்பதுபோல் நான்கு கட்ட பதவி உயர்வு ஆய்வக நுட்பனர்களுக்கும் உருவாக்கம் செய்திடக்கோரி கடந்த இருப்பத்தைந்து ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருகின்றோம்.

30 வருடம் பணியாற்றிய பின்னரும் முதல் கட்ட பதவி உயர்வே கிடைக்காமல் பணி நிறைவு பெற்று செல்லும் நிலை தொடர்கிறது, இந்நிலையில் முந்தைய அதிமுக அரசு புதிதாக அறிவித்த 11 மருத்து வக் கல்லூரிகளுக்கு 187 ஆய்வக நுட்பனர் பணி யிடங்களை புற ஆதாரமுறைப் (அவுட்சோர்ஸ்) பணி யிடங்களாக அறிவிப்பு செய்தது. இந்நடவடிக்கை யானது, 20000க்கும் மேற்பட்ட பட்டய தேர்வர்கள், 15 ஆண்டு காலமாக வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் நிலையில், ‘வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது” போன்று உள்ளது.  நுழைவுப் பணியிடங்கள் கூடநிரந்தர மற்றது என்ற நிலை இளைஞர்கள் மத்தியில் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய அரசிடம், இப்பணியிடங்கள் காலமுறை பணியிடங்களாக மாற்றிட முறையீடு செய்த போது, இந்த அரசு மருத்துவத் துறையில் அனைத்து பணியிடங்களும் காலமுறை பணியிடங்க ளாக மாற்றப்படும் எனஅறிவித்தது.  மருத்துவத்துறை மானியக் கோரிக்கையில் இது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படாதது பெரிய ஏமாற்றமே.

கடந்த ஆட்சியில் 2019ஆம் ஆண்டு ஈரோடு  பெருந்துறை மருத்துவக்கல்லூரி, அரசு மருத்துவக் கல்லூரியாக அறிவிக்கப்பட்டது. ஆனால் 01.04.2003 க்கு முன்னர் பணியமர்வு பெற்று 30 ஆண்டுகளாக பணியாற்றி வருபவர்கள் கூட, வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் இணைக்கப்பட வில்லை, சேம நல நிதி பிடித்தம் செய்யாது அங்கு பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் முழு ஊதியத்தையும் பெறுகின்றனர். இங்கு பணியாற்றிய ஆய்வக நுட்பனர் ஒருவர் இறந்து ஒரு ஆண்டுக்குப் பின்னரும் எந்தவிதமான நிதிப்பலன்களும், குடும்பத்தினருக்கு வழங்காத சூழ்நிலை தொடர்கிறது.

2002, 2003 ல், நிரந்தர பணியிடங்களில், ஒப்பந்த முறையில் பணியாற்றி இரண்டாண்டுகளுக்கு பின்னர் கால முறை ஊதியம் பெற்ற 1977ல் பணி நியமனம் பெற்ற ஊழியர்களுக்கு, பணியேற்ற நாளிலிருந்து பணி வரன்முறை, செய்திட உயர்நீதிமன்றம், அரசு பரிவு காட்டிட வேண்டும் என தீர்ப்பளித்த பின்னரும் அரசு தரப்பில் கொள்கை முடிவெடுக்கப்படாமல் நிலுவையிலுள்ளது. கொரோனா பெருந்தொற்றில் ஆரம்ப நிலையி லிருந்து அனைத்துப் பணிகளையும் செய்திட்ட சென்னை மருத்துவக் கல்லூரி ஆய்வக ஊழியர்கள் அனைவருக்கும் நாளது தேதி வரை ஊக்கத்தொகை, உரிய நிதி ஒதுக்கீடு இல்லாத காரணத்தால் வழங்கப் படவில்லை. இரண்டாவது கட்டபதவி உயர்வுப் பதவி யான தலைமை ஆய்வக நுட்பனர் பதவி, கடந்த 2006 முதல் கோப்பு நடவடிக்கையிலிருந்தாலும், இப்பதவி உருவாக்கம் இறுதி செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்படவில்லை.

1999க்குப் பின்னர் தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளிலும் புதிதாக பிரிக்கப் பட்டு உருவான மாவட்ட தலைமை மருத்துவ மனைக ளிலும் 1ஆம் நிலை நுட்பனர் பதவி உருவாக்கப்பட வில்லை. கடந்த ஆறு ஆண்டுகளாக பரிசீலனையிலி ருந்து மாநிலந்தழுவிய ஒரு தொகுதிமுறை அம லாக்கம், மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி 2ஆம் நிலை, பிரிவினருக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்படவில்லை, இராமநாதபுரம், விருதுநகர், திருப்பூர் உள்ளிட்ட 11 புதிய மருத்துவக் கல்லூரிகளில் 187 பணியிடங்கள், கால முறை ஊதியத்தில் தேர் வாணையம் மூலம் நிரப்பிட மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்படவில்லை, நிலை - 1 பதவி உயர்வு பணி யிடங்களையும், தேர்வாணையம் மூலம் நிரப்பிட வேண்டும் என்பதே இன்றைய உடனடித் தேவையா கும் ஆறு அல்லது ஏழு நுட்பனர்களை கொண்டு 24 மணிநேரம் உட்பட அனைத்து பணிகளும் எவ்வாறு செய்திட முடியும்?

அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களை நெறிப் படுத்தும் ஆய்வக கவுன்சில் அரசாணை 417, தமிழக சட்டமன்றத்தில் 2009-ல் அறிவிக்கப்பட்டு, நடை முறைப்படுத்தப்படவில்லை, 24 மணிநேர ஆய்வகங்க ளில் 1999 முந்தைய காலங்களில் உருவாக்கப்பட்ட மருத்துவமல்லா விளக்குனர் பணியிடங்களில், இள நிலை உயர்வேதியல் கல்வித்தகுதியுடைய ஆய்வக  நுட்பனர்களுக்கு வழங்கப்பட்டு வந்த முன்னுரிமை 2003க்குப் பின்னர் மறுக்கப்படும் நிலை தொடர் கிறது. எச்ஐஎம்எஸ், எல்ஐஎம்எஸ் கணினி வழிப்பதி வேட்டிற்கு ஆய்வக நுட்பனர்கள் பதவி உருவாக்க மின்றி, தேவையான பயிற்சியுமின்றி உரிய இணைய வசதிகளில் கட்டமைப்பு முழுமையடையாமல், கணினி பதிவு கட்டாயப்படுத்தப்படுகிறது. இப்படி நீண்டகால நிலுவைக் கோரிக்கைகள் முன்வைத்து கடந்தாண்டு 10.08.2021 முதன்மைச் செயலர் தலைமையில் ஆய்வுக் கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டு விரைவில் நிறைவேற்றப்படும் என உறுதியளிக்கப்பட்டது. ஆனால் நடைமுறையில், நிதிச் செலவினங்களில்லா கோரிக்கைகள் மற்றும் மிகக்குறைந்த நிதிச் செல வினங்களுடைய கோப்புகளின் நடைமுறை எந்தவித முன்னேற்றமின்றி நிலுவையிலிருக்கிறது. 

முதலமைச்சர் எங்களது நீண்டகால நிலுவைக் கோரிக் கைகளை துறை சார்ந்த அமைச்சர் தலைமையிலானஆய்வுக் கூட்டம், இயக்ககங்கள் மற்றும் முதன்மைச்செயலர் முன்னிலையில், சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட உரிய கருத்து வழங்கி தீர்வு கண்டிட வேண்டும்.

கட்டுரையாளர் : மாநில பொதுச்செயலாளர்,  தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்கம்,