articles

img

ஜிஎஸ்டி வரி உயர்வும், விலைவாசி உயர்வும் ஏழைகள் மீது கொடூரமான தாக்குதல்

டாலருக்கான ரூபாயின் மதிப்பு முதன் முறையாக 80 ரூபாய் அளவிற்கு வீழ்ச்சி அடைந்திருக்கிறது. தொடர்ந்து ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவது பணவீக்கத்தின் நிர்ப்பந்தங்களை அதிகரித்திட இட்டுச் செல்லும். இது, ஏற்கனவே இருந்துவரும் பண வீக்கம் மற்றும் அதிக அளவிலான வேலையின்மை ஆகியவற்றுடன் சேர்ந்து, நாட்டின் பொருளாதாரம் மோடி அரசாங்கத்தின் பெரும் பணக்கார ஆதரவுக் கொள்கைகளால், எப்படி மோசமானமுறையில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது என்பதைக் காட்டுகிறது.  மொத்த விலைப் பணவீக்கமும், சில்லரை விலைப் பணவீக்கமும் முறையே தொடர்ந்து 15 விழுக்காடு மற்றும் 7 விழுக்காடு அளவிற்கு உயர்ந்திருப்பது அதே விகிதத்தில் தொடர்ந்து நீடிக்கிறது. இது, அனைத்து அத்தியாவசியப் பண்டங்களின் விலைகளையும், குறிப்பாக உணவுப் பொருள்களின் விலைகளையும், தொடர்ந்து அதிகரிப்பதற்கு இட்டுச் சென்றிருக்கி றது. இத்துடன் மக்கள் நாளும் உயரும் எரிபொருள் களின் விலை உயர்வு மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் அதீத விலை உயர்வு ஆகிய கூடுதல் சுமைகளை சுமப்பதற்கும் உள்ளாக்கப்பட்டிருக்கி றார்கள்.  

தொடரும் வீழ்ச்சி

ரூபாய் மதிப்பு கடந்த மூன்றாண்டுகளாகப் பல்வேறு காரணிகளால் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது.  அவற்றில் மிகவும் முக்கியமா னது வர்த்தகம் மற்றும் நாடுகளுக்கிடையேயான கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்டுள்ள நடப்புக் கணக்குப் பற்றாக்குறையாகும். இதில் மிகவும் முக்கிய மான காரணி, அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வங்கி, தன்னுடைய வட்டி விகிதங்களை உயர்த்தியதால், அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேறி யதேயாகும். உதாரணமாக, அந்நிய நிறுவன முத லீட்டாளர்கள் (FII) தங்கள் பங்குகளை விற்றதன் மூலம் இந்த ஆண்டில் இதுவரை 30 பில்லியன் டாலர்களை எடுத்துச் சென்று விட்டார்கள். இந்திய ரிசர்வ் வங்கியானது, அதிகமான அளவு  அந்நியச் செலாவணி கையிருப்பைக் கொண்டி ருப்பதால், திறந்தவெளிச் சந்தையில் வலுவாக தலையிட முடியும்; அதன்மூலம் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைவதிலிருந்து சரி செய்திருக்க முடியும். ஆனால், ஒரு சில சமயங்கள் தவிர மற்ற சமயங்களில் ரிசர்வ் வங்கி அவ்வாறு செய்யவில்லை. இதன்மூலம், இந்திய ஏற்றுமதிகளில் போட்டியை அதிகரித்திடவும், இந்திய இறக்குமதியை விலை உயர்ந்ததாக மாற்றக் கூடிய விதத்திலும், இந்தியாவின் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைவதற்கு இந்திய ரிசர்வ் வங்கி அனுமதித்துள் ளது. இவ்வாறு செய்தால் வர்த்தகப் பற்றாக்குறை சரி செய்யப்படும் என்று ரிசர்வ் வங்கி கருதியது. ஆயினும் அது நடைபெறவில்லை. ஏனெனில், ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம் நாட்டிலுள்ள மூலதனங்கள் அதாவது, இருப்புக் கணக்குகள் பத்திரங்கள், பரஸ்பர நிதி, வர்த்தகப்பரிவர்த்தனை நிதி உள்ளிட்ட அந்நிய குவிப்பு முதலீடுகள் (foreign portfolio investments) வெளியேறியதேயாகும். எனவேதான் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி வர்த்தகப் பற்றாக்குறையைச் சரிசெய்திட  உதவவில்லை.

மானிய வெட்டாலும்...

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி இறக்குமதிக்கான கட்ட ணங்களை அதிகரித்திடும். இதனால் இறக்குமதி செய்யப்படும் செயற்கை உரங்கள் மற்றும் பெட்ரோலி யப் பொருட்களுக்கு அளித்துவரும் மானியங்களையும் வெட்ட வேண்டும் என்று அரசாங்கம் கோரும். மானி யங்கள் வெட்டப்படும். இதனாலும் மொத்த பண வீக்கமும் விலைவாசிகளும் மேலும் உயரும். இவ்வாறாக பாய்ச்சல் வேகத்தில் அதிகரிக்கும் விலைவாசி உயர்வால் சாமானிய மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கக்கூடிய இந்த சமயத்தில்தான் ஒன்றிய பாஜக அரசாங்கம் பல்வேறு உணவுப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி விகிதங்களை உயர்த்தி இருக்கிறது. நாட்டில் முதன்முதலாக பேக்கேஜ் செய்யப்பட்ட தானியங்கள், பருப்பு வகைகள், தயிர், பாலாடைக் கட்டி, இறைச்சி, மீன் முதலான உணவுப் பொருள்களுக்கு 5 விழுக்காடு வரி விதிக்கப்பட்டி ருக்கிறது. சுடுகாட்டுச் செலவுகள், மருத்துவமனை களுக்கான அறைகள், காசோலைகள் மூலம் பணம் பெறுதல் போன்ற சேவை இனங்களுக்கும் கூட ஜிஎஸ்டி வரி விகிதங்கள் விதிக்கப்பட்டிருக்கின்றன.  

எதிர்ப்புத் தெரிவிக்க வில்லையா?

மக்களின் நலன்களைப் பற்றி சற்றும் கவலைப் படாத முரட்டுத்தனமான ஓர் அரசாங்கத்தால் மட்டுமே மக்கள் அன்றாடம் உபயோகிக்கும் உணவுப் பொருள்களுக்கும் வரிகள் மூலமாக சுமைகளை ஏற்று வதைச் சிந்திக்க முடியும். நிதி அமைச்சர் நிர்மலா  சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சிலில், புதிய ஜிஎஸ்டி முன்மொழிவுகளுக்கு மாநில அரசாங்கங்களின் பிரதி நிதிகள் எவரும் எவ்விதமான எதிர்ப்பும் தெரிவிக்காத தால், ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாகக் கூறியி ருக்கிறார். இது முற்றிலும் உண்மையல்ல. கேரள மாநில நிதி அமைச்சர் கே.என்.பால கோபால், ஜிஎஸ்டி விகிதத்தைத் திருத்தி அமைத்தி டும் அமைச்சர்கள் குழுவில் ஓர் உறுப்பினர். 2021 நவம்பர் 29 தேதியிட்ட ஒரு கடிதத்தில் கே.என்.பால கோபால், சாமானிய மக்கள்மீது சுமைகளை ஏற்றாமல் ஜிஎஸ்டி அமைப்புமுறை மூலமாக வருவாயைப் பெருக்க வழிவகைகளைக் காண ஆழமான முறை யில் ஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொண்டிருக்கிறார். கேரள அரசாங்கத்தின் நிலைபாட்டை மீண்டும் வலியுறுத்தி, இந்தக் கடிதம் மீண்டும் ஜூன் 17 அன்று நடைபெற்ற - ஜிஎஸ்டி விகிதத்தைத் திருத்தி அமைத்திடும் அமைச்சர்கள் குழுக்கூட்டத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

கேரள அரசின் முடிவு

பல்வகையான உணவுப் பொருள்கள் மீதும் ஜிஎஸ்டி விகிதங்கள் விதிக்கப்படுவதற்கான முடிவு சண்டிகரில் நடைபெற்ற ஜிஎஸ்டி விகிதத்தைத் திருத்தி அமைத்திடும் கவுன்சிலின் கூட்டத்தில்  மிகவும் சூழ்ச்சிகரமான முறையில் மேற்கொள்ளப் பட்டது. கேரள அரசாங்கம் குடும்பஸ்ரீ என்னும் சிறிய கடைகள் மூலம் ஒன்று அல்லது இரண்டு கிலோ  பாக்கெட்டுகளில் விற்கப்படும் உணவுப் பொருள்களு க்கு வரி விதிப்பதில்லை எனத் தீர்மானித்திருக்கிறது. உணவுப் பொருள்களுக்கும் வீடுகளில் பயன் படுத்தப்படும் நுகர்வுப் பொருள்களுக்கும் ஜிஎஸ்டி வரி விதிப்பதற்குப் பதிலாக ஆடம்பரப் பொருள்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டு வந்தது போல் 28 விழுக்காடு வரி விதித்திட வேண்டும் என்று முந்தைய கேரள இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம், நிதி அமைச்சராக தாமஸ் ஐசக் இருந்த காலத்திலிருந்தே வலியுறுத்திக்கொண்டு வருகிறது.

கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்காகவே

எனினும், மோடி அரசாங்கம் பணக்காரர்கள் வாங்கும் ஆடம்பரப் பொருள்களுக்கு வரி விதித்திட விரும்பவில்லை. இந்த அரசாங்கமானது கார்ப்ப ரேட்டுகளின் நலன்களுக்காகவே ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. 2019இல் கார்ப்பரேட் வரிகளைக் குறைத்ததன் மூலம் அரசின் கஜானாவிற்கு வர வேண்டிய 1.45 லட்சம் கோடி ரூபாய் வருவாயை இழந்தது. கார்ப்பரேட்டுகள் வங்கிகளில் வாங்கி யிருந்த 2.4 லட்சம் கோடி ரூபாய் கடன்கள் தொடர்ந்து  ஏராளமான வரிச்சலுகைகள் மூலம் தள்ளுபடி செய்யப்பட்டன. இவ்வாறு அரசின் வருவாயில் ஏற்படும் இழப்பைச் சரிக்கட்ட, சாமானிய மக்கள் பயன் படுத்தும் உணவுப் பொருள்கள் மீதும் நுகர்வுப்பொ ருள்கள் மீதும் ஜிஎஸ்டி வரி விகிதங்கள் உயர்த்தப் படுகின்றன, பெட்ரோலியப் பொருட்கள் மீதும் வரிகள் உயர்த்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இத்தகைய படுபிற்போக்குத்தனமான அணுகு முறைக்கு முடிவு கட்ட வேண்டும். உயர்த்தப் பட்டுள்ள ஜிஎஸ்டி வரி விகிதங்கள் திரும்பப்பெறப்பட வேண்டும். பெட்ரோல், டீசல் போன்றவற்றின் மீதான சர்சார்ஜ் மற்றும் செஸ் வரிகள் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும். மாறாக, மகா கோடீஸ்வரர் கள் மீதும், பெரும் கார்ப்பரேட்டுகள் மீதும் அதிக அளவில் வரிகள் விதித்திட வேண்டும்.

ஜூலை 20, 2022, 
தமிழில்: ச.வீரமணி