அக்னி வீரராக பணியாற்ற சம்மதிக்கும் காரணத்தால், இளைஞர் ஒருவர் தனது உயர் கல்வி வாய்ப்பையும் இழக்கிறார். பள்ளிக் கல்வி முடித்த ஒருவருக்கு, எந்த தனியார் நிறுவனம் நல்ல ஊதியத்தில் வேலை வழங்க தயாராக இருக்கிறது என்பதை பாஜக ஆட்சியாளர்கள் தெளிவுபடுத்தப் போவதில்லை.
நவதாராளமய கொள்கை உலகம் முழுவதும், முதலாளித்துவ வளர்ச்சிக்காக, நிரந்தரமற்ற வேலை வாய்ப்பை உருவாக்கி வருகிறது. ‘அமர்த்து பின் துரத்து’ என பெருமையாக சொல்லிக் கொள்ளவும் செய்கிறது. இதன் மறு பிரதிதான் பாஜக ஆட்சியாளர்கள் அக்னி பாதை திட்டத்தை ராணு வத்தில் அமலாக்குகின்றனர். கிராஜுவிட்டி, பென்சன் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்களை ஒழிக்கும் அரசாக பாஜக உள்ளதை இத்திட்டம் அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. ஏற்கனவே ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், பென்சன் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கான போராட்டம் நடத்தியதையும் இப்பிரச்சனையுடன் இணைத்துப் பார்க்க வேண்டும்.
1 கோடி காலிப்பணியிடங்கள்
தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு, நம் நாட்டில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவு தீவிர வேலை யின்மை தற்போது உருவாகியுள்ளதாக கூறுகிறது. ஒன்றிய மற்றும் மாநில அரசுகளில் தற்போது 1 கோடி அளவில் காலிப் பணியிடங்கள் இருப்பதாக வும் கூறுகிறது. 35 ஆயிரம் ரயில்வே பணியிடங்களு க்கு 1.2 கோடி இளைஞர்கள் தேர்வு எழுதும் அளவிற்கு, போட்டி இருக்கிறது. போட்டித் தேர்வுக்கான இளைஞர்கள் எண்ணிக்கையும், போட்டித் தேர்வுக் கான பயிற்சி மையங்களின் எண்ணிக்கையும், அதி கரித்துள்ளன. பயிற்சி மையங்கள் மூலமாக கட்டணக் கொள்ளையையும், பணம் இருப்போர் அங்கு பயிற்சி பெறும் நிலையையும் பாஜக ஆட்சி உருவாக்கி யுள்ளது.
அக்னி பாதை திட்ட முன்மொழிவுகளும் தாக்குதலும்
அக்னி பாதை திட்டத்திற்கு 17.5 - 21 வயதில் வேலைக்கு சேரலாம். அவருக்கான ஊதியமாக ஆண்டுக்கு ரூ. 4.72 துவங்கி 6.7 லட்சம் என்பதாக இருக்கும். அதில் 30 சதவீதம் பிடிக்கப்பட்டு, சேவை முடியும் போது வீரரின் சேமிப்பிற்கு இணை யான தொகை சேர்க்கப்பட்டு 11.71 லட்சம் ரூபாயாக வழங்கப்படும். இது வேறொன்றுமில்லை... நம்மூரில் செயல்படுத்தப்பட்ட சுமங்கலித் திட்டம், மாங்கல்ய திட்டம் போன்றதுதான். வறுமையில் இருப்போருக்கு திருமணம் செய்ய உதவுமே என்ற மனநிலை கட்ட மைக்கப்பட்டு, ஒரு கொடிய சுரண்டல் முறையை ஏற்கச் செய்த அதே முதலாளித்துவ பாசம் இது. கூடவே பாசிச வழியிலான பாசமும் இணைகிறது. அடுத்ததாக 25 சதவீதம் பேரை தொடர்ந்து பணியாற்ற அனுமதிப்பதாகவும், எஞ்சிய 75 சதவீதம் பேரை வெளியேற்றுவதாகவும் கூறுகிறது. எப்படி அந்த 25 சதவீதம் பேர் தேர்வு செய்யப்படுவர்? அப்பட்டமான பாரபட்சம் தவிர வேறில்லை. வெளியேற்றப்பட்ட 75 சதவீதம் பேருக்கு, அரசு மற்றும் தனியார் துறை வேலை வாய்ப்பில் 10 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்படும், எனக் கூறுகின்றனர். பல கோடி எண்ணிக்கையில் அரசு பணி யிடங்கள் நிதிபற்றாக்குறை, ஆட்குறைப்பு நடவடிக்கை கள் மூலம் ஒழிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஒன்றிய அரசு அறிவிக்கும் 10 சதவீதம் ஒதுக்கீடு எந்த அளவு அமலாகும்? தனியார் நிறுவனங்களான ஃபோர்டு, ஜெனரல் மோட்டார் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்க ளும், பல உள்நாட்டு கனரக தொழிற்சாலைகளுமே கூட மூடப்படுவதுதானே இன்றைய யதார்த்தமாக உள்ளது!
இதுமட்டுமல்ல, ஆண்டுக்கு ரூ. 7லட்சம் வரையி லும், சம்பாதித்து ஓய்வு பெறும் ‘அக்னி வீரர்’ அதே ஊதியத்துடன் தனியார் நிறுவனங்களால் வேலைக்கு எடுக்கப்படும் வாய்ப்பு இருக்குமா? அக்னி வீரராக பணியாற்ற சம்மதிக்கும் காரணத்தால், இளைஞர் ஒருவர் தனது உயர் கல்வி வாய்ப்பையும் இழக்கிறார். பள்ளிக் கல்வி முடித்த ஒருவருக்கு, எந்த தனியார் நிறுவனம் நல்ல ஊதியத்தில் வேலை வழங்க தயாராக இருக்கிறது என்பதை பாஜக ஆட்சியாளர்கள் தெளிவு படுத்தப் போவதில்லை. பக்கோடா விற்றால் தினம் 200 ரூபாய் கிடைக்கும் என, வேலைவாய்ப்பை கொச்சைப் படுத்திய பிரதமர் மோடிக்கு, 4 வருடங்களுக்கு பின் ‘அக்னிபாதை’யில் இருந்து வெளியேற்றப்படும் இளைஞர்களின் வலி புரியப் போவதில்லை.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் - ஏகாதிபத்திய ஆதரவும்
பாஜக ஆட்சியாளர்கள் இரு வகையில் மக்களைத் தாக்கி வருகின்றனர். ஒன்று நவதாராளமய கொள்கை அமலாக்கம். மற்றொன்று அதை எதிர்க்கும் மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்தி, மக்களுக்குள் மோதல் போக்கை வளர்ப்பது. இந்த இரு அணுகு முறைகளும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மிக மிக சாதகமான விளைவுகளை உருவாக்கி உள்ளது. நாட்டின் விடுதலைப் போராட்டத்தில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு எந்த ஒரு பங்களிப்பும் செய்யவில்லை என்பதை அனைவரும் அறிவர். இந்த உண்மையை ஆர்.எஸ்.எஸ் ஆதரவு எழுத்தாளர்களே கூட அம்ப லப்படுத்தி உள்ளனர். உதாரணத்திற்கு காவியில் சகோதரத்துவம் என்ற நூலை எழுதிய, ஶ்ரீதர் டாம்லே, ஆண்டர்ஸன் ஆகியோர் விடுதலை இயக்கத்தில் ஆர்.எஸ்.எஸ் இல்லை என்பதுடன், அதற்கு பதிலாக பிரிட்டி ஷாரிடம் சில சலுகைகளைப் பெற்றனர் எனக் கூறுகின்ற னர். நானாஜி தேஷ்முக் என்பவர், இந்து ராஷ்ட்டிரம் நிறுவ வேண்டும் என்ற தீவிரம், பிரிட்டிஷாரின் உண்மையான கூட்டாளியாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பை இட்டுச் செல்ல உதவியது என்கிறார்.
இந்த விபரமே, இந்தியாவை ஒரு தற்சார்பு கொண்ட நாடாக வளர்க்க ஆர்.எஸ்.எஸ் கொள்கை ஒரு போதும் உதவாது என்பதை தெளிவுபடுத்துகிறது. இந்தியா விடுதலை அடைந்த காலத்தில், பொதுத் துறை நிறுவனங்களை உருவாக்கியதன் மூலம் மின்சாரம், உருக்கு, ராணுவத் தளவாடம், போக்கு வரத்து, வங்கி, காப்பீடு என உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் தன்னிறைவு அடைவதை நோக்கிய திட்டமிடலைக் கொண்டிருந்தது. 1990-களுக்குப் பிந்தைய இந்திய பொருளாதார கொள்கை, நமது தன்னிறைவு அணுகுமுறையை கீழிறக்கி, பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் ஏகாதிபத்திய நாடுகளின் சார்பு நடவடிக்கையை அதிகப்படுத்துவதாக அமைந்தது. அது ராணுவ நடவடிக்கைகளிலும் வெளிப்பட்டது. நேரடி அந்நிய முதலீடு, ராணுவத் தளவாட உற்பத்தி யில் அதிகரித்தது. அதை பாஜக ஆட்சி அப்பட்டமாக அரங்கேற்றி பெருமைக்குரிய செயலாக விளம்பரப் படுத்தி வருகிறது. இந்தியாவில் டாங்குகள், துப்பாக்கி, வெடிமருந்து தயாரித்தல் ஆகியவற்றில் இருந்த பல முன்னேற்றங்கள் பின்னோக்கி இழுக்கப்படுகின்றன. ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி செய்யும் 41 நிறுவ னங்கள், பாஜக ஆட்சியாளர்களின் கொள்கை காரண மாக மூடப்படும் அபாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன. அதாவது 49 சதவீதத்தில் இருந்து 74 சதவீதமாக அந்நிய நேரடி முதலீட்டிற்கான கதவுகளை நிதி அமைச்சகம் திறந்து விட்டுள்ளது. இந்திய ராணுவத்திற்கான ஒதுக்கீட்டில் 36 சதவீதம் வெளிநாட்டு ராணுவ தள வாடங்களை இறக்குமதி செய்ய வழி வகுக்கப்பட்டுள்ளது.
இளையோர் படையல்ல… முடமாகும் இளமை
இந்த பின்னணியில், அக்னி பாதை திட்டம் குறித்து இந்திய பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள குறிப்பு, பிறநாடுகளில் உள்ள நடைமுறையினை பின்பற்றுவதாக, கூறுகிறது. குறிப்பாக அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகளை சுட்டிக்காட்டி, அந்த நாடுகளின் ராணுவம் இளையோ ரை கொண்ட படை எனக் கூறுகிறது. அதற்கு அக்னி பாதை போன்ற 4 ஆண்டு சேவை அங்கு அமலில் இருப்பதாக கூறுகிறது. இது மிக ஆபத்தான ஒப்பீடு என்பதை நமது இளைஞர்கள் உணர்ந்துள்ளனர். எனவே தான் இவ்வளவு தீவிரப் போராட்டம் நடந்து வருகிறது. அமெரிக்காவில் வேலையின்மை 3.6 சதவீதம், பிரிட்டனில் 4.8, ரஷ்யாவில் 3.5, சீனாவில் 5.3 என்று நிலைமை உள்ளது. இதில் சீனாவில் மட்டும் தான் மக்கள் தொகை கணக்கீட்டின் படி அதிகமான இளை ஞர்கள் வேலையில்லாமல் இருப்பர். மற்ற நாடுகளின் மக்கள் தொகை குறைவு என்பதால் மிக குறைவான எண்ணிக்கையில் வேலையற்றோர் இருப்பர் என்பது யதார்த்தம். அது அந்த நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்காது. மேலும் சீனா உள்ளிட்டு மேற்கண்ட நாடுகளில் வேலை இல்லா கால நிவாரணம் என்ற சமூக பொறுப்பு அரசுகளால் நிறைவேற்றப்பட்டு வருகிறது. எனவே அது தனிப்பட்ட இளைஞர்களின் மனநிலையை அல்லது தனக்கு பிடித்த வேலை தேடும் பொறுமையை பாதிக்காது.
ஆனால் இந்தியா அப்படி அல்ல. இங்கு வேலை யின்மை விகிதம் 7.8 சதம் ஆகும். இது நமது மக்கள் தொகையுடன் ஒப்பிட்டால் சுமார் 10 கோடி ஆகும். வேலையில்லா கால நிவாரணம் வழங்குவதற்கான சட்டத்தை ஒன்றிய அரசு அமலாக்கவும் இல்லை. சில மாநில அரசுகள் நிவாரணம் வழங்கினாலும், பெயரளவில் மட்டுமே உள்ளது. அதுவும் போராடி பெறப் பட்டதே வரலாறு. சமூகப் பாதுகாப்பு சட்டங்க ளும், நடவடிக்கைகளும் இல்லாத நாட்டில், பாது காப்புத் துறை வீரர்களுக்கு, 4 வருடங்கள் மட்டும் ராணுவப் பணி என்பது, இளம் வீரர்களை கொண்ட தாக அமையாது. மாறாக இளமையை முடக்கிப் போடுவதாக அமையும். எனவே, நடைபெறும் அக்னி பாதை எதிர்ப்பு போராட்டம், மொத்தத்தில் குமுறிக் கொண்டிருக்கும் இளைஞர்களின் வெடிப்பு. இதை ஒடுக்கும் நட வடிக்கைகளை அரசு இயந்திரங்கள் மூலமாகவும், கெடுக்கும் வேலையை சங்க பரிவார் படைகளின் மூலமும் பாஜக செய்து வருகிறது. விவசாயிகள் தில்லியில் போராடியபோது, ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து அளித்த ஆதரவைப் போல், அக்னி பாதை எதிர்ப்பிலும் வெளிப்படுத்துவதன் மூலம் பாஜக ஆட்சியாளர்களின் இளைஞர் விரோதக் கொள்கை களை முறியடிக்க முடியும்.
கட்டுரையாளர் : மாநில செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)