articles

img

குறைந்தபட்ச ஆதரவு விலையில் மோடி அரசின் பித்தலாட்டம் - கே.பி.பெருமாள்

விவசாயப் பொருட்களை, விவசாயிகளிடமி ருந்து என்ன விலைக்கு வாங்க வேண்டும் என்று அரசாங்கம் ஒரு விலை நிர்ணயம் செய்யும். அதுதான் குறைந்தபட்ச ஆதரவு விலை (Minimum Support Price - MSP) என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் CACP- (The Commis sion) for Argicultural Costs and Prices) என்ற விவ சாய செலவுகள் மற்றும் விலைகளுக்கான ஆணை யம் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான பரிந்துரைகளை ஒன்றிய அரசாங்கத்திற்கு கொடுக்கிறது. ஒன்றிய அரசு பல்வேறு துறைகள் மற்றும் மாநிலங்களுக்கு அனுப்பி  கருத்துக்களை பெற்று அதன்பின் ஒன்றிய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு இறுதி முடிவு எடுக்கிறது. அதன் பின் ஒன்றிய அரசால் ஒவ்வொரு தானியத்திற்கும் எவ்வளவு என்று அறிவிக்கப்படுகிறது.

இந்த நடைமுறை ஆண்டுக்கு இரண்டு முறை (ராபி பருவம், காரீப் பருவம்) குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்கப்படுகிறது. 1965-66ஆம் ஆண்டு ஜூன் மாதம் கோதுமைக்காக முதன் முதலில் அறிமுகப் படுத்தப்பட்டது. இப்போது 23 பயிர்களை உள்ளடக்கி யது. இந்தியா உணவு தானியங்கள் பற்றாக்குறையை எதிர்கொண்ட போது உணவுப் பயிர்களை வளர்க்க விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் இது அறி முகப்படுத்தப்பட்டது. இந்திய உணவுக்கழகம் போன்ற  அரசு நிறுவனங்கள் கோதுமை, நெல் ஆகியவற்றை கொள்முதல் செய்ய குறைந்தபட்ச ஆதரவு விலையை பயன்படுத்துகின்றன

எம்.எஸ்.பி கணக்கிடும் முறை

பயிர்களின் உற்பத்திச் செலவைக் கணக்கிடுவ தற்கு விவசாயச் செலவு மற்றும் விலை ஆணைய மானது ஒன்பது வெவ்வேறு விலைக் காரணிக ளால் A1,A2,A1+FL,B1,B2,C1,C2, C3, பயன்படுத்து கிறது ஒன்றிய அரசு.  A2 + FL செலவுச் சூத்திரத்தின் படி, பயிர்ச் சாகுபடிக்கு பயன்படுத்தப்படும் இயந்தி ரங்களின் தேய்மானச் செலவு, பயிர் கடனுக்கான வட்டி, போன்றவற்றை கணக்கில் எடுத்துக் கொள்வ தில்லை. இதனால் விவசாயிகளுக்கு எந்த லாபமும் கிடைப்பதில்லை. குறைந்தபட்ச ஆதரவு விலையானது உற்பத்திச் செலவு முழுமையாக ஈடுசெய்யக் கூடிய தாக இருக்க வேண்டும். நீண்டகாலமாக அதற்கான கோரிக்கைகளை விவசாயிகள் வற்புறுத்தி வரு கின்றனர். 2006 ஆம் ஆண்டு எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையிலான விவசாயிகள் ஆணையம் பயிர்க ளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை அவற்றின் உற்பத்திச் செலவை விட கூடுதலாக 50 சதவீதம் நிர்ண யிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. 

அரசு கொள்முதல் தேவை 

அரசு அறிவிக்கின்ற குறைந்தபட்ச ஆதரவு விலை யில் பொருட்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும். ஆனால் அரசின் கொள்முதல் கொள்கை யில் பல சிக்கல்கள் உள்ளன. இதனால் பெரும்பா லான விவசாயிகள் குறைந்தபட்ச ஆதரவு விலையை  பெற முடியவில்லை. நெல், கோதுமை தவிர மற்ற பயிர் களை அரசு கொள்முதல் செய்வது பல ஆண்டுகளாக மோசமான நிலையில் உள்ளது. நெல், கோதுமை கொள்முதலிலும் பாரபட்சம் நிலவுகிறது. உதாரண மாக 2020-21ஆம் ஆண்டு காரீப் பருவ காலத்தில் இந்தியாவில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லின் மொத்த அளவு 610 லட்சம் டன்கள். இதில் 174 லட்சம் டன்கள் பஞ்சாப், ஹரியானாவிலிருந்து மட்டுமே கொள் முதல் செய்யப்பட்டுள்ளது. நெல் கொள்முதலுக்கு செலவிடப்பட்ட பணத்தில் சுமார் 30 சதவீதம் இந்த இரு மாநிலங்களுக்கு மட்டும் சென்றுள்ளது. இதே போல் கோதுமை கொள்முதலுக்கு செலவிடப்பட்ட பணத்தில் சுமார் 52 சதவீதம் இந்த மாநிலங்களுக்கு மட்டும் சென்றுள்ளது. 2018-19ஆம் ஆண்டில் இந்தியாவின் நெல் உற்பத்தி யில் பஞ்சாபின் பங்கு 11 சதவீதம், ஆனால் கொள்முத லில் அதன் பங்கு 25.33 சதவீதம், மேற்கு வங்கத்தின் நெல் உற்பத்தியில் பங்கு 13.94 சதவீதம், ஆனால் கொள்முதலில் அதன் பங்கு 4.46 சதவீதம் மட்டுமே. நெல் உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு 5.26 சத வீதம். ஆனால் கொள்முதலில் அதன் பங்கு 2.91 சத வீதம் மட்டுமே. இந்த புள்ளி விபரத்தின் மூலம் தெரிய வருவது என்னவென்றால் பெரும்பாலான மாநிலங்க ளில் நெல் பயிரிடும் விவசாயிகள் தங்கள் பொருட்களை குறைந்தபட்ச ஆதரவு விலைக்கும் குறைவான விலை யில் தனியார் வியாபாரிகளிடம் விற்பனை செய்து வரு கிறார்கள். அதாவது நாடு முழுவதும் உள்ள விவசாயி களில் வெறும் 17 சதவீதம் விவசாயக் குடும்பங்கள் மட்டுமே அரசு கொள்முதல் நிறுவனங்களில் நெல்லை விற்றதாக விவசாயிகளின் நிலை மதிப்பீட்டு (situa tion assessment survey) ஆய்வின் தரவுகள் தெரி விக்கின்றன. பெரும்பாலான நேரங்களில் விவசாயிக ளின் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையில் 70 சதவீதம் கூட தனியார் வியாபாரிகளிடமி ருந்து பெறமுடியவில்லை என்று ஆய்வு விபரங்கள் தெரிவிக்கின்றன.

காரீப் பருவ மானாவரி பயிர்களுக்கு ஒன்றிய அரசு இந்தாண்டுக்கு குறைந்த பட்ச ஆதரவுவிலையை அறிவித்துள்ளது. கடந்தாண்டோடு ஒப்பிடும் போது விலை உயர்வு மிகவும் குறைவாக ஒன்றிய அரசு அறி வித்துள்ளது. இக்காலத்தில் விதை, உரம், பூச்சி மருந்து உள்ளிட்டவை மற்றும் உழவடை, விதைப்பு, களை பறித்தல் உள்ளிட்ட அனைத்துக்கும் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நெல் குவிண் டால் ஒன்றுக்கு ரூ.100 உயர்வு என்று அரசு அறிவித்துள் ளது. அதாவது ஒரு கிலோவுக்கு ரூ.1 உயர்வு ஏற்பட்டுள் ளது. ஒரு குவிண்டாலுக்கு மக்காச்சோளம் ரூ.92 உயர்வு அதாவது ஒரு கிலோவுக்கு 92 பைசா உயர்வு ஏற்பட்டுள்ளது. பாசிப்பயிறு ஒரு குவிண்டாலுக்கு ரூ.480 உயர்வு ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோவுக்கு ரூ.4.80 உயர்வு ஏற்பட்டுள்ளது. கம்பு ஒரு குவிண்டாலுக்கு ரூ.100 உயர்வு. ஒரு கிலோவுக்கு ரூ.1 மட்டுமே உயர்வு. உளுந்து ஒரு குவிண்டாலுக்கு ரூ.300 உயர்வு. ஒரு கிலோவுக்கு ரூ.3 உயர்வு ஏற்பட்டுள்ளது. மற்ற விவரங்கள் அட்டவணையில் உள்ளது.

அரிசி, சோளம், துவரம் பருப்பு, உளுந்து மற்றும் நிலக்கடலைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்.எஸ்.பி) வெறும் 7 சதவீதம் மட்டுமே. கம்புக்கு வெறும் 8 சதம் மட்டுமே. மஞ்சள் சோயா பீன்ஸ் மட்டுமே கிட்டத்தட்ட 9 சதவீதம் (8.9சதவீதம்) அதிகரிப்பு பெற்ற ஒரே பயிர்.

2022-23 காரீப் பருவத்தில் நெல்லுக்கான பரிந்துரை விலை ஒன்றிய அரசு அறிவித்தது ரூ.2040  மற்றும் ஏ கிரேடுக்கு ரூ.2060 ஆனால் 15 மாநில அர சுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தங்கள் உற்பத்திச் செலவின் அடிப்படையில் ஒரு குவிண்டால் ரூ.2000 முதல் ரூ.4513 வரை நெல்லுக்கு எம்.எஸ்.பி யை பரிந்து ரைத்துள்ளன. ஜம்மு - காஷ்மீர் மட்டுமே, ஒன்றிய அரசு அறிவித்ததைவிட குறைந்த எம்.எஸ்.பி யை நெல்லு க்கு பரிந்துரைத்துள்ளது. அதே சமயம், ஆந்திரா, அந்த மான் நிக்கோபார் தீவுகள், பீகார், சத்தீஸ்கர், குஜராத்,  ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், தமிழ்நாடு, தெலுங்கானா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்கள் நெல்லுக்கு எம்.எஸ்.பி அதிக விலையை பரிந்துரைத்தன. ஆறு மாநிலங்கள் அசாம், ஹரியானா, இமாச்சலப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்கள் நெல்லுக்கு எந்த விலையையும் ஒன்றிய அரசுக்கு பரிந்துரைக்கவில்லை. இந்த ஆறு மாநிலங்களும் பிஜேபி ஆட்சி செய்யும் மாநிலங்களாகும். இவர்கள் விவசாயிகளை பாதுகாக்கும் லட்சணம் இதுதான்.

எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷன் அடிப்படையில் நாங்கள் விலை தருகிறோம் என்று பேசும் பிரதமர் அவர்கள் மக்கள் அதிகம் உற்பத்தி செய்யும் பயிர்க ளுக்கு ஒரு கிலோவுக்கு ரூ.1 மட்டுமே அறிவித்துள்ளார். இந்த உயர்வு விவசாயிகளுக்கு எவ்வாறு கட்டுபடியா கும். ஒரு போதும் கட்டுபடியாகாது. ஆதரவு விலை  அறிவிப்பதில் ஒன்றிய அரசு தொடர்ந்து விவசாயிகளை வஞ்சிக்கக்கூடிய செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்ற னர் என்பதற்கு இதை விட எடுத்துக்காட்டு வேண்டுமா? 

எதிர்ப்புகள்

2022-23 காரீப் பருவ பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்.எஸ்.பி) 10 சதவீதத்திற்கும் குறை வான அதிகரிப்புக்கு ஒன்றிய அரசு பரிந்துரைத்ததற்கு விவசாயிகள் சங்க அமைப்புகள் கண்டனம் தெரி வித்துள்ளன. அகில இந்திய விவசாயிகள் சங்கம் சிறிய அளவில் எம்.எஸ்.பி. யை உயர்த்தி ஒன்றிய அரசு விவசாயிகளை ஏமாற்றியுள்ளது என்று தெரிவித்துள் ளது. விவசாயிகளுக்கான உள்ளீட்டு விலையின் பண வீக்கத்தை அரசாங்கம் அறிவித்த MSP யுடன் ஒப்பிடும் போது 14 பயிர்களில் 11 பயிர்களுக்கு MSPயின் அதி கரிப்பு செலவு பணவீக்கத்தை விட குறைவாக உள்ளது என்பது தெளிவாகிறது. இதனால் உண்மையான அடிப் படையில் 11 பயிர்களுக்கு MSP குறைக்கப்பட்டுள்ளது என்று யோகேந்திர யாதவ் (JKA நிறுவனத் தலைவர்)  தெரிவித்துள்ளார். 

செய்ய வேண்டியது என்ன

ஒன்றிய அரசு 2022-23 காரீப் பருவத்திற்கான உற் பத்திச் செலவைக் குறைவாகவே மதிப்பிட்டுள்ளது. மொத்த செலவுக்கு C2 வருவாயைக் கணக்கிடுவதற்கு பதிலாக A2+FL செலவில் வருமானம் கணக்கிடப்படு கிறது. இது விவசாயிகளின் சொந்த வளங்களின் விலையை தவிர்த்து விடும். எனவே தான், மொத்த உற்பத்தி செலவை தத்ரூபமாக மதிப்பிடும் C2+50 சத வீத பார்முலாவை ஒன்றிய அரசு பயன்படுத்த வேண்டும் என்று விவசாய சங்க தலைவர்கள், விவசாயி கள் வலியுறுத்துகின்றனர். குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP)க்கு வெளியே  உள்ள பயிர்களான காய்கறிகள், பழங்கள், மசாலாப் பொருட்கள் மற்றும் தோட்டப்பயிர்கள் உள்ளிட்டவை களின் விலைகள் பருவகால தேவை மற்றும் விநியோ கத்தில் ஏற்ற இறக்கமாக இருக்கும். இந்த பயிர்கள் வெள்ளம் மற்றும் வறட்சி போன்ற வானிலை மாற்றங்க ளாலும் அதிகம் பாதிக்கப்படும். இருப்பினும் விவசாயி கள் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் உற்பத்தியை அதி கரித்து வருகின்றனர். இந்த பயிர்களை பாதுகாத்தி டவும் உரிய விலை கிடைக்கவும் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் தினை உள்ளிட்டவைகளுக்கு பொது கொள்முதல் முறைகள் அமைக்கப்படுவதை உறுதி செய்யுமாறு ஒன்றிய அரசை விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். பொது விநியோக முறையில் சமையல் எண்ணெய், பருப்பு உள்ளிட்டவைகள் கொள்முதல் செய்து விநியோ கித்தால் இது இந்தியாவில் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தும். நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் கொள்முதல் இல்லாததால் விவசாயிகளில் ஒரு சிறிய பகுதியினர் மட்டுமே ஒன்றிய அரசு அறிவிக்கின்ற குறைந்தபட்ச ஆதரவு விலையை பெற முடிகிறது. எனவே, இந்தியா முழுவதும் கொள்முதல் ஏற்பாடு களை உருவாக்கிட வேண்டும். அதே போல் ஒன்றிய அரசு அறிவிக்கும் எம்.எஸ்.பி க்கு குறைவாக கொள் முதல் செய்ய முயலும் தனியார் வியாபாரிகள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். அதே போல் விவசாயிகளின் பயிர்களுக்கு எம்.எஸ்.பி. கிடைத் திட சட்டப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு ஒரு மத்தியச் சட்டம் ஒன்றிய அரசு கொண்டுவர வேண்டும்.

கட்டுரையாளர் : மாநில பொருளாளர்.  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்



.