சபை அமர்வில் இல்லாதபோது அவசரச் சட்டம் அவசியம் என்ற அரசாங்கத்தின் நம்பிக்கையின் அடிப்படையில் அவசரச் சட்டங்கள் கொண்டு வரப்படு கின்றன. அரசமைப்புச் சட்டத்தின் 213 ஆவது பிரிவின்படி, அரசு பிறப்பிக்கும் அவசரச் சட்டங்களில் கையெழுத்திடுவது ஆளுநரின் அரசமைப்புக் கடமையாகும். கையொப்பமிடத் தவறினால் அது அரச மைப்பின் கடுமையான மீறலாக மாறும். ஆளுநரின் திருப்திதான் அவசரச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கான அளவுகோல் என்றாலும் அது தனிப்பட்டது அல்ல என்று உச்ச நீதிமன்றம் தெளிவு படுத்தியுள்ளது. 1974 ஆம் ஆண்டு ஷம்சேர் சிங் எதிர் பஞ்சாப் மாநில அரசு வழக்கின் தீர்ப்பில், நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் அடங்கிய ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு, ஆளுநரின் திருப்தி என்பது அமைச்ச ரவையின் திருப்தியைக் குறிக்கிறது. உண்மையில், அவசரச் சட்டம் குறித்து ஆளுநரிடம் அரசு தெரி வித்தால், அவர் அவசரச் சட்டத்தில் கையெழுத்திட வேண்டும். சில சூழ்நிலைகளில் ஆளுநர் குடியரசுத் தலைவரின் ஆலோசனையைப் பெறலாம். அதுவும் பிரிவு 213இல் விளக்கப்பட்டுள்ளது.
அவசரச் சட்டம், மசோதாவை தடுத்து நிறுத்த அதிகாரமில்லை
மாநிலங்களுக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் மத்திய சட்டங்களுக்கு எதிரான மாநில சட்டங்க ளில் உள்ள விதிகள் போன்ற வழக்குகளில் குடியரசுத் தலைவரின் ஆலோசனையைப் பெற வேண்டும். ஆளுநரை பல்கலைக்கழக வேந்தர் பதவியில் இருந்து நீக்குவதற்கான அவசரச் சட்டம் மத்திய சட்டங்களை மீறவில்லை என்பது மட்டுமல்ல முற்றி லும் அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டது. எனவே குடியரசுத் தலைவரின் ஆலோசனையைப் பெறாமல் அவசரச் சட்டத்தில் ஆளுநர் கையெழுத்திட வேண்டும். ஒரு அவசரச் சட்டம் அல்லது மசோதாவைத் தடுத்து நிறுத்த ஆளுநருக்கு அரசமைப்புச் சட்டம் அதிகாரம் அளிக்கவில்லை என்பதையும் குறிப்பிடுவது முக்கியம். ஆளுநர் கையெழுத்திட மறுத்து, அரசு நீதி மன்றத்திற்கு சென்றால் அது முதல் வழக்காக இருக்கும். பிரிவு 361இன்படி ஆளுநர் பாதுகாக்கப்படுகிறார், ஆனால் அவரது செயல் அரசமைப்பிற்கு முரணானது என்று திருப்தி அடைந்தால் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்படலாம். 2006 ஆம் ஆண்டு ராமேஸ்வர் பிரசாத் எதிர் இந்திய ஒன்றியம் (அரசு) வழக்கில், ஆளு நரின் நடவடிக்கை தவறான நோக்கம் கொண்டதாக வும், உள்நோக்கம் கொண்டதாகவும் இருந்தால் அதை ரத்து செய்யலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்ப ளித்தது. இது பீகார் சட்டப் பேரவையைக் கலைத்த ஆளுநர் பூட்டாசிங்கின் நடவடிக்கையை ரத்து செய்த தீர்ப்பின் பகுதியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசமைப்புச் சட்டத்தைத் தகர்க்கும் போது அமைதியாக இருக்க முடியாது என்று தலைமை நீதிபதி ஒய்.கே.சபர்வால் தலைமையிலான அமர்வு தீர்ப்பில் எழுதியுள்ளது. நிதிஷ் குமாரையும், ஜே.டி.யு.வை யும் ஆட்சி அமைப்பதைத் தடுப்பதுதான் பூட்டா சிங்கின் முயற்சி. பிரிவு 356 ஐ சந்தேகத்துடனும் கற்பனை யுடனும் பயன்படுத்துவதை நியாயப்படுத்த முடியாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
தன்னைத்தானே இழிவுபடுத்துவதற்குச் சமம்
கேரள அரசு மீதும், முதல்வர் மீதும் ஆளுநர் கூறும் குற்றச்சாட்டுகள், தன்னைத்தானே இழிவுபடுத்திக் கொள்வதற்குச் சமம். அரசாங்கம் ஆளுநரையும் அவருக்கு ஆலோசனை வழங்கும் அமைச்சரவையை யும் கொண்டுள்ளது. ஆளுநரால் அந்த அரசிடமிருந்து தனி அடையாளத்தைக் கோர முடியாது. ஆளுநர் அரசி யலில் தலையிடவோ, கருத்து தெரிவிக்கவோ கூடாது. இது போன்ற கருத்துக்கள் ஆளுநருக்கே கெட்ட எண்ணம் உள்ளதை நிரூபிக்கும். உயர்ந்த அரசமைப்பு பதவியில் உள்ள ஆளுநர், நீதிமன்றத்தின் பரிசீலனை யில் உள்ள விசயத்தில் கருத்து கூறுவதும் பொருத்த மானதல்ல.
நன்றி: தேசாபிமானி,
தமிழில்: சி.முருகேசன்