articles

img

தோழர் ஏ.நல்லசிவன் காட்டிய பாதையில் ஓரடி முன்னே... - கே.ஜி.பாஸ்கரன்

தொழிலாளி வர்க்கத்தின் போர்ப்படை யாகத் திகழும் இந்தியத் தொழிற் சங்க மையத்தின் (சிஐடியு) தனது திரு நெல்வேலி மாவட்டக்குழுவின் புதிய அலுவலகத்திற்கு தோழர் ஏ.நல்லசிவன் நினைவு தினமான ஜூலை 20 (இன்று) திறப்பு விழா காண்கிறது.  நெல்லை மாவட்டத் தின் செழுமையான இடதுசாரி, முற்போக்கு, தொ ழிற்சங்க வரலாற்றில், இதுவொரு முக்கியத்துவம் வாய்ந்ததொரு நிகழ்வாகும்.  இந்தக் கணத்தில் வரலாற்றின் பக்கங்களை நினை வெனும் காற்றின் விசையால் திருப்பிப் பார்க்கிறோம். 

வ.உ.சி.யின் வரலாற்றிலிருந்து

வ.உ.சிதம்பரனாரின் வரலாற்றில் இருந்து தொழிற்சங்க இயக்கத்தின் நெல்லை மாவட்ட வரலாறு துவங்குகிறது. அது தூத்துக்குடி மதுரா கோட்ஸ் ஆலையை மையம் கொண்டிருந்தது. 1940களில் விக்கி ரமசிங்கபுரம் மதுரா கோட்ஸ் ஆலையை மையம் கொண்டு, தொழிற்சங்க இயக்கமும், விவசாய இயக்க மும் எழுச்சி பெற்றது. இதில் தோழர் ஏ.நல்லசிவன் அவர்களது பங்கும், பாத்திரமும் மகத்தானது.  முன்னதாக ஏகாதிபத்திய சக்திகள் இந்திய மண்ணில் தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்த இங்கி ருந்த நில உறவுகளை கணக்கில் கொண்டு, ஜமீன்தார்  மற்றும் பாளையக்காரர்களை உருவாக்கினார் கள். நிலபிரபுத்துவத்தோடு கூட்டு வைத்துக்கொண் டார்கள். ஒன்றுபட்ட நெல்லை  மாவட்டத்தில் 37 ஜமீன்தார்களும், பாளையக்காரர்களும் இருந்தனர். 1560களில் வெள்ளையரை எதிர்த்து பூலித்தேவனும், ஒண்டிவீரனும், வெண்ணிக்காலடியும் 12 ஆண்டு கள் தீரத்தோடு போராடினார்கள். 1790களில் கட்ட பொம்மனும், ஊமைத்துரையும், சுந்தரலிங்கமும் வெள்ளையருக்கு எதிராகப் போராடினார்கள். 1799ல் தனது 39வது வயதில் கட்டபொம்மு தூக்கிலிடப் பட்டார். கட்டபொம்மு குறித்து ஏராளமான நாட்டுப் புறப்பாடல்களை பேரா. நா.வானமாமலை தொகுத் துள்ளார். மார்க்சிய ஆய்வு முறைமையில் சாத்தான் குளம் ராகவன், நா.வானமாமலை முத்திரை பதித்த வர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தகுந்தது. பாளை யக்காரர்கள் மற்றும் விவசாயிகளின் போராட்டம் அடக்கி ஒடுக்கப்பட்ட பின், வெள்ளையர்களுக்கு எதி ரான போரை நடத்த நூறு ஆண்டுகள் நெல்லை மண் காத்துக் கிடந்தது. நவீன தொழிலாளி வர்க்கமும் உரு வாக வேண்டிய அவசியமிருந்தது.

நவீன தொழிலாளி வர்க்கம்

பன்னாட்டு மூலதனம் இந்தியாவில் குவிக்கப் பட்டது. அதன் ஒரு பகுதியாக, 1885இல் பாபநாசம் பஞ்சா லையும், 1888இல் தூத்துக்குடி மதுரா கோட்ஸ் ஆலையும் துவக்கப்பட்டது. விவசாய உற்பத்தியில் இருந்து சரக்கு உற்பத்தி என்ற உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி  என்பது, சமூக உறவுகளில் மாற்றங்களை உருவாக்கி யது. இது முதலாளி வர்க்கத்தையும், பாட்டாளி வர்க் கத்தையும் தோற்றுவித்தது.  நிலக்குத்தகை மற்றும் வேளாண் உற்பத்தி மூலம் குவிந்த உபரி மூலம் சங்கர் அய்யர், டிவிஎஸ், சிம்சன் குழுமம் போன்ற பிராந்திய முதலாளிகள் உருவாகினர். தொழிலாளி வர்க்கமும்,  ஓரளவு கல்வி பயின்றவர்களும் உருவான பின், வெள்ளையர்களுக்கு எதிரான போராட்டம், சுதந்திரம் எனும் புதிய குணாம்சத்தை வந்தடைந்தது. 

கோரல் மில் தொழிலாளர் எழுச்சி

1908இல் கோரல் மில் தொழிலாளர்களது கூலி உயர்வு, வேலைநேர குறைப்பு கோரிக்கைகளுக்கான 11 நாள் வேலை நிறுத்தப் போராட்டம் வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது. ஒரு தொழிலாளர் புரட்சி எப்படி இருக்க வேண்டு மென்பதற்கு தூத்துக்குடி வேலை நிறுத்தம் ஒரு முழுமையான எடுத்துக்காட்டு என வந்தே மாதரம் ஏட்டில் அரவிந்தர்  எழுதினார். 1908இல் வ.உ.சியும், சுப்பிர மணிய சிவாவும் கைது செய்யப்பட்டனர். வ.உ.சி கைதை கண்டித்து கோரல் மில் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம், இந்தியாவில் தொழி லாளி வர்க்கத்தின் முதல் அரசியல் வேலை நிறுத்தம் என்ற புகழைப் பெற்றது. மக்களிடையே ஆவேசமும், ஆத்திர உணர்வும் பொங்கி எழுந்தது. கடைகள் அடைக்கப்பட்டன. இந்துக்கல்லூரி மாணவர்கள் வேலை நிறுத்தம் செய்து ஊர்வலம் சென்றனர். தந்திக் கம்பங்கள் அறுக்கப்பட்டன. நகர்மன்ற அலுவலகம் தாக்கப்பட்டது. காவல் நிலையத்திற்கும் தீ வைக்கப் பட்டது. மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நால்வர் கொல்லப்பட்டனர். இதனை நெல்லை எழுச்சி என வரலாறு அடை காத்து வைத்திருக்கிறது, மகத்தானதொரு புரட்சிக்காக!

நெல்லை சதி வழக்கு

பாப்பாங்குளம் சொக்கலிங்கம் பிள்ளை, தூத்துக் குடி சங்கரநாராயணன், சிந்துப்பூந்துறை சண்முகம். மூவரும் சுதந்திரப் போராட்ட வீரர்களாக அரசியல் வாழ்க்கையைத் துவக்கி இடதுசாரி இயக்கத் தலை வர்களாக மிளிர்ந்தனர். தேச விடுதலைப் போராளி களை இடதுசாரித் தலைவர்களாக உருவாக்கினர். திருச்சி சிறைக்கு வந்த ஜீவாவை தூத்துக்குடி சங்கர நாராயணன் இப்படித்தான் மாற்றினார். 1932ல் ஜனவரி யில் காங்கிரஸ்காரனாக சிறை புகுந்தேன். நவம்பரில்  கம்யூனிஸ்ட்டாக வெளி வந்தேன் என ஜீவா கூறினார். விடுதலைப் போராட்ட தீரர்கள் பலரும் இடதுசாரி இயக்கத்தின் பால் ஈர்க்கப்பட்டனர். தொழிற்சங்க அமைப்புகளையும், விவசாயிகளின் இயக்கங்களை யும் மாவட்டம் முழுவதும் உருவாக்கினர். விக்கிரம சிங்கபுரம் பஞ்சாலை தொழிலாளர் சங்கம், வர்த்தக  குமாஸ்தாக்கள் சங்கம், கைத்தறி தொழிலாளர் சங்கம், ஐக்கிய பீடி தொழிலாளர் சங்கம், ஓட்டல் தொழிலா ளர் சங்கம், அச்சுத் தொழிலாளர் சங்கம், மோட்டார் தொழிலாளர் சங்கம் போன்ற அமைப்புகள் உரு வாக்கப்பட்டு தீரமிகு போராட்டங்களை முன்னெடுத் தன. சிவகிரி, அம்பாசமுத்திரம், நாங்குநேரி பகுதி களில் குத்தகை விவசாயிகளின் போராட்டம் வலுவாக முன்னெடுக்கப்பட்டன.  துளிர்விட்டு வளர்ந்து வந்த இடதுசாரி இயக்கத்தை முளையிலேயே கிள்ளி எறிய 1941ல் முதல் நெல்லை சதி வழக்கு புனையப்பட்டது. விடுதலைக்குப் பின் 1949இல் 97 பேர் மீது இரண்டாவது சதி வழக்கு போடப்பட்டது. 

எதுவுமற்ற பாட்டாளிகளாக...

1946இல் விக்கிரமசிங்கபுரம் தொழிலாளர் போராட் டத்தில் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட தோழர் கள் அருணாசலம், பன்னீர்செல்வம், செபஸ்தியான், அய்னி மஸ்தான், தொழிற்சங்க இயக்கத்தை அழிக்க வேண்டும் என நிர்வாகத்தால் தூண்டிவிடப்பட்ட ரெளடிகளால் கொல்லப்பட்ட செங்கொடி காத்த முத்துக்குமாரசாமி  ஆகியோர் நெல்லை மாவட்ட வர லாற்றில் தடம் பதித்த தியாக சீலர்கள். 

மாஞ்சோலை தொழிலாளர் போராட்டமும், 17 உயிர் கள் கொல்லப்பட்டதும், அவரது தியாகங்களும், தோழர் வீ.பழனி கொடூரமாக தாக்கப்பட்டதும் இங்கே நினைவு கூர வேண்டிய ஒன்றாகும்.  மாஞ்சோலை தேயிலைத் தோட்டம், சிறப்பு பொரு ளாதார மண்டலம், தொழிற்பூங்கா, கூடங்குளம் அணு மின் நிலையம் உள்ளிட்டு மூலதன முதலீடுகளும், சுதந்திர இந்தியாவில் முதலாளித்துவ அரசின்  முத லீடுகளும் தொழிலாளி வர்க்கத்தை விரிவுபடுத்தியது. “உடமைகளைப் பறித்து அனைவரையும் உழைப் பைத் தவிர எதுவுமற்ற பாட்டாளிகளாக முதலாளித்து வம் மாற்றும்” எனும் மார்க்ஸ் வரிகளுக்கு ஏற்ப சிறு தொழில் நசிவும், விவசாய நெருக்கடியும், பெரும் எண் ணிக்கையில் முறைசாரா தொழிலாளர்களை உரு வாக்க வழிவகுத்தது.

பஞ்சாலை தொழிலாளர் சங்கங்கள் உள்ளிட்டு பல்வேறு தொழிற்சங்க அமைப்புகளை உருவாக்கி தோழர் ஏ.நல்லசிவன் முன்னத்தி ஏராக செயல் பட்டார். அதனைத்தொடர்ந்து பாலவிநாயகம், சொர் ணம், ராஜாங்கம், பி.சி.வேலாயுதம், இளையபெரு மாள், காமாட்சி, செல்லப்பா, சண்முகவேலாயுதம், ஸ்ரீகுமார், ராமர், டி.ஆர்.ஆறுமுகம், நடராஜன், கந்த சாமி, மாடசாமி, விஸ்வநாதன், என்.எஸ்.எஸ்.மணி, ஆண்டி, முத்துக்குமாரசாமி, பார்வதிநாதன் ஆகியோர் முக்கிய பொறுப்புகளில் செயல்பட்டு, அவர்தம் தடங்களை பதித்துச் சென்றுள்ளனர். அதே போன்று தோழர்கள் பி.சம்பத், ஆர்.கருமலையான், ஆர்.கிருஷ்ணன், பி.தியாகராஜன், எஸ்.கே.பழனிச்சாமி, பத்மநாபன், ராஜாமணி, இ.வேலாயுதம் ஆகியோர் தொழிற்சங்க இயக்கத்தை கட்டி எழுப்பியதில் மகத்தான பங்கினை வகித்துள்ளனர். இன்றும் இளம் படை தொழிற்சங்க இயக்கத்தில் தீவிரமாக செய லாற்றி வருகின்றது.  

விவசாயத்திற்கு அடுத்தபடியாக நெல்லையில் குவிந்து கிடக்கும் கிராமப்புற, நகர்ப்புற பீடித்தொ ழிலாளர்களை அமைப்புரீதியாக திரட்டி, குறிப்பாக ஆயிரக்கணக்கான பெண் தொழிலாளர்களைத் திரட்டி, பெரும் போராட்டங்களை முன்னெடுத்து, பீடித் தொழிலாளிகள் மாண்போடும், கண்ணியத்தோடும் வாழ்வதற்கான, சட்டரீதியான உரிமைகளை பெற்றுத் தந்த வரலாறும், பன்னாட்டு மூலதனத்தை எதிர்த்து ஏடிசி டயர் கம்பெனியில் சங்கத்தை உருவாக்கி, சங்க அங்கீகார தேர்தலில் வெற்றி பெற்று, ஊதிய உயர்வை யும், பல நூறு ஒப்பந்த தொழிலாளிகளை நிரந்தர மாக்கிய வரலாறும் நெல்லை மாவட்ட தொழிற்சங்க இயக்கத்திற்கு உண்டு. 

மகத்தான தலைவர் தோழர் ஏ.நல்லசிவன் உயர்த்திப்பிடித்த செங்கொடியின் திசைவழியில் நெல்லை மாவட்ட தொழிலாளர் போராட்டங்கள் விரி வடைந்து வருகிறது. தத்தம் தொழிற்சங்க இயக்கத் தோடு, மத்தியதர தொழிற்சங்க போராட்டங்களுக்கு ஆதரவாகவும், விவசாய இயக்கங்களோடு சமீப காலங்களில் கூட்டாகவும் முன்னெடுக்கும் பணிகளை  மேலும் வலுப்படுத்த வேண்டிய காலமிது. தூய்மைப் பணியாளர்களையும், முறைசாரா தொழிலாளர்களை யும் திரட்டிய அனுபவத்தோடு, உழைப்பை விற்று உயிர் மட்டுமே மிச்சம் வைத்திருக்கும் - சுரண்டலு க்கு உள்ளான பல  லட்சம் தொழிலாளர்களை நோக்கிச் செல்ல, தனது செயலகத்தை தொழிற்சங்க இயக்கம் நிர்மாணித்து இருக்கிறது. தொழிற்சங்க இயக்கம் என்பது சோசலிசத்திற்கான பாட சாலை என ஏங்கெல்ஸ் சொன்ன வரிகளோடு, தம்மை புதுப்பித்துக் கொண்டு, நெல்லை மாவட்ட தொழிற்சங்க இயக்கம் ஒரு அடியெடுத்து முன்னே வைக்கிறது.