articles

img

கூட்டுக் களவாணிகளும் மோசடி சாம்ராஜ்யமும்! -

அமெரிக்காவில் உள்ள ஒரு சிறிய முத லீட்டாளர்கள் நிறுவனம், இந்தியாவில் அசுரத்தனமாக வளர்ந்துகொண்டிருந்த அதானி குழுமத்தின் அடித்தளங்களையே ஆட்டம் காண வைத்து, அதனைச் சவாலுக்கு இழுத்திருக்கி றது. ஒரு சிறிய விற்பனை நிறுவனமாக விளங்கும், ஹிண்டன்பர்க் ஆய்வுமையம், அதானி குழுமம் குறித்து 129 பக்கங்கள் கொண்ட ஓர் அறிக்கையை வெளிக் கொணர்ந்திருக்கிறது. இதில் அதானி குழுமத்தின் கீழ் இயங்கும் அனைத்து நிறுவனங்களின் (அதானி குழுமம் என்பது ஏழு பட்டியலிடப்பட்ட கம்பெனிக ளின் கீழ் 578 துணை நிறுவனங்கள் இயங்கிக்கொண்டி ருக்கின்றன) அனைத்து நடவடிக்கைகளின் தில்லு முல்லு நடவடிக்கைகளையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது. “கார்ப்பரேட் வரலாற்றில் மிகப்பெரிய மோசடி” என்று அந்த அறிக்கை கூறுகிறது.

ஊதிப் பெருக்கிக் காட்டி...

அதானி குழுமம், மொரீசியஸ், சைப்ரஸ் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் முதலான நாடுகளில் இயங்கும் தன்னுடைய நிறுவனங்கள் மூலம் எப்படியெல்லாம் பங்குச் சந்தையில் பங்கு விலைகளைப் பட்டியலிடு வதில் மோசடிகள் செய்து, “தங்களுடைய குழுமத்தின் நிதி நிலைமை மிகவும் நன்றாக இருப்பதாகக்” காட்டி  வந்தது என்பதை அக்குவேறு ஆணிவேராக வெளிச் சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது. அதானி குழுமம் கிட்டத்தட்ட 85 விழுக்காடு அளவிற்கு தங்கள் நிறு வனங்களின் மதிப்பை ஊதிப் பெருக்கிக் காட்டி வந்த தாக அறிக்கையில் மதிப்பிடப்பட்டிருக்கிறது.   அதானி குழுமம், “பங்குச்சந்தையில் பங்குகளையும் கணக்கு களையும் கையாளுவதில் மிகவும் வெட்கக்கேடான முறையில் மோசடியாக ஈடுபட்டு வந்தது,” என்று அறிக்கை குற்றஞ்சாட்டியுள்ளது. அதானி குழுமம், ஹிண்டன்பர்க் அறிக்கையை, “இந்தியாவின் மீதான திட்டமிட்ட தாக்குதல்” என்று கூறியிருக்கிறது. அறிக்கையில் தங்கள் குழுமத்தின் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக உருப்படியான பதில் எதையும் அளிக்க முடியாமல், ஒட்டுமொத்தமாக இவ்வாறு தங்களுடைய ‘தேசபக்தி’ என்னும் போர்வைக்குள் தன்னுடைய மோச டித்தனங்களை மூடி மறைத்துக்கொள்ள முயற்சிக்கி றது.  “இந்திய நிறுவனங்களின் சுதந்திரம், ஒருமைப் பாடு, தரம் ஆகியவற்றின் மீதும்,  இந்தியாவின் வளர்ச்சி மீதும் ஏவப்பட்டுள்ள தாக்குதல்” என்று அதானி குழுமம் அறிவித்திருக்கிறது.

பரமபத விளையாட்டு  ஏணியில் கீழிறங்கி...

ஹிண்டன்பர்க் அறிக்கையின் விளைவு உடனடியா கவே தெரியத் தொடங்கிவிட்டது. இந்த  அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து, அதானி குழுமம் ஒரே வாரத்திற்குள் பங்குச்சந்தை வணிகத்தில் சந்தை மூலதனத்தில், 67 பில்லியன் அமெரிக்க டாலர்களை, அதாவது, சுமார் 5.6 லட்சம் கோடி ரூபாயை இழந்து விட்டது. கௌதம் அதானி, தன்னுடைய சொந்த சொத்து மதிப்பில் 50 பில்லியன் அமெரிக்க டாலர்களை இழந்து, உலகின் மூன்றாவது பெரும் பணக்காரர் என்ற நிலையிலிருந்து, 15ஆவது நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிறார். அதானி குழுமத்தின் மோசடியான நடவடிக்கை கள் குறித்து நாட்டு மக்கள் மிகவும் கவலைப்பட வேண்டிய விஷயங்களேயாகும். ஏனெனில், கடந்த சில ஆண்டுகளாக, இவற்றால் சூறையாடப்பட்டவை நாட்டின் பொது வள ஆதாரங்களும், பொதுச் சொத்துக் களுமாகும். மோடி அரசாங்கத்தின் அரவணைப்புடன், அதானி குழுமம் நாட்டின் துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் மிகப்பெரிய தானியக் கிடங்குக ளில் பெரும்பாலானவற்றையும், நாட்டின் மின் வினி யோகத்தில் ஐந்தில் ஒரு பங்கையும், சிமெண்ட் தொழி லையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தி ருக்கின்றன. நிலக்கரிச் சுரங்கங்களில் பெரும்பாலான வற்றைத் தன் வசம் வைத்திருப்பதன் மூலம் நாட்டின் மிகப்பெரிய அனல் மின் நிலையத்தையும் இது பெற்றிருக்கிறது.

பொது மக்களுக்கு பாதிப்பு

இவ்வாறாக நாட்டின் பெரும் பகுதி சொத்துக்களை இது கையகப்படுத்துவதற்காக எல்ஐசி போன்ற நிறுவனங்களிடமிருந்தும், தேசிய வங்கிகளிடமி ருந்தும் கடன்களைப் பெறுவதற்காக இக்குழுமத் திற்கு வசதி செய்து தரப்பட்டது. சுமார் 80 ஆயிரம் கோடி ரூபாய் எல்ஐசியிடமிருந்து அதானி குழுமத்தின் நிறுவனங்களுக்கு முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. அதேபோன்றே பாரத ஸ்டேட் வங்கியின் மூலமாக தேசிய வங்கிகளிடமிருந்து 40 விழுக்காடு கடன்கள் பெறப்பட்டிருக்கின்றன. இப்போது அதானி குழு மத்தின் நிறுவனங்களின் பங்குகளின் விலைகள் பங்குச் சந்தையில் சரிந்துகொண்டிருப்பது எல்ஐசி யிலும், தேசிய வங்கிகளிலும் தங்கள் சேமிப்புகளைப் போட்டு வைத்துள்ள மக்களுக்கு ஓர் அச்சத்தை ஏற் படுத்தியிருக்கிறது.

கார்ப்பரேட் வர்க்க ஒற்றுமை

அதானி குழுமம் பங்குச் சந்தையில் 20 ஆயிரம் கோடி ரூபாயை எழுப்ப இருப்பதாக அறிவித்த நிலை யில் ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானது. அதானி குழுமத்தின் நிறுவனங்களின் விலைகளில் கூர்மை யான அளவில் சரிவு ஏற்பட்ட போதிலும், இவ்வாறு இது அறிவித்த அந்தப் பெரிய தொகையை, ஒருசில நிறுவன மற்ற முதலீட்டாளர்கள் (non-institutional invest ors) மூலம் அது பெற்றுவிட்டது. தங்கள் கார்ப்பரேட் வர்க்க ஒருமைப்பாட்டைக் காட்டுவதற்காக, முகேஷ் அம்பானி, சஜ்ஜன் ஜிந்தால், சுனில் மிட்டல், பங்கஜ் பட்டேல் போன்றவர்கள் இவ்வாறு தங்கள் பணத்தைப் போட்டு, பங்குகளை வாங்கி இருக்கிறார்கள். எனினும், அடுத்த நாளே, அதானி குழுமம் பங்குகள் விற்ப னையை ரத்து செய்துள்ளது. தங்களிடம் முதலீடு செய்துள்ள அனைத்து முதலீட்டாளர்களிடமும் அவர் கள் முதலீடு செய்துள்ள பணம் திருப்பித்தரப்படும் என்றும் கூறியிருக்கிறது. இரண்டு அதானி நிறுவனத் தின் முதலீடுகள் தொடர்பாக புகார்கள் வந்ததன் கார ணமாகவே இத்தகு திடீர் முடிவு என்று கூறப்படு கிறது.  

பதில் கிடைக்காத கேள்விகள்...

அதானி குழுமத்தின் அதிவிரைவு உயர்வு குறித்தும், மிகவும் வேகமாக அது விரிவடைந்தது குறித்தும் இந்தியாவில்  கேள்வி எழுப்பப்படாமல் இல்லை. கடந்த சில ஆண்டுகளாக கௌதம் அதானி தன் சாம்ராஜ்யத்தைக் கட்டி எழுப்பிக் கொண்டிருப் பது தொடர்பாக வலுவாக குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டன. நிலக்கரி இறக்குமதிகள் தொடர்பாக தில்லு முல்லு கணக்குகள் சமர்ப்பிக்கப்பட்டமை, சுற்றுச்சூழல் நெறிமுறைகள் மீறப்படுதல், நாட்டின் விதிமுறைகளைக் காலில் போட்டு மிதித்து திட்டங்க ளுக்கு ஒப்புதல் வாங்கப்பட்டிருத்தல் போன்றவை இந்தியாவில் பல ஊடகங்களாலும், வர்த்தக ஆய்வா ளர்களாலும்  கேள்விக்கு உள்ளாக்கப் பட்டிருக்கின் றன. எனினும் இவற்றுக்கெல்லாம் இந்தியாவில் இயங்கும் ‘செபி’ (‘SEBI’) நிறுவனமோ, இந்திய ரிசர்வ் வங்கியோ அல்லது அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளோ எவ்விதமான பதிலும் அளித்திட வில்லை.  

இதழாளர்களுக்கு மிரட்டல்

தங்களுடைய தில்லுமுல்லுகளைக் கேள்விக்கு உள்ளாக்கும் இதழாளர்களை மிரட்டி, நசுக்கிட அதானிகள் தங்கள் பணபலத்தையும் அரசியல் செல் வாக்கையும் பயன்படுத்தினர். தங்களைக் கேள்வி கேட்ட இதழாளர்களுக்கு எதிராகவும், செய்தி  நிறுவனங்களுக்கு எதிராகவும் சிவில் நீதிமன்றங்களில் அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. உதா ரணமாக, 2017 நவம்பரில் தி ஒயர் (The Wire)  இணைய தள செய்தி நிறுவனம், அதானியின் எல்என்ஜி என்னும் திரவ இயற்கை வாயு (LNG-Liquified Natural Gas) நிறுவனத்திற்கு பொதுத்துறை நிறுவனங்களான இந்திய எண்ணெய் கம்பெனியும், ‘கெயில் இந்தியா’  நிறுவனமும் ஏன் முதலீடு செய்தன என்று கேட்டது. இதற்கு எதிராக, 100 கோடி ரூபாய் மானநஷ்ட வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதேபோன்றே இக்குழுமம் குறித்து, இதழாளர்கள் பரஞ்சய் குஹா தாகூர்தா, எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி இதழில் எழுதி யதற்கு எதிராகவும்,  ரவி நாயர் மற்றும் சில இதழாளர் கள் மீதும் மான நஷ்ட வழக்குகள் தொடுக்கப் பட்டுள்ளன.  இவ்வாறு தங்களின் நடவடிக்கைகள் குறித்து எவர் கேள்வி கேட்டாலும் அவர்களை நீதி மன்றங்களுக்கு இழுத்தடிப்பதன் மூலம் அவர்களின் வாயை மூடச் செய்வதற்கு அதானி குழுமம் நடவ டிக்கைகள் எடுத்து வந்தது.  

மோடி- அதானியின்  நெருக்கமும் பிணைப்பும்...

அதானி-ஹிண்டர்பர்க் இடையேயான குற்றச் சாட்டுகள், எதிர்க் குற்றச்சாட்டுகளை ஆராய்வதன் மூலமாக மட்டுமே அதானி குழுமம் செய்திட்ட மோச டிகள், தில்லுமுல்லுகள் ஆகியவற்றிலிருந்து உண்மை யான படிப்பினைகளைப் பெற்றுவிட முடியாது. நரேந்திர மோடியின் அரவணைப்பையும் ஆதரவை யும் கூறாவிட்டால் அதானி இந்தியாவின் மாபெரும் பணக்காரராக வளர்ந்த கதை முழுமை பெறாது. மோடி, குஜராத்தின் முதலமைச்சராக மாறிய 2002இலிருந்தே மோடிக்கும் அதானிக்கும் இடையேயான பிணைப்பு  துவங்கி விட்டது. அதன்பின்னர் மோடி தில்லிக்கு 2014 மே மாதத்தில் பிரதமராக வந்தபின் அதானி-மோடி பிணைப்பு மிகவும் நெருக்கமாயின. 2014இல் அதானியின் சொத்து மதிப்பு வெறும் 50.4 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது, 2022இல் 10.30 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது. மோடியின் அபி மான முதலாளியான அதானியின் செயல்பாடுகள் எதுவாக இருந்தாலும், அவற்றை எந்தவொரு முறைப்படுத்தும் அரசு நிறுவனமும் கேள்விக்குள் ளாக்க முடியவில்லை.  தாங்கள் எது செய்தாலும் தங்க ளைக் கேள்வி கேட்பார் யாருமில்லை என்கிற துணிவு, சமீப காலங்களில் அரசாங்கத்திற்கும், கூட்டுக் களவாணி முதலாளித்துவத்திற்கும் இடையேயான கள்ளப்பிணைப்பைக் காட்டுவதற்கு மிகச் சரியான உதாரணமாகும். 

பதில் சொல்லியாக வேண்டும்

மோடி-அதானி கள்ளப்பிணைப்பு என்பது இன்றையதினம் நம் நாட்டை ஆண்டு கொண்டி ருக்கின்ற இந்துத்துவா-கார்ப்பரேட் கூட்டணியை அடையாளப்படுத்துகிறது. மோடியின் ஆதரவு தனக்கி ருக்கும் வரை தன்னால் புயலைக் கூட சமாளிக்க முடியும் என்று அதானி நம்பினார்.  ஆயினும், இத்த கைய மதவெறியர்கள்-கார்ப்பரேட்டுகளின் கள்ளப் பிணைப்பின் காரணமாக ஜனநாயகம் தகர்க்கப் பட்டு, வாழ்வாதாரங்களை இழந்து நிற்கும் நாட்டு மக்க ளுக்கு, அதானிகள் தாங்கள் செய்திட்ட தில்லுமுல்லு கள் குறித்தும், எப்படி தான் நாட்டின் பணக்காரராக மிக வேகமாக வளர்ந்தேன் என்பதற்கும் பதில் சொல்லித் தான் ஆக வேண்டும். எனவே, அதானி குழுமம் செய்த தில்லுமுல்லு நட வடிக்கைகள் குறித்து நாட்டிலுள்ள முறைப்படுத்தும் அமைப்புகளும், அமலாக்கத்துறை போன்ற புலனாய்வு அமைப்புகளும் உரிய விசாரணை மேற் கொள்வதற்காக ஒரு தீர்மானகரமான போராட்டத்தை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். அதானி குழுமத்திற்கு எதிராக ஹிண்டன்பர்க் ஆய்வு மையம் சுமத்தியுள்ள முறைகேடுகள் குறித்து ஓர் உயர்மட்ட புலனாய்வுக் குழு அமைக்கப்பட வேண்டும். அதன் செயல்பாடுகள் உச்சநீதிமன்றத்தால் கண்காணிக் கப்பட வேண்டும்.

பிப்ரவரி 1, 2023 
தமிழில்: ச.வீரமணி