articles

img

பிரதமர் காட்டிய ரோடு ‘ஷோ’ காஸ்ட்லியான மொக்கப்படம் - அ.விஜயகுமார்

400 பிளஸ்சுன்னு சொல றாங்க. மே கடைசி வரை காத்திருங்க. அது  250 ஆக குறையும். ஜூன் முதல்  வாரம் 175 முதல் 200 ஆக குறையும்.  நான் அரை டஜன் அல்போன்சா மாம்பழம் விலையை சொன் னேன் என்றும் தற்போதைய அர சியலுக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்றும் முன்னாள் தலைமை  தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி சொன்னது சமூக வலைத்  தளங்களில் தீயாய் பரவியது. அது தான் எதார்த்தம். 

இதை நன்கு அறிந்துதான் பிர தமர் தென்னிந்தியாவில் வட்ட மடித்துக் கொண்டிருக்கிறார். வட மாநிலங்களில் காலை வாரிவிடும்  தொகுதிகளை தென்மாநிலங்க ளில் பிடித்துவிடலாம் என்ற நப் பாசைதான் அவருக்கு. 

 சென்னையில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து  கடந்த செவ்வாய்கிழமை நகரின் முக்கிய வர்த்தக பகுதியாக விளங்  கும் தி.நகரில் பனகல் பூங்கா முதல் அண்ணாசாலை சந்திப்பு வரை  ரோடுஷோ நடத்தினார். ‘ரோடு  ஷோ’ என்ற பிரச்சார நடைமுறை  தென்னிந்தியாவில் இந்த தேர்த லில்தான் அறிமுகமாகியுள்ளது. பிரதமர் நரேந்திரமோடி முதல் முறையாக 2014 ஆம் ஆண்டு வார ணாசி, வதோதரா என இரு மக்கள வைத் தொகுதியில் போட்டியிட்ட போது முதல் முறையாக குஜ ராத்தில் ‘ரோடு ஷோ’வை நடத்தி னார்.

நாட்டில் பெரிய பெரிய கண் காட்சிகள், மாநாடுகள், தனியார் நிறுவனங்களின் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் நிகழ்வுகள், செல்வந்தர்களின் திருமண விழாக்  களை நடத்தும் ‘ஈவென்ட் மேனேஜ்  மென்ட்’ என்று அழைக்கப்படும் தனியார் நிறுவனங்கள் தான் மோடி யின் ‘ரோட்ஷோ’வை நடத்துகின்  றன. இதற்காக பாஜக அந்த நிறு வனங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாயை செலவிடுகிறது. எல்லாம்  பக்கா பிளான். பிரதமர் வந்தவுடன்  எங்கு நிற்கவேண்டும், எங்கு இறங்கவேண்டும், யாரிடம் பேச வேண்டும் எப்படி கை அசைக்க  வேண்டும் என்று திட்டமிடப்படு கின்றன. சென்னையிலும் இதை யே காணமுடிந்தது. பெண்களை பாஜக மிக உயர்ந்த இடத்தில் வைத்திருப்பது போன்ற தோற் றத்தை ஏற்படுத்தும் வகையில், ரோட்ஷோ தொடங்கியவுடன் பன கல் பார்க் அருகில் சாலையோரம்  நின்றிருந்த பாஜக பெண் நிர்வாகி கள் 10 பேரிடம் மோடி குசலம் விசா ரித்தார். உடனே எவ்வளவு பெரிய  மனிதர் சாமானிய பெண்களை கண்  டவுடன் வாகனத்தில் இருந்து இறங்கிவந்து விசாரிக்கிறார் பாருங்கள் என்று பாஜக ஊது குழலாக மாறியுள்ள சில ஊடகங்க ளும் சமூக வலைதளங்களும் புகழ்ந்து தள்ளின. ரோட் ஷோ முடி யும் வரை இதுபோன்ற அலப்பறை களை அதிகமாக கேட்க முடிந்தது.  மோடியின் ரோடு ஷோவை எப்படி யாவது நேரடியாக ஒளிப்பரப்பி பாஜகவின் நன்மதிப்பை பெற்று விடவேண்டும் என்பதில் முன்னணி தமிழ் ஊடகங்களிடையே போட்டா போட்டியையும் காண முடிந்தது. நடுநிலை என்று கூறிக்கொள்ளும் முன்னணி ஊடகங்கள் ராகுல்  காந்தி ‘பாரத் நியாய யாத்திரை’ யின் போது எப்படி நடந்துகொண்  டன என்பதை திருமிகு பொதுஜனம் ஒருநிமிடம் சிந்தித்துப்பார்க்க வேண்டும். 

மோடி ரோடு ஷோவுக்கு திட்ட மிட்டு அழைத்துவரப்பட்ட பெண் களும் ஆண்களும் பலத்த பாது காப்பு சோதனைகளுக்கு பிறகு சாலையின் இருமருங்கிலும் நிற்க வைக்கப்பட்டனர். பொதுமக்கள் என்ற பேரில் வட இந்தியர்கள் ஏரா ளமானோர் அழைத்துவரப்பட்டி ருந்தனர். அவர்கள் தங்கள் பங்  கிற்கு இந்தியில் முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர். மோடி வந்த போது பல இடங்களில் ஆட்கள் இல்லாமல் காலியிடத்தைதான் பார்க்கமுடிந்தது. இதனால் நிகழ்ச்சி முடியும் வரை பாஜக அண்  ணாலை இறுக்கமான முகத்து டன் காணப்பட்டார். காசு தந்து  அழைத்துவரப்பட்ட பெண்கள் பலர் பிரதமர் வாகனத்தில் ஏறிய வுடன் மரத்தினால் ஆன தாமரை சின்னத்தை அண்ணாமலை பிடித்தி ருக்க அதேபோன்ற மற்றொரு சின்  னத்தை பிரதமரிடம் அளித்தபோது  அதை அவர் வாங்கவில்லை. அதை விட எடை குறைந்த சிறிய தாமரை  சின்னத்தை பெற்றுக்கொண்டு அதை கையில் வைத்துக்கொண்டு  அசைத்தபடி வந்தார். வழக்கம் போல் இந்த ரோடுஷோவிலும் மோடி.. மோடி.. மோடி என ஒரு கும்பல் முழக்கமிட வந்தவர்களும் அதை பிடித்துக்கொண்டனர்.

பிரதமரின் சமூக ஊடகத்தை  கையாளும் தனியார் நிறுவனத்  தின் நிழற்பட கலைஞர்கள் பட த்தை எடுத்துத் தள்ளிக்கொண்டி ருந்தனர். பாஜகவின் முழு ஆசி பெற்ற ஏஎன்ஐ செய்தி நிறுவனத் தின் வீடியோ கலைஞர்கள் மட்டும் பிரதமரின் வாகன பேரணிக்குள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் பல கோணங்களில் பிரதமரை படம்  பிடித்தனர். பிடிஐ செய்தி நிறு வனத்தை ஓரங்கட்டி பாஜக ஆசி யுடன் தொடங்கப்பட்டதுதான் ஏஎன்ஐ செய்தி நிறுவனம். இந்த  நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளாக  பாஜகவின் அறிவிக்கப்படாத அதி காரப்பூர்வ செய்தி நிறுவனம் போல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பிரதமர் பேட்டி ஒன்று அளித்தால்  இந்த நிறுவனத்திற்கு மட்டும்தான்  அதுவும் குறிப்பிட்ட செய்தியாள ருக்கு தான் அளிப்பார். அந்நிறு வனம் தனது பங்கிற்கு பிரதம ருக்கு சென்னையில் எழுச்சிமிகு வர வேற்பு என்றும் பெண்களும் குழந்  தைகளும் இளைஞர்களும் அதிக ளவில் திரண்டு வரவேற்றதாகவும், தமிழகத்தில் பாஜக ஒரு மாபெரும் சக்தியாக மாறியிருப்பது போன் றும் தோற்றத்தை ஏற்படுத்த முயற்சித்தது. 

தனியார் நிறுவனத்தின் சார்  பில் எடுத்துவரப்பட்ட மலர் மூட்டை கள் சாலையில் அங்காங்கே குவித்து வைக்கப்பட்டிருந்தன. அதை பிரித்து அங்கிருந்தவர்களி டம் கொடுத்து பிரதமர் மீது தூவு மாறு வேண்டினர். காசுகொடுத்து  அழைத்து வரப்பட்டவர்கள் தங்க ளுக்கு கொடுத்த பணியை கச்சித மாக செய்து முடித்தனர். பாஜக தொண்டர்கள் ஆதரவாளர்கள் மட்டும் அங்காங்கே அவர்கள் புதி தாக தொடங்கியுள்ள யூ டியூப்  சேனல்களில் பிரதமர் மோடியை யும் அண்ணாமலையையும் புகழ்ந்து தள்ளிக் கொண்டிருந்த னர். ஒட்டுமொத்தமாக பிரதமரின் ரோடு ஷோ இரண்டு மணிநேர ஷூட்டிங் போல் இருந்தது. வழ க்கமாக திநகர் அருகில் உள்ள  கோடம்பாக்கத்தில்தான் படப் பிடிப்புகள் நடைபெறும். செவ்வா யன்று தற்காலிகமாக படப்பிடிப்பு கள் தி.நகருக்கு மாற்றப்பட்டி ருந்தன. கதாநாயகனும் துணை  நடிகர்களும் சிறப்பாக நடித்து முடித்தனர். இந்தபடம் தேறுமா தேறாதா என்பதற்கு படம் வெளி யாக உள்ள ஜூன் 4வரை காத்தி ருக்க வேண்டியதில்லை. படம்  தேறாது என்பது கதாநாயகன் அரு கில் இருந்த அண்ணாமலையின் இறுக்கமான முகமே சாட்சி.

- அ.விஜயகுமார்