‘ஒரு நாடு - ஒருதேர்தல்’ எனும் கருத்தியலு டன் இந்துத்துவா மதத்தையும் சேர்த்து நடைமுறைக்குக் கொண்டுவரவிருக்கி றார்கள். இந்திய ஒன்றியம் எனும் கூட்டமைப்பைத் தகர்க்கவும், ஒற்றை ஆதிக்க அரசியலை மேலிருந்து திணிக்கவுமான குறுக்குவழியாக முன்வைக்கப்பட்ட ஒன்றுதான் ஒற்றைத் தேர்தல் எனும் கருத்தியல்.
எதற்கான துவக்கம்?
ஒரு நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே மதம் என்றவாறு தங்கள் இலட்சியத்தை முன்வைக்கிற மதக்கருத்துகள் கொண்ட அரசியலை நிர்மாணிப்ப தற்கான வழிமுறை என்கிற நிலையில் இந்துத்துவ சக்திகள் உயர்த்திக் கொண்டுவந்த ஒற்றை வாதங்களின் தொடர்ச்சியாகத்தான் இந்த ஒரே தேர்தல் என்கிற கருத்தியலையும் முன்வைத்திருக்கி றார்கள். நடைமுறைக்குச் சாத்தியமில்லாததும், இந்திய ஜனநாயகக் கட்டமைப்புக்கு முற்றிலும் முரண்பட்டதுமான ஒன்றுதான் இத்தகைய அணுகு முறை. விரிவான எதிர்ப்புக்குப் பிறகும் இந்துத்துவ அரசு அதற்கான முன்னெடுப்புகளை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறது. நாடாளுமன்ற முறையிலிருந்து ஜனாதிபதி ஆட்சிமுறைக்கு மாறு வதற்கான துவக்கமாகப் பலரும் இதை மதிப்பிடு கிறார்கள்.
ஒற்றைத் தேர்தல் எனும் கருத்தியல் குறித்து ஆராய்ந்து அது குறித்த கருத்துக்கு வடிவம் தருவது என்ற நோக்கத்துடன் ஒன்றிய அரசால் நியமிக்கப் பட்டவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ராம்நாத் கோவிந்த்தை தலைவராகக் கொண்ட குழு தனது பரிந்துரையை வழங்கியது. ஒன்றிய ஆட்சி யாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ற கருத்துகளுக்கு அப்பால் எந்தக் கருத்தும் அந்தப் பரிந்துரையில் இல்லை. ஒற்றைத் தேர்தல் என்பது நாட்டின் செயல்பாடுகளை மிகஎளிதாக ஆக்குமென்றும், பணச்செலவுகளைக் குறைக்கும் என்றும், மற்றும் இது போன்ற மற்ற வாதங்களும் உள்ளன. ஒற்றைத் தேர்தல் எனும் மதவாத நிகழ்ச்சி நிரலுக்கு ஒப்புதல் தருவது என்பதைத் தவிர்த்து அந்தப் பரிந்துரை அறிக்கையில் நாட்டுக்கு நல்லது செய்கிற எதுவும் இல்லை.
ஒற்றைத் தேர்தல் என்பது தேர்தலையோ, நாட்டின் நிர்வாகத்தையோ மட்டுமே சார்ந்த தாக இருக்கப் போவதில்லை. இது தேச ஜனநாய கத்தின் அடிப்படை அம்சத்துடன் ஆழ்ந்து சம்பந்தப் பட்டுள்ள ஒன்றாகும். அரசமைப்புச் சட்டம் முன் வைத்துள்ள ஜனநாயக, மதச்சார்பற்ற குடியரசு எனும் தத்துவத்திற்கும், பன்முகத் தன்மையிலான சமுதாயம் எனும் கருத்தியலுக்கும் நேர்முரணான தாகும். பெரும்பான்மைக் கருத்து என்பதன் பேரால் ஜனநாயகத்தை வெறும் கவுரவத் தோற்றத்திற்கு ரியதாக சுருக்கிவிட்டனர். தாங்கள் எதிர்பார்க்கிற மதவாத தேசத்தின் வாசல்களைத் திறப்பதற்கு இந்துத்துவவாதிகள் முயற்சி செய்கிறார்கள்.
மகாகவி தாகூரின் அறிவுரை
பல்வேறு வாழ்க்கைப் பாரம்பரியங்களை தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்கிறவர்கள் சகோத ரர்களாக ஒன்றுபட்டு வாழ்கிற நாடுதான் இந்தியா என்று மகாகவி தாகூர் பெருமிதப்பட்டார். நான்கு எல்லைகள் சம்பந்தப்பட்ட, புவியியல் சம்பந்தப்பட்ட அடையாளங்களுக்கு அப்பால் மக்களின் வாழ்க்கை முறைகளும் சேர்ந்ததுதான் இந்தியா எனும் கருத்தியலாக மகாகவி தாகூர் மதிப்பிட்டார்.
இந்தியா என்பது ஒரு புவிப்பிரதேசத்தின் பெயர் மட்டுமல்ல என்றும், அது ஒரு கருத்தியலைக் காட்டு கிறது என்றும் மிகவும் முதலில் சுட்டிக்காட்டியவர் ரவீந்திரநாத் தாகூர்தான். நன்கு உறுதிசெய்யப்பட்ட ஓர் எல்லைக்குள் வாழ்கிற மக்கள் சமுதாயம் என்பதற்கு அப்பால் ஏராளமான கருத்துகள் இந்தச் சமு தாயத்திற்கு உண்டு என்றும் தாகூர் கூறினார். பிற்கா லத்தில் ‘இந்தியா எனும் கருத்தியல்’ நடைமுறையில் வேரூன்றியதும் இப்படித்தான். பல்வேறு விதமான வாழ்க்கைப் பாரம்பரியங்களைப் பங்கிட்டுக் கொள்கி றவர்கள் சகோதரர்களாக ஒன்றுசேர்ந்து வசிக்கிற ஒரு நிலப்பரப்புதான் இந்தியா என்று தாகூர் கூறினார். எல்லைகள், புவியியல் அடையாளங்களுக்கு அப்பால் மக்களின் வாழ்க்கை முறைகளையும் சேர்த்துதான் இந்தியா எனும் கருத்தியலாகத் தாகூர் மதிப்பிட்டார். சாதி, மொழி, கலாச்சார வேறுபாடுகளையெல்லாம் கடந்து செல்வதும், மதச்சார்பின்மையும் கூடிய ஒன்று தான் அது. பிற்காலத்தில் வேற்றுமையில் ஒற்றுமை எனும் தேசத் தத்துவமாக சுருக்கி எழுதப்பட்டதும் வேறொன்றுமல்ல.
இந்திய தேசியம் என்பது என்ன?
மதக்கருத்துகளை உள்ளடக்கிய தேசிய சிந்த னையை தூக்கியெறிந்து 1920-இல் பிரிட்டிஷ் ஏகாதி பத்தியத்திற்கு எதிரான மக்கள் தேசியம் எனும் சிந்தனைக்கு இந்திய தேசிய இயக்கம் சென்றது. இந்த மாற்றத்தின் செயல் மைய பிம்பமாக விளங்கினார் காந்திஜி. அதற்கு முன்புவரை பெரும்பாலும் மதரீதி யான, கலாச்சார ரீதியான அடிப்படையில்தான் இந்திய தேசியம் புரிந்து கொள்ளப்பட்டிருந்தது. அது, மத்திய கால குறுநில மன்னர்களின், பெருநில மன்னர்களின் மிச்சமீதி அதிகாரங்களை மறுகட்ட மைப்பு செய்வதற்கான பெரும் முயற்சிகள்வரை தேசிய சிந்தனையுடன் இணைந்திருந்த நிலைமை அன்று இருந்தது. அந்தக் காலத்தில் மறுமலர்ச்சிப் பணிகளோடு தேசிய இயக்கம் கிட்டத்தட்ட பாரா முகமாகவே இருந்தது. பாலகங்காதர திலகர் தலைமை வகித்த காலகட்டத்தில் தேசிய இயக்கத்தின் இயல்பை ஆராய்ந்தால் இந்த விஷயம் தெளிவாகும். இந்துத்துவ மததேசத்திற்கு வழி அமைப்பது போலத்தான் அன்றைய தேசிய இயக்கத்தின் செயல் கள் பெருமளவு இருந்தன.
மதக்கருத்துகளை உள்ளடக்கிய தேசிய சிந்த னைக்கு எதிராக எழுச்சியுற்ற ஏகாதிபத்திய எதிர்ப்புத் தன்மையிலான இந்த மக்கள் தேசியம்தான் இந்தியக் கூட்டமைப்பையும், நாடாளுமன்ற ஜனநாய கத்தையும் உள்ளடக்கிய நமது தேசியக் கருத்திய லின் அஸ்திவாரத்தை வலுப்படுத்தியது.
மக்கள் தேசியம்...
1920களில் இதில் மிக முக்கியமான திருப்பம் உண்டானது. முந்தையக் கால மன்னர்களின், குறுநில மன்னர்களின், புதிய முதலாளிகளின், நடுத்தர வர்க்கத்தின் கையிலிருந்து விவசாயிகள், தொழிலா ளர்கள் உள்ளிட்ட சாமானிய மக்களின் கைக்கு தேசிய இயக்கம் சென்றது. தேசத்தின் சிந்தனை அடிப்படை மக்களின் பக்கம் திரும்பிய இந்தச் சந்தர்ப்பத்தில்தான் மொழி தேசியம், கூட்டாட்சி அரசு முதலான கருத்துகள் தேசிய இயக்கத்தின் மையத் தத்துவங்களாக ஆனது.
இந்திய மக்கள் அடிப்படையிலேயே ஒரு பன்மைத் தன்மை கொண்டவர்கள் என்பதும், ஏகாதி பத்திய எதிர்ப்பு கொண்ட அரசியல் விருப்பமும்தான் அவர்களை ஒன்றுசேர்க்கிறது என்பதும் தெளிவாக அறிவிக்கப்பட்டதும் இந்தக் காலத்தில்தான். மதக்கருத்துகளைக் கொண்ட தேசிய சிந்தனைக்கு எதிராக எழுச்சியுற்ற ஏகாதிபத்திய எதிர்ப்பு கொண்ட இந்த மக்கள் தேசியம் தான் இந்திய ஒன்றியம் என்ற கூட்டமைப்பையும், நாடாளுமன்ற ஜனநாயகத்தையும், நமது தேசம் குறித்த மனத்தோற் றத்தையும் அடிப்படையில் உறுதிசெய்தது. பிறகு எழுபத்தைந்து ஆண்டுக் காலம் அது சிதையாமல் இருந்தது.
தேர்தலையே ஒழிக்கும் சூழ்ச்சி
இந்திய அரசமைப்புச் சட்டத்தின், தேச உறு திப்பாட்டின் அம்சத்திற்குத்தான் ஒற்றைத் தேர்தல் என்ற கொள்கை சவால்விடுகிறது. பல்வேறு விதமான சமூக-பொருளாதார வளர்ச்சியும், மொழி, கலாச்சார வாழ்க்கையும் கொண்ட மக்களின் ஒற்றுமை உணர்விலிருந்து உருவான தேசம் எனும் அடிப்படை உறுதிப்பாட்டை நிராகரித்துவிட்டு ஒரே யொரு சமூக அரசியல் ஆட்சி எனும் சூழ்ச்சியை நோக்கி நாடு முழுவதையும் இட்டுச் செல்வதற்கான முயற்சிதான் இதற்குப் பின்னால் உள்ளது. நாடாளு மன்றத்திற்கும் மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கும் தேர்தல்களை ஒரே சமயத்திலும், அது முடிவுற்று நூறு நாட்களுக்குள் பஞ்சாயத்துத் தேர்தலையும் நடத்திக் கொண்டு, நிரந்தரமாக மீண்டும் மீண்டும் வருகிற தேர்தல்களைத் தவிர்க்க வேண்டும் என்பது தான் இதைக் குறித்த ஆலோசனைகளில் முக்கியமா னது. தற்போது நிலவுகிற பொருளாதார, அரசு நிர்வாக ரீதியிலான பிரச்சனைகளுக்குத் தீர்வாக முன் வைக்கப்படுகிற ஒரு நாடு-ஒரே தேர்தல் ஆலோசனை என்பது உண்மையில் புதிய பல பிரச்ச னைகளை எழச் செய்கின்றது.
நாடாளுமன்றத் தேர்தலும், சட்டமன்றங்களின் தேர்தலும் ஒருமித்து ஒரேசமயத்தில் வருவதுடன் பல்வேறு மக்களின் முக்கியமான பிரச்சனைகளும் எழும்; அவற்றுக்குக் கிடைக்கிற தனி முக்கி யத்துவமும் இல்லாமற்போகும். அகில இந்திய அளவி லான அரசியல் பிரச்சனைகள் மட்டுமே முக்கி யத்துவம் பெறுகிற இந்த நிலைமை அரசியல் இயக்கங்களின் இருப்பையே இல்லாமல் செய்து விடும். இதை இந்தியாவின் பன்முக வாழ்க்கையின் மீது முறைகேடாகத் திணிக்கிறது மோடி அரசு.
ஒற்றைத் தேர்தல் மூலம் அங்கு புதிய ஆட்சி வருவது சாத்தியமில்லை. சாத்தியமாவது அடுத்த நாடாளுமன்றப் பொதுத்தேர்தல்வரை கவர்னர் நிர்வாகத்தை ஏற்படுத்துவதுதான் நடைபெறும்.இது ஜனநாயக உரிமையைத் தகர்ப்பதாகும்.
முன்னாள் தேர்தல் ஆணையர் கூறியது
இத்தகைய ஒரு ஏற்பாட்டுக்குச் செல்ல வேண்டுமென்றால் தற்போது உள்ள பல சட்ட மன்றங்களின் காலஅளவைக் குறைக்கவும், கூட்டவும் செய்ய வேண்டும். முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி சுட்டிக்காட்டியது போல அவ்வாறு தேர்தல் நடத்திய பிறகு நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கு பெரும்பான்மையை இழக்கும் நிலைமை ஏற்பட்டால் என்ன செய்வது என்ற விஷயத்தில் தெளிவு இல்லை. எல்லா மாநிலங்களிலும் உள்ள சட்டமன்றங்களைக் கலைத்துவிட்டு தேர்தல் நடத்துவது என்ற பொருத்தமற்ற நிலைமைக்கு இது போய்ச் சேரும். சட்டமன்றங்களின் உரிமை மீது தாக்குதல் நடத்துவதும், நிர்வாக ரீதியாகவும், பொரு ளாதார ரீதியாகவும் மிகப்பெரிய பொறுப்புகளைக் கொண்டு வருவதுமாகும். ஏதேனும் ஒரு மாநிலத்தின் ஆளும் கட்சியில் பிளவு ஏற்பட்டோ, எம்.எல்.ஏ.க்கள் வேறு கட்சிக்குத் தாவியோ ஆளும் கட்சி பெரும்பான்மையை இழந்தால் என்ன செய்வது எனும் தெளிவின்மை மிச்சம் உள்ளது. ஒற்றைத் தேர்தல் மூலம் அந்த மாநிலத்தில் புதிய அரசாங்கத்தை ஏற்படுத்துவது முடியாது. சாத்திய மாகிற விஷயம், அடுத்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் வரை கவர்னர் நிர்வாகம்தான். இது ஜனநாயக உரிமையைத் தகர்ப்பதாகும். மத்தியில் ஆட்சி நடத்துகிற கட்சியின் விருப்பத்திற்கு ஏற்றபடி நிர்வா கத்தை நடத்தித் தருகிற கவர்னரின் நிர்வாகத்தில் மாநிலங்களைத் தள்ளிவிட்டு, கூட்டாட்சியின் அஸ்திவாரக் கல்லை அகற்றுகிற நிலைபாடாக அது மாறிவிடும்.
நாடாளுமன்ற, சட்டமன்றங்களின் தேர்தல்கள் முடிந்து நூறு நாட்களுக்குள் பஞ்சாயத்துத் தேர்தலை யும் நடத்தி முடிக்க வேண்டும் என்று ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரை செய்துள்ளது. நாட்டில் உள்ள முப்பது லட்சத்திற்கு மேற்பட்ட பஞ்சாயத்துகள், நகரசபை கள், மாநகராட்சிகள் உறுப்பினர்களின் ஜனநாயக உரிமைகளைப் பறித்தால் மட்டுமே இதை நடை முறைப்படுத்த முடியும்.
நாடாளுமன்ற, சட்டமன்றங்களின் தேர்தல்கள் முடிந்து நூறு நாட்களுக்குள் பஞ்சாயத்துத் தேர்தலையும் நடத்தி முடிக்க வேண்டும் என்று ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரை செய்துள்ளது. நாட்டில் உள்ள முப்பது லட்சத்திற்கு மேற்பட்ட பஞ்சாயத்துகள், நகரசபைகள், மாநகராட்சிகள் உறுப்பினர்களின் ஜனநாயக உரிமைகளைப் பறித்தால் மட்டுமே இதை நடைமுறைப்படுத்த முடியும்.
நன்றி : தேசாபிமானி (14.12.2024) நாளிதழ்
தமிழில் : தி.வரதராசன்