பட்டியல்/பழங்குடி (SC/ST) மக்களில் மிகவும் பிற்படுத்தப் பட்ட நிலையில் உள்ளவர் களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசு களுக்கு உரிமை உண்டு என 7 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் அமர்வில் 6 நீதிபதிகள் ஒருமித்து தீர்ப்பு வழங்கி இருப்பதானது இந்திய சமூக நீதி பயணத்தில் ஒரு வரலாற்று நிகழ்வாகும். இதன் மூலம் 2009-இல் கலைஞர் தலை மையிலான தமிழக அரசு வழங்கிய அருந்ததியர் மக்களுக்கான 3 சதவீத உள் ஒதுக்கீடு சட்டப்பூர்வமான முறை யில் செல்லுபடியாகும் என்ற உறுதியான நிலைபாடு ஏற்பட்டுள்ளது. சமூக நீதியில் அக்கறை காட்டி வரும் இடதுசாரி மற்றும் ஜனநாயக இயக்கங்களுக்கு இந்த முன்னேற்றம் பெருமகிழ்ச்சியையும் உத்வேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அருந்ததியர் மக்களுக்கு பட்டியல் இன மக்களுக்கான 18 சதவீத இடஒதுக்கீட்டில் 3 சதவீதம் உள் ஒதுக்கீடாக வழங்கப்பட்டிருப்பது இயல்பாக ஏற்பட்ட ஒரு நிகழ்வு அல்ல. இதற்காக அருந்ததியர் இயக்கங்கள் 2007க்கு முன்பு கால் நூற்றாண்டு காலம் போராடி வந்துள் ளன. ஆனால் இப்போராட்டங்கள் ஆளும் வர்க்கங்களாலும் அரசினாலும் கண்டு கொள்ளப்படவில்லை. இந்நிலையில் தான் 2007-ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியும் தமிழ்நாடு தீண்டாமை ஒமிப்பு முன்னணியும் களம் இறங்கி தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தின. இப்போராட்டங்கள் உள் ஒதுக்கீட்டுக்கான போராட்டத்தில் திருப்பு முனையாய் அமைந்தன. இப்போராட்டங் களில் அருந்ததியர் அமைப்புக்களை அரவணைத்து இணைத்து கொண்டது சமூக நீதி பயணத்தில் நெகிழ்வான நிகழ்வுகள் ஆகும்.
கள ஆய்வுகள்
இப்போராட்டங்களை துவக்குவதற்கு முன்பு சிபிஐ(எம்), தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஏராளமான கள ஆய்வுகளை நடத்தின. விருதுநகர், திண்டுக்கல் மற்றும் மேற்கு மாவட்டங் களில் இந்த கள ஆய்வுகள் நடத்தப் பட்டன. இதில் கண்டறிந்த உண்மைகள் அதிர்ச்சியையும், மன அதிர்வையும் ஏற்படுத்தின என்றால் அது மிகையல்ல. ஆம், பட்டியலின மக்களில் அருந்த தியர் பிரிவினர் ஒரு கணிசமான எண்ணிக்கையில் இருந்த போதிலும் இவர்களில் ஒருவர் கூட மாவட்ட ஆட்சிய ராக இல்லை - ஒரு சிலரே மருத்துவராக இருந்தனர் - அரசு ஊழியர்களையும் கூட விரல் விட்டு எண்ணி விடலாம் - இவர்களில் பட்டதாரிகளின் எண்ணிக்கை மிக சொற்பமானது - இவர்களின் வாழ்விடங்கள் மிக துயரமானவை - மிகச் சிறிய அறையில் தாய், தந்தையர் மட்டு மல்ல அவர்களது மகன்கள், மகள் களின் குடும்பங்கள் சேர்ந்து வாழ வேண்டியிருந்தது -அந்த சிறிய அறை யில் பல திரைகள் போடப்பட்டு அதற்குள் அவர்களின் தாம்பத்திய வாழ்க்கை நடந்த வேண்டியிருந்தது - ஏராளமான குழந்தைகள் கல்விச் சாலைக்கு செல்ல முடியாது - காரணம் இவர்களின் தொழில் தான். துப்புரவுப் பணியாளர் என்ற முறையில் மிக அதிகாலையிலேயே வேலைக்கு சென்று விடுவதால் குழந்தை வளர்ப்பும், கல்வியும் பெரும் பிரச்சனைகளாக இருந்தன.
மேலும் செய்யும் தொழிலோ சமூகத் தால் இழிவாகக் கருதப்பட்ட மலம் அள்ளும் தொழிலாகும். உலர் கழிப்பிட பயன்பாடு தடுப்புச் சட்டம் நாடாளுமன்றத்தில் பல பத்தாண்டுகளுக்கு முன்பே நிறை வேற்றப்பட்டிருந்த போதிலும் ஆளும் வர்க்கங்களாலும், ஆதிக்க சக்திகளா லும் அது முறையாக அமல்படுத்தப்பட வில்லை. இழி தொழில்களுக்கென சில சாதிகள் இருக்க வேண்டுமென்பது இந்திய சாதி அமைப்பின் கேடு கெட்ட நிலையாகும். இதற்கு அருந்ததியர் மக்களின் கணிசமானோர் அவர்களின் பிழைப்புக்காக ஆட்படுத்தப்பட்டனர். மேற்கு மாவட்டங்களைப் பொறுத்தவரை மிகக் கணிசமான அருந்ததியினர் பல சமூக இழிவுகளை எதிர் கொண்டு நில மற்ற விவசாய கூலித் தொழிலாளர்களாக இருந்தனர். இந்நிலையில் இம்மக்களின் கல்வியும், தரமான வேலை வாய்ப்பும் வெறும் கனவுகளாகவே இருந்தன. இவை அனைத்தும் வர்ணனைகள் அல்ல, நிஜ வாழ்க்கையில் சிபிஐ(எம்)/ தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டறிந்த கள ஆய்வில் வெளி வந்த உண்மைகள். இந்த கள ஆய்வு விபரங்களை அருந்ததியர் மக்க ளின் விடியலுக்கான போராட்டங்களுக்கு ஆதரவு தரக்கோரி விரிவான மக்களி டையே சிபிஐ (எம்)/ தீண்டாமை ஒழிப்பு முன்னணி அம்பலப்படுத்தி எடுத்துச் சென்றன. இவர்களின் வாழ்நிலை பொரு ளாதார நிலையில் மாற்றம் ஏற்படுத்தா மல் சமூக நீதி பற்றி பேசுவதும் முன்னேற்றம் பற்றி பேசுவதும் கேலிக் கூத்தாக அமையும் என பிரச்சாரத்தில் எடுத்துரைத்தனர்.
சிபிஐ(எம்) -ஐப் பொறுத்தவரை பொது வாக தலித் மக்களையும் குறிப்பாக அருந்ததியர் மக்களையும் சாதி ரீதியாக மிகவும் ஒடுக்கப்பட்ட உழைப்பாளி வர்க்கமாகவே கருதுகிறது. தொழிலாளி வர்க்க ஒற்றுமையிலும் வர்க்கப் போராட்டங் களிலும் அக்கறை காட்டும் சிபிஐ(எம்) அதில் இம்மக்களை இணைக்க இவர்கள் சந்திக்கும் சாதிய இழிவுகளையும் கல்வி, வேலை வாய்ப்பில் - இவர்களுக்குரிய சட்டப்பூர்வ பங்கு கிடைக்கவும் போராடாமல் அது சாத்தியமல்ல என்ற முடிவுக்கு வந்துள்ளது. சாதிய ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டம், வர்க்கப் போராட்டத்தின் பிரிக்க முடியாத பகுதி என்பதால் உள் ஒதுக்கீடு உள்பட அருந்ததியர் மக்களின் உரிமைகள் நலன் களுக்காக சமரசமற்ற போராட்டத்தை நடத்துவது என தீர்மானித்து தீவிரமாக களத்தில் இறங்கியது.
எழுச்சி மாநாடுகள்
அருந்ததியர் மக்களின் முதல் கோரிக்கை மாநாட்டை 2007இல் விருது நகரில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்க எழுச்சியுடன் நடத்தி காட்டின சிபிஐ(எம்) மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி. இதனை தொடர்ந்து திண்டுக் கல், ஈரோடு, கோவை, திருநெல்வேலி என பல மாவட்டங்களிலும் பல்லாயிரம் பேர் பங்கேற்ற கோரிக்கை மாநாடுகள் நடத்தப் பட்டன. சிபிஐ(எம்)/ தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலையீடுகளும் இவை நடத்திய இம்மாநாடுகளும் இவற்றில் தலை வர்கள் ஆற்றிய உரைகளும் அருந்ததி யர் மக்களிடையேயும், அருந்ததியர் அமைப்புகளிடையேயும் எழுச்சியை யும் போர்க் குணத்தையும் பலப்படுத்தின. இம்மாநாடுகளில் அருந்ததியர் அமைப்பு களின் தலைவர்கள் கு.ஜக்கையன், இரா.அதியமான், நாகை.திருவள்ளுவன், ரவிக்குமார், வெண்மணி, நீலவேந்தன் மற்றும் பல தலைவர்கள் பங்கேற்று உரை யாற்றினர். இக்களத்தில் தோழர்.பி.சம்பத் எழுதி பாரதி புத்தகலாயம் வெளியிட்ட “நாங்கள் வருகிறோம்” (தோழர்.தமிழ் செல்வன் கவிதை உட்பட), “அருந்ததியர் வாழ்நிலையும் போராட்டங்களும்” ஆகிய நூல்கள் பல்லாயிரக்கணக்கில் மக்களி டையே கொண்டு செல்லப்பட்டன.
சென்னை பேரணி
மாவட்ட மாநாடுகளின் தொடர்ச்சியாக நடைபெற்றது தான் 2007 ஜூன் 12இல் சென்னை மாநகரில் நடைபெற்ற 20 ஆயிரம் பேர் பங்கேற்ற மகத்தான பேரணி. அருந்ததியர் இயக்க வரலாற்றில் இப்படி ஒரு பேரணி அவர்களின் உரிமைகளுக்காக இதுவரை நடந்தது இல்லை. கணிசமான அருந்ததியர் மட்டுமல்ல அருந்ததியர் அல்லாத இதர உழைப்பாளி மக்களும் இப்பேரணியில் பங்கேற்றனர் என்பது குறிப் பிடத்தக்க அம்சமாகும். இப்பேரணியில் தோழர்கள் என்.வரதராஜன், கே.வரத ராசன், பி.சம்பத் மட்டுமல்ல, சிபிஐ(எம்) சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன் (இன்றைய சிபிஐ(எம்) மாநில செயலாளர்), அ.சௌந்திரராஜன் (சிஐடியு தமிழ் மாநில தலைவர்), எஸ்.கே.மகேந்திரன் (சிஐடியு மாவட்ட தலைவர் - வட சென்னை) கே.சாமுவேல்ராஜ் (இன்றைய தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச்செய லாளர்) மற்றும் அருந்ததியர் அமைப்பு களின் தலைவர்கள் இரா.அதியமான், கு.ஜக்கையன் உட்பட பலரும் பங்கேற்றனர். இயல்பாகவே இப்பேரணி தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி யது. தமிழக அரசும் இதற்கு விதிவிலக்கு அல்ல. அன்றைய தினமே பேச்சு வார்த்தைக்கு வருமாறு தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார் அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள். சிபிஐ(எம்) தலைவர்கள் என்.வரதராஜன், கே.வரத ராசன், பி.சம்பத், எஸ்.கே.மகேந்திரன் மட்டுமல்ல அருந்ததியர் அமைப்புக் களின் தலைவர்கள் இரா.அதியமான், கு.ஜக்கையன் ஆகியோரையும் பேச்சு வார்த்தைக்கு அழைத்துச் சென்றனர்.
பேச்சுவார்த்தை - கலைஞர் பாத்திரம்
இப்பேச்சுவார்த்தை நெகிழ்வானதாக மட்டுமல்ல மகிழ்வானதாகவும் இருந்தது. தனக்கே உரித்தான பாணியில் உள் ஒதுக்கீடு உட்பட அருந்ததியர்களின் கோரிக்கைகளை அடுக்கடுக்காய் எடுத்துரைத்தார் தோழர்.என்.வரதராஜன். இதர தலைவர்களும் கோரிக்கைகளின் நியாயத்தை எடுத்துச் சொன்னார்கள். அனைத்தையும் பொறுமையாகக் கேட்ட றிந்த கலைஞர் அவர்கள் உடனடியாக உதிர்த்த வார்த்தைகள் எங்களை வியப்பில் ஆழ்த்தியது. அந்த வார்த்தைகள் இவைதான்: “இம்மக்களின் பிரச்சனை களை கையில் எடுப்பதில் நாம் மிகவும் காலம் தாழ்த்தி விட்டோம் என்பது தான்” அப்புறம் என்ன? உள் ஒதுக்கீடு உட்பட பல கோரிக்கைகளுக்கு தமது இசைவை தெரிவித்தார் கலைஞர். அன்றைய தினமே அருந்ததியர் நலன்களை மேம்படுத்த துப்புரவுத் தொழிலாளர் நல வாரியம் அறிவிக்கப்பட்டது.
உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டப் பூர்வ நிகழ்வுகளை தமிழக அரசு உடனடி யாக துவக்கியது. அருந்ததியர் சமூக பொருளாதார நிலை குறித்த தரவு களை பெறுவதற்காக நீதியரசர் ஜனார்த்த னம் குழு அமைக்கப்பட்டது. 9 மாதங்களில் அதன் அறிக்கை பெறப்பட்டது. இடைக் காலத்தில் இப்பணியை துரிதப்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், தர்ணா போன்ற பல போராட்டங்களை சிபிஐ(எம்) / தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்த வேண்டியிருந்தது. ஜனார்த்னம் குழுவிற்கு அருந்ததியர்களின் வாழ்நிலை - பொருளாதாரம் குறித்த ஏராளமான தரவுகளை சிபிஐ(எம்) / தீண்டாமை ஒழிப்பு முன்னணி சேகரித்து வழங்கின. பல அருந்ததியர் அமைப்புகளும் இப்பணி யில் ஆர்வத்துடன் செயல்பட்டன.
ஜனார்த்தனம் குழு தமிழக அரசுக்கு அளித்த அறிக்கை அருந்ததியர் மக்க ளின் மிக பின்தங்கிய சமூக பொருளாதார நிலை குறித்து ஏராளமான தரவுகளை உள்ளடக்கியதாக இருந்தது என்பது அக்குழு மேற்கொண்ட கடுமையான முயற்சிகளை எடுத்துக் காட்டியது. இந்த தரவுகள் தான் உச்சநீதி மன்றத்தின் தற்போதைய தீர்ப்புக்கு அடித்தளமாய் அமைந்தன. 3 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கிட ஜனார்த்தனம் குழு பரிந்து ரைத்திருந்தது. இதனை சட்டமாக்குவதற்கு முன் அனைத்துக் கட்சி கூட்டம் ஒன்றினை தமிழக முதல்வர் தலைமையேற்று நடத்தினார். அநேகமாக அனைத்து அரசியல் இயக்கங்களின் தலைவர்களும் பல அருந்ததியர் அமைப்புகளின் தலைவர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தின் நோக்கத்தை கலைஞர் அவர்கள் தெளிவுற எடுத்து ரைத்தார். இதனை வழி மொழிந்து தோழர்.என்.வரதராஜன் உட்பட பல தலைவர்களும் பேசினர். தோழர்.திருமா வளவன் குரல் இதற்கு சாதகமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. ஒரே ஒருவரிடமிருந்து தான் இதற்கு எதிர்ப்பு குரல் எழுந்தது. அவர் தான் டாக்டர் கிருஷ்ணசாமி. அவரை சிறிது நேரம் பேச கலைஞர் அனுமதித்தார். அவர் தொடர்ந்து எதிர்ப்பு குரலை தொடரவே கலைஞர் இடைமறித்து உங்கள் இறுதியான கருத்து என்ன என்று கேட்டார். அதற்கு பதிலாக “நாங்கள் இந்த முன்மொழிவை எதிர்க்கிறோம்” என்றார். உடனடியாக கலைஞர் “அப்படியானால் நீங்கள் கூட்டத்திலிருந்து வெளியேறலாம். நாங்கள் இத்தீர்மானத்தை ஏக மனதாக நிறைவேற்ற விரும்புகிறோம்” என்றார். அவர் வெளி நடப்பு செய்யவே உள் ஒதுக்கீடு ஆதரவு தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. பின்னர் சட்டமன்றத்தில் இன்றைய தமிழக முதல்வர் திரு.ஸ்டாலின்அவர்களால் முன் மொழியப்பட்டு அது சட்டமாக நிறை வேறியது; உடனடியாக அமலாகவும் செய்தது.
நீதிமன்ற வழக்குகள்
அருந்ததியர் உள் ஒதுக்கீடு சட்டம் உருவான வரலாறு இது தான். அருந்ததியர் மக்களின் வாழ்நிலையில் கடந்த 15 ஆண்டுகளில் இந்த உள் ஒதுக்கீடு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையல்ல. எனினும் இச்சட்டத்திற்கு எதிராக டாக்டர்.கிருஷ்ணசாமி உட்பட சிலர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். பின்னர் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே நடந்து கொண்டிருந்த இது போன்ற இதர வழக்கு களுடன் இணைத்து நடத்த உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்தது. இடைக்காலத்தில் அருந்ததியர் உள் ஒதுக்கீடு அமலாக தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது என்பது குறிப்பிடத்தக்க அம்ச மாகும்.
பல ஆண்டுகள் - பல விவாதங்களுக்கு பிறகு - தற்போது உச்சநீதிமன்றம் அதன் 7 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரித்து அதில் 6 பேர் ஏகமனதாக இந்த உள் ஒதுக்கீடு சட்டப்பூர்வமானதே - மாநில அரசுகள் உரிய தரவுகளை திரட்டி பட்டியலின மக்களில் மிக பின் தங்கியவர்களை அறிந்து அவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க உரிமை உண்டு என தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் சமூக நீதியில் அக்கறையுள்ள பல அமைப்புகளின் - தலைவர்கள் மட்டு மல்ல, சிபிஐ(எம்) சார்பாக முதலில் தோழர்.என்.வரதராஜன் அவர்களும் பின்னர் ஜி.ராமகிருஷ்ணன் அவர்களும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக தோழர்.பி.சம்பத் அவர்களும் தங்களை இணைத்துக் கொண்டு வழக்கு நடத்தினர். களப் போராட்டத்தில் மட்டுமல்ல, நீதிமன்றப் போராட்டங்களி லும் முன் நின்றன சிபிஐ(எம்)/ தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி.
அருந்ததியர் மக்களுக்கு மட்டுமல்ல சமூக நீதி - சமூக சமத்துவத்தில் அக்கறை யுள்ள, சாதிய இழிவுகளை வெறுக்கின்ற அனைத்து ஜனநாயக மற்றும் முற்போக்கு உள்ளங்களுக்கும் அளவில்லாத மகிழ்ச்சியை இத்தீர்ப்பு ஏற்படுத்தியுள்ளது. இத்தீர்ப்பை சிபிஐ(எம்)/ தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மனதார வரவேற்கின்றன. வேறு பல ஜனநாயக சக்திகளும் தங்களது வரவேற்பை வெளிப்படுத்தி உள்ளன. தமிழ்நாட்டில் அருந்ததியர் உள் ஒதுக்கீடை உறுதிபட அமல்படுத்திட தமிழக அரசுக்கு இனி தடையேதுமில்லை.
இருப்பினும் இந்த நல்ல தீர்ப்பை வழங்கியுள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகள் இத்தீர்ப்பையொட்டி வெளிப்படுத்தியுள்ள ஒரு கருத்து நம்மை கவலை அடைய வைத்துள்ளது. தீர்ப்பை வழங்கிய 6 நீதிபதி களில் 4 பேர் பட்டியலின/ பழங்குடி மக்களுக்கும் கிரிமிலேயர் (பொருளாதார வரம்பு அடிப்படையில்) முறையை அமல்படுத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். இக்கருத்து சிபிஐ(எம்) / தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்கு ஏற்புடையதல்ல. சாதி அமைப்பை - ஒடுக்கு முறைகளை எதிர்க்கும் எவரும் இதனை ஏற்கமாட்டார் கள். பட்டியலின/ பழங்குடி மக்களுக்கு இட ஒதுக்கீட்டில் கிரிமிலேயர் அமலாகக் கூடாது என்பதே சரியான நிலைபாடு. கிரிமிலேயர் முறையை வற்புறுத்தியுள்ள நீதிபதிகள் தங்கள் நிலைபாட்டை மறு பரிசீலனை செய்ய வேண்டும். ஜனநாயக இயக்கங்களும் அதற்கான குரலை எழுப்ப வேண்டும்.
உறுதி ஏற்போம்
அருந்ததியர் உள் ஒதுக்கீட்டிற்காக குரல் கொடுத்துப் போராடிய அருந்ததியர் மக்களுக்கும், அருந்ததியர் அமைப்புகள் மற்றும் ஜனநாயக இயக்கங்களுக்கும் இதற்காக வழக்குகளை நடத்திய அமைப்புகள் தலைவர்களுக்கும் உள் ஒதுக்கீடு சட்டத்தை முன்மொழிந்து உறுதிபட அமல்படுத்தி வரும் தமிழக திமுக அரசிற்கும் சிபிஐ(எம்) / தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது. சாதி ஒழிப்பு - ஒடுக்கு முறைகள் ஒழிப்புப் போராட்டங் களில் எந்த சமரசமுமின்றி தொழிலாளி வர்க்க கண்ணோட்டத்தோடு போராட சிபிஐ(எம்) / தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உறுதியாக முன் நிற்கும்.
பி.சம்பத்
மத்தியக்குழு உறுப்பினர்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)