தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை சீர்குலைக்கும் ஒன்றிய பாஜக அரசு!
புதுதில்லி, ஏப். 11 - தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் நடவடிக்கைகளில் ஒன்றிய பாஜக அரசு இறங்கியுள்ளது. இதற்கு இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொ டர்பாக 130 எம்.பி.க்கள் கையெழுத் திட்டு கடிதம் ஒன்றை, நரேந்திர மோடி அரசுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அரசாங்கத்தின் செயல்பாடுகள் வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதையும், அவற்றை பொது மக்கள் அறிந்து கொள்வதற்கு உரிமை வழங்கும் வகையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி- 1 ஆட்சிக் காலத்தில், இடதுசாரிக் கட்சிகளின் வலியுறுத்தலின் பேரில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இது ஜனநாயகத்தில் மக்களுக்கான அதிகாரம் தரக்கூடி யதாக உள்ளது. கோடிக்கணக்கான மக்கள் இந்தச் சட்டத்தால் பயன டைந்து வருகின்றனர். தங்களின் பல்வேறு கோரிக்கைகளுக்கு தீர்வு கண்டு வருகின்றனர். இந்தச் சட்டத்தின் மூலம் ஆட்சியாளர்களின் ஊழல்களும் அம்பலமாகின. இந்நிலையில் தான், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் 8(1)(ஜே) பிரிவை மாற்றும் வகையில், தனி நபர் தரவு பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 44(3)-ஐ, ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்துள்ளது. அதாவது, தனிப்பட்ட தகவல்க ளுடன் தொடர்புடைய அனைத்து தகவல்களையும், பொதுநலனை யோ அல்லது வேறு எந்த விதி விலக்கையோ கருத்தில் கொள்ளா மல் அரசு அமைப்புகள் மறைக்க லாம் என்பது தான், 44(3) சட்டப் பிரிவு கூறுவதாகும். அதாவது, மக்க ளுக்குப் பதில் சொல்ல வேண்டிய தில்லை என்று சட்டம் கொண்டு வந்துள்ளது. இதற்கு, பல்வேறு தகவல் உரிமை ஆர்வல்ர்கள் எதிா்ப்பு தெரி வித்துள்ளனர். பொது நலனையோ அல்லது வேறு விதிவிலக்கையோ கருத்தில் கொள்ளாமல் தனிப்பட்ட தகவல்களை அரசுத் துறைகள் மறைக்க உதவும் தனிநபர் தரவு பாது காப்பு சட்டப் பிரிவு 44(3)-ஐ ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ள னர். இந்நிலையில் தான், எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்பட இந்தியா கூட்டணி கட்சிக ளின் 130 எம்.பி.க்கள் கையொப்ப மிட்ட கூட்டுத் தீா்மானம் ஒன்றிய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ண விற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. “தகவல் அறியும் உரிமை சட்டத்தை திருத்தி அதை மிகவும் மோசமாக வலுவிழக்க வைக்கும் செயலை கைவிட வேண்டும். மக்க ளின் தகவல் அறியும் உரிமை பறிக் கப்படாமல் இருக்க அரசு தேவை யான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் கடிதத்தில் வலியுறுத்தப் பட்டு உள்ளது.
பனாமாவை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா
பனாமாவை ஆக்கிரமிக்கும் வகை யில் பனாமாவுக்கு ராணுவத்தை அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. முக்கி யத்துவம் வாய்ந்த பனாமா கால்வாய்க்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்; அதற்காக அமெரிக்க ராணுவத்தை மீண்டும் அங்கு அனுப்பும் திட்டம் உள்ளது என அமெரிக்கப் பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் தெரி வித்துள்ளார். கடல் வழியிலான வணிகக் கப்பல் போக்குவரத்திற்கு முக்கியப் பாதையான பனாமாவை ஆக்கிரமிப்பேன்
ரபா பகுதியை ஆக்கிரமிக்க இஸ்ரேல் திட்டம்
காசாவின் ரபா மற்றும் அதைச் சுற்றி யுள்ள பகுதிகளை காசா எல்லை யில் உருவாக்கியுள்ள பொதுவான பகுதி யுடன் இணைத்து ஆக்கிரமிக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இதனை அந்நாட்டின் ஹாரெட்ஸ் பத்திரிகை வெளிப்படுத்தி யுள்ளது. 75 சதுர கிலோமீட்டர் அளவுள்ள பகுதியை ஆக்கிரமித்து விட்டு ஏற்கெனவே அங்கு குடியிருந்த பாலஸ்தீனர்கள் யாரையும் மீண்டும் அங்கே இஸ்ரேல் அனுமதிக்காது எனவும் தெரிவித்துள்ளது.