சென்னையில் எழும்பூர், என்எஸ்சி போஸ் சாலை, மதுரவாயல், கோடம்பாக்கம், திரு வொற்றியூர் காலடிப்பேட்டை, பெசன்ட்நகர் என சாலையோர வியா பாரிகளின் கடைகளை காவல்துறை துணையோடு மாநகராட்சி அதி காரிகள் அராஜகமாக அகற்றி உள்ளனர்.
என்எஸ்சி போஸ் சாலையில் மாநகராட்சி செயற்பொறியாளர் கார்த்தி அராஜகமாக வியாபாரி களின் காய்கறி பழங்களை குப்பை வண்டியில் ஏற்றியதால், கிருஷ்ண வேணியம்மாள் உயிர் பறிக்கப்பட் டது. எழும்பூர் ரயில் நிலையம் முன்பு பொருட்களோடு நிறுத்தி வைக்கப் பட்டிருந்த தள்ளு வண்டிகளை பொக்லைன் எந்திரங்களை கொண்டு அடித்து நொறுக்கினர். கோடம் பாக்கம் ரயில்நிலையத்தை ஒட்டிய மாம்பலம் நெடுஞ்சாலையிலும் இந்த அராஜகம் அரங்கேறியது.
மதுரவாயலில் எம்எல்ஏ தலையீட் டின்பேரில் 20 ஆண்டுகளாக இயங்கி வந்த மீன் மார்க்கெட்டை அப்புறப் படுத்தினர். திருவெற்றியூர் காலடிப் பேட்டையில் தெருவோர வியாபாரி களின் 300 கடைகளை நள்ளிரவில் சென்று பொக்லைன் எந்திரங்கள் மூலம் சூறையாடினர். பெசன்ட்நகரி லும் முன்னறிவிப்பின்றி கடைகள் அகற்றப்பட்டுள்ளது. திடீரென்று இவையெல்லாம் நிகழ காரணம் என்ன?
இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அள்ளிக் கொடுக்கும் கரு வூலங்களாக இருப்பவை தெருவோர வியாபாரம். எளிய மக்களுக்கான மலிவு விலையில் பொருள்களை வாங்கி வந்து வெயிலும் மழையிலும் விற்றுப் பிழைப்பு நடத்துவோர் இந்தச் சின்னஞ்சிறு வியாபாரிகள்.
இந்த எளிய வியாபாரிகளின் நலன் காப்பதற்காக நாடும் முழுவதும் நடை பெற்ற போராட்டங்களின் விளை வாகத்தான் 2010இல் தெருவோர வியாபாரத்தை வாழ்வாதாரமாக உச்ச நீதி மன்றம் அங்கீகரித்தது. வியாபாரி களின் போராட்டங்களையடுத்து, உச்ச நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளின் காரணமாக தெருவோர வியாபாரிகள் (வாழ்வாதாரம் மற்றும் தெருவோர வியாபாரத்தை ஒழுங்குபடுத்துதல்) சட்டம்- 2014 கொண்டுவரப்பட்டது.
இந்தச் சட்டத்தைத் தமிழ்நாட்டில் அமல்படுத்தக் கோரி ஏராளமான போராட்டங்களை சிஐடியு முன்னெ டுத்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சட்டமன்ற உறுப்பினர்கள் சட்ட மன்றத்தில் குரல் கொடுத்தார்கள். நீதி மன்றத்திலும் சட்டப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சட்டம் சொல்வது என்ன?
இந்தச்சட்டம் தெருவோரம் வியா பாரம் செய்வதை சட்டபூர்வமாக அங்கீ கரிக்கிறது. 40 ஆண்டுகளுக்கு மேல் ஒரு பகுதியில் தொடர்ந்து தெருவோ ரத்தில் வியாபாரம் நடைபெற்றால் அதை இயற்கையான சந்தை என அங்கீகரித்து, ஆக்கிரமிப்பு என அகற்றக் கூடாது என்கிறது. தெரு வோரத்தில் வியாபாரம் செய்யும் பகுதி களை அங்கீகரித்து, வியாபாரம் செய்வதை உறுதிப்படுத்துகிறது.
அங்கீகரிக்கப்படாத தெருவோரக் கடையை அகற்ற வேண்டுமானால் அதிகாரிகளின் விருப்பத்திற்கு அகற்ற முடியாது. மாற்று இடம் தர வேண்டும். தெருவோர வியாபாரி களின் பிரதிநிதிகளும் அதிகாரிகளும் உள்ளடக்கிய நகர விற்பனைக் குழு தான் (வென்டிங் கமிட்டி) முடிவு எடுக்க முடியும்.
தெருவோரக்கடைகள் அகற்று வதற்கு 30 நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் தர வேண்டும். குறை தீர்க்கும் கமிட்டியில் முறையிட வாய்ப்பு தர வேண்டும். 30 நாள் அவ காசம் முடிந்தாலும் அதன்பிறகு ஒரு நாளைக்கு 250 ரூபாய் வரை பொருட்க ளுக்கு அபராதம் விதிக்கலாம். அதன் பின்புதான் வெளியேற்றலாம் என்கி றது சட்டம்.
சூறையாடும் அதிகார வர்க்கம்
நகர விற்பனைக்குழு 15 பேர் கொண்டது. மாநகராட்சி ஆணை யர்தான் இந்த விற்பனைக் குழுவின் தலைவர். காவல்துறை துணை ஆணையர் (சட்டம் ஒழுங்கு), போக்கு வரத்து காவல் துணை ஆணையர், மாநகராட்சி தலைமைப் பொறியாளர், மாநகராட்சி சுகாதார அதிகாரி மற்றும் இவர்களால் நியமிக்கப்பட்ட 4 பேர் என 9 பேர் அதிகாரிகள் தரப்பி லும், வியாபாரிகளால் தேர்ந்தெடுக் கப்பட்ட 6 தெருவோர வியாபாரிகள் என 15 பேர் இருப்பார்கள்.
வியாபாரிகளை பாதுகாக்க வேண்டிய நகர விற்பனைக்குழு, அவர்களை விரட்டியடிக்கவே பயன் படுத்தப்படுகிறது. தெருவோர வியாபாரிகளை ஆக்கிரமிப்பா ளராகக் கருதக் கூடாது என சட்டத்தில் தெளிவாக இருந்தும் ஆக்கிரமிப்பு அகற்றம் என்று அதிகாரிகளே பேசுகின்றனர். ஊடகங்களும் இதையே வாந்தி எடுக்கின்றன. பொது புத்தியில் இதை விதைத்து மக்களை நம்ப வைக்கின்றனர். நீதிமன்றங் களும் பல நேரங்களில் இதையே பிரதி பலிக்கிறது.
சட்டத்தை மீறும் அதிகாரிகள்
இந்தச் சட்டம் குறித்துப் பெரும்பா லான அதிகாரிகளுக்குத் தெளி வில்லை; பலருக்கு சட்டமிருப்பதே தெரியவில்லை. வியாபாரிகளை மிரட்டி பணம் பறிப்பதில் மட்டும் குறியாக உள்ளனர். தெருவோர கடைகள் அகற்றப்படும் போது அங்கெல்லாம் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியும், சிஐடியு-வும் முன்னின்று போராடி வியாபாரிகளின உரிமையை மீட்டு தருகிறது.
நகரமயமாக்களால் சில்லரை வணிகத்தில் நுழையும் கார்பரேட் நிறுவனங்கள் தங்களது வியாபா ரத்திற்கு தெருவோர வியாபாரத்தைத் தடையாகப் பார்க்கின்றன. பணப் பரிவர்த்தனையை ஒழித்து அட்டை மற்றும் செயலி (ஆப்) வழி பரிவர்த்த னையை பெருக்க நினைக்கின்றனர். இதனால்தான் நகரின் அழகு கெட்டுப் போவதாகக் கதை கட்டுகின்றனர். இந்தக்கதை மக்களின் குடியிருப்பு களையும் நகருக்கு வெளியே விரட்டு வது வரை நீள்கிறது. உழைப்பாளி மக்களையும் அவர்களின் வாழ்வா தாரத்தையும் பாதுகாக்க வேண்டும்.
சென்னை முழுவதும் உள்ள நடை பாதை வியாபாரிகளை முழுமையாக கணக்கெடுத்து, நடைபாதை வியா பாரிகளுக்கான அங்கீகார அட்டை வழங்க வேண்டும். தெருவோரத்தில் வியாபாரம் செய்யும் பகுதிகளை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் தன்னிச் சையாக அகற்றும் நடவடிக்கையை உடனே நிறுத்த வேண்டும், வியாபாரி களுக்கு வங்கிக் கடன் வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும்.
நகரின் ரத்தநாளமாக உள்ள சாலையோர வியாபாரிகளை விரட்டுவது சரியல்ல.
ஜி.செல்வா
மத்தியசென்னை மாவட்டச் செயலாளர், சிபிஐ(எம்)