articles

img

தெருவோர வியாபாரம் அடிப்படை உரிமை உறுதி செய்தது மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம் -ஜி.செல்வா

ஆயிரக்கணக்கான மக்கள் விரைந்து ஓடிக்கொண்டிருக்கும் எழும்பூர் ரயில் நிலையத்துக்கு அருகில், கடந்த ஆண்டு  மார்ச் இரண்டாம் தேதி மாநக ராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் அப்பகு தியிலிருந்த தெருவோரக் கடைகளைப் புல்டோ சர் இயந்திரத்தால் அடித்து நொறுக்கினர். விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் இயந்திரத்தால் நாசமாக்கப்படுவதை பொறுத்துக் கொள்ளாமல் உயிர் போனாலும் பரவாயில்லை என இயந்திரத்தின் முன் விழுந்து அழுது புலம்பினார் முகமது இத்திரியாஸ். நெஞ்சில் ஈரமற்ற அதிகாரவர்க்கம் எதையும் பொருட்படுத்தவில்லை. காவல் நிலையத்தில் நீதி கேட்கச் சென்ற சங்கத் தலைவர்களை நிற்க  வைத்து அவமானப்படுத்தினார் காவல் ஆய்வாளர். ‘என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது’ என அதிகாரத்தின் உச்சியிலிருந்து தெருவோர வியாபாரிகளை பார்த்து எகத்தாள மாகப் பேசினார் மாநகராட்சி அதிகாரி.

நாங்க இருக்கிறோம்!

அடுத்த நாள் அதே இடத்தில் செங்கொடி ஏந்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்தியது. சட்டத்தை மீறிச் செயல்பட்ட அதிகாரி களை சட்டத்தின்படி பதில் சொல்ல வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தது. “எந்த பிரச்சனை வந்தா லும் நாங்க இருக்கிறோம். தைரியமாக இதே இடத்தில் வியாபாரம் செய்யுங்க” என்று தோழர்கள்  தெருவோர வியாபாரிகளுக்கு உறுதி  அளித்தனர். வியாபாரிகள் நம்பிக்கையோடு மீண்டும் அதே இடத்தில் வியாபாரத்தை தொடர்ந்தனர். இன்றுவரை தொடர்கின்றனர். இவர்களை மிரட்டிய அதிகாரிகள் தான் அங்கி ருந்து அகற்றப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்ல, பொருட்களை இழந்து மன உளைச்சலுக்கு உள்ளான தெருவோர வியாபாரி முகமது இத்திரி யாஸ்க்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரி யத்தில் வீடு ஒன்றை ஒதுக்கீடு செய்து கொடுத்தி ருக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

மார்க்சிஸ்ட் கட்சி நடைபயணம்

2024 ஜூன் 13ஆம் தேதி பிராட்வே என்.எஸ்.சி போஸ் சாலையில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் சட்டவிரோத கும்பலைப் பிடிப்பது போல, தெருவோரத்தில் பழம் விற்றுக் கொண்டிருந்த வியாபாரிகளை அகற்ற விரைந்து சென்றது காவல்துறை. தனது பழக்கூடையை பாதுகாக்க எடுத்துக் கொண்டு ஓட முயன்ற கிருஷ்ணவேணி அம்மா, அதே இடத்தில் மாரடைப்பால் உயிரிழந்தார். ஏனிந்த அராஜகம் என கேட்டால், ‘நீதிமன்ற உத்தரவு’ என்று பதில் அளித்தார் மாநகராட்சி அதிகாரி. “தெருவோர வியாபாரிகளின் உரிமைக்காக நீதிமன்றத்தில் ஏன் அரசு வாதாடவில்லை?” என்று கேட்ட கேள்விக்கு அதிகாரிகளிடம் எந்த பதிலும் இல்லை. அச்சத்தின் பிடியிலிருந்த தெருவோர வியாபாரிகளின் கடைகளுக்கு நேரடியாகச் சென்று “தெருவோரத்தில் வியா பாரம் செய்வது அடிப்படை உரிமை” என்கிற முழக்கத்தை முன்வைத்து வாழ்வாதார நடைப் பயணம் நடத்தியது மார்க்சிஸ்ட் கட்சி. ‘கடை களை அகற்றியே தீருவேன்’ என்று சொன்ன மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் கைகட்டி வேடிக்கை பார்க்க வேண்டியிருந்தது. இப்போதும் அங்கே வியாபாரிகள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 உறுதியளித்த மேயர்

கோடம்பாக்கம் ரயிலடி ஓரத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக வியாபாரம் செய்து வந்த கடைகளை ஜூலை 19ஆம் தேதி திடீரென்று முன்னறிவிப்பு ஏதுமின்றி காவல்துறையின் துணையோடு புல்டோசர் மூலம் அடித்து நொறுக்கினர் மாநகராட்சி அதிகாரிகள். ஒரு கிலோமீட்டர்  தூரத்திலிருந்து தள்ளுவண்டிக் கடையை இழுத்து வந்து அப்பளம் போல் நொறுக்கினர். அரசின் அனுமதி பெற்று செயல்பட்டு வந்த மாற்றுத்திறனாளிகளின் கடைகளும் இயந்திரத்தால் நசுக்கப்பட்டன. “இப்படிச் செய்வது நியாயமா?” என்று கேள்வி எழுப்பிய மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்களை, ’கைது செய்து சிறையில் அடைப்பேன்’ என ஆணவத்தின் உச்சியிலிருந்து மாநகராட்சி அதிகாரி பேசினார். 

அதிகார வர்க்கத்தின் அதிகார ஆணவத்தை எதிர்த்து அதே இடத்தில் அடுத்த நாள் பாதிக்கப் பட்ட வியாபாரிகளோடு இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்தியது. மாநகர மேயரை நேரடியாக சந்தித்து மனு கொடுத்தது. “இனி இப்படி நடக்காது” என மேயர் உறுதி யளித்தார். 

இப்படி ஒவ்வோர் இடமாக, சென்னை யில் மாநகராட்சி அதிகாரிகளால் தெருவோரக் கடைகள் அப்புறப்படுத்தப்படுவதும் நள்ளி ரவில் பொக்லைன் இயந்திரத்தால் அடித்து நொறுக்குவதும் வாடிக்கையானது. இத்தகைய கொடுமைகள் அனைத்தும் தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரச் சட்டத்திற்கு எதிரா னது என்ற போதும், அதிகாரிகள் துணிகரமாக இந்த நாச வேலையில் ஈடுபட்டனர். தெருவோர வியாபாரிகளுக்கான வாழ்வாதார உரிமையை உறுதிப்படுத்தி நாடாளுமன்றமே சட்டம் இயற்றிய பிறகும், அதிகார வர்க்கத்தின் அநீதி தொடர்கிறது. 

உரிமைக்கான  போராட்ட வரலாறு

சென்னையில் 50 ஆண்டுகளுக்கு முன்பாக எவ்விதமான சட்ட பாதுகாப்பும் இன்றி  தெருவோரத்தில் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த வியாபாரிகளை அதிகார வர்க்கம் வேட்டை யாடிய போது, கம்யூனிஸ்டுகள் முன்நின்று போராடி தெருவோர வியாபாரிகளுக்கு உரிமை களை உருவாக்கி கொடுத்தனர். வியாபாரி களின் மீதான ஒடுக்குமுறையை நேருக்கு நேர் எதிர் நின்று, அவர்களின் உரிமைகளைப் பாது காத்தனர். ‘சென்னை நகர சிறு கடை வியாபாரி கள் சங்கம்’ என்கிற அமைப்பு 1979-இல் உருவானது. இதன் தலைவராக எம்.கல்யாண சுந்தரம், பொதுச் செயலாளராக பி.என் கபூர் செயல்பட்டனர். வியாபாரிகள் உரிமைக்கான போராட்டத்தில் வி.பி.சிந்தன், கே.எம்.ஹரிபட், உ.ரா.வரதராசன் ஆகியோர் செயல்பட்டு உள்ள னர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் துடிப்பாக இப்பகுதி வியாபாரிகளிடம் செயல்பட்டது.

நீதியரசர் வீ.ஆர்.கிருஷ்ணய்யரின் பேச்சு

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா “விஷன் 2000 மெட்ராஸ்” எனும் திட்டத்தை முன்னிட்டுத் தெருவோரக்கடைகளை அப்புறப்படுத்தும் முயன்ற போது, சென்னை யின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வந்த 32 சங்கங்கள் ஒருங்கிணைந்து சாலையோர வியாபாரிகள் சங்க கூட்டமைப்பை 1994-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன் ஒருங்கிணைப்பாளராக எம்.அபுதாஹிர் தேர்ந் தெடுக்கப்பட்டார். இந்த மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் பேசிய கருத்துக்களின் சாராம்சமே பின்னர் நாடாளுமன்ற சட்டத்தின் உள்ளடக்கமாக மாறியது. 

 “சாலையோர வியாபாரம் செய்வது அடிப்படை உரிமை. வியாபாரிகளுக்கு மாற்று  இடம் ஒதுக்காமல் கடைகளை அப்புறப்படுத்தக் கூடாது. அவ்வாறு செய்தால் சட்ட விரோதமாகும். மாற்று இடத்தை தேர்வு செய்யும் உரிமை வியாபாரிகளுக்கு உண்டு. இடத்தைத் தேர்வு செய்யும் போது வியாபாரிகள், பிரதிநிதிகள், மாநகராட்சி, போக்குவரத்து, காவல்துறை அதி காரிகள் இடம்பெற வேண்டும். ஒதுக்கப்படும் மாற்று இடம் மக்கள் கூடும் இடங்களாக, வியா பாரத்திற்கு ஏற்றதான பகுதியாக இருக்க  வேண்டும். நகரங்களின் அழகு என்பது அங்கு வாழும் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையின் முன்னேற்றம் காணக்கூடியதாக இருக்க  வேண்டும். மாறாக அவர்களை அப்புறப்படுத்தி விட்டு நகரங்களை அழகுபடுத்துவது மக்களுக்கான வளர்ச்சி அல்ல, அது வீழ்ச்சி” என்று அவர் தெரிவித்தார்.

வாழ்வாதார மாநாடு

கடந்த 34 ஆண்டுகளாக எம்.அபுதாஹிர் தலைமையில் செயல்பட்டு வரும் சென்னை நகர வியாபாரிகள் சங்கமும், அதன் மூலம் உரு வாக்கப்பட்ட சாலையோர வியாபாரிகள் கூட்ட மைப்பும் தெருவோர வியாபாரிகள் வாழ்வாதா ரத்தை உறுதி செய்வதில் முக்கியப் பங்காற்றி இருக்கின்றன. 2023 ஏப்ரல் மாதத்தில் பெரு நகர சென்னை மாநகராட்சி நகர விற்பனை குழு உறுப்பினர் தேர்தலில் எம்.வி.கிருஷ்ணன் தலைமையில் தற்போது செயல்பட்டு வரும் வியா பாரி கூட்டமைப்பு ஆதரவில், மூன்று நகர விற்ப னை குழு உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர். 

நாடாளுமன்ற சட்டம், தமிழ்நாடு சட்டமன்றத்தில் உருவாக்கப்பட்ட விதிமுறைகள், நீதிமன்றத் தீர்ப்பு, தெருவோர வியாபாரிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட நகர விற்பனை குழு என பல்வேறு சட்டப் பாதுகாப்புகள் இருந்தும், தெரு வோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை நிர்மூலமாக்கும் செயல்பாடுகளில் அதிகார வர்க்கம் ஈடுபட்டு வருகிறது. இத்தகைய போக்கை எதிர்கொண்டு, சட்டரீதியான செயல்பாடு களை முன்னெடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டக்குழு தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதார மாநாட்டை ஆகஸ்ட் 6ஆம் தேதி நடத்தியது. 

தெருவோர வியாபாரிகள் (வாழ்வாதாரம் மற்றும் தெருவோர வியாபாரத்தை ஒழுங்கு படுத்துதல்) சட்டம் 2014-இன்படி மாநகராட்சி செயல்பட வேண்டும்; தெருவோர வியாபாரி களை ஆக்கிரமிப்பாளர்கள் என வரையறுப்ப தற்கு அதிகாரிகளுக்கு உரிமை இல்லை. தெரு வோர வியாபாரிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘நகர விற்பனைக்குழு” தான் முடிவெடுக்க வேண்டும். அதன்படி மாநகராட்சி செயல்பட வேண்டும்; நகர விற்பனைக்குழு கூட்டத்தை முறையாக ஆணையர் நடத்த வேண்டும். 

கே.பாலகிருஷ்ணன் முழக்கம்

இப்படியான கோரிக்கைகளை முன் வைத்த விரிவான துண்டறிக்கைகள் மாவட்டம் முழுவதும் உள்ள தெருவோர வியாபாரிகளி டம் விநியோகிக்கப்பட்டன.  தெருவோர வியாபாரி களின் வாழ்வாதார மாநாட்டிற்காக தீக்கதிர் வெளியிட்ட சிறப்பிதழ் வியாபாரிகளிடம் விநி யோகிக்கப்பட்டது. திடீரென்று பெய்த அடை மழைக்கு இடையில், தெருவோர வியாபாரி களின் வாழ்வாதார உரிமைக்கான நியாயத்தை முன்வைத்து அனல் பறக்க உரையாற்றினார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்:

“புல்டோசரை வைத்துப் பூக்கடைகளை நொறுக்குவதற்கும், பழக்கடைகளைக் காலில் போட்டு நசுக்குவதற்கும் சட்டத்தில் இட மில்லை. இவை சட்டவிரோதமான செயல்களா கும். சென்னை மாநகராட்சிக்கும் காவல்துறைக் கும் இப்போது புதிய கமிஷனர்கள் நியமிக்கப் பட்டிருக்கிறார்கள். அவர்கள் செய்வதற்கு சென்னையில் ஏராளமான பணிகள் இருக் கின்றன. சென்னை மாநகராட்சியில் கஞ்சா விற்காத இடம் என்று ஏதேனும் இருக்கிறதா? உங்களின் புல்டோசரை எடுத்துக் கொண்டு அங்கு செல்ல வேண்டியது தானே! ஆம்ஸ்ட் ராங் கொலை வழக்கில், அடுத்தடுத்து ஏராள மான ரவுடிகளும் கூலிப்படையினரும் கைதாகி வருகிறார்கள். கூலிப்படை தலைவர்களெல் லாம் காவல்துறையினருக்கு தெரியாமலா செயல்படுகிறார்கள்?  இந்த ஏழை, எளிய தெரு வோர வியாபாரிகளிடம் காட்டும் அடக்குமுறை யில் ஐந்து சதவீதத்தையாவது அவர்களிடம் காட்டலாமே?.  சென்னையில் தனியார் பெரு முதலாளிகள் வணிக நிறுவனங்களையெல் லாம் நீர்நிலைகளை ஆக்கிரமித்துக் கட்டி யிருக்கிறார்களே, அங்கே போய் உங்கள் அதி காரத்தை காட்டாமல் எதற்கெடுத்தாலும் ஏழை மக்கள் மீது அதிகாரத்தை பிரயோகம் செய்வது நியாயமா? 

துணைமேயரின் உறுதி

கே.பாலகிருஷ்ணனின் பேச்சிலிருந்த நியாயத்தை முழுமையாக உணர்ந்த பெரு நகர சென்னை மாநகராட்சியின் துணை மேயர் மகேஷ்குமார், “..சில இடங்களில் அப்புறப் படுத்தும் போது மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறையினர் கடுமையாக நடந்து கொள்வ தாக தோழர் பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டி யுள்ளார். அப்படி நடந்ததற்கு நாங்கள் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். இனி இதுபோன்று நடைபெறாமல் இருக்க மாநகராட்சி ஆணை யருக்கும் அறிவுறுத்துவோம். தெருவோர வியா பாரிகளும் மாநகராட்சி அனுமதி பெற்று வியா பாரம் செய்வது அவசியம். மற்றபடி இது ‘புல்டோ சர் அரசு’ அல்ல. முதலமைச்சர் சொல்லி இருப்பது போல் ‘மக்களுக்கான அரசு’, அதன்படி தான் சென்னை மாநகராட்சியும் செயல்படு கிறது” என ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார்.

தெருவோர வியாபாரிகள் வாழ்வாதார மாநாட்டில் நகர விற்பனைக்குழு உறுப்பினர் கள் முன்மொழிந்த தீர்மானங்களை முறையாக  மாநகராட்சி கூடுதல் ஆணையரை நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது.

கோரிக்கைகளை அங்கீகரித்த சென்னை மாநகராட்சி

தெருவோர வியாபாரிகளின் உரிமைக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து நடத்திய போராட்டங்களையும், எழுப்பிய கோரிக்கைகளையும் உரிய வகையில் சென்னை மாநகராட்சி அங்கீகரித்து ஏற்று செயல்படத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது.

முதற்கட்டமாக இதுவரை கூட்டப்படாமல் இருந்த, வியாபாரிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட நகர விற்பனைக் குழு கூட்டம் ஆகஸ்ட் 12 மற்றும்  ஆகஸ்ட் 19 ஆகிய தினங்களில் தொடர்ந்து கூட்டப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் 2014-இல் நிறைவேற்றப்பட்ட தெருவோர வியாபாரிகள் பாதுகாப்பு சட்டம் மற்றும் 2013-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பின் அடிப்படையில் “தெருவோர வியாபாரிகள் விற்பனை செய்யக்கூடிய மற்றும் விற்பனை செய்யக்கூடாத இடங்களைத் தேர்வு செய்தல் தொடர்பான நிலையான இயக்க நெறிமுறை கள்” உறுதி செய்யப்பட்டுள்ளன.

இதில் குறிப்பாக “விற்பனை செய்யக்கூடிய இடம்” என்பது “நடைபாதை, சாலையோர பகுதிகள், பொதுமக்கள் காத்திருக்கும் பகுதிகள், மேலும், நடைபாதையில் தற்காலிக வணிகம் செய்யக்கூடிய மற்றும் நகர விற்பனைக் குழு வால் பரிந்துரைத்து அரசினால் ஏற்றுக் கொள்ளக் கூடிய பகுதிகள் அல்லது இடங்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுபோல, ‘விற்பனை செய்யக்கூடாத இடம்’  என்பது “நகர விற்பனை குழுவினால் அங்கீ கரிக்கப்படாத இடங்கள்” ஆகும்.

போராட்டத்திற்கு  கிடைத்த வெற்றி

மேற்கண்டவாறு பெருநகர சென்னை மாநக ராட்சி வரையறுத்திருப்பது வரவேற்கத்தக்கது. தெருவோர வியாபாரிகளால் தேர்ந்தெடுக்கப் பட்ட நகர விற்பனைக்குழுதான் “எது ஆக்கிர மிப்பு” என்பதை வரையறை செய்ய வேண்டும். இதுதான் சட்டம் சொல்வது. மேற்கண்ட சட்டத்தைத் தான் நடைமுறைப்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடியது. தற்போது மாநகராட்சி இதை ஏற்றுக் கொண்டுள் ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்த போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றியாகும்.

மேலும், தெருவோரத்தில் வியாபாரத்தில் ஈடுபடுபவர்களை கணக்கெடுக்கும் பணியில் நகர விற்பனைக்குழு ஈடுபட்டுள்ளது. தெரு வோர வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் மாநக ராட்சியால் அங்கீகார அட்டை பெறுவதற்கு விண்ணப்பம் செய்வதற்கும் புதுப்பிப்பதற்கும் கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நகர விற்பனைக் குழுவிற்கு மாநகராட்சி அலு வலகத்தில், அலுவலகம் மற்றும் அவர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்கு போக்குவரத்து படி வழங்குவதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

அனைத்து உள்ளாட்சிகளிலும்...

மேற்கண்ட வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி முன்னெடுத்து இருக்கும் நட வடிக்கைகள் வரவேற்கத்தக்கவை. இவை அனைத்தையும் நடைமுறையில் செவ்வனே நடைபெற உறுதிசெய்ய வேண்டியது அரசாங் கத்தின் கடமையும் பொறுப்புமாகும். மேலும் இதுபோல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் தெருவோர வியாபாரிகளின் உரிமையை பாதுகாக்கும் வகையில் சட்டத்தின்படி நகர விற்பனைக் குழு செயல்படுவதற்கு உரிய நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும். 

தமிழ்நாட்டின் பொருளாதாரத்துக்கு அள்ளிக் கொடுக்கும் கருவூலங்களாக செயல் பட்டுக் கொண்டிருக்கும் தெருவோர வியாபாரி களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் உரிமை போராட்டத்தில் ஒன்றிணைந்து செயல்படுவது காலத்தின் கட்டாயம் ஆகும்.

-ஜி.செல்வா
மத்திய சென்னை மாவட்டச் செயலாளர், சிபிஐ(எம்)