articles

img

கனிம வளங்களை கைப்பற்ற மணிப்பூரில் கலவரம்!”

கனிம வளங்களை கைப்பற்ற மணிப்பூரில் கலவரம்!”

பிராட்வேயில் எஸ்.வாலண்டினா குற்றச்சாட்டு

“பெருமுதலாளிகளுக்கு கனிமங்கள் - மக்களுக்கு கலவரம்!”

“மணிப்பூர் மாநிலம் மலைகளால் ஆனது. அங்குள்ள மலையில் குவிந்துகிடக்கும் கனிமங்களை பெருமுதலாளிகளுக்கு வழங்க பாஜக ஆட்சியாளர்கள் முயற்சித்து வருகின்றனர். எனவே, மெய் டெய் மற்றும் குக்கீ இன மக்களிடையே இன கலவரத்தை உருவாக்கியுள்ளது.”

“இந்தியா கலவர பூமியாக மாற்றம்!”

ஒன்றிய பாஜகவின் 11 ஆண்டுகால ஆட்சியில் இந்தியா கலவர பூமியாக மாற்றப்பட்டுள்ளது. நாள்தோறும் வகுப்பு வெறி ஊட்டப்படுகிறது.  நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கருத்துக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. விவாதம் இன்றி மசோதாக்கள் நிறைவேற்றப்படுகிறது.

பெண்கள் மீதான வன்முறை அதிகரிப்பு

“இந்தியாவில் பெண்கள் மீதான வன்முறை, வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் உயர்ந்துகொண்டே செல்கிறது.” இதனைக் கட்டுப்படுத்த ஒன்றிய பாஜக அரசு தவறி வருகிறது. எனவே, மாற்றுக் கொள்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி மக்களிடம் பிரச்சாரம் செய்கிறது. பிராட்வேயில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்  எஸ்.வாலண்டினா ஆற்றிய உரையிலிருந்து...