மோடி ஆட்சியில் காப்பாற்றப்பட்டு வருபவர்கள் கார்ப்பரேட் நிறுவனங்கள் தானே தவிர, ஏழைகள் அல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் எம்.பி., பேசியுள்ளார். ஆகஸ்ட் 6-செவ்வாயன்று மக்களவையில் நிதி மசோதா மீதான விவாதத்தில் மோடி அரசின் கார்ப்பரேட் கொள்கையை அம்பலப்படுத்தி ஆர்.சச்சிதானந்தம் ஆற்றிய உரையின் பகுதிகள்:
நிதி மசோதா மீதான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்தை இந்த நேரத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன். இந்த அரசினுடைய நிதி திரட்டல் கொள்கையானது மக்கள் நலன் கருதியோ, தேச நலன் கருதியோ, உருவாக்கப்பட வில்லை. இக்கொள்கை கார்ப்பரேட் ஆதரவுக் கொள்கையாகவே இருந்து வருகிறது.
முதலிடம் வகிக்கும் மறைமுகவரி
1950- 60 ஆண்டுகளில் வரி வருவாய் வசூலில் முதலாவதாக கார்ப்பரேட் வரியும், இரண்டா வதாக வருமான வரியும், மூன்றாவதாக மறைமுக வரியும் இருந்தன. மூன்றாவதாக இருந்த மறை முக வரி படிப்படியாக வரி வசூலில் முதலிடத்திற்கு வந்தது. இந்த 10 ஆண்டு கால மோடி ஆட்சியில் வரி வருவாயில் முதலிடத்தில் இருந்த கார்ப்பரேட்டு களின் வரியை 3வது இடத்திற்கு தள்ளிய பெருமை அம்மையார் நிர்மலா சீதாராமன் அவர்களையே சாரும்.
வரி செலுத்தும் மக்களாக ஏழைகள்
ஜி.எஸ்.டி.வரியைப் பொறுத்தவரை 10 விழுக்காடு உள்ள பெரும் பணக்காரர்கள் செலுத்தக்கூடிய ஜி.எஸ்.டி. 3 விழுக்காடு மட்டுமே. 50 விழுக்காடு உள்ள ஏழைகள் செலுத்தக் கூடிய ஜி.எஸ்.டி. வரி 66 விழுக் காடாக உள்ளது. பெரும்பகுதி ஜி.எஸ்.டி. வரி செலுத்தக் கூடியவர்களாக இந்தியாவினுடைய ஏழை எளிய மக்களே இருக்கிறார்கள்.
பழைய வருமான வரித் திட்டம் கைவிடல்
புதிய வருமான வரித்திட்டத்தில் இணைவோருக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் பொருள் பழைய வருமான வரித் திட்டத்தை படிப்படியாக கைவிடுவது என்பதுதான். பழைய வருமான வரித் திட்டத்தை கைவிடுவது என்பது சேமிப்பை ஊக்கு விப்பதை கைவிடுவது என்பதாகும். ஊக்குவிப்பே உள்நாட்டு சேமிப்பை அதிகப்படுத்தியது. இது உள்நாட்டுத் தொழில் வளர்ச்சிக்குப் பயன்பட்டது. ஆதாரத் தொழில்கள், வளர்ச்சிக்கு ரூ.11 லட்சம் கோடியை அறிவித்துவிட்டு உள்நாட்டு சேமிப்பை அதிகப்படுத்தக்கூடிய பழைய வருமான வரித் திட்டத்திற்கு எவ்வித சலுகையும் அறிவிக்காமல் இருப்பது என்பது உள்நாட்டு சேமிப்பையும் அதிகப் படுத்தாது; தொழில் வளர்ச்சியையும் அதிகப் படுத்தாது.
எல்.ஐ.சி. மற்றும் இன்சூரன்ஸ் ஜிஎஸ்டியை மருத்து வக் காப்பீடுக்கான ஜி.எஸ்.டி.யை கைவிடுங்கள் என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை; உங்களுடைய அமைச்சரவையில் இருக்கக்கூடிய மூத்த அமைச்சர் நிதின் கட்காரியே கடிதம் எழுதியிருக்கிறார். இந்த நாட்டு மக்களின் கருத்துக்களைத் தான் நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை; 235 எதிர்க்கட்சி நாடாளு மன்ற உறுப்பினர்களுடைய கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ளவில்லை; உங்கள் சொந்தக் கட்சியி னுடைய மூத்த அமைச்சரது கருத்தையும் கூட நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று சொன்னால் நீங்கள் யாருக்கான ஆட்சி நடத்துகிறீர்கள்?
‘சூப்பர் ரிச்’ வரி என்ன ஆனது?
மிகப் பெரும் பணக்காரர்கள் மீது (சூப்பர் ரிச்) செல்வ வரி விதிக்க வேண்டும் என்று உலகம் முழுவ தும் கருத்துக்கள் வலுவடைந்துள்ளன. ஜி.20 நாடுகளி லும் ‘சூப்பர் ரிச்’ மீது வரி போடுவது என்ற பொதுக் கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. வாரிசுரிமைச் சொத்துக்கள் மீதான வரி பிரான்ஸ் நாட்டிலே 60 விழுக்காடு வசூலிக்கப்படுகிறது. ஜப்பான் நாட்டிலே 55 விழுக்காடு வசூலிக்கப்படுகிறது. ஜெர்மனியிலே 50 விழுக்காடு வசூலிக்கப்படுகிறது. பிரிட்டனிலே 40 விழுக்காடு வசூலிக்கப்படுகிறது. ஆனால் இந்தியா விலே ஒரு விழுக்காடு கூட வாரிசுரிமைச் சொத்துக் கள் மீது வரி வசூலிக்கும் நோக்கம் இந்த அரசினு டைய கொள்கையில் இல்லை.
உங்கள் எஜமானர்கள் யார்?
கார்ப்பரேட்டுகளுக்கான வரியை 40 விழுக் காட்டிலிருந்து 35 விழுக்காடாக நீங்கள் குறைத்தி ருக்கிறீர்கள். உங்களுடைய எஜமானர்கள் யார் என்பதை இதிலிருந்தே காட்டியிருக்கின்றீர்கள். ஆகவே கார்ப்பரேட் வரியை உயர்த்த வேண்டும். வாரி சுரிமைச் சொத்துக்கள் மீது வரிகளை விதிப்பதற் கான வழிகளைக் கண்டறிய வேண்டும். சூப்பர் ரிச் மீதான வரி போடுவது குறித்து சிந்திக்க வேண்டும். பழைய வருமான வரித்திட்டத்தில் இருப்பவர்களுக்கு சலுகைகள் அளித்து சேமிப்பை அதிகப்படுத்த வேண்டும். எல்.ஐ.சி, மருத்துவக் காப்பீடு மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும்.
நாடாளுமன்றத்தில் ஒதுங்கியிருக்கிறீர்கள்!
ஒரு சிறிய கதையை சொல்ல விரும்புகிறேன். ஒரு விவசாயி தன்னுடைய குடும்பத்தில் கஷ்டம் என்று சொல்லி ஒரு ஜோதிடரைப் பார்க்கச் செல்கிறார். அந்த ஜோதிடர் விவசாயியினுடைய ஜாதகத்தைப் பார்த்து, அவருடைய ஆயுள் இன்று இரவு 8 மணியுடன் நிறைவுறுகிறது என்று கருதுகிறார். நாளைக்கு வாருங்கள், உங்கள் ஜாதகத்தை கணித்துச் சொல்கி றேன் என்று சொல்லிஅனுப்பிவிடுகிறார். அந்த விவசாயி திரும்பிச் செல்லும் போது திடீரென்று காற்றும் மழையும் பெய்கிறது. அந்த விவசாயி அருகா மையில் உள்ள சிவன் கோவிலுக்குள் சென்று விடுகிறார். சிவன் கோவிலுக்குள் சென்றதனால், மழை, வெள்ளத்தில் இருந்து விவசாயியின் மரணம் தடுத்து நிறுத்தப்படுகிறது. அதே போல் நாடாளுமன்றத் தேர்தல் என்ற புயல், மழைக்குப் பயந்து தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சி களின் ஆதரவுடன் நாடாளுமன்றம் என்ற கோவி லுக்குள் ஒதுங்கி உங்கள் ஆட்சியைத் தக்க வைத்து இருக்கிறீர்கள். இது தற்காலிகமானது தான். உங்கள் ஆட்சி முடிவுறும். உங்கள் ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன. ஆகவே உங்களுடைய கொள்கை ஏழைகளுக்கான கொள்கையாக மாற்றப்படவில்லை என்றால் கார்ப்பரேட்டுக்க ளுக்கான ஆதரவு நிலைபாட்டை தொடர்ந்து எடுத்தால் இந்திய மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.
இந்த நிதி மசோதாவிலே நிதி திரட்டல் கொள்கை மட்டுமல்ல, ஏழை மக்களுக்கான எந்த அறிவிப்பு களும் இல்லை. ஆகவே, ஏழை மக்கள் பயன் பெறக்கூடிய அறிவிப்புகள் இடம் பெற வேண்டும். இதை எதிர்க்கட்சிகள் எல்லாம் வலியுறுத்தியும் கூட அதைப்பற்றி கொஞ்சம் கூட சிந்திக்காதவர்களாக இருக்கிறீர்கள்.
ஏழைகளுக்கான திட்டம் வேண்டும்
தொழிலாளர்களுக்கு விரோதமாக ஏழைகளுக்கு விரோதமாக இந்த அரசு கொண்டு வந்திருக்கக் கூடிய கொள்கைகளின் நோக்கம் மாற்றப்பட வேண்டும். வரி விதிப்பிலே மாற்றத்தை உருவாக்க வேண்டும். ஏழை மக்களுக்கான திட்டங்களை நடை முறைப்படுத்த வேண்டும். தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களிலே ஏழை மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தமிழ்நாட்டில் நிறை வேற்றப்படுகின்றன. இது போன்ற திட்டங்களை யெல்லாம் கொண்டு வருவதற்காக ஒன்றிய அரசு முயற்சிகளை எடுக்க வேண்டும். கல்விக்கு முக்கி யத்துவம் கொடுக்க வேண்டும். ஏழைகளுக்கான திட்டங்களை கொண்டுவருவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும்.
மருத்துவக் காப்பீடு ஜி.எஸ்.டியை கைவிடுக!
பொது இன்சூரன்ஸ் துறையில் உள்ள 3 நிறு வனங்களையும் இணைக்க வேண்டும் என்று மக்க ளவையில் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில், 3 பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களையும் ஒன்றாக இணைக்க வேண்டும். எல்.ஐ.சி. மருத்துவக் காப்பீடுக்கு ஜி.எஸ்.டி. விலக்கு அளிக்க வேண்டும். விவசாய விளை பொருட்களுக்கு, அடிப்படை மூலப் பொருட்களுக்கான வரி விதிப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.