“சமத்துவத்திற்கான அருங்காட்சியகம்”
மாற்றுத் திறனாளிகளை உலகின் மிகப்பெரிய சிறுபான்மையினர் என்று குறிப்பிடுகிறது உலக சுகாதார நிறுவனம். ஊனம் என்பது மற்றவர்களுடன் ஒப்பிடும்போது இயலாத்தன்மை இருப்பதைக் குறிக்கும். இது உடற் குறைபாடு, புலன் குறைபாடு, அறிவுத்திறன் குறைபாடு, உளவியல் குறைபாடு இன்னும் பிற நோய்கள் தொடர் பான குறைபாடு என்பது போன்றவற்றை குறிப்பிடலாம். ஊனம் என்பது ஒருவருடைய வாழ்க்கையின் இடை யில் ஏற்படலாம் அல்லது பிறப்பிலேயே இருக்கலாம். தற்போது ஊனம் என்ற வார்த்தையை பொதுவாக பயன் படுத்துவதில்லை. ஊனமுற்றவர்களை “மாற்றுத்திற னாளிகள்” என்று குறிப்பிட்டு வருகிறோம். ஏனெனில் அவர்களுக்கும் பல்வேறு வகையான திறன்கள் உண்டு. ஊனம் அவர்களுக்கு தடை அல்ல. இருக்கும் உடல்நிலைக்கு ஏற்ப அவர்களது திறன்களை வளர்த்துக் கொள்ள பல்வேறு வாய்ப்புகள் இன்றைக்கு ஏற்பட்டுள்ளது. எனவேதான் மாற்றுத்திறன் படைத்த வர்கள் என்று தற்போது அழைக்கத் தொடங்கி இருக்கி றோம். மாற்றுத்திறனாளிகளுக்கு உரிமையும், நலமும், சம உரிமையும் வேலை வாய்ப்பும் வழங்கிடுவது நம் அனைவரின் கடமையாகும். மாற்றுத்திறனாளி களுக்கான அடிப்படை உரிமைகள் மற்றும் பாதுகாப்பு, சமூகத்தில் சமூக உரிமை, கல்வி பெறும் உரிமை மற்றும் பொது இடங்களில் மாற்றத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையிலான இணக்கமான சூழலை ஏற்படுத்தித் தருதல் என்பது நமது பிரதான கடமைகள் ஒன்றாக இருக்க வேண்டும். இன்றைக்கு பல இடங்களில் மாற்றுத்திறனாளி களுக்கான இயல்பான சுதந்திரம் இல்லை என்ற நிலையே உள்ளது. தென்னிந்தியாவில் முதல்முறையாக... இந்த சூழ்நிலையை அறிந்துள்ள தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. குறிப்பாக மாற்றுத் திறனாளிகளும் இயல்பாக, சுதந்திரமாக செயல்படும் வகையில் பெரும்பாலான அலுவலகங்க ளில் மருத்துவமனைகளில் சாய்வு பாதைகள், கழிவறை கள் உருவாக்கப்பட்டுள்ளன. இது போன்று அனைத்து பொது நிறுவனங்களிலும் மாற்றத்திறனாளிகள் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இதன் ஒரு பகுதியாக தான் தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக மாற்றுத் திறனாளிகளுக்கான அருங்காட்சியத்தை தமிழ்நாடு அரசு சென்னையில் ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரை பகுதியில் உள்ள லேடி வெல்லிங்டன் வளாகத்தில் மாற்றுத் திறனாளி களுக்கான “அனைத்தும் சாத்தியம்” என்ற அருங்காட்சி யத்தை தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அருங்காட்சியத்தில் மாற்றுத்திறனாளி களுக்கான அன்றாட வாழ்க்கை, வேலை மற்றும் அவர் களின் பொழுதுபோக்கு ஆகியவற்றை மேற்கொள்ளும் வகையில் வாழ்வாதாரத்திற்கு தேவையான உபகர ணங்கள், தொழில்நுட்ப சாதனங்கள் போன்றவற்றை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது இந்த அனைத்தும் சாத்தியம் என்ற அருங்காட்சியகம். பெரும்பாலான அருங்காட்சியகங்களில் கண்காட்சி கள் மற்றும் தகவல் தொடர்பு இன்றி இருப்பதை நாம் பார்க்க முடியும். பார்வையற்றவர்களும் அதிகம் பயன டையவில்லை. சைகை மொழி பெயர்ப்பாளர்கள் இல்லாத தால் காது கேளாதவர்கள், அருங்காட்சியகம் வரும்போது பல்வேறு தடைகளை எதிர்கொள்கின்றனர். “அனைத்தும் சாத்தியம்” அருங்காட்சியகம், மாற்றுத்திறனாளிகளுக்கான ஆணையர் மற்றும் மாநிலத் தலைமை அலுவலகம் இருக்கும் வளாகத்தி லேயே அமைந்துள்ளது. “அனைத்தும் சாத்தியம்” அருங்காட்சியத்தின் திட்ட மேலாளர் பிரபாகர் நம்மை இனிதோடு வரவேற்கிறார். அருங்காட்சியகத்தின் நோக்கத்தையும், பயனை யும் நமக்கு விளக்குகிறார். அதன் பின்பு, நம்மை அருங்காட்சியத்திற்கு அழைத்துச் சென்று அனைத்தை யும் பார்வையிடச் செய்து நமக்கு விளக்கிக் கூறியது பாராட்டுக்குரிய விஷயமாகும். அருங்காட்சியத்திற்கு வரும் மாற்றுத்திறனாளிகள் பல்வேறு அன்றாட நடவடிக்கைகளில் சுதந்திரமாக இயங்க உதவுகிறது. புதிய தொழில்நுட்பங்கள் அறிந்து கொள்வதோடு அன்றாட நடவடிக்கைகளில் தயக்கம் இன்றி, தடுமாற்றமின்றி, தங்களது பணிகளை செய்யும் வகையில் உள்ளது. மாற்றுத்திறனாளி குழந்தைகள் முதல் முதியவர்கள் வரையிலும், பொதுமக்களும் விழிப்புணர்வு பெறும் வகையிலும் அருங்காட்சியம் உள்ளது. மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தாங்கள் எதிர்கொள்ளும் தடைகளை இயல்பாக எதிர்கொண்டு, கடந்து அன்றாடப் பணிகளில் ஈடுபட வழிவகை செய்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு தடையற்ற சூழலுடன் வாசிக்க உதவும் மாதிரி இல்லமும் வடிவமைக்கப் பட்டுள்ளது. விளையாட்டுகள் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தொடு உணர்வும் மூலம் விளையாடக்கூடிய விளையாட்டுக் கள், பிரெய்லி முறையில் விளையாடும் விளை யாட்டு உபகரணங்கள் மற்றும் கருவிகள் இடம் பெற்றுள்ளன. பார்வையற்றவர்களுக்கான கண்ணாடி சிறப்புக்குரியதாகும். இந்த கண்ணாடி மூலம் பார்வையற்றவர்கள் மற்ற நபர்கள் போன்று இயல்பாக தடையின்றி நடக்க முடியும். மேலும் இசைக்கருவிகள், கணினிகள், நூல் நெய்தல் பயிற்சி மற்றும் உள்ளரங்க விளையாட்டுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. “அலெக்சா” எனும் மென்பொருள் மூலம் சமைய லறை, படுக்கையறை, கழிவறை உள்ளிட்ட பல பகுதி களை தொலைவிலிருந்து கட்டுப்படுத்த இயலும் வகை யில் இந்த அருங்காட்சியகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிகம் உயரம் இல்லாத படுக்கை, அனைத்து மாற்றுத்திறனாளிகளாலும் பயன்படுத்தும் வகையில் சமையலறை வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு இயன்முறை (பிசியோதெரபிஸ்ட்) மருத்துவர், பேச்சு சிகிச்சை(ஸ்பீச் தெரபிஸ்ட்) வழங்குபவரும் உள்ளார்கள். இவர்கள் அருங்காட்சியத்திற்கு வரு பவர்களுக்கு வழிகாட்டுதலோடு பயிற்சியும் வழங்கு கிறார்கள். “மாதிரி வீடு” மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில், வரவேற்பறை, சமையலறை, படுக்கையறை, குளியலறை, உறுதியான உயரம் குறைந்த, தாழ்வான, இருக்கைகள், சோபாக்கள், தொலைக்காட்சி பெட்டி வைப்பதற்கான மேஜை, அலமாரி போன்றவைகள் இடம் பெற்றுள்ளன. சமையலறை முழுவதும், நவீனக் கருவிகளாலும் மாற்றுத் திறனாளிகள் அனைத்து வகையான வீல்சேரி லும் இருந்து கொண்டு இயங்கிக் கொண்டு சமையல் செய்யும் வகையில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 21 வகையான மாற்றுத்திறன் கொண்டவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், ஒன்று கூடி வாழவும், தொழில்நுட்ப தகவல்கள் மற்றும் உதவி உப கரணங்களை உபயோகப்படுத்த பயிற்சியுடன் கூடிய வழிகாட்டுதலையும் இந்த அருங்காட்சியகம் வழங்கு கிறது. அருங்காட்சியத்தின் மேல் தளத்தில் மாற்றுத்திற னாளிகள் தயாரித்த பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் நடத்தும் உணவகமும் உள்ளது. அனைத்து உணவுப் பொருட்களும் மிகுந்த சுவையுடன், நம் நாவுக்கு ருசியாக உள்ளது. இந்த உணவகத்தை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம். “திறன் பயிற்சி” இந்த உணவு உணவகப் பகுதியிலேயே திறன் பயிற்சி பெறும் திட்டமும் உள்ளது. இதன் மூலம் பயிற்சி பெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் பணியினையும் அருங்காட்சியகம் செய்து வருகிறது என்பது பாராட்டுக்குரிய விஷயமாகும். இந்த அருங்காட்சியகம் மாற்றுத்திறனாளி களுக்கான அருங்காட்சியகம் என்பதை விட எல்லோ ருக்குமான அருங்காட்சியம் என்பதே உண்மையாகும். இந்த அருங்காட்சியகத்தை பார்வையிட்டவர்கள் மனதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை. நாமும் நம்மைச் சுற்றியுள்ளவர்களும் மாற்றுத் திறனாளிகளுக்கான இயல்பான சுதந்திரத்தை வழங்குவதோடு அவர்களுக்கு பயன்படும் வகையிலான இல்லங்களை ஏற்படுத்துவது அவசியம். குறிப்பாக புதிதாக வீடு கட்டுபவர்கள், கட்டடப் பொறியாளர்கள், வரைகலை நிபுணர்கள் இந்த அருங்காட்சியத்தை பார்வையிடுவது அவசியம். இதன் மூலம் அவர்கள் கட்டுமான பணிகளில் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் கட்டடங்களை கட்டுவதற்கு உதவியாக அமையும். “பார்வையிடும் நேரம்” அனைத்தும் சாத்தியம் அருங்காட்சியகத்தை காலை 11 மணி முதல் மாலை 7 மணி வரை பார்வையிடலாம். இந்த அருங்காட்சியகம் பரவலாக்கப்பட வேண்டும். தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் “அனைத்தும் சாத்தியம்” அருங்காட்சியம் இடம் பெறுவது மிகவும் அவசியமான ஒன்றாகும். -எம்.ஜே.பிரபாகர்