பஹல்காம் பயங்கரவாத படுகொலைகள் சொல்லித்தரும் பாடங்கள்! - சா.பீட்டர் அல்போன்ஸ்
கருத்துத் திரண்ட பகைமேகங்கள் கலையத் துவங்கியுள்ளன. பீரங்கி களும், ட்ரோன்களும், நாடுவிட்டு நாடு தாவும் ஏவுகணைகளும் அவைகளை இயக்கிய ராணுவமும் தங்களது செயல்பாடு களை நிறுத்தியுள்ளன. நம் எல்லைப்புற மாநி லங்களில் வாழும் பொதுமக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுவதை நம்மால் கேட்க முடி கிறது. ஏப்ரல் மாதம் 22 இல் துவங்கி மே மாதம் 7 இல் உச்சத்தைத் தொட்ட சில இந்திய காட்சி ஊடகங்களின் “கூச்சல்” இன்னும் ஓய்ந்தபா டில்லை. இரண்டு நாடுகளிலும் ஏதுமறியாத அப்பாவி பொதுமக்களின் பேரிழப்புகளுக் கும் பெரும் துன்பங்களுக்கும் காரணமாக இருக்கும் ஒரு யுத்தத்தை ஐபிஎல் கிரிக்கெட் போட்டியைப்போல வணிகப்படுத்தி வியாபா ரம் செய்த அவர்கள் எப்போது திருந்துவார்கள் என்று நமக்குத் தெரியவில்லை. செய்திகளை சுவைபடச் சொல்ல சிறிது “மசாலா” தேவை என்பதை நம்மால் புரிய முடிகிறது. ஆனால் செய்தி முழுவதுமே “மசாலா” என்றால் அதனை எப்படி ஏற்றுக்கொள்வது? “தேசிய ஊடகங்கள்” என்று தங்களை பெருமையோடு அழைத்துக்கொள்ளும் சில பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒளி பரப்பப்பட்ட காட்சிகளுக்கும் (visuals) களத்தில் நடந்தவைகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதை உண்மை கண்டறியும் பல நடுநிலை ஊடகங்கள் வலுவான ஆதாரங்க ளோடு நிரூபித்துள்ளன. அவற்றை மற்று மொரு சந்தர்ப்பத்தில் விரிவாக அலசுவோம்.
முப்படைகளுக்கு பாராட்டு
முதலில், நமது ராணுவத்தின் முப்படைக ளுக்கு நமது மனம் நிறைந்த பாராட்டுக்களும், நன்றிகளும். “செந்தூர் நடவடிக்கைகள்” துவங்கிய நாளில் இருந்து, முடிந்த நிமிடம் வரை பாகிஸ்தான் அரசையும், அவர்களது ராணுவத்தையும், தீவிரவாதக் குழுக்களை யும் கலங்கடிக்கச்செய்து அவர்களை நிலை குலையச் செய்த நம் ராணுவத்தினரின் வீர தீர சாகசங்களை எப்படிப் பாராட்டினாலும் தகும்! எதிரியின் அடிமடியிலேயே கைவைத்து, தங்க ளது அசைக்கமுடியாத, வலிமையான யுத்த ஏற்பாடுகள் என்று அவர்கள் எண்ணிக் கொண்டிருந்த இடங்களுக்குள் எல்லாம் எளி தாக நுழைந்து எதிரிகளின் உயிர்த் தளங்க ளை சில நிமிடங்களிலேயே நிர்மூலமாக்கும் நமது ராணுவத்தின் நவீன தொழில் நுட்ப வசதிகளையும், அவைகளை மிகவும் லாவக மாகக் கையாளும் நமது வீரர்களின் திற மையையும், துணிச்சலையும் பார்த்து பாகிஸ் தான் மட்டுமல்ல, உலக நாடுகளே பிரமிப்ப டைந்துள்ளன. நமக்கு சேதங்களே இல்லை என்பதல்ல. யுத்த களத்தில் சேதம் இல்லாமல் இருப்பது எப்படி சாத்தியம்? செந்தூர் ராணுவ நடவடிக்கைகள் சம்பந் தப்பட்ட செலவுகளும், இழப்புகளும் ₹50,000 கோடிகள் என்று ஒரு புள்ளிவிபரம் சொல்கி றது. ராணுவ நடவடிக்கைகளின் போது உயி ரிழந்த வீரர்களுக்கும், பாகிஸ்தான் ராணுவத் தின் முறையற்ற தாக்குதலால் உயிரிழந்த பொதுமக்களுக்கும் நமது வீர வணக்கம்!
இது முதல்முறையல்ல...
“போர்” என்று அறிவிக்கப்படாத இந்த ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டதை நாம் வரவேற்கிறோம். பாகிஸ்தானின் எல்லை தாண்டும் பயங்கரவாத நடவடிக்கைகளும், அவர்களோடு நாம் யுத்தம் நடத்துவதும் இது ஒன்றும் முதல்முறையல்ல. ஒவ்வொரு முறையும் நம்மோடு மோதுவதும், மோதி தோற்றபின் அவமானப்படுவதும் பாகிஸ்தா னுக்குப் புதிதல்ல. நமது கடந்த கால அனுப வங்களை நினைவில் கொண்டு, புதிய சூழ் நிலைகளின் கட்டாயங்களை உள்வாங்கி, எதிர்காலத்தில் இப்படிப்பட்ட அத்துமீறல்களை முழுமையாக தவிர்க்கும் அணுகுமுறைக ளின் அடிப்படையில் செந்தூர் ராணுவ நட வடிக்கைகளை நாம் நிறுத்தியுள்ளோமா என்கிற கேள்வியினை பல புவிசார் அரசியல் நோக்கர்கள் முன் வைத்துள்ளனர். 1965 இல் நாம் யுத்தத்தை நிறுத்தியதும் அயூப்கான் அரசு கவிழ்ந்தது. 1971 இல் நம் யுத்தம் முடிந்தபோது பாகிஸ்தானை இரண் டாக உடைத்து, அதன் பூகோளத்தையே மாற்றி அமைத்தார் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி. 1999 யுத்தம் முடிந்தபோது பாகிஸ்தானை அமெரிக்கா உட்பட உலக நாடுகளால் “ரவுடிகளின் தேசம்” (rogue state) என்றழைக்கப்பட்டு, கார்கிலில் இருந்து நமது ராணுவத்தால் பாகிஸ்தான் படைகள் அவமானத்துடன் வெளியேற்றப்பட்டன. இம்முறை நமது ராணுவம் வெற்றி முகத்தில் இருந்தபோது, வரலாற்றில் என்றும் இல்லாத அளவுக்கு பாகிஸ்தான் பலவீனப்பட்டு நிற்கின்றபோது, இனிமேல் அவர்கள் விரும்பி னாலும் எல்லைதாண்டும் பயங்கரவாதத்தில் ஒருநாளும் ஈடுபடமுடியாத ஒரு ஏற்பாட்டை உருவாக்கும் சாத்தியம் இருந்த வேளையில் அந்த வாய்ப்பினைத் தவறவிட்டுவிட்டோமோ என்ற வினாவை என்னால் தவிர்க்க இயல வில்லை.
அனுகூலமும் சாதகமும்...
கடந்த கால யுத்தங்களின்போது நமக்குக் கிடைக்காத பல அனுகூலங்களும், சாதக மான சூழ்நிலைகளும் இம்முறை நமக்கு இருந்தன என்பதை யாரும் மறுக்க முடியாது. இம்முறை இந்தியாவின் அனைத்து அரசியல் கட்சிகளும், குடிமைச் சமூகமும் தங்க ளது ஒட்டுமொத்த ஆதரவினை ஒன்றிய அர சுக்கு வழங்கின. தேசத்தின் அனைத்துத் தரப்பு மக்களும், குறிப்பாக இஸ்லாமியப் பெருங் குடி மக்களும் பயங்கரவாதத்தின் விளை நிலமாக இருக்கின்ற பாகிஸ்தான் ராணு வத்தின் விஷப்பற்களை வேரோடு பிடுங்கி எறியவேண்டும் என்பதிலே ஒன்றுபட்டு நின்றனர். இஸ்லாமிய நாடுகளும் பயங்கரவா தத்தினை ஒழிக்கவேண்டும் என்ற இந்திய நிலைப்பாட்டை ஒன்றுபட்டு ஆதரித்தன. கடந்த யுத்தங்களின்போது இந்தியாவுக்கு எதி ராக பாகிஸ்தான் ஆதரவு நடவடிக்கைகளை எடுத்து ஆயுதங்கள் உட்பட அனைத்து உதவிகளையும் பாகிஸ்தானுக்கு வழங்கிய அமெரிக்கா இப்போது நமது நட்பு நாடு. அதன் ஜனாதிபதி டிரம்ப் நமது பிரதமர் மோடியின் தனிப்பட்ட நண்பர்.
அமைதி காக்கும் அவசியம் என்ன?
நமது நாடு உலகின் வல்லரசுகளில் ஒன்று. நாம் இன்று உலகின் மூன்றாவது பெரிய பொ ருளாதாரச்சந்தை. உலகில் மிக அதிகமாக நவீன ஆயுதங்களை வாங்கிக் குவிக்கும் நாடு. இவ்வளவு வசதிகள்இருந்தும் பாகிஸ் தான் எனும் பயங்கரவாத நாட்டின் முது கெலும்பை உடைக்கவில்லையே என்ற ஆதங்கம் பெரும்பாலான இந்தியர்களுக்கு இருக்கிறது என்பதை நமது பிரதமருக்கு யார் சொல்வது? யுத்தத்தின் வெற்றிப்பிடி நம் கையில் இருக்கும்போது, தோல்வியின் பயத்தில் எதிரி துவண்டுகிடக்கும்போது, உன்னை மன்னி த்து ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துகி றோம் என்று நமது பிரதமர் அல்லவா அறி வித்திருக்க வேண்டும்! அதனை எப்படி அமெ ரிக்க குடியரசு தலைவர் அறிவிப்பது? அது நமது இறையாண்மைக்கு அவமான மல்லவா? “ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தா விட்டால் உங்கள் இரண்டு நாடுகளோடும் அமெரிக்கா எவ்வித வியாபாரத்தொடர்பும் வைத்துக்கொள்ளாது என்று நான் எச்ச ரித்தவுடன் இரண்டு நாட்டு பிரதமர்களும் அதன் விளைவுகளைப் புரிந்துகொண்டு உட னடியாக ராணுவத் தாக்குதல்களை நிறுத்தி விட்டனர்”என்று டிரம்ப் பேசுவதை நமது பிரதமர் மோடி எப்படி சகித்துக்கொள்கிறார்?. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தன்னை ஒரு அஞ்சாநெஞ்சன் என்று வெளிப்படுத்திக் கொள்ளும் நமது பிரதமர், பலமுறை பல சர்வ தேச அரங்குகளில் டிரம்ப் இப்படி தொடர்ந்து பேசிவருகின்றபோது அமைதி காக்க வேண்டிய அவசியம் என்ன?
பாகிஸ்தான் பிரதமர் அப்படிப்பேசியது ஏன்?
நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர், “நமது ராணுவத் தாக்குதல்களை சமாளிக்க முடியாத பாகிஸ்தான் ராணுவ தளபதி நமது ராணுவ தளபதியிடம் தாக்குதல்களை நிறுத் துங்கள் என்று கெஞ்சிக் கேட்டார். அதனால் தாக்குதல்களை நிறுத்திவிட்டோம் ” என்று பேசினார். ஆனால் நமது பிரதமர் பேசுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே பாகிஸ்தான் மக்களிடம் பேசிய பாகிஸ்தான் பிரதமர்,“ நாம் இந்தியாவை வென்றுவிட்டோம், இந்த வெற்றி க்கு உதவி செய்த சீன, அமெரிக்க ஜனாதிபதி களுக்கு நன்றி” என்று எப்படி பேசினார்? நமது தாக்குதல்களை தாக்குப்பிடிக்க முடியாத ஒரு நாட்டின் பிரதமர் அப்படி பேசக்கூடுமா? இப்படி மமதையுடன் பேசும் அவர்கள் எதிர்காலங்க ளில் ஒழுக்கமாக இருப்பார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? பிரதமர் இவற்றையெல்லாம் தெளிவு படுத்தவேண்டும். நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, நாடாளு மன்றத்திற்கும், அதன் மூலமாக நாட்டு மக்க ளுக்கும் செந்தூர் ராணுவ நடவடிக்கைகள் மூலம் தாம் பெற்ற அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளவேண்டும். தாக்குதலுக்குப் பின்னரும், ராணுவ நடவடிக்கைகளுக்கு முன்னரும் ஒன்றிய அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் கலந்து கொள்ளாததை சாதாரணமா கப் பார்க்க முடியாது. இந்திய ஜனநாயகத்தில் தவிர்க்கக்கூடாத எதிர்க்கட்சிகளை சந்திப் பதை ஏன் அவர் தவிர்த்தார் என்பது நமக்குப் புரியவில்லை.
பாதுகாப்புக் குறைவு பற்றி ஆய்வு தேவை
பஹல்காம் சம்பவங்களுக்கு பாது காப்புக் குறைவு ஒரு காரணம் என்பதை ஆராய்ந்து அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கையும் மேற்கொள்ளவேண்டும். இரண்டாயிரம் மைல்களுக்கப்பால் இருக்கிற பயங்கரவாதிகளின் பதுங்கிடங்க ளைக் கண்டு நூறு பயங்கரவாதிகளை அழித்தொழித்த நமது படைகளால் நமது நாட்டுக்குள் இருநூறு கிலோமீட்டர் தூரம் உள்ளே வந்து அப்பாவி பொதுமக்கள் இரு பத்தாறுபேரைக் கொன்றுவிட்டு தங்களது வசதிப்படி தப்பிச்சென்ற பகல்காம் பயங்கர வாதிகளை இன்னும் பிடிக்க முடியவில்லை என்பதை ஏற்றுக் கொள்ள மனம் வருந்து கிறது. அவர்களைப் பிடித்து சட்டத்தின் முன்பு நிறுத்தி நியாயம் காணும்வரை தங்கள் குடும்ப ஆண்களை இழந்த நமது பெண்டீர் எப்படி அமைதியடைவர்? பிரதமர் உரையில் எனக்கு மிகவும் பிடித்த வாசகம் ஒன்று. “நமது ஒற்றுமையே நமது பலம்” என்ற பிரதமரின் கருத்தை நான் அப்படியே வழிமொழிகிறேன். பிரதமர் போற்றும் தேச ஒற்றுமையைக் குலைக்க கங்க ணம் கட்டிக்கொண்டு செயல்படும் தேசவிரோ திகளை அடையாளம் கண்டு அவர்கள்மீது தகுந்த நடவடிக்கை எடுத்து தேசத்தின் ஒற்று மையினை பிரதமர் காப்பாற்ற வேண்டும். ஆனால் பிரதமர் சொல்வதை அவரது சொந்த கட்சியினரே பின்பற்றுவதாக தெரிய வில்லையே!
கட்டவிழ்த்து விடப்பட்ட வெறுப்புப் பிரச்சாரம்
பஹல்காம் சம்பவங்கள் நடந்து முடிந்த உடன் அந்த பயங்கரவாத படுகொலைகளை தொடர்புபடுத்தி தேசம் முழுவதும் இஸ்லாமிய எதிர்ப்பு உணர்வினை உருவாக்குகின்ற வகையில் வலதுசாரி பாசிச மதவெறி சக்திகள் ஒரு பெரும் வெறுப்பு பிரச்சாரத்தைக் கட்ட விழ்த்து விட்டனர். பயங்கர வாதத்திற்கு மத மில்லை என்று உணராத அவர்களது வெறு ப்புப் பிரச்சாரத்தை, அப்படுகொலைகளால் உறவுகளை இழந்து பாதிக்கப்பட்டவர்கள் கூட ஏற்றுக் கொள்ளவில்லை. அநியாயமான அந்த விஷமப்பிரச்சாரத்தை கைவிடவேண் டும் என்று கேட்டுக்கொண்ட அவர்கள் மீதும் மிகவும் கேவலமான தாக்குதல்களை மத வெறி சக்திகள் வன்மத்துடன் தொடர்ந்தனர். கொல்லப்பட்ட கடற்படை அதிகாரியின் மனைவி ஹிமான்ஷி நர்வால், “இந்த துன்பி யல் சம்பவத்திற்கு காஷ்மீரிகளையோ, முஸ்லிம்களையோ குறைசொல்ல வேண் டாம்” என்று இணையதளத்தில் தெரிவித்த தற்கு பாஜக உட்பட பலர் அவரை மிகவும் கொச்சையாக விமர்சித்தனர். இறந்து போன திருவனந்தபுரம் இராமச்சந்திரன் என்பவரின் மகள், திருமதி.சரத் அந்த இக்கட்டான சூழ் நிலையில் தன்னோடு இறுதிவரை நின்று உதவி செய்த இரண்டு இஸ்லாமிய காஷ்மீரி இளைஞர்களைப் பார்த்து, “தந்தையை இழந்து நின்ற எனக்கு இறைவன் கொடுத்த இரண்டு சகோதரர்கள்” என்று சொன்னதை யும் வலதுசாரி மதவாத சக்திகள் கடுமையாக, கொச்சையாக விமர்சித்தனர். இருட்டடிப்புச் செய்த ஊடகங்கள் பயங்கரவாதச் சம்பவங்களுக்கு தங்க ளது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்ளூர் மக்கள் செய்த அனைத்து உதவிகளையும் செய்திக ளாக வெளியிட்ட உள்ளூர் தொலைக்காட்சி களையும், பத்திரிகையாளர்களையும் வன் முறையாளர்கள் கடுமையாக மிரட்டினர். காஷ்மீரத்து சாமானிய மக்கள், குதிரை ஓட்டு வோர், சுமை தூக்கும் கூலி தொழிலாளர்கள், சுற்றுலா வழிகாட்டிகள் போன்றவர்கள் தங்க ளது உயிரைப் பணயம் வைத்து சுற்றுலா பயணிகளை பாதுகாத்து உதவி செய்தனர். ஆனால் தேசிய ஊடகங்கள் உட்பட பெரும்பாலான ஊடகங்கள் இந்த நல்ல செய்திகளை இருட்டடிப்புச் செய்தன. பஹல்காம் பயங்கரவாத படுகொலைகள் நடப்பதற்கு பாதுகாப்பு குறைபாடுகளும் ஒரு காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது. அதற்கு யார் பொறுப்பேற்பது என்ற கேள்வி யைக் கேட்பதே தேசவிரோதச் செயல் என்று அவர்கள் கொக்கரிப்பதை எப்படி புரிந்து கொள்வது! இதனைப் பற்றிய விவாதங்கள் பொதுத் தளத்தில் வந்துவிடக்கூடாது என்பதி லும் அவர்கள் மிகவும் கவனமாக இருக்கி றார்கள் என்பது மட்டும் நமக்கு தெரிகிறது. இதற்காகவே இந்த வெறுப்புப் பிரச்சாரத்தை வேகப்படுத்துகிறார்கள் என்று கருதத் தோன்றுகிறது.அதற்காக சில நேரங்களில் அவர்கள் எல்லைகளை மீறும்போது தேசத் தின் எதிர்காலம் பற்றிய நமது கவலை அதிக மாகிறது. நீண்ட அனுபவம் உள்ளவரும், ராஜதந்திர நடவடிக்கைகளில் நிறைந்த அனு பவம் உள்ளவருமான நமது வெளியுறவுத் துறைச் செயலர் விக்ரம் மிஸ்திரி ராணுவ நடவ டிக்கைகள் நிறுத்தப்பட்டது என்பதை அறி வித்ததற்காக அவர் மோடியின் விருப்பத்திற்கு எதிராகச் செயல்படுகிறார் என்று சமூக ஊட கங்களில் அவர் மீது பழிசுமத்தி அவரையும் வெளிநாட்டில் வாழும் அவரது மகளையும் வரைமுறையில்லாமல் திட்டித் தீர்த்த சங்கி களின் மூர்க்கத்தனத்தை தடுத்து நிறுத்தி, தட்டிக்கேட்டு தவறிழைத்தவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் படி நடவடிக்கை எடுத்தி ருக்க வேண்டாமா? ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கத்திற்கு இருந்த உணர்வு கூட ஒன்றிய அரசிடம் இல்லையே! கடைசியில் தனது சமூக ஊடகக் கணக்கையே மூடிவைப்பதைத் தவிர மிஸ்திரிக்கு வேறொன்றும் செய்ய இயல வில்லை!
நீதிமன்றங்கள் கண்டித்த பின்னும் நடவடிக்கை எடுக்காதது ஏன்?
அதைவிடப் பெரும் கொடுமை “மதச்சார் பற்ற இந்திய ராணுவத்தின்” முகமாக சர்வ தேச ஊடகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு ராணுவ நடவடிக்கைகளை ஒவ்வொரு நாளும் சர்வதேச ஊடகங்களுக்கு சிறப்பாக அறிவித் துக்கொண்டிருந்த கர்னல் சோபியா குரேஷியை “பயங்கரவாதிகளின் சகோதரி” என்று மத்தியப் பிரதேசத்தின் பாஜக அமைச் சர் விஜய்ஷா பகிரங்கமாக அறிவித்ததுதான்! தேசம் முழுவதும் உள்ள குடிமைச் சமூகமும், உயர்நீதி மன்றமும், உச்ச நீதிமன்றமும் அவருக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்த பின்னரும் பிரதமரும், பாஜகவும் அவர்மீது எந்த நடவடிக்கையையும் எடுக்க முன் வராதது ஆச்சரியமாக இருக்கின்றது. தேச ஒற்றுமையின் ஆணிவேரை அழி த்துவிடத் துடிக்கும் இப்படிப்பட்ட தேசவிரோதிக ளின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்காமல் எப்படி தேச ஒற்றுமையை காப்பது என்பதை பிரதமர் நமக்கு விளக்க வேண்டும்.அதிகா ரத்தை கையில் வைத்திருக்கும் அமைச்சர்க ளுக்கே தேச ஒற்றுமையில் நம்பிக்கை இல்லை என்றால் நாட்டின் எதிர்காலம் என்ன? எங்கள் பிரதமரே! எனக்கு நம்பிக்கை இல்லாத, தனது சிந்தனையில், செயல் பாட்டில், அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தாத ஒரு தத்துவத்தை நான் மற்ற வர்களுக்கு போதிப்பதால் என்ன மாற்றம் வந்துவிடும்? சொல்லுங்களேன்!