திமுக அரசு மாற்றுப் பொருளாதார கொள்கையை பின்பற்ற வேண்டும்
பல்லாவரத்தில் கே.சுவாமிநாதன் வலியுறுத்தல்
“பாஜக அரசால் காஷ்மீரில் அமைதி உருவாக்க முடியவில்லை!”
பிரதமரும், உள்துறை அமைச்சரும் ஓராண்டாக காஷ்மீரில் தீவிரவாதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றனர். ஆனால், பஹல்காம் தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். மாறாக, இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பு அரசியலை பரப்பி வருகிறது. மக்களை பிரிக்கும் வெறுப்பு அரசியலை ஏற்க மாட்டோம்.
“படித்த இளைஞர்கள் விற்பனையாளர்கள்!”
ஸ்விகி, சொமாட்டோ, அமேசான் போன்றவற்றில் படித்த இளைஞர்கள் விற்பனையாளர்களாக பணியாற்றுகின்றனர். 16 காலிப் பணியிடங்களுக்கு 40 லட்சம் பேர் விண்ணப்பிக்கும் நிலை உள்ளது. வேலையின்மையை சரி செய்வதிலும் ஒன்றிய அரசு தோல்வியடைந்துள்ளது.
“வளர்ச்சிக் குறியீடு எதிர் பட்டினிக் குறியீடு!”
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி 4ஆவது இடத்தில் இந்தியா உள்ளது என பிரதமர் கூறுகிறார். உலக பட்டினி குறியீடு, மகிழ்ச்சி குறியீடு, மக்களின் சராசரி வருமானம் போன்றவற்றில் எங்கே உள்ளது என்பதை பிரதமர் பேசுவாரா?
மாற்று பொருளாதாரக் கொள்கைகள்
“மக்களின் நம்பிக்கையை பெற திமுக மாற்று பொருளாதார கொள்கையை பின்பற்ற வேண்டும்!” - தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் - போக்குவரத்து, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் தொடர்பான வாக்குறுதிகள் நிறைவேற்ற வேண்டும். - சொத்து வரி, அபராதம் உயர்வு போன்றவற்றை திரும்பப் பெற வேண்டும் - பாஜகவை தனிமைப்படுத்த மாற்று பொருளாதார பாதை, மாற்று அரசியலை முன்னெடுக்க வேண்டும் பல்லாவரத்தில் நடைபெற்ற கிளர்ச்சி பிரச்சாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.சுவாமிநாதன் ஆற்றிய உரையிலிருந்து...