கடலூர் மாவட்டம் தமிழ கத்திலேயே அதிகமான அடித்தட்டு மக்கள் வாழும் மாவட்ட மாகும். 27 லட்சம் மக்கள் தொகை யில் 70 விழுக்காட்டினர் பேர் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின, பழங்குடி மக்கள் வசிக்கின்றனர்.
இரண்டரை லட்சம் குடிசை வீடுகள் உள்ளன. விவசாயம் பிரதான தொழிலாக உள்ள இம்மாவட்டத்தில் கட்டு மானத் தொழில், முறைசாரா தொழில்களிலும் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர்.
மார்க்சிஸ்ட் கட்சியின் பங்கு
சமூக ஒடுக்குமுறை, மனித உரிமை மீறல், சாதியக் கொடுமை, காவல் நிலைய அத்து மீறல்களுக்கு எதிராக மக்கள் போராட்டங்களை கடலூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி முன்னின்று நடத்தி வெற்றி பெற்ற வரலாறு ஏராளம். சாதிய ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட பட்டியலின மக்க ளுக்கு கேடயமாக திகழ்கிறது சிபிஎம்.
குறிப்பிடத்தக்க போராட்டங்கள் அண்ணாமலை நகர் வழக்கு
சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் நந்தகோபால் அடித்துக் கொலை செய்யப்பட்டதும், அவரது மனைவி கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட கொடுமையையும் எதிர்த்து போராடி, குற்றமிழைத்த காவல் துறையினருக்கு தண்டனையும், நந்தகோபால் மனைவிக்கு வாழ்வாதார உத்தரவாதமும் பெற்றுத் தந்தது கட்சி.
கம்மாபுரம் காவல் நிலைய வழக்கு
விருத்தாசலம் வட்டம் கம்மாபுரம் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கில் அழைத்துச் செல்லப்பட்ட முதனை கிராமத்தின் ராஜாகண்ணு மற்றும் அவரது உறவினர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில், உண்மையை வெளிக்கொணர்ந்து சம்பந்தப்பட்ட காவல்துறையினருக்கு தண்டனை பெற்றுத் தந்தது.
குள்ளஞ்சாவடி
காவல் நிலைய வழக்கு
புலியூர் காட்டுசாகை கிரா மத்தைச் சேர்ந்த செல்வம் காவல் நிலையத்தில் சித்திரவதையால் இறந்த வழக்கில், மறைக்க முயன்ற உண்மையை வெளிக் கொணர்ந்து காவலர்களுக்கு தண்டனையும், குடும்பத்திற்கு நிவாரணமும் பெற்றுத் தந்தது.
பண்ருட்டி காவல் நிலைய வழக்கு
வடலூர் ஆபத்தானபுரத்தில் முருகன் என்பவர் லாட்டரி சீட்டு விற்ற குற்றச்சாட்டில் காவல் நிலை யத்தில் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில், குடும்பத்திற்கு அரசு வேலையும், குற்றவாளிகளுக்கு தண்டனையும் பெற்றுத் தந்தது.
நெய்வேலி காவல் நிலைய வழக்கு
பி.என்.பாளையம் கிரா மத்தைச் சேர்ந்த சுப்பிரமணி காவல் நிலையத்தில் சித்திரவதை செய்யப்பட்டு இறந்த வழக்கில், சிபிசிஐடி விசாரணை பெற்று, கொலை வழக்காகவும் எஸ்சி/எஸ்டி வழக்காகவும் மாற்றம் செய்து, உச்சநீதிமன்றம் வரை வழக்கை தொடர்ந்து நடத்தி வருகிறது. குடும்பத்திற்கு நிவாரண நிதியும் பெற்றுத் தந்துள்ளது.
செங்கொடி இயக்கத்தின் தொடர் போராட்டங்கள்
உழைப்பாளி மக்களின் உற்ற நண்பனாகவும், மாவட்டத்தில் எங்கெல்லாம் மனித உரிமைகள் மீறப்படுகிறதோ அங்கெல்லாம் களம் காணக்கூடிய இயக்கமாக வும் மார்க்சிஸ்ட் கட்சி திகழ்கிறது. எண்ணற்ற போராட்டங்களை செங்கொடி இயக்கம் தொடர்ந்து நடத்தி வருகிறது.