articles

img

போதை ஒழிப்பில் வாலிபர் சங்கத்திற்கு முக்கிய இடம் உண்டு - மா.சுப்பிரமணியன்

போதை ஒழிப்பை அரசால் மட்டும்  செய்ய முடியாது. சமூக ஆர்வலர் கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்தும், தனிமனிதர்கள் ஒழுக்கத்தை கடைப்பிடித்து இணைந்து செயல்பட்டால்தான் வெற்றி பெற முடியும். தனிமனித ஒழுக்கத்தை  உருவாக்க விழிப்புணர்வு ஏற்படுத்த அரசியல் இயக்கங்கள் இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்து கின்றன. வாலிபர் சங்கம் முன்னெடுத்துள்ள இந்த நிகழ்வு பாராட்டுக்கும், போற்றுதலுக்கும் உரியது. வரவேற்புக்குரியது. மாநிலம் முழுவதும் 16000 பள்ளி, கல்லூரி களில், 30 ஆயிரம் இடங்களில் ஒரு கோடி  கையெழுத்துக்களை பெறுவது சாதாரண மானது அல்ல. 150 நாட்கள் இந்த முயற்சியை மேற்கொண்டு வெற்றி பெற்றிருப்பது மகத்தானது. இளைஞர்களிடத்தில் கையெழுத்துக்களை பெறும்போது, அவர்களிடத்தில் பசுமரத்து ஆணி போல, நல்உணர்வுகளை ஏற்படுத்தியுள்ளீர்கள். கடந்தாண்டு முதலமைச்சர், ஆட்சியர்,  காவல் கண்காணிப்பாளர்கள் மாநாட்டை  நடத்தி, போதைக்கு எதிராக நடவடிக்கை களை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்கள்.

அதன்பிறகு, 2022 ஆகஸ்ட் மாதம் போதைக்கு  எதிராக 30 லட்சம் மாணவர்கள் பங்கேற்ற  விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி, உறுதியேற்கப் பட்டது. அது உலக சாதனையாக மாறியது. ஆனாலும், கடந்த மாதம் போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல்துறை துணைத்தலைவர் வெளியிட்ட அறிக்கையில், நடப்பாண்டில் மட்டும் 1400 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. 500 பேர் வங்கி கணக்கு முடக்கப் பட்டுள்ளது. 5000 பேர் மீது வழக்கு பதியப் பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். அரசின் நட வடிக்கைக்கு பிறகும் போதை பொருள் விற்பனை நடந்து கொண்டுதான் இருக்கிறது. சட்டத்தை மீறி விற்பனை செய்வோர் மீதான நடவடிக்கைக்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும். தென்னிந்தியாவின் காவல்துறை தலை வர்கள் மாநாட்டில் பங்கேற்ற போதைப் பொருள் தடுப்பு பிரிவு துணைத்தலைவர்,  தமிழகத்தில் கஞ்சா பயிரிடப்படவில்லை. ஒடிசா, தெலுங்கானா, ஆந்திரா, வடகிழக்கு மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கடத்தப்படுகிறது. இதை தடுக்க வேண்டும். ஆந்திராவில் ஒரே இடத்தில் 6400 ஏக்கர் நிலப்பரப்பில் கஞ்சா பயிரிடப்படுவதை அழிக்க  வேண்டும் என்று வலியுறுத்தினார். அதன் பிறகே, ‘ஆப்ரேஷன் பர்வதன்’ என்ற பெயரில் ஆந்திர அரசு 6413 ஏக்கரில் பயிரிடப்பட்ட 4000 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சாக்களை அழித்தது. போதையற்ற தமிழ்நாடு என்ற இலக்கை எட்டுகிறபோது, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்திற்கு முக்கியத்துவமான இடம் கிடைக்கும். இந்த அமைப்புக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.