தீக்கதிர் நாளிதழில் ‘காலத்தை வென்ற வர்கள்’ எனும் தலைப்பில் பன்முக ஆளுமைகள் குறித்து ஒவ்வொரு நாளும் வெளியான தகவல்கள் இப்போது எழுத்தாளர் பெரணமல்லூர் சேகரன் அவர்க ளின் உழைப்பினால் அதே தலைப்பிலேயே சிறப்பான நூலாக வெளியாகியிருக்கிறது . 608 பக்கங்களைக் கொண்ட, சற்று பெரிய புத்தகம் தான்; எனினும், அயர்ச்சியோ அலுப்போ இல்லாமல் இலகுவாக வாசிப் பிற்குள் நம்மை அழைத்துச் செல்கிறது. புகழ்மிக்க ஆளுமைகளோடு, மக்களுக்காக போராடிய சாமானியர்களின் வாழ்வையும் இணைத்து வாசகர்களுக்கு அறிமுகம் செய்வது இப்புத்தகத்தின் சிறப்பம்சமாகும். இந்நூலை படித்து முடித்த பின்னர் காலத்தை வென்றவர்களோடும், காலத்தில் கலந்து விட்டவர்களோடும் சற்றே காலாற நடந்து சென்று கைகுலுக்கி விட்டு திரும்பிய ஒரு பேரனுபவத்தை பெற முடிகிறது.
பேரனுபவத்தை பெற முடிகிறது. ‘‘என்ன ஒலி கேட்டாய் என் நீலவிழி மகனே நான் எச்சரிக்கும் இடியின் குமுறல் கேட்டேன் ஒருவன் பட்டினியால் கிடக்க பலர் சிரிக்க கேட்டேன் சாக்கடையில் மரிக்கும் மனிதன்னின் பாட்டை கேட்டேன் குறுகிய சந்தில் ஒரு கோமாளியின் அழுகுரல் கேட்டேன் ஒரு கனமழை கனமழை பொழி யத்தான் போகிறது’’.
ன் அவர்களின் கவிதையை தனது முன்னு ரையில் நூலாசிரியர் குறிப்பிட்டிருப்பது நூலின் உள்ளடக்கத்திற்கு மிகவும் பொருத்தமாகவே இருக்கிறது. பொதுவாக வரலாற்று நூலை எழுதும் போது ஒரு தனிப்பட்ட மனிதரை பற்றி எழுத லாம். அல்லது ஒரு துறையின் பல்வேறு ஆளுமைகளை எழுதலாம். வரலாற்று சம்பவங்களை எழுதலாம். ஆனால் இந்நூலோ பன்முக ஆளுமைகள் குறித்து எழுதப்பட்டிருப்பதோடு, அவர்கள் குறித்த சுருக்கமான அறிமுகத்தையும், அவர்களின் பங்களிப்பையும் நமக்கு அளிக்கிறது. ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரையிலான ஒரு ஆண்டின் ஒவ்வொரு நாளிலும் ஒருவரைப் பற்றி எழுதிய வரலாற்று குறிப்பு களின் தொகுப்பு தற்போது ஒரே புத்தக மாக வெளியாகியிருக்கிறது. தமிழ் பதிப்புத் துறைக்கு தனது சிறப்பான பங்களிப்பை செய்த சி.வை. தாமோதரன் பிள்ளை குறித்த முதல் குறிப்பில் துவங்கி தியாகி விஸ்வநாத தாஸ் வரையிலான கடைசிக் குறிப்பு வரையிலும் பல்வேறு ஆளுமைகளை பற்றியதாக இருக்கிறது ‘காலத்தை வென்றவர்கள்’ எனும் இந்நூல்.
விடுதலைப் போராட்ட தியாகிகள், அரசியல் ஆளுமைகள், அறிவியல் அறிஞர் கள், களப்போராளிகள், கவிஞர்கள், எழுத் தாளர்கள் என ஒவ்வொரு துறையிலும் தடம் பதித்த ஏராளமானவர்கள் இந்நூலில் இடம் பெற்றிருந்தாலும், சமதர்ம சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கும், இடதுசாரி அரசியலின் கள நாயகர்களுக்கும் அதிக மான இடத்தை அளித்திருக்கிறார் நூலாசிரி யர். அவர் ஒரு இடதுசாரி சிந்தனை கொண்ட வர் என்பதால் அப்படி நிகழ்ந்திருக்குமோ என நினைக்கலாம். ஆனால் காரணம் அதுவல்ல; சமூகத்தை முன்னோக்கி உந்தித் தள்ளுவதில் அர்ப்பணிப்பான உழைப்பை செலுத்தியவர்களில் மிகக் கணிசமானவர்கள் எப்போதுமே இடதுசாரி சிந்தனை கொண்டவர்கள்தான் என்பதால் தான் இயல்பாகவே அவர்கள் கூடுதலாக வலம் வருகிறார்கள். நாம் ஏற்கனவே வாசித்து அறிந்திருக்கும் ஆளுமைகளோடு வில்லாபுரம் வீராங்கனை தியாகி லீலாவதி, அரசூர் சேட்டு, பள்ளிப்பாளையம் வேலுசாமி, வாலிபர் சங்க செயற்பாட்டாளர் நெல்லை அசோக், தெலுங்கானா வீரர் குஞ்ஞி புஜ்ஜா உள்ளிட்ட சமகாலத்தில் வீரமரணம் எய்திய ஏராளமான களப் போராளிகள் குறித்தும் அறிமுகம் செய்வ தாலேயே இந்நூல் கண்டிப்பாக வாசிக்க வேண்டியதாகிறது.
தனிநபர்களின் வரலாற்றைப் பேசும் நூலாக மட்டுமல்லாது, அவர்களை வாசிக் கும் போது நமக்கு ஒரு புரட்சிகர நம்பிக்கை யையும் அளிக்கிறது. உதாரணமாக இப்புத்த கத்தில் மகத்தான புரட்சியாளர் லெனின் அவர்களை வசீகரித்த மக்சிம் கார்க்கி குறித்து எழுதப்பட்ட குறிப்பு மிக முக்கிய மானது. புயற் பறவையின் பாடல் எனும் மகத்தான படைப்பை எழுதியதற்காக மக்சீம் கார்க்கி கைது செய்யப்படுகிறார். அந்த பாடல் தடை செய்யப்படுகிறது. தடை செய் யப்படுமளவிற்கு அப்படி என்னதான் அந்த பாடலில் இருக்கிறது? ஒரு பனிக்கால பகல் பொழுதில் கவிஞன் ஒருவன் ஜன்னலருகே அமர்ந்திருக் கிறான். ஜன்னலுக்கு வெளியே விதவித மான கடற்பறவைகள் பறந்து கொண்டி ருக்கின்றன. பறவைகள் இரண்டு அணியாக பிரிந்து நின்று தங்களுக்குள் உரையாடிக் கொண்டிருக்கின்றன. ரெவன், புல்ஃபின்ச், காக்கை போன்ற பெரிய பறவைகள் அதிகா ரத்தின் குறியீடாகவும், மிஷ்கின், பீட்ரெல் போன்ற சிறிய பறவைகள் புரட்சியாளர்க ளுமாக இருக்கின்றன. குட்டி பறவையான மிஷ்கின், தான் கேட்ட பாடல் ஒன்றை சுவை பட கூறுகிறது. மற்ற பறவைகள் மெய் மறந்து கேட்கின்றன. நிகழவிருக்கும் புரட்சியை முன்னறிவிப்பு செய்யும் மிஷ்கின் பறவையின் பாடலை கேட்டுக் கொண்டே பீட்ரெல் பறவை புரட்சியை வரவேற்றுப் பாடுகிறது. அதை ஜன்னலோரம் அமர்ந்து கொண்டிருக்கும் அந்த கவிஞன் கேட்கி றான். இலைமறை காயாக விஷயத்தை சொல்லும் மேற்கத்திய இலக்கிய வடிவ மான ‘அலிகரி’ வடிவத்தில் இப்பாடல் எழுதப் பட்டிருப்பதாகக் கூறி ஜார் மன்னன் கார்க்கியை கைது செய்கிறான். பாடல் தடை செய்யப்படுகிறது. புயற் பறவையின் பாடல், புரட்சியை தங்கள் கடமையாக மேற்கொண்டிருந்த போல்ஷ்விக்குகளுக்கு பெரும் உற்சாகத்தை அளிக்கிறது. இது போல இன்னமும் பல சுவையான தகவல்க ளும் ஆங்காங்கே விரவிக்கிடக்கிறது இந்நூலில்.
‘‘மறந்து கொண்டேயிருப்பது மக்களின் இயல்பு நினைவு படுத்தித் தூண்டிக் கொண்டே யிருப்பது முற்போக்காளர்களின் கடமை’’ எனக் குறிப்பிடுவார் வரலாற்றியலாளர் எரிக் ஹாப்ஸ்பாம். வரலாற்றை திரிக்கவும், மறைக்கவும் முயலும் பாசிஸ்டுகளின் கையில் அரசியலும் அதிகாரமும் குவிந்தி ருக்கும் நெருக்கடியான இத்தருணத்தில் வரலாற்றை வாசிப்பதும், வரலாற்றிலிருந்து உத்வேகம் பெறுவதும், வரலாற்றை கொண்டு செல்வதும் நமது கடமையாகிறது. அதற்கு இந்நூல் பேருதவி செய்கிறது. காலத்தை வென்றவர்கள் துணையோடு காலத்தை வெல்வோம்.
நூல் : காலத்தை வென்றவர்கள்
ஆசிரியர் : பெரணமல்லூர் சேகரன்
பக்கங்கள் : 624
விலை : ரூ.625
வெளியீடு : பாரதி புத்தகாலயம்,
7 இளங்கோ சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை 600018
044-24332424/24330024