articles

img

பொன்னியின் செல்வன்-2ல ஏன் சந்தேகம்? - கணேஷ்

அம்மா திடீரென்று பரப்பானதைப் பார்த்து, “என்னம்மா ஆச்சு?” என்றான் மகன்.
தெருவில், “பழைய பேப்பர், நோட்புக், வேஸ்ட் பேப்பர்..”
என்ற குரல் ஒலித்தது. “ஓ.. இவரு ஏற்கனவே இப்புடி கூப்புட்டு இருப்பாரோ” என்று நினைத்துக் கொண்டே, “நம்மகிட்ட என்னம்மா இருக்கு” என்றவாறே நிமிர்ந்தவன் திடுக்கிட்டான். அவனுடைய பாடப்புத்தங்களை அம்மா அடுக்கிக் கொண்டிருந்தார்.
“அம்மா என்ன பண்றீங்க..?”
“நீதான் அடுத்த கிளாசுக்கு போயிட்டியே.. ரிசல்ட்டும் வந்துருச்சு... ஸ்கூல் திறக்குற தேதியும் சொல்லிட்டாங்க... இத வெச்சுக்கிட்டு என்ன பண்ணப் போறோம்..?”
“அம்மா... படிக்குறதுக்கு தேவைப்படும்மா...”
“இந்த வருஷத்து பாடத்துலருந்து கேள்வியா கேக்கப் போறாங்க..”
“அதக் கேக்க மாட்டாங்க.. ஆனா, இதோட தொடர்ச்சி
தான் அடுத்த வருஷம் இருக்கும்... திருப்பிப் பாக்க தேவைப்படும்...”
“என்னடா சொல்ற..”
“அன்னிக்கு நாம பொன்னியின் செல்வன்-2 பாக்கப் போணோம்ல... நடுவுல, நடுவுல நீங்க அப்பாகிட்ட சந்தேகம்
கேட்டுட்டே இருந்தீங்க.. ஏன்..”
“ஏன்னா, நா முதல் பாகம் பாக்கல... தொடர்ச்சி புரியல..”
“அதான்... இங்க முதல் பாகம் இந்த வருஷத்து புக்கு...
ரெண்டாவது பாகம் போகப்போற வகுப்போட புக்கு..”.
“ஏண்டா, உதாரணத்துக்கு சினிமாதான் கிடைச்சுதா...”
அப்பா இடையில் புகுந்தார், “சொல்றதுக்கு ஈசியா இருக்குல்ல...” 
“அவன நீங்க விட்டுக் கொடுக்க மாட்டீங்களே... அந்தக்
காலத்திலயே வாரத்துக்கு மூணு படம் பாத்த ஆளாச்சே நீங்க...”
“எங்க தமிழய்யா, மனப்பாடச் செய்யுளுக்கு சினிமாப்
பாட்டு மெட்டப் போட்டுக் கொடுப்பாரு... சுளையா மார்க் வாங்குவோம்...” 
“இப்போ சினிமா பாத்தா ஒரே வெட்டு, குத்து.. அதுலயும் இப்போ வர்ற படங்கள்ல குறைஞ்சது ஆயிரம் துப்பாக்கிக் குண்டுகளாவது வந்துருது..”
“அன்னிக்கு நாம டி.எஸ்.பி. படம் பாக்குறப்ப, விஜய்
சேதுபதி பைக்குல வர்றாரு... போலீஸ் டிரஸ்... தியேட்டர்ல
ஒரே கைதட்டு... சீருடைல பேரு வாஸ்கோட காமானு இருக்கும்... பக்கத்துலு உக்காந்திருந்த இவன், அவரு லிஸ்பன்ல கிளம்புனாரு... 1498 இந்தியாவுக்கு வந்தாரு... வர்ற வழிய கென்யாவுக்குப் போனாரு... மனுஷன் தோன்றின
ஆப்பிரிக்கானு ஒரு கண்டம் இருக்குனு உலகுக்கு அடை
யாளம் காட்டுனாருனு மூச்சு விடாம ஒரு நிமிஷம் பேசிட்டு, மறு
படியும் படம் பாக்க ஆரம்பிச்சுட்டான்..” என்றார் அப்பா.
“போதும், போதும் உங்க பையன் புராணம்.. மகான் படம் பாக்க நீங்க வரல... நானும், இவனும்தான் போனோம்...
விக்ரம் பையன் நடிச்சுருக்கான்ல... படத்துல அவனுக்கு தாதாபாய் நவுரோஜினு பேரு.. அவரப் பத்தி இவன் மூணு நிமிஷம் பேசுனான்..வெறும் வரிசைப்படுத்தி மட்டும்
பேசல... விடுதலைக்கான காரணத்த அவர்தான் முதல்ல
சொன்னாருன்னு சொன்னான்.. பிரிட்டன் நாடாளுமன்றத்துல
உறுப்பினர் ஆன முதல் இந்தியர்னு சொல்லிட்டு மறுபடியும்
படம் பாக்க ஆரம்பிச்சுட்டான்..”
“அம்மா... ஏழாம் வகுப்புல எங்களுக்கு ஒளியியல்னு ஒரு பாடம் இருக்குமா... அடிப்படையா எல்லாத்தையும் சொல்வாங்க... எட்டாம் வகுப்புலயும் ஒளியியல் இருக்கு...
கோளக ஆடி, பரவளைய ஆடினு அதுல இருக்கும்...”
“அந்த கலைடாஸ்கோப் கேட்டியே... அதுவும் இதுக்குத்தான...”
“அம்மா... சூப்பர் மா.. கண்டுபிடிச்சுட்டீங்களே...”
அப்பா தொடர்ந்தார், “வர்ற வருஷம் அவன் என்.எம்.எம்.எஸ்னு சொல்ற தேசிய அளவிலான தேர்வு எழுதுவான்...
அதுல பெரும்பாலும் ஏழாம் வகுப்புல இருந்துதான் கேப்பாங்க.. இந்தப் புத்தகம் இருந்தாதான படிக்க முடியும்..
அதுல ஜெயிச்சா, மாசா மாசாம் ஆயிரம் ரூபாய் நாலு வருஷத்துக்கு கிடைக்கும்.. படிக்குறதுக்கு உதவுமே..”
“ஆமாம்மா...மாசா மாசம் உன்னோட கைச்செலவுக்கு நான் பணம் தர்றேம்மா...”
“டேய்.. அது மட்டுமில்ல.. இப்பதான் ஞாபகத்துக்கு வருது... ரெண்டு வீடு தள்ளி இருக்குற பொண்ணு உன்னோட
சமூக அறிவியல் புக்கு வேணும்னு வாங்கிட்டுப் போச்சு... கவர்ன்மென்ட் வேலைக்கு அதுல இருந்தெல்லாம் கேப்பாங்களாம்.. திருப்பிக் கேட்டு வாங்கி வெச்சுர்றேன்.. பின்னாடி உனக்கும் தேவைப்படுமே..” என்றவாறே அந்த வீட்டிற்குச் செல்லக் கிளம்பினார்.