articles

img

சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரதம் ஏன்? - பே.பேயத்தேவன்

தமிழகத்தில் சென்னை மாகாணத்தில் சர்.பி.டி. தியாகராயர் காலத்தில் 1922-இல் மீனவர்கள் குழந்தைகளின் பசியை போக்கிடும் விதமாக சிங்கார வேலவர் அவர்களின் முயற்சியின் அடிப்படை யில் மதிய உணவுத் திட்டம் துவங்கப்பட்டது. பின் நிதி ஒதுக்கீடு செய்ய இயலாத நிலையில் நிறுத்தப்பட்டது. பின்னர் 1925-ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி பகுதி முழுவதும் மதிய  உணவு விரிவுபடுத்தப்பட்டு முன்னாள் முதல்வர் காமராஜ் அவர்களால் 1956 ஆம்  ஆண்டு 28,000 பள்ளிகளில் மதிய உணவு  திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. பின்னர் 1962- இல் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவர் களுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. எம்.ஜி.ஆர் 01.07.1982-இல் கிராமப்புறங் களில் சத்துணவு திட்டமாக மாற்றி செயல்படுத்தினார். 15.09.1982 முதல் நகர்ப்புற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. 1997 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர்கள் காமராஜர், எம்.ஜி.ஆர், அண்ணா ஆகி யோர்கள் பிறந்த நாட்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டது. 2006-ஆம் ஆண்டுமுதல் கருணாநிதி அவர்களால் சத்துணவு திட்டத்தில் வாரம் 2 முட்டைகள் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. 2014 ஆம் ஆண்டுமுதல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் பல்வகை கலவை சாதத்துடன் மிளகு முட்டை, தக்காளி  மசாலா முட்டை வழங்கப்பட்டது.

தற்போது 42,000 மையங்களில் துவக்கப் கள்ளிகளில் 47,98,965 குழந்தைகளும் உயர்நிலைப்பள்ளிகளில் 6,98,066 குழந்தை களும் பயன்பெறுகிறார்கள். பள்ளி சத்துணவு திட்டம் உலகம் போற்றும் திட்டமாக இன்று செயல்பட்டு வருகிறது. 2022-23-ம் பட்ஜெட்டில் கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட அதே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த  ஆண்டு முழுவதும் சத்துணவு மையங் களுக்கு பன்மடங்கு விலைவாசி உயர்ந்த  நிலையிலும், 21.04.2015 அன்று உணவூட்டு  செலவினம் உயர்த்தப்பட்டு 8 ஆண்டு களுக்கு பின்னும் கூட உயர்த்தாத நிலையே உள்ளது. சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை. தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியில் சத்துணவு ஊழியர்களின் 40 ஆண்டு கால கோரிக்கையை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவோம் என்றார். இதனடிப்படை யில் சத்துணவு ஊழியர்கள் குடும்பத்து டன் வாக்களித்து இன்று பட்ஜெட் கூட்டத் தொடரில் முன்னாள் தமிழக முதல்வர் கரு ணாநிதி அவர்கள் பிறந்தநாளுக்கு இனிப்பு பொங்கல் வழங்க உத்தரவிட்டதை வரவேற் கிறோம். ஆனால் 2015ல் இனிப்பு பொங்க லுக்கு ரூ.1.70, உயர்நிலைப்பள்ளி மாண வர்களுக்கு ரூ.1.80-ம் அனுமதிக்கப் பட்டுள்ளது. 8 ஆண்டுகளுக்கு பின்பும் பொங்கல் செலவினம் உயர்த்தப்படாதது மிக கவலையோடு பரிசீலிக்கவேண்டியுள்ளது. தற்போது முன்னாள் முதல்வர் முத்தமி ழறிஞர் கருணாநிதி அவர்களின் பிறந்த நாளுக்கு இனிப்பு பொங்கல் வழங்க உத்தர விடப்பட்டுள்ளது. ஆனால் இனிப்பு பொங்கல்  வழங்குவதற்கு எரிபொருள் இல்லாமல் தயாரித்து வழங்குவதற்கு அரசாணை வழங்கப்பட்டுள்ளது நியாயமா?

  1.     பள்ளிகளில் காலை உணவை சத்துணவு ஊழியர்களிடம் ஒப்படைத்து அரசு செலவை குறைத்து இருக்கலாம்.
  2.     அரசு தொடக்கப்பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை அனைவருக்கும் விரிவுபடுத்தி வரும் ஜூலை கல்வி ஆண்டு முதல் காலை உணவு வழங்க அதற்கான ஆய்வுக்கூட்டங்களை நடத்தி வழிகாட்டு நெறிமுறைகளை இறுதிப்படுத்தி அரசு அறிவித்துள்ளது.
  3.     பள்ளிகளில் மத்திய சத்துணவுத் திட்டம் 1982ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரால் துவக்கப்பட்டு இன்று வரை கடந்த நாற்பது ஆண்டுகளாக அவர் பெயரிலேயே வெற்றிகரமாக திட்டம் செயல்பட்டு வருவதற்கு திட்டத்தை அமல்படுத்திய பணியாற்றிய ஊழியர்களே காரணம் என்பது அனைவரும் அறிந்ததே.
  4.  காலை உணவு திட்டத்தை அனைவரும் வரவேற்பதை போல சத்துணவு ஊழியர்களும் வரவேற்கிறோம்... திட்டம் சிறப்பாக செயல்பட வாழ்த்துகிறோம்.
  5.     காலை உணவுத் திட்டம் அறிவிப்பு வந்தநாள் முதல் சத்துணவு திட்டத்தில் பணியாற்றுகின்ற ஊழியர்கள் எங்களிடம் ஒப்படையுங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தி காட்டுகிறோம் என கோரிக்கை வைத்தும் அரசு ஏன் ஏற்றுக்கொள்ள வில்லை. இக்கோரிக்கையை கனிவுடன் பரிசீலிப்பது அரசுக்கு நல்லது.
  6.     பள்ளி சத்துணவுத் திட்டத்தில் அனைத்து கட்டணப்படியும் தயார் நிலையில் இருக்கும் போது காலை உணவுக்கு பயன்படுத்துவதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனாலும் இவைகளை பயன்படுத்தாமல் தமிழகம் முழுவதும் பல லட்சங்களை ஒதுக்கி நகர் பகுதியில் ஒரு இடத்தில் சமைத்து அனைத்து மையங்களுக்கும் வேன் மூலம் வழங்குவதற்கும், இதே நிலையில் மாநகராட்சி பகுதியிலும் நடை
  7. முறைப்படுத்திட அனைத்து பணிகளும் தயார் நிலையில் உள்ளது. மத்திய சமையலறைத் திட்டம் ஏற்கனவே நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதை நினைவு
  8. படுத்துகிறோம். தனியாக மகளிர் சுய உதவி குழு மூலம் அமல்படுத்த அறிவிப்புஆணை வெளியிட்டு இருப்பது சத்துணவு திட்ட ஊழியர்கள் மத்தியில் சிறிது அதிருப்தியை உருவாக்கவே செய்யும்.
  9.  தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுகின்ற வகையில் காலை உணவுத் திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடம் ஒப்படைத்து அரசு ஊழியராக்கி காலமுறை ஊதியத்தை வழங்க அரசு முன்வரவேண்டும்.
  10.     பள்ளி சத்துணவுத் திட்டத்தில் 40 ஆயிரத்திற்கும் மேல் உள்ள காலிப்பணிகள் பல ஆண்டு காலமாக நிரப்பப்படாமல் உள்ளது. 
  11.     காலை உணவு திட்டத்தை வரும் ஜூன் முதல் அரசின் அனைத்து தொடக்கப்பள்ளிகளுக்கு அமல்படுத்த பட்ஜெட்டில் ரூ. 500 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது.
  12.  காலை உணவுத் திட்டத்தை சுய உதவி குழுமூலம் சமைக்கும் பணியை செய்பவர்களுக்கு உணவு உண்ணும் மாணவர்கள் எண்ணிக்கை, மையத்தின் தூரம் இவைகளை பொருத்து அவர்களுக்கு அரசு மதிப்பூதியத்தை நிர்ணயம் செய்யும் என அரசின் வழிகாட்டு நெறிமுறைகளில் அறிவிக்கப்பட்டுள்ளது.

காலை உணவுத் திட்டம் தயாரித்து வழங்குவதற்குரிய செலவினத்தை காட்டிலும் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தும் சத்துணவு தயாரித்து வழங்குவதற்கு 3ல் ஒரு பங்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. விலைவாசி 2 ஆண்டுகளில் பலமடங்கு ஏறி யுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. சத்துணவுத் திட்டம் தொய்வின்றி தொடர வேண்டும். சத்துணவு ஊழியர்களின் 40 ஆண்டுகால கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் இல்லையேல் தமிழகம் முழுவதும் சத்து ணவு ஊழியர்கள் போராடுவதை தவிர வேறு வழியில்லை. வருகின்ற ஜூன் 26, 27,28 ஆகிய நாட் களில் தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்த்திட சென்னையில் 72 மணி நேர உண்ணாவிரதம் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.