நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலை களில் பயணிக்கும் அனைத்து வாகனங்களுக்கும் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஏப்ரலில் ஒரு பகுதி டோல்கேட்டுகளுக்கும், செப்டம்பர் மாதம் ஒரு பகுதி டோல்கேட்டுகளுக்கும் கட்டணம் உயர்த்தப்படும். அந்த அடிப்படையில் ஏப்ரல் 1ஆம் தேதி பல டோல்கேட்டுகளின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.
‘தரமான’ சாலைக்கு கட்டணம் கொடுப்பது தவறா?
சுங்கக் கட்டணம் வசூலிக்கக் கூடாது எனக் குரல் எழுப்பும்போது, “சாலைகள் தரமாக மாற்றப்பட்டுவிட்டன; அதிக செலவா கியுள்ளது; சுங்கக் கட்டணம் வசூலிப்பதில் என்ன தவறு உள்ளது” என ஆட்சியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். சாலை அமைப்பது, குடிநீர் வழங்குவது போன்ற அடிப்படைப் பணியினை குடிமைச் சமூகம் உருவான காலம் முதல் மன்னர் ஆட்சி, சர்வாதிகார ஆட்சி என எது வந்தா லும் அரசுகளே செய்து வந்துள்ளன. போக்கு வரத்து இன்றி எந்த அரசும் வணிகத்தைப் பெருக்க முடியாது. அரசின் தேவைக்குக்கூட சாலை அமைக்க வேண்டியது அவசியம். பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியாவில் ரயில்வே வந்ததின் பின்னணியே இதுதான். சுங்கக் கட்ட ணம் வசூலிக்கக் கூடாது என்று சொல்வதற் கான அடிப்படை நியாயம் இதுதான் என்றா லும், வேறு வகையான காரணங்களும்உள்ளன. வாகனங்கள் இயங்குவது பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள் மூலமே. பெட்ரோல், டீசலுக்கு எண்ணெய் கம்பெனிகள் நிர்ணயித்த விலைக்கு மேலாக ஒன்றிய, மாநில அரசாங்கங்கள் வரி வசூலிக்கின்றன. ஒன்றிய அரசு வசூலிக்கும் தொகையில் 1 லிட்டர் பெட்ரோலுக்கு ரூ. 5ம், டீசலுக்கு ரூ. 2ம் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டு கட்டணம் என்ற பெயரில் வசூலிக்கப்படுகிறது. 2017ஆம் ஆண்டுவரை இதற்கு ‘சாலை மேம்பாட்டு நிதி’ என்ற பெயர் இருந்தது. மோடி அரசுதான் அதன் பெயரை ‘அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டு நிதி’ என மாற்றியது. 2021-22ஆம் ஆண்டில் மட்டும் 3,08,49,000 மெட்ரிக் டன் பெட்ரோலும், 7,66,59,000 மெட்ரிக் டன் டீசலும் விற்பனையாகியுள்ளது. இதன் மூலம் ரூ.2,70,000 கோடி (இரண்டு லட்சத்து எழுபதாயிரம் கோடி) ஓராண்டில் மட்டும் அடிப் படைக் கட்டமைப்பு நிதி வசூலிக்கப்பட்டுள்ளது. சாலை மேம்பாட்டிற்கு என்று இவ்வளவு நிதியை வாகன உரிமையாளரிடம் வசூலித்து விட்டு, அதற்குமேல் டோல்கேட் கட்டணம் வசூலிப்பது அப்பட்டமான கொள்ளை என்பதைத் தவிர வேறு என்ன?
கட்டணம் வசூலிப்பதற்கு காலக்கெடு என்ன?
டோல்கேட்டுகளில் இரண்டு வகையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒன்று, தனியார் நிர்வகிக்கும் சாலைகள். அவர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு கட்டணம் வசூல் செய்துவிட்டு போட்ட முதலை எடுத்தவுடன், அரசிடமே ஒப்படைத்துச் சென்றுவிட வேண்டும். இரண்டு, தேசிய நெடுஞ்சாலை ஆணையமே அமைக்கும் சாலைகளுக்கு கட்டணம் வசூலிக்க ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்படுவார்கள். சாலை கட்டமைப்பிற்கான காலக்கெடு முடிந்தவுடன் 40 சதம் கட்டணமே வசூலிக்க வேண்டும் என சட்டம் சொல்கிறது. ஆனால், இது வெளிப்படைத் தன்மையுடன் இல்லை. உதாரணத்திற்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பரனூர் டோல்கேட் தனியாரால் உருவாக்கப்பட்டு, 2005 முதல் கட்ட ணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. மொத்த செலவு ரூ.941 கோடி. 2016ஆம் ஆண்டு வரை வசூலித்த கட்டணம் 426 கோடி. அதன் பின்னர் 7 ஆண்டுகள் முடிந்துவிட்டன. வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகமாகியுள்ளது. ஆனாலும் கட்டணக் கொள்ளை தொடர்கிறது.
மிகப்பெரும் மோசடி
டோல்கேட் கட்டண உயர்வு என்பது மிகப்பெரும் மோசடியாகவே மாறியுள்ளது. இதில் குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு பெரும் பணத்தை வசூலிக்கும் உரிமை அளிக்கப் பட்டுள்ளது. வணிக பயன்பாட்டு வாகனங்கள் என பேருந்து, லாரி, சிறிய சரக்குவாகனம், கால்டாக்சி, டூரிஸ்ட் வாகனங்கள் போன்ற வற்றுக்கு உயர்த்தப்படும் கட்டணம் மக்கள் தலையில்தான் சுமத்தப்படுகிறது. குடிநீர், சாலை, கல்வி, மருத்துவம் அனைத்தையும் மக்கள் பணம் செலுத்தித்தான் பெற வேண்டுமெனில் அரசு என்பதே தேவை யில்லை. முதலாளித்துவ சமூகத்தின் அவ லங்களில் ஒன்றுதான் டோல்கேட் கட்டண வசூலும்!