articles

img

“நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னா...” - கணேஷ்

“இன்னிக்கு என்ன, சார் பை எதுவும் கொண்டு வரல” என்றவாறே, “காலை வணக்கம்” வைத்தார்கள் மாணவர்கள். “என்னாச்சு... எல்லாரும் எதையோ தேடுற மாதிரி இருக்கு..” “ஆமா, சார்... இன்னிக்கு நீங்க எதையுமே கொண்டு வரல போலருக்கே...” “இதென்ன” என்று கேட்டுக் கொண்டே பைக்குள் கையை விட்டார். எல்லோரின் முகங்களும் மலர்ந்தன. வெளியே எடுத்ததும், சிலர் ‘கேண்டில்’ என்றும், சிலர் ‘மெழுகுவர்த்தி’ என்றும் சொன்னார்கள்.. ஒரு மாணவர் ஓடிப்போய் விளக்கு களை அணைத்தார்.  எதுக்கு அணைக்குறனு என்று கேட்ட தற்கு, “இருட்டுலதான வெளிச்சம் நல்லாத் தெரியும்” என்றார். “எப்புடி இது எரியும்..?” “கொளுத்துனா எரியும், சார்...” “இப்போ இந்தத் திரியை தனியாவும், மெழுகத் தனியாவும் கொளுத்துனா என்ன ஆகும்..?” “திரி வேகமா எரிஞ்சு முடிஞ்சுரும்.. மெழுகு வேகமாக உருகி ஓடிடும் சார்...” மெழுகுவர்த்தியைப் பற்ற வைத்தார் ஆசிரியர். “இந்தத் திரிய இதுல செருகி வெச்சு பத்த வெச்சா மட்டும் எப்புடி நின்னு எரியுது..?”

“சார் எனக்குத் தெரியும்... இது திடப் பொருள்...இது உருகி திரவமாகும்... அப்புறம் அந்த திரவம் வாயுவா திரி வழியா வெளில வரும்... அந்த வெப்ப வாயுதான் எரியும்... சரியா, சார்..??” மற்றொரு மாணவர் குறுக்கிட்டார்.. “திரிக்கும், தீச்சுடருக்கும் நடுவுல ஒரு இடைவெளி இருக்கும்.. பாருங்களேன்..” “ஆமா, இருக்கு.. இருக்கு..” என்றார்கள் அனைவரும். “சார்” என்று கையை உயர்த்திய மாணவர் ஒருவர், “அந்த சுடர்ல அஞ்சு அடுக்குகள் இருக்கும் சார்..600 டிகிரி, 800 டிகிரி, 1000, 1200, 1400னு சூடா இருக்கும்... 1200 டிகிரி தான் இந்த வெளிச்சத்துக்குக் காரணம்.. கடைசி அடுக்குல ஒளி இருக்காது. ஒளி யில்லாத முக்காடுனு சொல்றாங்க...” “அடேங்கப்பா, இதெல்லாம் எப்புடி தெரிஞ்சுக்கிட்டீங்க..”  “எங்கப்பா மெழுகுவர்த்தியே செய் வாரு... ஒரு நாள் அவரு செய்யுறப்ப அது பத்தி நான் கூகிள்ல தேடிப்பாத்தேன்..”  “வெரி குட்” என்றாவாறே மெதுவாக ஊதினார் ஆசிரியர், சுடர் அணையவில்லை. ஒரு மாணவரை அழைத்து,  ஊதி அணைக்கச் சொன்னார். ‘எப்படா கூப்புடு வார்’னு காத்திருந்த ஒரு மாணவர் ஊதிக் கொண்டே வந்தார். தீயை அணைத்தார். “ஏன் அணைஞ்சுச்சு” என்றார் ஆசிரியர். “ஊதுனா அணையும் சார்...” என்ற மாண  வரைப் பார்த்து, “நானும்தான ஊதுனேன்... அணையலியே...” என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்தார். “நான் மெதுவாக ஊதினேன். அந்தச்சுடர் நகர்ந்தாலும், வெப்ப வாயு வின் தாக்கத்திலதான் இருந்துஞ்சு. அதனால அணையலை. வேகமா ஊதுனதுனால வெப்பமான வாயுவின் தாக்கத்துல இருந்து சுடர் விடுபட்டுச்சு.. அணைஞ்சுருச்சு..” “சரி, அத விடுங்க. இது என்ன?” என்று மீண்டும் மெழுகுவர்த்தியைக் காட்டிக் கேட்டார். அனைவரும் விழித்தார்கள். ஒரு மாணவர் மட்டும் “மெழுகு” என்றார். ஆசிரியர் அவரைப் பாராட்டுவதற்குள் இன்னும் இரண்டு மாணவர்கள் “பாரஃபின்” என்றார்கள். மற்றொரு மாணவரோ, “அது பெட்ரோலியப் பொருள்” என்றார்... 

க்கு முன்னாடி வெளிச்சத்துக்கு என்ன பண்ணிருப்பாங்க...”  “தடவித்தடவிப் பாத்துட்டே போயிருப் பாங்க” என்றவுடன் சிரிப்பலைகள். “சினிமாவுல காட்டுவாங்க, சார்... தீப்பந்தம் ஏத்தி வெச்சுருப்பாங்க.”  “அதுக்கும் முன்னாடி...” என்று கேட்ட வாறே, “நாணல் புல்ல வளைச்சு, அதுல மிருகக் கொழுப்பத் தடவி கொளுத்தி வெப்பாங்களாம்... நின்னு எரியுமாம்..”  “சார்... மனுஷன் எதையுமே சமாளிச்சுரு வான்... அப்படித்தான..” “ஆமா... உங்க அப்பா மெழுகுவர்த்திய எப்புடி செய்வாரு...” “அச்சு இருக்கும், சார்...” என்றவுடன் “அந்த அச்சுலாம் யாரு செய்வாங்க”னு மற்றொரு மாணவர் குறுக்கிட்டார். “நான் ஒரு மெழுகுவர்த்தி செய்யுற எந்திரம் பாத்துருக் கேன். எல்லா வேலையையும் அதுவே பாத்து ரும்... பெட்டியக் கொண்டுபோய் வண்டில ஏத்துற வேலைய மனுஷங்க பாக்குறாங்க..” “சார்... நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு புரிஞ்சுருச்சு...”  “என்ன..?” “எங்களுக்கு மெழுகுவர்த்தியப் பத்தி நீங்க சொல்ல வரல. ஒரு பொருள வெச்சு இயற்பியல், வேதியியல், விலங்கியல், பொறியியல், வணிகவியல்னு எல்லாத்தை யும் படிக்கலாம்னு சொல்ல வர்றீங்க...” “எப்புடிப்பா கண்டுபிடிச்ச...” “உங்ககிட்ட படிக்குறோம்ல.. 10 பேர் சேந்து அஞ்சு நாள்ல 4 ஆயிரம் மெழுகுவர்த்தி தயாரிக்குறாங்க... 15 பேர் சேந்து அஞ்சு நாள்ல எத்தனை செய்ய முடியும்னு சொல்லச் சொல்லுங்க, சார்...?” அதற்குள் மணியடித்தது.