articles

img

ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை வென்றெடுப்போம்! - பொன்.வேலு

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர் உழவுத் தொழில் செய்து அதன் விளைச்சளை உண்டு வாழ்பவரே உலகில் வாழ்பவர்கள் ஆவர். மற்றவர் அனைவரும் அவர்களை தொழுது தானியம் பெற்று உண்டு பின்செல்பவரே ஆவார்கள் என்பது ஐயன் திருவள்ளுவரின் கூற்று. எனவே, உலகில் தலை சிறந்தது உழவுத் தொழிலாகும். உழுபவன் சேற்றில் கை வைத்தால்தான், உலகில் உள்ள அனைவரும் சோற்றில் கை வைக்க முடியும் என் பது உலக வழக்கில் உள்ள முது மொழியாகும். எனவே, விவசாயம் என்பதுதான் நமது மூத்த குடிமக்களின் தலை யாய தொழிலாக இருந்து வந்தது. ஆனால் மக்கள் தொகைக்கேற்ப உணவு உற்பத்தி போதுமானதாக இல்லாத கட்டத்தில் உற்பத்தியை பெருக்குவதற்கு பல தொழில்நுட் பங்களை கண்டுபிடித்து விளைச்சலை அதிகப்படுத்தினார் கள். விவசாயத்திற்கு இயற்கையும் கைகொடுத்தால்தான் பயிர் செய்ய முடியும். பருவமழை தவறினால் விவ சாயம் பொய்த்துவிடும்.

 ஒரு காலக்கட்டத்தில் இயற்கை பொய்த்ததால் விவசாயம் செய்ய முடி யாமல் உற்பத்தி மிகவும் குறைந்தது. இதனால் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டு, மக்கள் உயிர்வாழ பல நாடுகளுக்கு ஓடி தஞ்சம் புகுந்த னர். இந்த நிலையில் உழவுத் தொழிலை மேம்படுத்தவும், புதிய தொழில்நுட்பங்களை புகுதி உணவு உற்பத்தியை அதிகப்படுத்தவும் அர சாங்கம் முன்னுரிமை கொடுத்தது. பஞ்சமில்லா நாட்டை உருவாக்க பசுமைப் புரட்சியை கொண்டு வந்தது. தமிழ்நாட்டில் அரசு எடுத்த முயற்சியால் குறிப்பாக, நீர்ப்பா சனத்திற்கு தேவையான வசதி களை ஏற்படுத்தியது. குளம் வெட்டுதல்,  ஆற்றை சீரமைத்தல், அணைகள் கட்டுதல், வாய்க்கால்கள் செப்பனிடுதல் போன்ற பணிகளை செய்து விவசாயத்தை ஊக்குவித்தது. அதேபோல், தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் வேளாண்மைத் துறை பல சாதனைகளை படைத்தி ருக்கிறது. தமிழக அரசு பல விவசாய ஆராய்ச்சிப் பண்ணை களை ஏற்படுத்தி, புதிய தொழில் நுட்பங்கள் மூலம் நெல், கரும்பு மற்றும் சிறு தானியங்கள், தென்னை மற்றும் பழவகை போன்ற ஏனைய உணவுப் பொருட்களின் உற்பத்தி யும் அதிகரித்து சாதனை படைத்தி ருக்கிறது. அந்த சாதனை தொடர்கி றது. இந்த சாதனைகளுக்கு சொந்தக் காரர்கள் அரசின் வேளாண்மைத் துறை, வேளாண்மை பொறியியல் துறை, தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை, வேளாண்மை விற்பனைத்துறை மற்றும் விதை சான்றுத்துறை ஆகியவற்றில் பணிபுரியும் தொழில்நுட்ப அலுவலர்கள், களப்பணியாளர்கள், அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் அடிப்படை ஊழியர்கள்தான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகும்.

 அரசுப்பணியில் உள்ள போது ஒவ்வொரு பகுதி அலுவலர் களும், ஊழியர்களும் தங்களுக் கென்று தனித்தனியாக சங்கம் வைத்து அதன்மூலம் தங்களின் குறைபாடுகளை நிர்வாகத்திடமும்,அரசிடமும் தீர்த்துக் கொள்கின்றனர். ஓய்வு பெற்ற பின் ஒருசில பகுதியி னர் தங்களுக்கென்று ஒரு ஓய்வூதியர் அமைப்பை வைத்து பராமரிக்கின்ற னர். தற்போது வேளாண்துறை மற்றும் அது தொடர்புடைய துறை களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அனைத்து பகுதி ஊழியர்கள் மற்றும் அலுவலர்களை உள்ளடக்கி “தமிழ்நாடு அரசு வேளாண்மைத் துறை அனைத்து ஓய்வூதியர் சங்கம்” 23.11.2018இல் தொடங்கப்பட்டது.  தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம், அகில இந்திய மாநில அரசு ஓய்வு பெற்ற ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு நடத்தும் இயக்கங்களில் பங்கேற்று செய லாற்றி வருகிறது. இந்த சங்கத்தின் முதல் மாநில மாநாடு 27.05.2023 அன்று சென்னையில் நடைபெறு கிறது. இந்த மாநாட்டின் முக்கிய நிகழ்வாக, அரசு ஊழியர்கள் ஆசிரிய ர்களின் ஊதியம் உள்ளிட்ட உரிமை களுக்காகவும் சங்கத்திற்காகவும் அரும்பாடுபட்ட தலைவர்களின் உழைப்பை அங்கீகரிக்கும் வகை யில் சிறப்பு மலர் வெளியிடப்படு கிறது. 

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தின், முன்னோடிகள் எம்.ஆர்.அப்பன், ஆர்.முத்துசுந்தரம், பி.கிரு ஷ்ணன், தமிழ்நாடு வேளாண்மைத் துறை அமைச்சுப் பணியாளர் சங்கத் தின் மாநில நிர்வாகிகள் எஸ்.சுந்த ரேசன், என்.மாணிக்கம், கு.அந் தோணிதாசன், எஸ்.சண்முகம், கே.உன்னிகிருஷ்ணன், ந.ராம கிருஷ்ணன், எஸ்.பெலிக்ஸ் அந் தோணிசாமி, எஸ்.சந்திரபிரகாசம், வெ.சந்தானராமன், மு.சுருளி வேலு, சேரலாதன், எச்.ஜான்,  எம்.ஐ.தன்ராஜ், டி.ஆர்.சுதந்திர நாதன் போன்ற தோழர்களின்  அர்ப் பணிப்பை நினைவுகூரும் வகையில் அந்த சிறப்பு மலர் வெளியிடப்படு கிறது.  ஒய்வூதியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளாக உள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை  செயல்படுத்த வேண்டும் மத்திய அரசு அகவிலைப்படி வழங்கும் அதே தேதியில் மாநில அரசும் விடு பாடின்றி அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியர்களுக்கும் வழங்க வேண்டும் கம்யூடேசன் தொகை பிடித்தம் செய்யும் காலத்தை 15 லிருந்து 12 ஆண்டுகளாக குறைத்திட வேண்டும். 70 வயது நிறைவுற்ற அனைத்து ஓய்வூதியர்களுக்கும் கூடு தலாக 10 விழுக்காடு ஓய்வூதியம் வழங்க வேண்டும், மருத்துவக் காப்பீடு திட்டத்தை பிற மாநிலங் களில் உள்ளதுபோல் தமிழக அரசே  ஏற்று நடத்திட வேண்டும். மாதந் தோறும் வழங்கப்படும் மருத்துவப் படியை 1000 ரூபாயாக உயர்த்தி வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி தீர்மானங்களும் நிறை வேற்றப்பட உள்ளன. ஒன்றுபடு வோம்! நன்று செய்வோம்! வென்றெ டுப்போம்!