திரிபுராவில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு நாள் வருவதற்கு முன்பே வன்முறை வந்துவிடும். ‘தங்கள் கட்சிக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும்’ என்று முன்னெச்சரிக்கை-இன்னும் சொல்வ தென்றால் முன்மிரட்டல் விடுப்பது பாஜக-வின் தொடர் வழக்கமாகி விட்டது. இப்போது திரிபுராவுக்கு சட்டமன்றத் தேர்தல் தேதி பிப்ரவரி 16 என்று தேர்தல் ஆணையம் அறிவித்ததைத் தொடர்ந்து ஆர்எஸ்எஸ்-ஸின் அரசியல் பிரிவாகிய பாஜக-வின் குண்டர்கள். வன்முறைக் களம் இறங்கிவிட்டனர். திரிபுரா இந்தியாவின் இரண்டாவது சிறிய மாநிலம். 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி அங்கே மக்கள் தொகை சுமார் நாற்பது லட்சம். 8 மாவட்டங்கள், 60 சட்டமன்றத் தொகுதிகள், 2 நாடாளு மன்றத் தொகுதிகள் உள்ளன. மூன்று பக்கங்களும் வங்கதேசத்தைத் தொட்டுள்ள மாநிலம். திரிபுரி, வங்காளி, கொக்பாரக், பணி புரி என நான்கு முக்கிய மொழிகளைக் கொண்டுள்ளது திரிபுரா. இந்த மாநிலம் தேர்தலில் மூன்று முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான அர சையே தேர்வு செய்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தல்களிலும் அப்படித் தான். தோழர்கள் நிருபன் சக்கரவர்த்தி, தசரத்தேவ், மாணிக்சர்க்கார் ஆகி யோர் முதலமைச்சர்களாகப் பொறுப்பு வகித்து மொத்தம் 25 ஆண்டுகள் நல்லாட்சி நடத்திவந்துள்ளனர். 1978 முதல் 1988 வரை நிருபன் சக்கர வர்த்தி, 1993 முதல் 1998 வரை தசரத்தேவ், 1998 முதல் 2018 மார்ச் 9 வரை மாணிக்சர்க்கார்.
அலுவலகத்திற்கு நடந்தே செல்வார்
சர்வதேசப் புகழ்பெற்ற மூத்த ஊடகவியலாளர் சயித்நக்வி தமது கட்டு ரையொன்றில் மாணிக்சர்க்கார் பற்றி இவ்வாறு பிரமித்துக் கூறியி ருந்தார்: ‘‘முதலமைச்சர் மாணிக்சர்க்கார் சில சமயங்களில் தமது அலுவல கத்திற்கு நடந்தே செல்வதை நான் நேரடியாகவே பார்த்திருக்கிறேன். முத லமைச்சரின் மனைவி ஒரு பள்ளி ஆசிரியர். இவர் ரிக்க்ஷாவில்தான் பள்ளிக்குச் செல்கிறார்’’. மேலும் சயித்நக்வி, ‘‘எனது கருத்துப்படி சிறந்த ஆட்சி நடைபெறு கிற மாநிலம் திரிபுராதான். இதுபற்றி ஊடகங்களுக்கு எவ்வித அக்கறையும் இல்லை. அதனால்தான் இந்த நல்ல விஷயம் மற்ற மாநிலங்களுக்குத் தெரியவில்லை. ஒருசமயம் ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சொன்னார், ‘மாணிக்சர்க்கார் என்ற முதலமைச்சரை நான் பாராட்டு கிறேன்’ என்று.’’ ஆனால் 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று திரிபுரா முதலமைச்சர் மாணிக்சர்க்கார் ஆற்றிய சுதந்திரதின விழா உரையை ஒன்றிய அரசின் நிறுவனங்களாகிய தொலைக்காட்சியும், ஆகாசவாணியும் ஒளி-ஒலி பரப்பவில்லை. இது அவசரகால நிலையை நினைவூட்டுகிறது என்று குற்றம் சாட்டினார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் எம்.ஏ.பேபி.
புதிய பாரதமாதா தந்திரம்
பாரதமாதா படம் எப்படி இருக்கும்? நீண்ட புடவை அணிந்து, நிறைய ஆபரணங்கள் அணிந்து தனது சிங்க வாகனத்துடன் ஒரு கையில் தேசியக் கொடியைப் பற்றிக் கொண்டு நிற்கிற தோற்றத்தில் பாரதமாதா இருக்கும். ஆனால், திரிபுரா பாஜகவினர் 2018 சட்டமன்றத் தேர்தலில் மலைவாழ் மக்களை தன் பக்கம் கவர்வதற்கான தந்திரத்தில் இறங்கியது. உருவானது ஒரு புதிய பாரதமாதா! இவர்கள், திரிபுரா முதலான வடகிழக்கு மாநிலங்க ளில் வசிக்கும் பழங்குடி இனப் பிரிவினரை அடையாளப்படுத்துகிற விதத் தில் பாரத மாதாவைச் சித்தரித்து தேர்தல் பிரச்சாரம் செய்தனர். திரிபுராவில் முக்கியமாக தெர்பா, திரிபுரி, ரிங், சங்மா என பழங்குடியின மக்கள் உள்ள னர். இவர்கள் திரிபுராவின் மக்கள் தொகையில் மூன்றில் ஒருபகுதியினர். 2018 மார்ச் மாதம் நடைபெற்ற திரிபுரா சட்டமன்றத் தேர்தலில் பாஜக பிரி வினைவாதக் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்தது, தடைசெய்யப்பட்ட தீவிர வாத அமைப்பாகிய திரிபுரா தேசிய விடுதலை முன்னணி (என்எல்எப்டி) என்ற அமைப்பின் அரசியல் பிரிவாகிய ஜிபிஎஃப்டி என்ற கட்சியுடனும் பாஜக கூட்டுவைத்துக் கொண்டது. தீவிரவாதிகளையும், பிரிவினைவாதி களையும், பாஜகவுக்கு விலைபோன திரிணாமுல் மற்றும் காங்கிரஸ் தலை வர்களையும் கூட்டுச்சேர்த்துக் கொண்டு திரிபுரா தேர்தல் களத்தில் இறங்கியது பாஜக. கடந்த 2018 மார்ச் திரிபுரா சட்டமன்றத் தேர்தலில் ஒன்றிய பாஜக அரசின் பக்கபலத்துடன் பல வன்முறைகளையும், பணபலத்தால் பல தில்லு முல்லுகளும் மோசடிகளும் பாஜக நடத்தினாலும் அது பெற்ற வாக்குகள் 43.59 சதவீதம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குக் கிடைத்த வாக்குகள் 42.22 சதவீதம். காங்கிரஸ்க்கு 1.79 சதவீதம். பாஜக குண்டர்கள் இடது முன்னணிக்கு ஆதரவான வாக்காளர்களை அவர்களின் வீடுகளுக்கே சென்று மிரட்டாமல், வன்முறைகள் நடத்தாமல், வாக்குச் சாவடிக ளைக் கைப்பற்றாமல் நியாயமான நேர்மையான தேர்தல் நடைபெற்றி ருந்தால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - அதன் தலைமையிலான இடது முன்னணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி பெற்று தொடர்ச்சியாக ஆட்சி யைக் கைப்பற்றியிருக்கும்.
ஏனெனில் கடந்த 2018 மார்ச் மாதம் நடைபெற்ற திரிபுரா சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் இடதுமுன்னணி 49 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என்று ‘திரிபுரா இன்ஃபோ டாட் காம்’ நடத்திய ஆன்லைன் சர்வே கூறியது. இவர்கள் இரண்டு மாதங்கள் வரை ஒரு நீண்ட சர்வே நடத்தினர். 16 ஆயிரம் பேரிடமிருந்து ஆன்லைன் மூல மாகவும், 14 ஆயிரம் பேரிடமிருந்து தொலைபேசி மூலமாகவும் கருத்து கேட்டனர். இடதுமுன்னணிக்கு 52 சதவீதம் வாக்குகள் வரை கிடைக்கு மென்று அந்த சர்வே தெரிவித்தது. வாக்கு அளித்துவிட்டு வந்தோரிடம் ‘சி வோட்டர்ஸ்’ நடத்திய ‘எக்ஸிட் போல்’ கருத்துக் கணிப்பில் இடது முன்னணி மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று தெரிந்தது. திரிபுரா பத்திரிகை கள் நடத்திய கருத்துக் கணிப்புகளும் இடதுமுன்னணி தான் முன்னிலை பெற்று ஆட்சிக்குவரும் என்றன. ஆனால் இந்தக் கருத்துக் கணிப்புக ளெல்லாம், பாஜகவின்அத்துமீறல் அதிகார துஷ்பிரயோகம், வாக்குச் சாவடிகள் கைப்பற்றல், வாக்காளர்களை மிரட்டல், கள்ள ஓட்டு போடு தல் ஆகியவை மூலம் பொய்யாக்கப்பட்டன. திரிபுராவில் இடதுசாரிக் கட்சியினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைப் பற்றி பிரதமர் நரேந்திர மோடிக்கும், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கும் தோழர் மாணிக்சர்க்கார் தெரிவித்தார். திரிபுரா முதலமைச்சர் பிப்ளவ்தேவ் குமார், கவர்னர் ரமேஷ் பைஸ்தமா ஆகியோருக்கு அளித்த புகார் குறித்து அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்று அகர்தலாவில் நடைபெற்ற ஊடக வியலாளர்களின் கூட்டத்தில் மாணிக்சர்க்கார் தெரிவித்தார். திரிபுரா மாநில மெங்கும் இடதுசாரித் தொண்டர்கள் மீது பாஜக குண்டர்கள் நடத்தும் வன்முறைத் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்துவதில் பாஜக தலைமை யிலான மாநில அரசு தோல்வியடைந்துவிட்டது என்று கண்டித்தார்.
திரிபுராவில் 2018 மார்ச் மாதம் அதிகாரத்திற்கு வந்த பாஜக, அதன் வன்முறைகளை மட்டும் நிறுத்தவே இல்லை. மே 20 அன்றுவரை பல சப்-டிவிஷன்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 41 அலுவலகங்க ளையும், காங்கிரஸ் கட்சியின் 20 அலுவலகங்களையும், சிஐடியு, ஐஎன்டி யுசி தொழிற்சங்கங்களின் 5 அலுவலகங்களையும், பாஜக அரசாங்கம் புல்டோசரைப் பயன்படுத்தி இடித்துத் தள்ளி துவம்சம் செய்துவிட்டது. இந்தக் கொடும் வன்செயலுக்குப் பாதுகாப்பாக துணை ராணுவப் படை யையும் அனுப்பிவைத்தது. மே 20 அன்று ஒரேநாளில் மட்டும் மார்க்சிஸ்ட் கட்சியின் 16 அலுவலகங்கள் இடித்துத் தள்ளப்பட்டன. தேர்தல் வெற்றி யின் வெறிக் கொண்டாட்டத்தில் மாமேதை லெனின் சிலையை புல்டோ சர் கொண்டு மோதிச் சாய்த்தவர்களின் மூர்க்க வெறிச்செயல் முடிவு பெறவில்லை.
பத்திரிகைகள் மீதும் தாக்குதல்
தேசப்பிதா மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த நாளன்று கட்சி யின் நாளிதழான தேசர்கதாவுக்குத் தடைவிதித்தது. தேசர்கதா ஊடக உலகில் கார்ப்பரேட்டுகளின் போட்டியை எதிர்கொண்டு அந்த மாநி லத்தில் இரண்டாவது பெரிய பத்திரிகையாக வந்து கொண்டிருக்கிறது. அது, வனப்பிரதேசங்கள் அதிகமாக உள்ள திரிபுராவில் வாழும் மலைவாழ் மக்களின் குரலாகவும், சமதளத்தில் வாழும் மக்களின் குரலாகவும் விளங்கு கிறது.‘தேசர்கதா’ அலுவலகத்தையும் பாஜக குண்டர்கள் தாக்கிச் சேதப் படுத்தினர். போலீஸும் பாரா மிலிட்டரியும் அதைத் தடுக்காமல் மவுன மாக இருந்தனர். தலைநகர் அகர்தலாவில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலக்குழு அலுவலகம் மீதும் 2018 மார்ச் 8 அன்று பாஜக குண்டர்கள் வெற்றிப் போதையில் வன்முறைத் தாக்குதல் நடத்தி தீயிட்டனர். அலுவலகத்தின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்க ளையும் தீயிட்டு எரித்தனர். ‘பிரதிவாதி கலாம்’ என்ற நாளிதழ் அலுவல கம் மீதும் தாக்குதல் நடத்தினர். அதன் கட்டடத்தை நாசப்படுத்தினர். அத்துடன் அந்தப் பத்திரிகை ஆசிரியரின் வாகனத்தையும் அடித்து நொறுக் கினர். பத்திரிகை ஊழியர்களின் ‘பைக்’கிற்கும் தீயிட்டனர். குண்டர்க ளின் இந்தத் தாக்குதலில் பலர் படுகாயமடைந்தனர். இருவர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மாநிலத்தின் முதலாவது பழங்குடியின முதலமைச்சர் தோழர் தசரத்தேவ் சிலையும் குண்டர்களின் தாக்குதலுக்கு உள்ளானது. திரிபுராவில் கடந்த ஐந்து ஆண்டுக்கால பாஜக அரைப்பாசிச ஆட்சி யில் பாஜக குண்டர்களின் வன்முறையினால் ஒரு பெண் உள்பட 24 தோழர் கள் படுகொலை செய்யப்பட்டனர். 231 வீடுகள் தீயிட்டு எரிக்கப்பட்டன. 3610 வீடுகளைத் தாக்கி நாசப்படுத்தியதுடன், அந்த வீடுகளில் இருந்த பொருட்க ளையும் கொள்ளையிட்டுச் சென்றனர். 213 கடைகளைத் தீயிட்டு எரித்தனர். 55 ரப்பர் தோட்டங்களை வெட்டி நாசப்படுத்தினர். 39 தோட்டங்களுக்கு நெருப்பிட்டனர். 217 மோட்டார் வாகனங்களை பயன்படுத்த முடியாதபடி தீயிட்டு நாசப்படுத்தினர். தாங்கள் ஆட்சிக்கு வந்தால் 7 லட்சம் பேர்க்கு அரசாங்க வேலை வழங்குவதாக தேர்தலில் வாக்குறுதியளித்த பாஜக தலைவர்கள், ஆட்சி க்கு வந்த பிறகு அதை நிறைவேற்றவில்லை என்பது மட்டுமல்ல, மக்களின் மனம் புண்படும்படி நையாண்டியாகவும் பேசினார். முதலமைச்சர், ‘அரசாங்க வேலைக்காக அரசியல் தலைவர்களைச் சுற்றிக் கொண்டிருப்பதற்குப் பதி லாக பசுவின் பால் கறந்து விற்கிற வேலையைச் செய்யுங்கள்; இல்லை யென்றால் பான்மசாலா கடை வைத்துக் கொள்ளுங்கள்’ என்றார். தங்க ளுக்கென்று வேலை வாய்ப்பைத் தேடிக்கொள்ளும் உரிமையை மக்க ளுக்குத் தாராளமாக வழங்கிவிட்டார் அந்தத் ‘தர்மதுரை’! தேர்தலில் வெற்றியை அறுவடை செய்ய பாஜகவுக்கு முக்கியமாகத் தேவைப்படுவது பாசிச பாணி வன்முறைதான். அப்புறம், ஒன்றிய-மாநில அரசுகளின் பக்கபலமும், பணமூட்டையும், பலவித மோசடிகளுமாகும். வரும் 16-ஆம் தேதியன்று திரிபுரா தேர்தல் களத்தில் இந்த நான்கும் வெல்லுமா, வீழுமா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்!
நியாயமாக நடந்தால்...
‘‘திரிபுராவில் மீண்டும் இடதுமுன்னணி அரசு அதிகாரத்திற்கு வர வேண்டுமென்று மக்கள் பெரிதும் விரும்புகிறார்கள். அதன் அடையா ளம் தெரிகிறது. நியாயமாகவும் நேர்மையாகவும் அமைதியாகவும் தேர்தல் நடைபெற்றால் இடதுமுன்னணியும் மதச்சார்பற்ற ஜனநாயகக் கட்சிக ளும் வெற்றி பெற்று அதிகாரத்திற்கு வரும் என்பதில் சந்தேகமில்லை. அதைத் தடுப்பதற்குத்தான் ஒன்றிய அரசின் உதவியுடன் தேர்தலைச் சீர்குலைப்பதற்கு பாஜக முயற்சி செய்கிறது’’ என்று மாணிக்சர்க்கார் கொல்கத்தாவில் தேசாபிமானிக்கு அளித்த நேர்காணலில் கூறி யிருக்கிறார். முந்தைய இடதுமுன்னணி ஆட்சி தங்களுக்குச் செய்த பல நன்மைக ளையும் திரிபுரா மக்கள் பரிவுடன் திரும்பிப் பார்த்துத் தெளிவு பெறுவார் கள் என்று நம்புவோமாக!