பத்தாயிரம் ஆண்டு கால பாரம்பரியத்தைக் கொண்ட சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்தி ரம் வள்ளலார். காழ்ப்புணர்ச்சியாலும் அறி யாமையாலும் சில மனிதர்கள் சனாதன தர்மத்தைப் பற்றி தவறான எண்ணப் போக்கை கொண்டிருக்கி றார்கள். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடி னேன் என அவர் பாடியதை, சனாதன தர்மத்தின் எதி ரொலியாகவே காண்கிறேன். ஆங்கிலேயர்கள் சனா தன தர்மத்தை அழிக்க முடியாத போது, நம் பெரு மைகளை அழிக்க முயன்றார்கள். பிஷப் கால்டுவெல், ஜி.யு.போப் போன்றவர்கள் மொழிமாற்றம் செய்யும் போது, நூல்களில் இருந்த இறைக்கருத்துக்களை நீக்கிவிட்டனர். காரல்மார்க்ஸ் போன்றவர்கள் நம்மைப் பற்றி மோசமாக பேசிக்கொண்டிருந்த போது தான் வள்ளல் பெருமான் என்ற ஞான சூரியன் தோன்றினார்’’. இதைத்தான் ஆளுநர் ரவி, 2023 ஜூன் 21 அன்று வடலூரில் நடைபெற்ற வள்ளலாரின் 200வது ஜெயந்தி விழாவில் பேசியுள்ளார். காரல்மார்க்ஸ், பிஷப்போப், கால்டுவெல் ஆகியோரை ஒரு பக்கமும், வள்ளலாரை மறுபக்கமும் நிறுத்தி, இவர்கள் எதிரெதிர் முகாமைச் சார்ந்தவர்கள் என நிரூபணம் செய்ய முயற்சி எடுத்திருக்கிறார். ராஜ்பவனில் உட்கார்ந்து அரசு அலுவல்களை பார்க்க வேண்டிய நபர், ஊர் ஊராகச் சென்று சனாதனத்திற்கு ஆதரவாக பேசிக் கொண்டு அலைகிறார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிரச்சாரகர் பணியை செய்து வருகிறார் ரவி. இது இல்லாத நேரங்களில் தமிழக அரசுக்கு குடைச்சல் கொடுப்பதை ஒரு வேலையாக செய்து வருகிறார். தமிழக மண்ணில் நமது முன்னோர்கள் சனாதன எதிர்ப்பு போராட்டத்தை நீண்ட நெடுங்காலமாக முன்னெடுத்து வந்த வரலாற்றை அழித்தொழிக்கும் அரசியல் பணியை ஆளுநர் ஆர்.என்.ரவி முன்னெ டுத்து வருகிறார்.
சனாதனம் என்றால் என்ன?
காஞ்சி காமகோடி மடத்தின் 68-ஆவது ஆச்சாரி யார் சந்திரசேகர சரஸ்வதி, வர்ண தர்மமே சனாதன தர்மம் என பலமுறை குறிப்பிட்டுள்ளார். இவரது பேச்சுக்கள் தெய்வத்தின் குரல் என்ற பெயரில் தொகுக்கப்பட்டிருக்கிறது. அவர் மேலும் கூறுகிறார், “சனாதன தர்மத்தை ஊதி ஊதி எல்லோரிடமும் பரவச் செய்யலாம் என்பது என்னுடைய பேராசை. நம்முடைய சனாதன மதத்தில் மற்ற மதங்கள் எதிலும் இல்லாத வர்ண தர்மம் இருப்பதால், இது அவசியமில்லை என்று எடுத்துப் போட்டுவிட்டு நம் மதத்தையும் மற்றவை மாதிரி ஆக்கிவிட வேண்டும் என்று சீர்திருத்தக் காரர்கள் சொல்கிறார்கள்”. அதாவது வர்ண தர்மமே சனாதன தர்மம் என்று சங்கராச்சாரியார் குறிப்பிடுகிறார்.
வள்ளலார் சனாதனத்தை ஆதரித்தாரா?
வள்ளலார் சனாதன தர்மத்திற்கு முழுக்க முழுக்க எதிராக இருந்தவர். அதை முற்றிலுமாகப் புறக்க ணித்தவர் என்கிறார் ப.சரவணன். இவர் நவீன நோக்கில் வள்ளலார், அருட்பா-மருட்பா கண்டனத் திரட்டு ஆகிய நூல்களை எழுதியவர். சனாதன தர்மம் என்றாலே அதில் மனிதர்களுக்குள் ஏற்றத் தாழ்வு உண்டு. வள்ளலார் அதற்கு முற்றிலும் எதிரானவர். எல்லா உயிர்களையும் தன் உயிர் போலப் பார்க்க வேண்டும் என்பதைத் தான் வள்ளலார் திரும்ப திரும்பச் சொன்னார். “நால்வருணம், ஆசிரம், ஆசா ரம் முதலான நவின்ற கலை சரிதமெலாம் பிள்ளை விளையாட்டே” என்கிறார் வள்ளலார். ‘‘தோல் வருணம் கண்டு மேல் வருணம் அறிவாரில்லை” என்றும் வள்ள லார் சொல்கிறார். ‘‘மதித்த சமயமத வழக்கமெல்லாம் மாய்ந்தது வருணாசிரமம் என்னும் மயக்கமும் மாய்ந்தது” என்கிறார் வள்ளலார். இப்படிச் சொன்ன வள்ளலாரை எப்படி சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் என்று சொல்ல முடியும். வள்ளலார் உருவ வழிபாட்டில் இருந்து அருவ வழிபாட்டிற்கு வாருங்கள் என்றழைக்கிறார். இதில் இருந்தே வள்ளலார் சனாதன தர்மத்திற்கு எதிராக இருந்ததை அறிய முடியும்.
தமிழ்ச்சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை
வள்ளலாரைப் பற்றி மகாகவி பாரதி, தமிழ் நாட்டின் சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை என்ற ழைக்கிறார். சமூக சீர்திருத்தவாதி, சமரச ஞானி, மனிதாபிமானி என்றும் வள்ளலாரை பாரதி போற்றி புகழாரம் சூட்டுகிறார். ஆனால் இவை அனைத்தையும் மறைத்து சைவ சித்தாந்த சிறைக்குள் அடைத்து பூட்டி விட சிலர் முயற்சிக்கிறார்கள். கடலூர் மாவட்டம் சிதம்பரத்திற்கு அருகில் உள்ள மருதூர் கிராமத்தில் 1823 அக்டோபர் 5இல் வள்ளலார் என்றழைக்கப்படுகிற ராமலிங்க அடிகளார் பிறந்தார். ராமலிங்கர் இளம்வய திலேயே பக்தி மார்க்கத்தில் இறங்கினார். கவிதை புனையும் ஆற்றலை வளர்த்துக் கொண்டார். பக்திப் பாடல்களை எழுதிக் குவித்தார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த எந்தத் தமிழ் வித்வானுக்குக் குறைந்தவராக அவர் இல்லை என்பது மட்டும் நிச்சயம் என்கிறார் ஆய்வாளர் ராஜ்கெளதமன்.
சென்னையில் இருந்து வடலூர் நோக்கிய பயணம்
1858இல் சென்னையை விட்டு சிதம்பரத்திற்கு புறப்பட்டார். சிதம்பரம் அருகில் உள்ள கருங்குழி யில் 1867 வரை தங்கினார். தனக்கென சில கொள்கை களை மெல்ல மெல்ல உருவாக்கினார். கருங்குழியில் 1965இல் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை நிறுவினார். 1867இல் வடலூரில் தரும சாலையை நிறுவி அன்ன தானப் பணியை துவக்கினார். 1872இல் ஞான சபையை துவக்கினார். உருவ வழிபாட்டை தவிர்த்து ஜோதி வழி பாட்டை செய்வித்தார். எந்த சாதிக்காரரும் வழிபடலாம் என அறிவித்தார். 1874இல் ஒரு அறைக்குள் தன்னைத் தானே அடைத்துக் கொண்டார். அதற்குப் பிறகு அவரையோ, அவரது உடலையோ யாரும் பார்க்கவில்லை.
என்ன நேர்ந்தது வள்ளலாருக்கு?
வள்ளலாரின் சாதி, சமய மறுப்புக் கொள்கையைக் கண்டு கொலைவெறி கொண்ட சாதி வெறியர்களால் எரியூட்டி கொல்லப்பட்டு இருக்கலாம் என்றும், அவர் கொலையே செய்யப்பட்டு இருந்தாலும் அது அதிர்ச்சி யூட்டும் சம்பவம் இல்லை என்றும், அவர் செய்த சாதி, சமயம் கெட்ட காரியத்துக்கு சாதி, சமய அதிகா ரத்துவ சக்திகள் அவருக்கு மரண தண்டனையை வழங்கியிருக்க கூடும் என்றும், அது தான் வர லாற்றில் காணப்படும் தர்க்கம் என்றும் ஆய்வாளர் ராஜ்கெளதமன் கூறுகிறார். வள்ளலார் வரலாற்றை எழுதிய ஊரனடிகள், வள்ளலார் ஆண்டவரோடு கலந்து விட்டார் என்று குறிப்பிடுகிறார். வள்ளலார் உண்மையாகவே இறந்து விட்டார், அவரது சடலத்தில் எஞ்சியவை மண்பாண்டத்தில் இடப்பட்டு புதைக்கப் பட்டது என்கிறார் மறைமலையடிகள். எது எப்படி இருந்த போதிலும் அவரை தூற்றியவர்கள் எல்லாம் குப்பையில் கிடக்க, கண்மூடி வழக்கங்கள் எல்லாம் மண்மூடிப் போகச் சொன்ன வள்ளலாரின் இரக்க சிந்தனைகளும், பொதுமை எண்ணங்களும் இன்ற ளவும் நீடிக்கிறது.
வள்ளலாரின் கலகக்குரல்
வள்ளலாரின் 5818 பாடல்கள் ஆறு தொகுதி களாக தொகுக்கப்பட்டு திருவருட்பா என்றழைக்கப் படுகிறது. சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே / சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே / ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர் / அலைந்த லைந்து வீணேநீர் அழிதல் அழகலவே என்கிறார். வள்ளலார் கூறும் அருட்பெருஞ் ஜோதி தத்துவம் சாதி, சமயங்களைக் கடந்தது மட்டுமல்ல, அவைகளை பொய் என்று உரைப்பதாகும். சாதியும், மதமும், சமயமும் பொய்யென / ஆதியில் உணர்த்திய அருட் பெருஞ்ஜோதி உத்தமர்தம் உறவு வேண்டும் / உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் / உறவுகல வாமை வேண்டும் / பெருமைபெறு நினது புகழ் பேச வேண்டும் பொய்மை / பேசாதிருக்க வேண்டும் / பெருநெறி பிடித்தொழுக வேண்டும்மதமான பேய் / பிடியா திருக்க வேண்டும் என்ற வள்ளலார். பசி, பட்டினி, வறுமை குறித்து கவலையுற்றார். அனைவருக்கும் சோறிட வேண்டும் என்றார். வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் / வாடினேன் பசியால் இளைத்தே / வீடுதோறும் இரந்தும் பசியறாது அயர்ந்த / வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன் / நீடிய பிணியால் வருந்து கின்றோர் / என்நேர் உறக்கண்டு உளந்துடித்தேன் / ஈடின் மானிகளாய் ஏழைகளாய் / நெஞ்சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன் மதித்த சமய வழக் கெல்லா மாய்ந்தது / வருணாச் சிரமம் எனும் மயக்கமும் சாய்ந்தது / கொதித்த லோகா சாரக் கொதிப் பெலாம் ஒழிந்தது / கொலையும் களவும் மற்றைப் புலையும் அழிந்தது என்று கூறி இத்தகைய உலகம் தோன்ற வேண்டுமென வள்ளலார் கனவு கண்டார்.
யார் இந்த வள்ளலார்?
சாதிய சமுதாயத்தில் இந்து மதம் உயர்வு தாழ்வு கற்பித்து வந்துள்ளது. அதன் இயக்கத்திற்கு இந்த ஏற்றத்தாழ்வு அவசியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு சித்தர் மரபில் தான், ஒன்று என்ற உணர்ச்சியும். பொதுமை நிலையும், சமத்துவ சிந்தனையும் புரட்சிகரமாக முன் வைக்கப்பட்டன. வள்ளலார் இந்த சாராம்சமான கொள்கையை வரவேற்று ஆரத்தழுவிக் கொண்டார். கோவில் பண்பாட்டையும், சாதிமத ஆசாரங்களையும் போற்றிய சைவ மதத்திற்கு எதிரான சித்தர் நெறியிலி ருந்து இதனை பெற்றுக் கொண்டார். சாதி, மதம், சமயம், சாத்திரம், வருணம், ஆகமம், வேதம், புராணம், இதிகாசம், மூம்மூர்த்திகள், தேவர்கள் ஆகிய அனைத்தையும் பற்றி வள்ளலார் செய்துள்ள விமர்சனங்கள் சைவ சமயவாதிகளுக்கும், சனாதனி களுக்கும் எரிச்சலையும், வெறியையும் ஊட்டக்கூடி யதாக உள்ளன. அவர் எதற்காக சமத்துவத்தை விரும்பினார் என்றால், உயிர்க்கு இதம் புரிதல், ஆருயிர்கட்கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும் என்ற லட்சியத்துக்கு அது ஏதுவாக இருந்தது என்பது தான். உயிர்களுக்கு இடையில் மனிதர்கள் செயற்கை யாக சாதி, மதம், சமயம் காரணமாக ஏற்படுத்திய ஏற்றத்தாழ்வுகள் தடையற்ற அன்பு இயக்கத்திற்கு பாதகமாக இருந்ததால் தான், வள்ளலார் இவற்றை வேண்டாம் என்றார். சாதி, மத, சமய சாத்திர வரலாறு எல்லாமே சிறுபிள்ளைகளின் விளையாட்டு என்றார். வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் அனைத்தும் பொய் என்றார்.
பின் ஏன் ரவி, வள்ளலாரை சனாதன உச்சநட்சத்தி ரம் என்றார். ஏனெனில் அவர்கள் பொய்களின் மூலம் ஒரு வரலாற்றை எழுத நினைக்கிறார்கள். நாராயண குரு, வள்ளலார் போன்றோர்களை சுவீகரிக்க முயலு கிறார்கள். எங்கு எதைப் பேசினால் வியாபாரம் ஆகுமோ, அங்கு அதைப் பேசுவார்கள். வள்ளு வரையும் பேசுவார்கள். சீர்திருத்த இயக்கங்களுக்கும், முற்போக்கு இயக்கங்களுக்கும் பாரிய வரலாறு இம் மண்ணுக்கு உண்டு என்பதை மட்டும் இப்போதைக்கு ரவிக்கு பறைசாற்றுவோம். இரண்டாயிரம் ஆண்டு களுக்கு பின்னோக்கி இழுத்துச் செல்லும் பாசிச பழம்பெருச்சாளிகளுக்கு இம்மண்ணில் இடமில்லை என உரக்க கூறுவோம்.
கட்டுரையாளர்: சிபிஐ(எம்) மாநிலக் குழு உறுப்பினர்