இந்தியாவின் மதச்சார்பின்மை, நீதித்துறை யின் சுதந்திரம் ஆகியவற்றை உயர்த்திப் பிடித்த அரசியல் அமைப்பு சட்ட நிபுணர் ஃபாலி எஸ்.நாரிமன் தன்னுடைய 95வது வயதில் மறைந்தார். (Before my memory fades)”நினைவுகள் மங்குவ தற்கு முன்” என்ற அவருடைய சுயசரிதையின் இறுதி அத்தியாயத்தில் இப்படி எழுதினார்: “மதச்சார்பற்ற இந்தியாவில் வளமாய் வாழ்கிறேன், காலத்தின் முழுமையில், கடவுள் விரும்பினால் மதச் சார்பற்ற இந்தியாவிலேயே இறக்க விரும்புகிறேன்”. நீதித் துறையின் சுதந்திரத்திற்காக இறுதிவரை நின்ற முதுபெரும் வழக்கறிஞர். நியாயமான சுதந்திர மான நீதிபதிகள், அரசியல் அமைப்பின் அடிப்படை அம்சம் என்பதை உச்ச நீதிமன்றத்தில் தனது வாதங் கள், பல ஊடக நேர்காணல்கள் மற்றும் பொது சொற் பொழிவுகள் மூலம் மீண்டும் மீண்டும் எடுத்து ரைத்தவர். தடங்கல் ஏற்பட்டாலும் உச்சநீதிமன்றம் தன் நிலை யான தடங்களை பதிக்கும் பாங்கினை தள்ளாத வயதிலும் தன் மங்கிய பார்வையிலும், கனிந்த இதயத்துடனும் கவனித்து வந்தவர். சக நீதிபதிகள் அவரது கருத்துக்காக அவரை உற்று நோக்கினர். அவரது கருத்தை ஏற்றுக் கொண்டனர்.
சபரிமலை வழக்கு
சபரிமலை வழக்கில் மறு ஆய்வை இஸ்லாம் மற்றும் ஜோராஸ்டிரியனிஸம் போன்ற சிறுபான்மை மதங்களின் அத்தியாவசியப் பழக்கங்கள் மீதான விசார ணையாக ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றியதற்காக உச்சநீதிமன்றத்தை அவர் விமர்சித் தார். தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அவருடைய வாதத்தை வலுவானது என ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. நீதிபதிகள் அரசாங்க வேலைகளுக்கோ நாடாளு மன்றத்தில் இடம் பிடிப்பதற்கோ ஓடுவதை அவர் ஏற்கவில்லை. ஓய்வு பெற்றபின் நடைபெறும் இத்த கைய மோசடிகள் நீதித்துறையின் புனிதம் பற்றிய பொதுமக்களின் நம்பிக்கையை பாதிக்கின்றன என அவர் அஞ்சினார்.
நீதிபதிகளிடையே நல்லுறவு தேவை
முன்பு எப்போதும் நடைபெறாத வகையில் 2018 ஜனவரியில் நான்கு மூத்த நீதிபதிகள் நடத்திய செய்தி யாளர் சந்திப்பு குறித்து அதே ஆண்டு அவர் எழுதிய “God Save The Supreme Court”என்ற நூலில் இப்படி கருத்து தெரிவித்திருந்தார்: உச்சநீதிமன்றத்தில் தற்போது இல்லாதது ஒன்று தான்: நீதிபதிகளுக்கு இடையேயான பரஸ்பரம் நல்லு றவு என்பதே அது என தெளிவாகக் குறிப்பிட்டார்.
பேச்சுச் சுதந்திரம் அடிப்படை உரிமை
உச்சநீதிமன்றத்தின் அலுவல்கள் குறித்து செய்தி கள் சேகரித்து வெளியிடும் பத்திரிகைகள் மீது கட்டுப் பாடுகளை உருவாக்கிட தனக்கு உதவுமாறு தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா அவரது உதவியை நாடிய போது அது குறித்து தன் அதிருப்தியை அவருக்கு தெரிவித்தார். ஒரு குடிமகனாக அவர் பேச்சுச் சுதந்திரத்தை ஆத ரித்தார். பத்திரிகைகள் குடிமக்களுக்கு (ஆளப்படுபவர்க ளுக்கு) சேவைசெய்ய வேண்டுமே தவிர ஆள்பவர்க ளுக்கு அல்ல என பொட்டில் அறைந்து பதிலளித்தார்.
அரசு பதவியை தூக்கி எறிந்தார்
அவசர நிலை காலத்தில் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்ட பொழுது தான் வகித்த கூடுதல் சொலி சிட்டர் ஜெனரல் பதவியை சட்ட அமைச்சருக்கு எழுதிய ஒரு வரி கடிதம் மூலம் தூக்கி எறிந்தார். மக்கள், மக்களால், மக்களுக்காக என்பதை நாம் வசதியாக மறந்து விடுகிறோம். அரசாங்கம் என்பது மக்களுக்காக என்று இருந்தால் எந்த ஒரு தகவலையும் அவர்களி டம் இருந்து மறைக்காமல் தெரிவிக்க வேண்டும் என ஒரு முறை இந்து நாளிதழில் கடிதம் எழுதினார். தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் உள்ளவர்க ளின் விருப்பமா? இல்லாதவர்களின் விருப்பமா? மக்களின் விருப்பம். தேசம் அதை விரும்பு கிறது என அரசாங்கம் நீதிமன்றத்தில் கூறிய பொழுது அதன் வாதத்தை தவிடுபொடி ஆக்கினார். எந்த தேசம் என நான் கேட்க அனுமதி உண்டா? உள்ளவர்களின் தேசமா? அல்லது இல்லாதவர்க ளின் தேசமா? மக்களின் விருப்பங்களை கண்டறிவ தற்கான நம்பகமான வழிமுறைகளை இதுவரை யாரும் வகுக்கவில்லை என நாரிமன் கிண்டல் செய்தார். உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரைகள் மீதான அரசின் தாமதமான, திட்டமிட்ட செயலற்ற தன்மையை அவர் விமர்சித்தார். அரசாங்கம் மக்க ளுடன் உயிரோட்டமான தொடர்புடன் எப்போதும் திகழ வேண்டும் எனவும் குறிப்பிட்டார். போபால் விஷவாயு விபத்து வழக்கில் யூனியன் கார்பைடு கார்ப்பரேஷனுக்காக அவர் ஒருபோதும் ஆஜராகக் கூடாது என்ற விமர்சனத்தை நேர்மையாக ஒப்புக்கொண்டார். வயது முதிரும்போது தான் தெளிவு பிறக்கும் என்பதிலும் தனக்கு விதிவிலக்கோ என்று கூட குறிப்பிட்டார்.
சுய மரியாதை கலந்த நகைச்சுவை!
ஆபத்தான விமான பயணத்தின் மூலம் மியான்ம ரில் இருந்து தப்பி இந்தியாவிற்கு வந்ததிலிருந்து பம்பாய் உயர்நீதிமன்றத்தில் சர் ஜம்ஷத் ஜி கங்கா வின் அறைகளில் அவருடைய ஜூனியராக இருக்கை யில் ஒட்டி அமர்ந்தது வரை அவர் வாழ்வில் வியப்பூட்டும் நிகழ்ச்சிகளுக்கு குறையில்லை. அவருடைய சுய கழிவிரக்க நகைச்சுவைகள் பொதுவாக ஒரு தீவிர செய்தியை வெளிப்படுத்துபவை. 2007 ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருதை பெற்ற பிறகு, துணை ஜனாதிபதி பைரோன்சிங் ஷெகாவத் அவரை சந்திக்க சென்றபோது இந்த விருதைப் பற்றி அவர் இப்படி குறிப்பிட்டதை நினைவு கூர்ந்தார்: தனது சொந்த மருத்துவருக்கும் குடியரசுத் தலைவரின் மருத்துவருக்கும் குடியரசு தின விருந்து வழங்கப்பட்டது என்பதை தன்னிடம் சொல்வ தற்காகவே வந்ததை நினைவு கூர்வார். மாநிலங்க ளவை உறுப்பினராக இருந்தபோது குஜராத் கல வரத்தின் போது நடந்த கொலைகளுக்கு எதிராக துணிச்சலுடன் கருத்துக் கூறியவர். கண்களை மூடிய நிலையில் இருக்கும் விக்டோரியா நீதி தேவதையை விட இந்தியாவில் அதன் வடிவம் கண்களை திறந்து இருக்க வேண்டும் என்பதை விரும்பியவர். கண்களை மூடிக்கொண்டு தண்டனையின் வாளை எப்படி கையாளுவது? நியாயம் வழங்கும் போது உங்கள் குருட்டு கோபத்தில் வாள் குற்றவாளியை தாக்காமல் நிரபராதியை தாக்கி விடலாம் என அவர் குறிப்பிட்டார். சட்ட நிபுணரான இந்தியாவின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜியுடன் தனது நீண்ட கால தொடர்பை இப்படி கூறுவார்: “நீண்ட காலமாக நாங்கள் போட்டியாளர்களாக இருந்தோம். பின்னர் நட்பு மறைந்தது. போட்டி தொடர்ந்தது. ஆனால் வாழ்க்கையின் அந்திம காலத்தில் நாங்கள் நல்ல நண்பர்கள்.
கற்றுக் கொள்வதில் ஆர்வம்
கற்றுக் கொள்வதில் அவருடைய ஆர்வம் என்றும் குறைந்ததில்லை. உச்ச நீதிமன்ற வளாகத்தில் தன்னுடைய அறையில் அமர்வதை துறந்தார். நீதி மன்றத்திற்குள் அமர்ந்து வாதங்களைக் கேட்க, கற்றுக்கொள்ள விரும்பினார். ஓய்வறையில் நண்பர்க ளுடன் அறிவுத்தளத்தில் அளவளாவினார். இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நாரி மன் ஒரு மாபெரும் அறிவு ஜீவி என நினைவு கூர்ந்தார். தன்னுடைய வேலையில் உன்னிப்பாக இருந்த வழக்கறிஞர். அரசியல் சாசன அமர்வு வழக்கு குறித்து தன்னுடைய எழுத்துப்பூர்வமான வாதங்களை இரவில் வெகு நேரம் வரை தயாரித்துக் கொண்டி ருப்பார் என்றும் குறிப்பிட்டார். பந்தயம் முடிந்து விட்டது. வேலை செய்யும் ஆற்றல் இருக்கும் வரை பணி முடிவதில்லை. தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். அவருடைய அறிவார்ந்த வாரிசுகள் நீதிபதி ரோகிண் டன் எஸ்.நாரிமன் என்ற மகன் மற்றும் எச்.அனாஹிதா நாரிமன் என்ற மகளும் அவருடைய சட்டத்துறையில் சீரிய பணியை செவ்வனே முன்னெடுத்துச் செல்வர்.
தி இந்து 22/2/24
தமிழில் : கடலூர் சுகுமாரன்