தபால் ஊழியர்களின் அகில இந்திய அமைப் பான தேசிய அஞ்சல் ஊழியர் சங்கம் (NFPE) மற்றும் அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் (AIPEU) ஆகிய தொழிற் சங்களின் அங்கீகாரத்தை மோடி அரசின் தகவல் தொடர்பு அமைச்சகம் ரத்து செய்துள்ளது. இந்த தொழிற்சங்கங்கள் ஊழியர்களின் ஆதரவை பெற்ற அமைப்புகளாகும். குறிப்பாக NFPE 75 சதவீத ஊழி யர்களின் ஆதரவை பெற்ற அமைப்பு. 5சதவீதத்துக் கும் குறைவாக வாக்குகளை பெற்ற பிஎம்எஸ்-ன் அமைப்பு கொடுத்த புகாரை அடிப்படையாக கொண்டு அங்கீ காரம் ரத்து செய்யப்பட்டுள்ளது என பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன. இது ஏதோ இரு தொழிற் சங்க அமைப்புகளுக்கு நடந்த ஒரு தனிப்பட்ட அநீதி அல்லது ஒரு சிறிய நிகழ்வு என எண்ணுவது பேராபத் தாக முடியும். மோடி அரசின் கீழ் கட்டமைக்கப்படும் எதேச்சதிகாரத்தின் இன்னொரு முக்கிய நகர்வு இது! இதனை முறியடிக்காவிட்டால் அரசு/பொதுத்துறை களில் செயல்படும் இந்திய தொழிற்சங்க அமைப்புகள் அனைத்துக்கும் ஆபத்து என்பதை உணர வேண்டும்.
அரசு கூறும் காரணங்கள் என்ன?
அங்கீகாரம் ரத்துக்கு மூன்று காரணங்களை அரசு முன்வைக்கிறது. அவை:
1. விவசாயிகள் போராட்டத்துக்கு நிதி உதவி.
2. சிஐடியுக்கு நிதி உதவி.
3. சிபிஐ(எம்)க்கு நன்கொடை.
இந்த மூன்று காரணங்களுமே பொய்யானவை! தில்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்துக்கு NFPE நேரடியாக நிதி தரவில்லை. NFPE மத்திய அரசு ஊழியர்களின் மகா சம்மேளனத்துடன் இணைக்கப் பட்ட அமைப்பு. மகாசம்மேளனம் விவசாயிகள் போ ராட்டத்துக்கு நிதி உதவி அறைகூவல் விட்ட பொழுது NFPE சிறு தொகையை அளித்துள்ளது. மகாசம்மேள னம்தான் நேரடியாக நிதி உதவி அளித்துள்ளது. எனினும் யார் நிதி உதவி அளித்தார்கள் என்பது அல்ல பிரச்சனை. விவசாயிகள் உழைப்பாளிகளின் முக்கியப் பகுதி. ஏனைய உழைப்பாளிகளின் வர்க்கச் சகோத ரர்கள். அவர்களின் போராட்டத்துக்கு வர்க்கச் சகோத ரர்கள் என்ற அடிப்படையில் NFPE அல்லது வேறு எந்த தொழிற்சங்க அமைப்பும் நிதி உதவி அளிப்பது எப்படி தவறாக இருக்க இயலும்? அங்கீகாரம் மறுப்ப தற்கு எப்படி இது காரணமாக இருக்க இயலும்? ஆனால் மோடி அரசாங்கத்திடம் காரணத்தையும் நீதி யையும் எதிர்பார்த்தால் அது நம்முடைய தவறு தானே! மோடி ஆட்சியின் வரலாற்றில் விவசாயிகள் தான் மிகப்பெரிய தோல்வியை அளித்தனர். நாடாளு மன்றத்தில் அராஜகங்களை நடத்தி நிறைவேற்றப் பட்ட சட்டங்களை திரும்பப் பெற வைத்தனர் விவசாயி கள். அந்த கோபம் சங் பரிவாரத்துக்கு நிறையவே உண்டு. அந்த கோபத்தின் ஒரு பகுதி NFPE மற்றும் AIPEU மீது பாய்கிறது போலும்!
இன்னொரு காரணம் சி.ஐ.டி.யு.க்கு நிதி உதவி அளித்தது என்பது! இதுவும் உண்மை அல்ல. NFPE மற்றும் AIPEU உட்பட பல அமைப்புகளை இணைப்பாக கொண்டுள்ள மகாசம்மேளனம் உலக தொழிற்சங்க சம்மேளனம் WFTU உடன் தன்னை இணைத்து கொண்டுள்ளது. WFTUக்கு தர வேண்டிய இணைப்புக் கட்டணம் சி.ஐ.டி.யு. மூலம் தரப்பட்டுள் ளது. அது சி.ஐ.டி.யு.க்கு தரப்பட்ட நன்கொடை அல்ல! BPEF எனும் அமைப்பு தனது இணைப்புக் கட்டணத்தை பிஎம்எஸ் மூலம் தருகிறது. ஆனால் NFPE மற்றும் AIPEU வை மட்டும் பலிகடா ஆக்குவதன் மர்மம் என்ன? எனினும் இதிலும் ஒரு முக்கிய பிரச்சனை எழுகிறது. NFPE / AIPEU அல்லது வேறு எந்த தொழிற்சங்க அமைப்பும் இன்னொரு தொழிற்சங்க அமைப்புக்கு நிதி உதவி அளித்தால் அதில் என்ன தவறு? தொழிற் சங்கங்கள் நிதி உதவியை தொழிலாளர்களிடமும் ஏனைய சகோதர அமைப்புகளிடம்தான் பெற முடியும். கார்ப்பரேட்டுகளிடம் நிதி உதவி பெற்றால்தான் தவறு. தேர்தல் பத்திரங்கள் மூலம் யார் தருகிறார்கள் என்பதை சிதம்பர ரகசியமாக வைத்து கொண்டு பெறு வது அல்ல இந்த நிதி உதவி. அல்லது மக்களிடம் ஏமாற்றி கொள்ளை அடித்த ஆரூத்ரா போன்ற அமைப்பு களிடம் மிரட்டல் மூலம் பெறுவது அல்ல இத்தகைய நிதி! ஒரு தொழிற்சங்க அமைப்பு இன்னொரு அமைப்பு க்கு நிதி உதவி தருவது தவறு அல்ல என்பது மட்டு மல்ல! அவ்வாறு உதவி செய்வது கடமையும் கூட! அங்கீகாரம் மறுப்புக்கு இதனை காரணமாக சொல்வது தீய உள்நோக்கம் கொண்டது என்பதை எந்த ஒரு வர்க்க உணர்வு உள்ள உழைப்பாளியும் புரிந்து கொள்வார்.
தொழிற்சங்கங்களும் அரசியலும்
CPI(M)க்கு நன்கொடை தந்தது என்பது இன் னொரு குற்றச்சாட்டு! எவ்வளவு தொகை என கேட்கிறீர் களா? ரூ. 4950. இதனை ஒரு அரசியல் நன்கொடை என எடுத்து கொள்ள முடியுமா? இந்திய கார்ப்ப ரேட் நிறுவனங்கள் கோடான கோடி ரூபாய்களை அர சியல் கட்சிகளுக்கு குறிப்பாக பா.ஜ.க.வுக்கு தரு கின்றன. ஒரு அரசியல் கட்சி ரூ. 4950ஐ பெற்று என்ன செய்துவிட முடியும்? இந்த குறைந்தபட்ச பொது அறிவு கூட அங்கீகாரத்தை ரத்து செய்தவர்களுக்கு இல் லையா என கேள்வி எழலாம். ஆனால் எந்த ஒரு அற்ப காரணமாவது கிடைக்காதா என வஞ்சகத்துடன் காத்தி ருப்பவர்களிடம் பொது அறிவு பற்றி எப்படிப் பேச முடியும்? இந்த பிரச்சனையிலும் கூட உண்மை வேறு! சிறிய தொகையான ரூ. 4950 நன்கொடையாக தரப்பட வில்லை. ஒரு புத்தகத்தின் சில பிரதிகள் வாங்கியதற் காக கோவிட் காலத்தில் நேரடி தொடர்பை தவிர்க்க வங்கி மூலம் செலுத்தப்பட்ட தொகை இது!
ஒரு தொழிற்சங்க அமைப்பு அரசியல் கட்சிகளிடம் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாதா? தொழிற் சங்கங்களுக்கு அரசியல் தேவையா? என்பதெல்லாம் நீண்ட காலமாக நடக்கும் விவாதங்கள்! தொழிற் சங்கங்களும் ஏனைய வெகு மக்கள் அமைப்புகளும் அரசியலற்றதாக இருக்க வேண்டும் என்பது ஆளும் வர்க்கங்களின் எதிர்பார்ப்பு. அரசியலற்ற தன்மை என்பதுதான் லாப வேட்டைக்கு உகந்த சூழல் என்பது அவர்களின் கணக்கு. ஒவ்வொரு சமூக இயக்கமும் அரசியல் இயக்கம்தான் என்பதை அவர்கள் மறந்து விடுகின்றனர் அல்லது மறைக்கின்றனர். தொழிற்சங்க இயக்கம் ஒரு குறுகிய வட்டத்துக்குள் நின்று செயல்பட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். அத்தகைய தொழிற்சங்க இயக்கம் நாளடைவில் ஒரு சுயநல அமைப்பாக மாறும் என்பது பல அனுபவங்கள் சுட்டிக் காட்டுகின்றன. ஒரு சிறந்த தொழிற்சங்க அமைப்பு தனது உருப்பினர்களின் நலனை கருத்தில் கொள்ள வேண்டும். அதே சமயத்தில் சமூக அக்கறையும் கொண்டிருக்க வேண்டும். சமூக அக்கறை எனில் அதில் அரசியலும் உள்ளடங்கும். அரசியலை முற்றி லும் துறந்து தொழிற்சங்க இயக்கம் இயங்குவது சாத்தி யமல்ல! தொழிலாளர்களுக்கும் உழைப்பாளிக ளுக்கும் அவர்கள் சார்ந்த வர்க்க அரசியல் உண்டு. அரசியல் கட்சிகளின் அரசியலை அவர்கள் பின்பற்ற வேண்டியதில்லை. ஆனால் அவர்களின் வர்க்க அர சியலை துறந்தால் அது தொழிற்சங்க இயக்கத்துக்கே தீமையாக முடியும்.
பிஎம்எஸ்-இன் அரசியல்
தொழிற்சங்க அங்கீகார ரத்துக்கு அடிப்படை கார ணம் பிஎம்எஸ்உடன் இணைக்கப்பட்டுள்ள “பாரதிய தபால் ஊழியர்கள் சங்கம்” எனும் அமைப்பின் புகார்தான் என பத்திரிக்கைச் செய்திகள் கூறுகின்றன. தொழிற் சங்க இயக்கத்தை அழிக்க முதலாளித்துவம் முயல் வதை நாம் அடிக்கடி காண்கிறோம். ஆனால் ஒரு தொழிற்சங்க அமைப்பை இன்னொரு தொழிற்சங்கம் சிதைக்க முயலும் கொடுமையை பிஎம்எஸ் செய்துள் ளது. அத்தகைய அமைப்பு தன்னை தொழிற்சங்கம் என அழைத்துக் கொள்ள தகுதி படைத்ததுதானா? எனும் கேள்வி எழுகிறது.
பிஎம்எஸ் தன்னை அரசியல் சாராத சங்கம் என அழைத்துக் கொள்கிறது. ஆனால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தொழிற்சங்க முகம்தான் பிஎம்எஸ் ஆர்.எஸ்.எஸ்.சின் அரசியல் முகம் பா.ஜ.க. ஒரே அமைப் பின் இரு பிரிவுகளாக இருக்கும் பொழுது பிஎம்எஸ் எப்படி அரசியலுக்கு அப்பால் இருக்க இயலும்? பிஎம்எஸ் அமைப்பை உருவாக்கிட கோல்வால்கர்தான் தெங்கடி அவர்களை அனுப்பினார் என பிஎம்எஸ் தனது வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் அரசியலுக்கும் தொடர்பு இல்லை என எவராவது இன்று ஏற்றுக்கொள்வார்களா? பிஎம்எஸ்-ன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். தனது ஊழியர்களை பா.ஜ.க.வில் செயல்பட அனுப்புகிறது என்பதும் அதன் மூலம் பா.ஜ.க.வை கட்டுப்படுத்து கிறது என்பதும் ஊரறிந்த ஒன்று. அப்படி இருக்கும் பொழுது பிஎம்எஸ் தனக்கும் அரசியலுக்கு காததூரம் என சொல்வது வடிகட்டின பொய். இந்திய உழைப்பா ளிகள் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
விடுதலைப் போராட்ட வீரர் திலகர் அவர்களின் பிறந்த நாளன்றுதான் திட்டமிட்டு பிஎம்எஸ் தொடங் பப்பட்டது எனவும் அந்த அமைப்பு பெருமை கொள்கி றது. ஆனால் பிஎம்எஸ்க்கு தெரியுமா? திலகரை பிரிட்டி ஷார் கைது செய்ததை எதிர்த்து இந்திய தொழிலாளி வர்க்கம் அரசியல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது. இதனை அறிந்த லெனின் அவர்கள் இந்திய தொழி லாளி வர்க்கத்தின் அரசியல் உணர்வை பாராட்டி கட் டுரை வரைந்தார் என்பது பிஎம்எஸ்க்கு தெரியுமா?
பா.ஜ.க.வும் தானும் ஏன் ஒரே திசையில் பயணிக் கின்றோம் என்பதை பிஎம்எஸ் விளக்குமா? சனாதனத் தையும் மனுஸ்மிருதியையும் பா.ஜ.க. நிராகரித்தது இல்லை. ஏன் தானும் நிராகரிக்கவில்லை என்பதை பிஎம்எஸ் விளக்குமா? வர்ணாசிரமமும் சாதியமும் இந்து மதத்துடன் பிரிக்க முடியாத அம்சங்கள் என கோல்வால் கர் கூறுகிறார். இதனை பிஎம்எஸ்-ம் ஏற்கிறதா, நிராகரிக்கி றதா என்பதை கூற முடியுமா? பொதுத்துறைகளை யும் அதன் ஊழியர்களையும் பாதுகாக்க உரு வாக்கப்பட்ட CPSTU அமைப்பில் பிஎம்எஸ்க்கும் முக்கிய பங்கு உண்டு. ஆனால் 1992இல் பாபர் மசூதி இடிக்கப் பட்டதை கண்டித்து CPSTUல் தீர்மானம் முன்வைத்த அபொழுது CPSTUவை விட்டே விலகியது பிஎம்எஸ்! இது அரசியல் இல்லையா? விவசாயிகள் போராட்டத்தை ஆதரிப்பது ஒரு அரசியல் எனில் அதனை எதிர்ப்பதும் இன்னொரு அரசியல்தான்! எது சரியான அரசியல் என்பதுதான் பிரச்சனை! பா.ஜ.க. வின் அரசியலை அடிப்படையில் ஆதரிக்கும் சங்கம் தான் பிஎம்எஸ் என்பது இந்தியதொழிலாளி வர்க்கம் அறியும். குறைந்தபட்சம் தெங்கடியின் கோட்பாடு களை கூட கை கொள்ளாமல் பிஎம்எஸ் இன்று மோடி அரசின் தனியார் மயத்தையும் நவீன தாராளமய கொள்கைகளையும் எல்லையின்றி ஆதரிக்கிறது. அது வேறு அமைப்புகளை அரசியல் தொடர்பு என புகார் கூறுவதும் அதன் அடிப்படையில் தொழிற்சங்க அங்கீகாரம் ரத்து செய்யப்படுவதும் தற்செயலானது அல்ல; திட்டமிட்டு அரங்கேற்றப்படும் சதியாகும். இந்திய தொழிற்சங்க இயக்கம் முழுமைக்கும் விடப்பட்ட சவால் இது!
NFPEக்கும் AIPEUக்கும் நடந்த கொடுமை நாளை எந்த ஒரு அரசு அல்லது பொதுத்துறை சங்கத்துக்கும் நிகழலாம்! இந்த ஆபத்தை குறைத்து மதிப்பி டக்கூடாது. மேதினப் பேரணிக்கு ஜெர்மானிய தொழிற் சங்க தலைவர்களை அழைத்த இட்லர் அங்கேயே அவர்களை கைது செய்து சிறைக்கு அனுப்பினான். தொழிற்சங்கங்களையும் தடை செய்தான். இட்லரின் பாசிசப் பாதையில் செல்ல துடிக்கும் மோடி அரசாங்கம் மே தினத்துக்கு சில நாட்கள் இருக்கையில் தொழிற் சங்க அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளது. இத்தகைய நீசத்தனமான செயல்களை இந்திய தொழிற்சங்க இயக்கம் எதிர்கொண்டு முறியடிக்கும் என்பதில் இரண்டாவது கருத்து இருக்க இயலாது.