articles

img

பழைய பென்சன் திட்டத்தை தடுக்கும் ஒன்றிய பாஜக அரசு

மதுரை, ஆக.7- பல மாநிலங்கள் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துகின்றன. தமிழ்நாடு அரசும் பழைய பென்சன் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். பாஜக அல்லாத மாநிலங்களில் பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்து வதை ஒன்றிய அரசு தடுக்கிறது என  சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தர ராசன் கூறியுள்ளார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் (அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக மையம்) சார்பில் நடைபெற்ற முதலாவது மாநில மாநாடு மதுரையில் திங்களன்று நடைபெற்றது.  மாநாட்டுக் கொடியை மாநிலத் துணைத் தலைவர் எம்.சண்முகம் ஏற்றி னார். என்.மகாலிங்கம் தலைமை வகித் தார். ஆர்.நாகராஜன் வரவேற்றார். அஞ்சலித் தீர்மானத்தை டி.மணிமுடி வாசித்தார். மாநாட்டை சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் துவக்கி வைத் தார். வேலை அறிக்கையை எம்.சண்முக மும், நிதி-நிலை அறிக்கையை டி.விநாயக மூர்த்தியும் சமர்ப்பித்தனர். பொதுச் செய லாளர் எம்.கனகராஜ், அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநிலப் பொருளா ளர் என்.ஜெயச்சந்திரன், ஏ.ரைமண்ட்  ஆகியோர் வாழ்த்திப் பேசினர். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து சம்மேளனப்  பொதுச் செயலாளர் கே.ஆறுமுக நயினார்  நிறைவுரையாற்றினார்.  எஸ்.நடராஜன் நன்றி கூறினார்.

20 ஆயிரம் பேருந்துகளாக...

மாநாட்டில் அ.சவுந்தரராசன் பேசு கையில், ‘‘போக்குவரத்துக் கழகங்கள் உருவானபோது தமிழகத்தில் 3 ஆயி ரம் பேருந்துகள் இருந்தன. பின்னர் பேருந்துகளின் எண்ணிக்கை 20  ஆயிரமாக அதிகரித்தது. இது வளர்ச்சி யின் அடையாளக் குறியீடாக இருந்தது. ஆனால், கடந்த 20 ஆண்டுகளாக போக்குவரத்துக் கழகங்கள் தள்ளா டிக் கொண்டிருக்கின்றன. போக்கு வரத்துக் கழகங்களின் வரவுக்கும்-செலவுக்குமான வித்தியாசத் தொகை யை போக்குவரத்துக் கழகங்களுக்கு தமிழ்நாடு அரசு அளித்திருந்தால் நஷ்டத்திலிருந்தும், தள்ளாட்டத்தி லிருந்தும் தப்பியிருக்கும். இலவசப் பயணத்தின் மூலம் ஆகும் செலவை தமிழக அரசு கொடுக்கிறது. இதன் மூலம் தள்ளாட்டத்திலிருந்து ஒரு  சில போக்குவரத்துக் கழகங்கள் தப்பு கின்றன. மேலும் நம்மால் புதிய பேருந்து களையும் வாங்க முடிந்துள்ளது. இதே போன்று அனைத்து வகையிலும் இல வசத்திற்காக பயன்படும் தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும். போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றுபவர்கள் நிலு வை ஊதியம், பஞ்சப்படிக்காக இன்றும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். பென்சன் கேட்டுப் போராடுபவர்கள் அனைவரிடமும் பஞ்சப்படி பிரச்சனை யும் உள்ளது. ஓய்வு பெற அனுமதித்தால் தானே பென்சன் வழங்கவேண்டும். வயது வரம்பை நீட்டித்துக்கொண்டே சென்றால் பணியாளர் தொடர்ந்து பணி யாற்றுவர் என்ற கொடூர முதலாளித்துவ சிந்தனை பல நாடுகளில் உள்ளது. அதற்கெதிராக அங்கு தொடர் போரா ட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ஓய்வூதியம் ஒன்றும் பாசத்திற்காக, பந்தத்திற்காக தரப்படுவதல்ல. அது கொடுக்கப்படா ஊதியம். அதை ஓய்வு பெற்றோர் கேட்பது அவர்களின் உரிமை. அதை வழங்க வேண்டியது அரசின் கடமை. 

ஒன்றிய அரசு தவறுகளை மறைக்க முயற்சி

ஒன்றிய அரசு தாம் செய்யும் தவறுகளை பட்டுத்துணி போட்டு மறைக்க முயல்கிறது. ஒன்றிய அரசை வீழ்த்துவதற்காக ‘இந்தியா’ அணி  உருவாகியுள்ளது. இந்த அணி, ‘‘பொதுத் துறையை பாதுகாப்போம். ஊதியத்தின் உண்மை மதிப்பைப் பாதுகாப்போம். சமூக நீதியை பாதுகாப்போம்’’ என உறுதி யளித்துள்ளது.  தொழிலாளர்களுக்கு விரோதமாகச் செயல்படும் ஒன்றிய அரசை வீழ்த்து வது நமது கடமை. நாம் நமது போராட்டங் களை நிதானமாக, பொறுமையாக நடத்த வேண்டும். நமது போராட்டம் வெற்றியும் பெற வேண்டும். தொழிலாளர்களுக்கோ, தொழிற்சங்கத்திற்கோ பாதிப்பு ஏற்படா மலும் போராட்டங்களைத் தொடர வேண்டும். இறுதி வெற்றி தொழிலாளி வர்க்கத்திற்கே. ஒற்றுமையை யாராலும் சிதைக்க முடியாது’’ என்றார். மாநாட்டில், அனைத்துத் துறையிலும் பணி ஓய்வு பெற்றவர்களுக்கு அக விலைப்படி வழங்குவது போல் நிறுத்திய பஞ்சப்படியை ஓய்வு பெற்ற போக்கு வரத்துக் கழக ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும்; ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கும் ஓய்வு பெற்ற மற்ற ஊழியர்களுக்கு வழங்குவது போல் மருத்துவக் காப்பீட்டு வசதி செய்து தர வேண்டும். குடும்பப் பாதுகாப்பு நிதியாக ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும்; புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்தை 2003-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் பணியில் சேர்ந்த அனைவருக்கும் அமல்படுத்த வேண்டும். ஒப்பந்தங்களின் உயர்வை ஓய்வூதியத்திலும் அமல்படுத்த வேண்டும். ஓய்வூதியர்களுக்கும் வாரிசு களுக்கும் பல வருடங்களாக நிலுவை யில் உள்ள பென்சன் அரியரை உடன டியாக வழங்க வேண்டும் என்பன உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.