2024 பிப்ரவரி 20 அன்று உடனடி யாக போர் நிறுத்தத்திற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மற்றுமொரு தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது அமெரிக்கா மறுபடியும் அதனை தன் ரத்து (வீட்டோ) அதிகாரத்தைக் கொண்டு நிறைவேறவிடாமல் செய்து துள்ளது. காசாவில் போர்நிறுத்தம் ஏற்படுவதற்காக ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்படும் தீர்மா னத்தைத் தனக்கிருக்கும் ரத்து அதிகாரம் மூலம் அமெரிக்கா தடுத்திருப்பது இது மூன்றாவது முறையாகும். முதலில் 2023 அக்டோபரிலும், அடுத்து டிசம்பரிலும் இவ்வாறு தடுத்தது. இப்போது மூன்றாவது முறையாக ரத்து அதிகா ரம் மூலம் தடுத்திருக்கும் இன்றைய நிலையில், இஸ் ரேல் பாலஸ்தீனர்களை இனப்படுகொலை செய்து அக்டோபர் 7இலிருந்து இதுவரையிலும் 29,500க்கும் மேற்பட்டோரை கொன்று குவித்திருக்கிறது, 69 ஆயிரம் பேரை காயங்களுக்கு உட்படுத்தியிருக்கிறது. இறந்தவர்களில் 12,500 பேர் குழந்தைகளாவர்.
அமெரிக்காவின் இரட்டை வேடம்
இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு காசா பகுதியில் மீதமிருக்கும் நகரமான ரஃபா மீது தாக்குதல் விரை வில் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்திருக்கிறார். காசாவின் தெற்கு முனையில் ரஃபா உள்ளது, அந்த பகுதி 14 லட்சம் மக்களால் நிரம்பி வழிகிறது. அவர்களில் பெரும்பாலானோர் வடக்கு மற்றும் மத்திய காசாவை விட்டு வெளியேறிய பிறகு அங்கு தஞ்சம் அடைந்த வர்கள். ரஃபா மீதான தாக்குதல் பேரழிவை ஏற்படுத் தும் என்று ஐக்கிய நாடுகள் மன்றம் எச்சரித்துள்ளது. அமெரிக்கா, சமீபத்தில் பாலஸ்தீனர்கள் படு கொலை செய்யப்படுவது குறித்து கவலை தெரிவித்துள் ளது. காசா மீது தாக்குதல் தொடுக்க வேண்டாம் என்று இஸ்ரேலைக் கேட்டுக்கொண்டும் உள்ளது. எனினும், இது தொடர்பாக ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சி லில் போர் நிறுத்தத்திற்காக தீர்மானம் கொண்டு வரப்படும்போது அதனைத் தன்னுடைய ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தி நிறைவேறவிடாமல் செய்கிறது. பைடன் அரசாங்கமும், அமெரிக்க நிர்வா கமும் இரட்டை வேடம் போட்டுக் கொண்டிருக்கின்றன. இஸ்ரேல் அரசாங்கம் மனிதகுலத்திற்கு எதிராக குற்றங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு உற்ற துணையாக இருந்து வருகிறது.
காசாவில் இஸ்ரேல் பயன்படுத்தும் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்து பொருள்களில் பெரும்பாலா னவை அமெரிக்கா வழங்கியதேயாகும். அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர், ஆண்டனி பிளிங்கன், அடிக்கடி இஸ்ரேலுக்கும், அண்டைநாடுகளாகவுள்ள அரபு நாடுகளுக்கும் சென்று மேற்கொண்ட அனைத்து ராஜதந்திர நடவடிக்கைகளும், யுத்தத்திற்கு முற்றுப் புள்ளி வைப்பதற்காக அல்ல, மாறாக, ஹமாசால் பிடித்து வைக்கப்பட்டுள்ள இஸ்ரேல் பணயக் கைதி களை விடுவிப்பதை நோக்கமாகக் கொண்டதேயாகும். இறுதியாக, காசாவில் இனப்படுகொலைக்கு எதிராக வளர்ந்து வரும் சர்வதேசக் குரலை எதிர் கொண்ட அமெரிக்கா, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ஒரு மாற்றுத் தீர்மானத்தை வெளியிட்டது. அதில்முதன் முறையாக “போர் நிறுத்தம்” என்ற சொல்லைக் குறிப்பி டுகிறது. ஆனால் “நடைமுறையில் அது நடைமுறைக்கு வர வேண்டும்” என்று கூறுகிறது. அதாவது,இஸ்ரேல் நினைத்தால் மட்டுமே அதை செய்ய முடியுமாம்.
இஸ்ரேல் ஆக்கிரமிப்பை கண்டிக்காத இந்தியா
காசா மீதான இஸ்ரேலியப் போர் தொடர்பாக மோடி அரசாங்கத்தின் நிலைப்பாடும் இதேபோன்றே அமெ ரிக்காவின் இரட்டைப் பேச்சு மற்றும் பாசாங்குத் தனத்தையே பிரதிபலிக்கிறது. அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலுக்கு முழு ஆதரவாக வெளியே வந்த பாஜக அரசாங்கம், காசா மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பைக் கண்டிப்ப தில் இருந்து கவனமாக விலகியிருக்கிறது. ஐக்கிய நாடுகள் பொது மன்றத்தில், போர் நிறுத்தம் தீர்மானத்தின்மீது 2023 அக்டோபரில் முதல் வாக்கெ டுப்பு நடத்தப்பட்டபோது, இந்தியா தீர்மானத்தை ஆத ரிக்காமல், ஒதுங்கிக்கொண்டது. இரண்டாவது தடவை யாக டிசம்பரில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது, இஸ்ரேலின் நடவடிக்கைக்கு எதிராக உலகளாவிய தெற்கு நாடுகள் கண்டனம் தெரிவித்த சமயத்தில், ஹமாசின் வன்முறை தாக்குதல்களைக் கண்டிக்கும் திருத்தம் வீணாகிவிட்டநிலையில், இந்தியா தீர்மா னத்திற்கு ஆதரவு அளித்து வாக்களித்தது.
தாக்குதல் தொடுக்கக் கூடாதென வெளிப்படையாகக் கூறவில்லை
இரண்டு மாதங்களுக்குப் பிறகு, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ஹமாசின் அக்டோபர் 7 தாக்கு தலுக்குப் பதிலடி கொடுத்த சமயத்தில் இஸ்ரேல், பொது மக்களின் உயிரிழப்பு குறித்து மிகவும் கவன மாக இருந்திருக்க வேண்டும் என்று கூறியிருந்தார். மேலும் அவர், இஸ்ரேல் சர்வதேச மனிதாபிமான சட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய கடப்பாடு உண்டு என்றும் கூறியிருந்தார். முனீச்சில் பிப்ரவரி 17 அன்று பாதுகாப்பு மாநாடு நடைபெற்ற சமயத்தில் இவ்வாறு அவர் கூறியிருந்தார். ஆனாலும் இதுவரையிலும் இந்திய அரசாங்கம், ரஃபா நகரத்தின்மீது இஸ்ரேல் தாக்குதல் தொடுக்கக்கூடாது என்று வெளிப்ப டையாகக் கூற முன்வரவில்லை. ரஃபாவில் இஸ்ரேல் ராணுவ நடவடிக்கை எடுக்குமா னால் அது பேரழிவினை ஏற்படுத்திடும் என்று “மிகவும் கவலைப்படுவதாக”க்கூறி, அங்கே உடனடியாக போர்நிறுத்தம் வேண்டும் என்று கோரி, ஆஸ்திரே லியா, கனடா மற்றும் நியூசிலாந்து பிரதமர்கள் எல்லாம் கூறி, கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ள போதிலும்கூட, இந்தியா எதுவும் கூறாமல் இருந்துவரு கிறது. மேலே கூறிய மூன்று நாடுகளும் அமெரிக்கா வுக்கு மிகவும் நெருக்கமானவைகளாகும். ஆஸ்திரே லியா, அமெரிக்கா அமைத்துள்ள ‘குவாட்’ என்னும் நான்கு நாடுகள் கூட்டணியில் இந்தியா போன்று உள்ள மற்றுமொரு நாடாகும். இந்தியாவின் இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாடு, அதனுடன் பிரிக்ஸ் கூட்டணியில் உள்ள தென்னாப் பிரிக்கா, பிரேசில் ஆகியவற்றின் நிலைப்பாட்டுக்கு முற்றிலும் எதிரானதாகும்.
இந்தியாவின் இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாடு, அதனுடன் பிரிக்ஸ் கூட்டணியில் உள்ள தென்னாப் பிரிக்கா, பிரேசில் ஆகியவற்றின் நிலைப்பாட்டுக்கு முற்றிலும் எதிரானதாகும். இனப்படுகொலைக்கு எதிரான உடன்படிக் கையை இஸ்ரேல் மீறியிருக்கிறது என்று இஸ்ரேலை அறிவிக்கக் கோரி, சர்வதேச நீதிமன்றத்தில் (ICJ-Inter national Court of Justice) மனு தாக்கல் செய்ததன் மூலம் தென்னாப்பிரிக்கா உலகளாவிய தெற்கின் மரி யாதையையும் பாராட்டையும் பெற்றுள்ளது. இதன் விளைவாக, இனப்படுகொலைக்கு சமமான எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று இஸ்ரே லுக்கு, சர்வதேச நீதிமன்றம் கட்டளைகள் பிறப்பித்துள் ளது. பிரேசில் ஜனாதிபதி லூலா டி சில்வா, காசாவில் இஸ்ரேலின் இனப்படுகொலைப் போரை திட்டவட்ட மாக கண்டித்துள்ளார். மேலும் அதனை படுகொலை கள் (Holocaust) என்று கூறியுள்ளார். இதன் விளை வாக இஸ்ரேலுக்கும் பிரேசிலுக்கும் இடையே ராஜ தந்திர விரிசல் ஏற்பட்டு இரு நாடுகளும் தங்கள் தூதர்களை திரும்ப அழைத்துக்கொண்டுள்ளன.
அமெரிக்கா போல உடந்தை...
பொதுமக்களின் உயிரிழப்புகளை கவனத்தில் கொள்ளுமாறு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இஸ்ரேலுக்கு கூறிய அறிவுரை வெறும் பாசாங்குத்தன மேயாகும். ஏனெனில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 20 ஹெர்ம்ஸ் ஆளில்லா ராணுவ விமானங்களை (டிரோன் களை) இந்தியா இஸ்ரேலுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. ஹைதராபாத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் டிரோன்களை தயாரிப்பதற்காக அதானி குழுமம் மற்றும் இஸ்ரேலின் எல்பிட் சிஸ்டம்ஸ் இடையே ஒரு கூட்டமைப்பு (Joint Venture) ஏற்படுத்தப்பட்டி ருக்கின்றது. ஹெர்ம்ஸ் ஆயுதமேந்திய ஆளில்லா விமானங்கள் இஸ்ரேலிய இராணுவத்தால் காசா வில் லேசர் வழிகாட்டி குண்டுகளை வீச பயன்படுத்தப் படுகின்றன. எனவே பாலஸ்தீன மக்களின் படுகொலை க்கு அமெரிக்காவைப் போல இந்தியாவும் உடந்தை யாகவே இருந்து வருகிறது. இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே வளர்ந்து வரும் இராணுவ ஒத்துழைப்பு காரணமாக, இஸ்ரேல் இந்தியாவிற்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் இரண்டாவது பெரிய நாடாக மாறி இருப்பது மட்டுமல்லாமல், இந்தியாவில் உள்ள தனியார் பாது காப்புத் துறையும் இஸ்ரேலிய ஆயுத நிறுவனங்களு டன் இணை தயாரிப்பு ஒப்பந்தங்களை மேற்கொண் டுள்ளது. அதானி-எல்பிட் அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் அத்தகைய நிறுவனங்களில் ஒன்றாகும். மற்றொன்று கல்யாணி ரபேல் அட்வான்ஸ்டு சிஸ்டம் என்பதாகும்.
ராணுவ ஒத்துழைப்பை நிறுத்த வேண்டும்
2014இல் மோடி அரசு பதவியேற்றதில் இருந்து இஸ்ரேலில் இருந்து 42 விழுக்காடு ஆயுத ஏற்றுமதி இந்தியாவிற்கு வந்துள்ளது. இந்தியாவிலிருந்து சில மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுத ஏற்றுமதி இஸ்ரே லுக்கு சென்றுள்ளது. பாலஸ்தீனப் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான படுகொலைகள் குறித்து மோடி அரசுக்கு கிஞ்சிற்றாவது கவலை இருக்குமாயின் அது, ஆயுதம் ஏந்திய ஆளில்லா விமானங்கள் உட்பட இஸ்ரேலுக்கான ஆயுத ஏற்றுமதியை உடனடியாக நிறுத்த வேண்டும். இஸ்ரேலுடனான இராணுவ ஒத்து ழைப்பை நிறுத்த வேண்டும். ஆனால் அப்படி யெல்லாம் மோடி அரசாங்கம் செய்யாது. ஏனெனில், அது இஸ்ரேலிய போர் இயந்திரத்தின் நிதியளிப்ப வர்களில் ஒன்றாகும். இந்த சமயத்தில், பதினொரு முக்கிய இந்தியத் துறைமுகங்களில் பணியாற்றும் 3,500 தொழிலா ளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய நீர் போக்கு வரத்து கூட்டமைப்பு, பாலஸ்தீன மக்களுக்கு எதிராக ஆயுதங்கள் தாங்கிய கப்பல்களில் வரும் ஆயுதங்க ளை ஏற்றவோ, இறக்கவோ மாட்டோம் என்று எடுத்த முடிவைப் பாராட்ட வேண்டும். இந்த நிலைப்பாடு, மோடி அரசாங்கத்தின் நிலைப்பாட்டைப் போல் அல்லா மல், இந்திய மக்களின் ஏகாதிபத்திய எதிர்ப்புடனும், அமைதியை விரும்பும் உணர்வுகளுடனும் ஒத்துப் போகின்றன.
பிப்ரவரி 21, 2024,
தமிழில் : ச.வீரமணி