articles

img

செவ்விதனின் சேட்டைகள் - ஈரோடு அஞ்சலி

செஞ்சோலை கிராமத்தில் சில அடுக்குமாடி வீடுகளுக் கும், நிறைய‌ ஓட்டு வீடுகளுக்கும் இடையில் செந்நிறத்தில் செவ்வித னின் வீடு இருக்கிறது. அங்கு செவ்விதன் தன் பெற்றோர்களுடன் வசித்து வருகிறான்.தினமும் அதிகாலையில் செங்கதிரவனின் ஒளி அவ்வீட்டின் நுழைவுவாயில் மீது பட்டவுடன் செவ்விதன் சுறுசுறுப்பாக எழுந்து அந்நாளை தொடங்குவான். செவ்விதன் எப்போதும் சுறுசுறுப்பாக தன் நண்பர்களுடன் அங்கும் இங்கும் சுற்றி கொண்டே இருப்பான்.      செவ்விதன் உடல் முழுவதும் செந்நிறமாக இருக்கும் ஒரு குளவி‌. இப்போது செவ்விதன் தன் அம்மாவின் அருகில் அமர்ந்து விளையாடி கொண்டு இருக்கிறான். செவ்விதனின் அம்மா, “மழை காலம் தொடங்குவதற்கு  முன் நாம் வேறு இடத்தில் வீடு கட்ட வேண்டும் என்றும், நேற்று மாலையில் திடீரென கிழக்கு திசைலிருந்து இளங்காற்றுடன் வந்த சாரல் மழை துளிகள் நமது வீட்டின் மீது உராசி உராசி சென்றதில் நம் மண் வீடு சேதம் அடைந்துவிட்டது. அதனால் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம்” என்று செவ்விதனின் அப்பாவிடம் கூறிக்கொண்டு இருந்தாள். 

செவ்விதனின் அப்பா, “ஆமாம் நாம் சீக்கிரமாக வேறு இடத்தில் வீடு கட்ட வேண்டும் என்றும் அதுதான் நமக்கு பாதுகாப்பானதும்” கூட என்றார். நான் இப்போதே சென்று வீடு கட்டுவதற்கான சரியான இடத்தை தேர்வு செய்து வருகிறேன் என்று செவ்விதனின் அப்பா புறப்பட்டார். உடனே செவ்விதன், “அப்பா நானும் உங்களுடன் வீடு கட்டும் இடத்தை எப்படி தேர்வு செய்வது என்று பார்க்க வருகிறேன்” என்றான். செவ்விதனின் அம்மா, “நீ செல்ல வேண்டாம், அங்கும் இங்கும் சென்று கொண்டு அப்பாவை தொந்தரவு செய்வாய். என்னுடனே இரு” என்றாள். செவ்விதன் , நான் அப்பாவை தொந்தரவு செய்யமாட்டேன். “ப்ளீஸ் பா நானும் வருகிறேன்” என்று ரொம்ப அடம்பிடித்தான்.  சரி நீயும் வா என்றார். செவ்விதனுக்கு மிகுந்த மகிழ்ச்சி. செவ்விதனின் அம்மா, “இருவரும் கவனமாக செல்லுங்கள்” என்று வழி அனுப்பி வைத்தாள். சரி என்று கூறி இருவரும் பறந்தனர்.  செவ்விதன் தன் அப்பாவிடம் “நாம்‌ எந்த மாதிரி  யான இடத்தில் வீடு கட்டு வேண் டும்? நான் உங் களுக்கு‌ உதவி செய்கிறேன்” என்று ஓயாமல் பேசிக் கொண்டே வந்தான். செவ்விதனின் அப்பா, “நான் உனக்கு அனைத்தும் சொல்லி தருகிறேன்” என்றார். “சரிப்பா” என்று கூறி செவ்விதன் அப்படியே நின்றுவிட்டான்.  “அப்பா இங்கே பாருங்கள். இந்த சிறிய ஓட்டையின் வழியாக ஏதோ சத்தம் வருகிறது. வாருங்கள் உள்ளே சென்று பார்க்கலாம்” என்றான் செவ்விதன். “வேண்டாம் இந்த இடம் நமக்கு சரிப்பட்டு வராது. வா போகலாம்” என்றார் செவ்விதனின் அப்பா. செவ்விதன் தன் அப்பாவின் பேச்சை கேட்காமல் அந்த ஓட்டையின் வழியாக உள்ளே சென்றுவிட்டான். 

“டேய் செவ்விதா நில், தனியாக செல்லாதே நானும் வருகிறேன்” என்று செவ்விதனின் அப்பாவும் உள்ளே சென்றார். செவ்விதன் இதற்கு முன் ஏ.சி. லைட், ஃபேன், கஃபோடு என்று இந்த மாதிரியான பொருட்கள் நிறைந்த அறையை பார்த்தது இல்லை, அதனால் செவ்விதனுக்கு இவ்விடம் மிகவும் பிடித்துவிட்டது. இங்குதான் வீடு கட்ட வேண்டும் என்று மனதில் நினைத்து கொண்டான். தன் அப்பாவிடம் “ஐ... அப்பா இங்கே பாருங்கள். எவ்வளவு இடம், பொருள்கள் இருக்கிறது, நாம் இங்கே வீடு கட்டி கொள்ளலாம்”. செவ்விதனின் அப்பா, இவ்விடம் நாம் வீடு கட்டுவதற்கு ஏற்ற இடமில்லை.  “ஏன் அப்பா. இதோ இங்கே பாருங்கள். இந்த சத்தம் வரும் இடத்திலிருந்து குளு குளு காற்று வருகிறது. நாம் இந்த இடத்தில் வீடு கட்டினால் நான் குளு குளு காற்றுடன் ஜாலியாக விளையாடி கொண்டு இருப்பேன்” என்றான் செவ்விதன்.  செவ்விதனின் அப்பா, “இதன் பெயர் ஏ.சி. குளிர்ந்த காற்றை தரும். நம் வீடு மண் வீடு இந்த குளிர்ந்த காற்று நம் வீட்டின் மீது பட்டுக்கொண்டே இருந்தால் சீக்கிரமாக இடிந்துவிடும்” என்றார். “ஓ அப்படியா. அப்போ இங்கே வீடு கட்ட வேண்டாம்” என்று சொல்லிக் கொண்டே அறை முழுவதும் பறந்து சுற்றி பார்த்தான். 

அப்போது செவ்விதன் “ஆ‌.. இங்கே சூடாக உள்ளது‌ இங்கு வீட்டை கட்டிக் கொள்ளாலாம். நம் வீடும் இடிந்து விழாது” என்றான். செவ்விதனின் அப்பா, “இது தான் வெளிச்சம் தரும் லைட். இந்த லைட்டில் இருந்து வெளிவரும் சூட்டை சிறிது நேரத்திற்கு மேல் நம்மால் தாங்கி கொள்ள முடியாது” என்றார். “ஓ... அப்படினா இந்த லைட்டிலும் வீடு கட்ட முடியாதா” என்று சோகமாக கூறினான்.  அப்போது செவ்விதன் கூரையின் மீது பொருத்தப்பட்ட ஃபேனை பார்த்து, “இந்த நீள் தட்டின் மீது வீடு கட்டி கொள்ளலாம். இங்கு நம் வீடு இருந்தால் நானும் என் நண்பர்களும் மேலிருந்து கீழ், கீழிருந்து மேல் என்று பறந்து பறந்து விளையாடுவோம்” என்றான். செவ்விதனின் அப்பா, சிரித்து கொண்டே “இதுதான் ஃபேன். இது சுழன்று காற்றை தரும்” என்றார். செவ்விதன் “அப்படியா இது சுழலுமா”, “ஆமாம், நீ முதலில் இதில் வந்து உட்காரு” என்றார் செவ்விதனின் அப்பா.  செவ்விதன் மிகுந்த மகிழ்ச்சியோடு வந்து உட்கார்ந் தான். அவன் அப்பா இறக்கையை தள்ளினார் இறக்கையை மெதுவாக சுழன்றது. “ஐய்ய்.... அப்பா ஜாலியா இருக்கு” என்று மகிழ்ச்சியில் கத்தினான் செவ்விதன். இன்னும் வேகமாக தள்ளினார் இறக்கையை வேகமாக சுழன்றது. 

“ஆ.. ஆ.. அப்பா போதும் தலை சுற்றுகிறது. நிறுத்துங் கள் நிறுத்துங்கள்” என்று செவ்விதன் கத்தினான். செவ்விதனின் அப்பா தள்ளுவதை நிறுத்தினார். “ஆ... அப்பா எனக்கு வாந்தி வருவது போல் இருக்கு‌” என்றான் செவ்விதன். செவ்விதனின் அப்பா அவனை உட்கார வைத்தார்.  “செவ்விதா, இப்போ சொல். இங்கேயே வீடு கட்டிகலாமா?” என்றார் செவ்வியின் அப்பா. “வேண்டாம் வேண்டாம். இங்கு வீடு கட்டினால் தலை சுற்றி வாந்தி எடுக்க வேண்டியதுதான் இங்கு வீடு கட்ட வேண்டாம்” என்றான் செவ்விதன். செவ்விதனின் அப்பா, “நானும் உன்னை போல் சிறு  வயதாக இருக்கும் போது என் அப்பாவிடம் ஃபேனில் வீடு கட்டலாம் என்று கேட்டு, நானும் உன்னை போல் தலை சுற்றி வேண்டாம் வேண்டாம் என்றேன். அப்போது என் அப்பாவிடம் எங்கே வீடு கட்ட வேண்டும் என்று கேட்டேன்.  அதற்கு நாம் வீடு கட்டும் இடத்திற்கு அருகில் வீடு கட்டுவதற்கு தேவையான மண் கிடைக்குமாறும், வீடு கட்டும் இடத்திற்கு அருகில் நாம் உண்ணும் உணவு கிடைக்குமாறும், வீடு கட்டும் இடம் மழையால் சேதம் அடையாதவாறும், வீட்டின் மீது சூரியனின் ஒளி படுமாறும், நமக்கு பாதுகாப்பானதாகவும் மற்றவர்களுக்கு இடையூறு இல்லாதவாறும் இருக்க வேண்டும்” என்றார்  என்றும் செவ்விதனின் அப்பா கூறினார். செவ்விதனுக்கு இப்போது வீடு எந்த இடத்தில் கட்ட வேண்டும் என்ற வழிமுறை தெரிந்ததுவிட்டது. செவ்விதனும், அவன் அப்பாவும் வீடு கட்டுவதற்கான சரியான இடத்தை தேடி பறந்தார்கள்.