உலக சுகாதார அமைப்பு தொடங்கப் பட்டு 75 ஆண்டுகள் ஆகியுள்ளன. இந்த எழுபத்தைந்து ஆண்டுகளில் பல பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. பெரியம்மை நோயினை ஒழித்திட அரும்பாடு பட்டிருக்கிறது. ஆரம்ப சுகாதார பாதுகாப்பிற்கான லட்சியமான அல்மா அடா உடன்படிக்கையை நிறைவேற்றிடத் தொடங்கியது. தற்போது “நிலை யான வளர்ச்சி இலக்குகளை” அடைய உலகளாவிய முயற்சி எடுத்து வருகின்றது. இருப்பினும், உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் உலக சுகாதார அமைப்பின் செயல் பாடுகளை நீர்த்துப் போகச் செய்கின்றன. நவீன தாராளவாத பொருளாதாரம் மற்றும் பலதரப்புவா தத்தின் மீதான தாக்குதல்கள் உலக சுகாதார அமைப்பின் (WHO)பணிக்கு கடினமான சூழலை உருவாக்கியுள்ளது. அதன் சுதந்திரமான செயல்பாடு மற்றும் குறைந்தபட்ச சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்திடும் திறன் கடுமையாகப் பாதிக்கப் பட்டு வருகின்றன.
உலக சுகாதார அமைப்பின் வேர்கள்
உலக சுகாதார அமைப்பு (WHO) 1948 இல் நிறு வப்பட்டது, ஆனால் அதன் வடிவம் மற்றும் செயல்பாடு, லீக் ஆஃப் நேஷன்ஸ் ஹெல்த் ஆர்கனை சேஷன் (LNHO)- இன் தொடர்ச்சியாகும். ஆரம்பத்தி லிருந்தே, அதன் வருடாந்திர முடிவெடுக்கும் கூட்ட மான உலக சுகாதார சபை, “ஒரு நாடு, ஒரு வாக்கு” என்ற கோட்பாட்டின் கீழ் இயங்கியது. பொருளாதார அல்லது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தாமல் ஒவ்வொரு நாடும் சமமாக இருப்பது என்பதே இதன் பொருள். பொது சுகாதாரத் தேவைகளைத் தவிர வேறு காரணிகளால் பாதிக்கப்படக்கூடிய பிரச்சனை களை, பெரும்பான்மை வாக்குகளுக்குப் பதிலாக உரையாடல் மூலம் தீர்ப்பதே உள்ளார்ந்த நோக்க மாகும். உலகளாவிய சுகாதாரத்தின் அனைத்து அம்சங் களை நிறைவேற்றுவதற்காகவோ அல்லது அபராதம் விதிப்பதற்காகவோ இவ்வமைப்பு உருவாக்கப்பட வில்லை. அதன் செயல்திறன் மற்றும் வெற்றி, உறுப்பி னர்களின் ஒத்துழைப்பையும் ஒற்றுமையையும் சார்ந்துள்ளது. பெரியம்மை நோயை வெற்றிகரமாக ஒழித்தது இத்தகைய இணைப்பின் ஒரு முக்கிய உதாரணம் ஆகும். இப்பணியில் நாடுகள் தங்கள் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து, தங்களுக்குள்ளும் மற்றும் உலக சுகாதார அமைப்புடனும் நெருக்கமாக வேலை செய்தன.
உலக சுகாதார அமைப்பின் முன்னுரை ஒன்பது கொள்கைகளை உள்ளடக்கியது. “சுகாதாரம் என்பது முழுமையான உடல், மன மற்றும் சமூக ரீதியான நல்வாழ்வின் நிலையினைக் குறிப்பதாகும். மேலும், நோய் மற்றும் உடல்நலக் குறைவு இல்லாததை மட்டும் குறிப்பதல்ல” என்ற சொற்றொடர் அடிக்கடி குறிப்பி டப்படுகிறது. மற்ற கொள்கைகளும் குறிப்பிடத் தக்கவை. அனைத்து மக்களின் சுகாதாரத்திற்கான அடிப்படை உரிமை, சுகாதாரத்தில் உலக அளவில் குறிப்பிடும்படியான மற்றும் சமமான வளர்ச்சியை முன்னிறுத்துவது, ஆரோக்கியமான சமூகத்தைப் பெற்றிட குழந்தை வளர்ச்சி மற்றும் கல்வியின் பங்கு, பொது சுகாதாரத்தை மேம்படுத்த தகவலறிந்த பொதுக் கருத்து மற்றும் ஒத்துழைப்பின் முக்கியத்து வம், குடிமக்களைப் பாதுகாப்பதற்காக போதிய சுகாதார மற்றும் சமூக நடவடிக்கைகளை அரசாங் கங்கள் தங்கள் கடமையாக வழங்குதல் ஆகியன வலி யுறுத்தப்படுகின்றன.
ஏகாதிபத்திய சுகாதாரத்திலிருந்து சமூக மருத்துவம் வரை
“ஒரு நாடு, ஒரு வாக்கு” என்ற கொள்கை இருந்த போதிலும், உலக சுகாதார அமைப்பின் முடிவுகள் எப்போதும் நிறுவனத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அரசியலால் பாதிப்புக்கு உள்ளாகின்றன. அதன் உருவாக்கம் மற்றும் பனிப்போரின் தொடக்கத்திற்குப் பிறகு, உசுஅ (WHO) அமெரிக்க வெளியுறவுக் கொள்கையுடன் மிகவும் நெருக்கமாக இணையத் தொடங்கியது. இதன் காரணமாக, 1949 க்கும் 1950 களின் நடுப்பகுதி வரை, சோவியத் யூனியனும் அதன் கூட்டாளிகளும் உசுஅவை விட்டு வெளியேறினர். சமூக மருத்துவம் கேள்விக் குறியானது. இதன் விளை வாக, சமூக மருத்துவக் கொள்கைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, காலாவதியான, நோய் சார்ந்த, ‘ஏகாதி பத்திய சுகாதாரம்’ எனும் அணுகுமுறையை உசுஅ புதுப்பிக்கிறது. இருப்பினும், உலக சுகாதார அமைப்பின் அன்றைய தலைவர்கள், நிறுவனத்தின் முன்னுரிமை பட்டியலில் சமூக மருத்துவம் மீண்டும் வரும் என்று நம்பிக்கையுடன் இருந்தனர். 1970களின் பிற்பகுதியில், பெரியம்மை ஒழிப்பு போன்ற பிரச்சாரங்களின் வெற்றியைத் தொடர்ந்து, உசுஅ (WHO) அதன் அடித்தளத்தை மறுபரிசீலனை செய்ய முடிந்தது. டாக்டர். ஹாஃப்டன் மஹ்லரின் தலைமையின் கீழான இந்நிறுவனம் அதன் ஆரம்ப சுகாதாரப் பாதுகாப்பு உத்தி மூலம் சமூக மருத்துவம் குறித்து சிந்திக்கத் தொடங்கியது. இத்தகைய அணுகு முறை சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதை யும், குறிப்பாக கிராமப்புறங்களில் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை ஆதரிப்பதையும் நோக்க மாகக் கொண்டிருந்தது.
இவ்வமைப்பு, 1937 இல் லீக் ஆப் நேஷன்ஸ் ஹெல்த் ஆர்கனைசேஷன் (LNHO) ஆல் ஆய்வு செய்யப்பட்ட சிந்தனைகளைப் போலல்லாமல், கிராமப்புற சுகாதாரம் குறித்த, தொலை தூர கிழக்கு நாடுகளின் அரசுகளுக்கிடையேயான மாநாட்டின் போது, சுகா தாரத்திற்கும் சமூக முன்னேற்றத்திற்கும் இடையிலான தொடர்பை வலியுறுத்தியது. 1978 ஆம் ஆண்டு இன்றைய கஜகஸ்தானில் உள்ள அல்மா அடாவில் ஆரம்ப சுகாதார பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இதில் உலகின் அனைத்து நாடுகளும், “அனை வருக்கும் ஆரோக்கியம்” மேம்படுவதற்கான மற்றும் உலகின் தெற்குப் பகுதியில் உள்ள சுகாதார பிரச்ச னைகளை நிவர்த்தி செய்வதற்கான கட்டமைப்பை வரையறுப்பதையும் ஏற்றுக் கொண்டன. இந்த மாநாடு அல்மா அடாவின் பிரகடனத்தை உருவாக்கி யது. இது உலகெங்கிலும் உள்ள சுகாதார இயக்கங் கள் இன்றும் பின்பற்றுகிற ஆரம்ப சுகாதார பாது காப்பு இலட்சியங்களை கோடிட்டுக் காட்டுகிறது. சமூக பங்கேற்பு மற்றும் பலதரப்பட்ட அணுகுமுறை மூலம் மிகச் சிறந்த ஆரோக்கியத்தை அடைதல் என்ற இலக்கை குறிக்கின்றது. ஆரம்ப சுகாதார பாதுகாப்பு குறித்த உலக சுகாதார அமைப்பின் லட்சியப் பார்வை நம்பத்தகாதது என்றும் அடைய முடியாதது என்றும் பல அரசாங்கங் கள், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் நினைத்தனர். அல்மா அடா மாநாட்டிற்கு ஒரு வருடத்திற்குப் பிறகு, இத்தாலியின் பெல்லாஜியோவில் நடந்த ஒரு சிறிய மாநாட்டில், பிரகடனத்தின் உயர்ந்த கொள்கைகளை நடைமுறை மற்றும் அளவிடக்கூடிய தொழில்நுட்ப தலையீடுகளாக மாற்றும் செயல்முறையை அவர்கள் தொடங்கினர். இந்த மாநாடு அமெரிக்க கொள்கை வகுப்பாளர்களின் பாதிப்புக்குப் பெரிதும் உள்ளானது. இம்மாநாட்டிற்கு உலக வங்கியின் உதவியுடன் ராக்ஃபெல்லர் அறக்கட்டளையின் நிதியுதவி பெறப்பட்டது. பெல்லாஜியோ மாநாடு, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆரம்ப சுகாதாரப் பாதுகாப்பு என்ற கருத்தை உருவாக்கியது. மேலும், குறைந்த செலவு மற்றும் குறுகிய கவனம் செலுத்தும் தலை யீடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டன. இது எளிதில் கண்காணிக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்பட லாம். அனைவருக்கும் ஆரோக்கியம் என்ற அணுகு முறையை அர்ப்பணித்தவர்களில் பெரும்பாலானோ ருக்கு, இது ஒரு எதிர்ப்புரட்சிக்கு சமமாக இருந்தது.
நிதி முடக்கம்
இத்தகைய சூழலில் உலக சுகாதார அமைப்பின் நிதியாதாரம் கடும் தாக்குதலுக்கு உள்ளானது. இதனு டைய பட்ஜெட் குறையத் தொடங்கியது. இதன் நிதி யுதவி அடிப்படையில் உறுப்பினர் நாடுகளால் செலுத்தப்படும் உறுப்பினர் கட்டணங்களால் ஆனது. அவை அந்நாடுகளின் மக்கள் தொகை மற்றும் வரு மானத்தால் தீர்மானிக்கப்படுகின்றன. இத்தகைய பணம் உலக சுகாதார அமைப்பின் செயல்பாட்டிற்கு உகந்ததாகயிருக்கிறது. மேலும் செயல்பாடுகள் மற்றும் முன்னுரிமைகளை அமைப்பதில் சுதந்திரம் அளிக்கிறது. இருப்பினும், 1980 களின் முற்பகுதியில், உலக சுகாதார சபை (WHA) ஆனது உசுஅ-வின் பட்ஜெட்டை முடக்கியது, அதாவது பங்களிப்புத் தொகையை உண்மையான டாலர் மதிப்பின் அடிப்படையில் வளர விடாமல், பணவீக்கம் மற்றும் மாற்று விகிதங்களை மட்டுமே சரிசெய்தது. இது நிறு வனத்தின் நிதி மற்றும் சுதந்திரமாக செயல்படும் திறனைக் கட்டுப்படுத்தியது. எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொற்று நோய் வெளிவரத் தொடங்கியபோது இது துல்லிய மாக நடந்தது. 1993 இல் ஏற்பட்ட மற்றொரு முடிவு பணவீக்கம் மற்றும் நாணய சரிசெய்தல்களை சமன்பாட்டிலிருந்து வெளியேற்றியதாகும். இது உசுஅ-வின் பட்ஜெட்டை உண்மையான விதிமுறைகளில் (REAL TERMS) மெதுவாக வீழ்ச்சியடையச் செய்கிறது மற்றும் அமைப்பின் ஏற்கனவே ஆபத்தான நிதி நிலை மையை மோசமாக்குகிறது. வரவு செலவுத் திட்டத்தில் ஒவ்வொரு நாட்டின் நெகிழ்வான பங்களிப்பின் உண்மையான மதிப்பு அடுத்த ஆண்டுகளில் மெதுவாகக் குறைந்துள்ளது. உலக சுகாதார அமைப்பு, பலதரப்பு அமைப்புகள் அல்லது நன்கொடை நாடுகளிடமிருந்து நிதியுதவியை நாட வேண்டிய கட்டா யத்திற்கு உட்படுத்தப்பட்டது.
எந்த திட்டங்களை ஆதரிக்க வேண்டும் என்பதை நன்கொடையாளர்கள் தீர்மானிக்கிறார்கள் மற்றும் உசுஅ (WHO) வின் பணியில் திருப்தி அடைய வில்லை என்றால், அதன் சுதந்திரத்தை பெரிதும் சமரசம் செய்து, நிதியை திரும்பப் பெறும் வாய்ப்பும் உள்ளது. பணக்கார நன்கொடை நாடுகள் மற்றும் உலக வங்கி போன்ற பலதரப்பு ஏஜென்சிகள் இந்த நிதிகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதில் கணிசமான கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளன, மேலும் உசுஅ (WHO) வின் திட்டங்களிலிருந்து தனித்தனி யாக “நோய் சார்ந்த” திட்டங்களை நிறுவுகின்றன மற்றும் உசுஅ (WHO) வின் கொள்கைகள் மற்றும் முடிவுகளில் வலுவான செல்வாக்கைச் செலுத்து கின்றன. 1990களின் முற்பகுதியில், உலக சுகாதார அமைப்பின் 54 சதவீதமான பட்ஜெட் ஒதுக்கப்பட்ட நன்கொடைகள் மூலமும், அமைப்பின் சொந்த உறுப்பினர்களைத் தவிர பிறரிடமிருந்து பெறப்பட்ட நன்கொடைகள் மூலமும் வந்ததாகும். இது ஒருங்கி ணைப்பு மற்றும் முடிவுகள் எடுப்பதில் பல சிக்கல் களை உருவாக்கின. இன்று, இந்த வகையான நிதி வரவு பட்ஜெட்டின் 80 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. இதனால், உலக சுகாதார அமைப்பு தனது நோக்கங்களுக்காகப் போராடினாலும் அதன் அரசிய லமைப்புக் கடமைகளை நிறைவேற்றுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக உள்ளது.
குறிப்பிடத்தக்க 2 வெற்றி
சக்திவாய்ந்த அரசாங்கங்கள் மற்றும் குழுக்க ளின் அழுத்தங்களை உலக சுகாதார அமைப்பு எதிர் கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் அரிதாகவே வெற்றி பெற்றது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதி ரான போரில், மார்பக-பால் மாற்றுகளின் சர்வதேச சந்தைப்படுத்தல் குறியீடு மற்றும் புகையிலை கட்டுப்பாடு குறித்த கட்டமைப்பு மாநாடு ஆகியவை குறிப்பிடத்தக்க இரண்டு வெற்றிகளாகும். புதிய மில்லினியத்தின் தொடக்கத்தில், உசுஅ (WHO) உலக வங்கியுடன் மிகவும் நெருக்கமாக ஒத்துழைக்கத் தொடங்கியது மற்றும் மருந்துப் பொருட்களை வணிக மயமாக்கல், சுகாதாரப் பாதுகாப்பை தனியார்மய மாக்கல் மற்றும் தடையற்ற வர்த்தகக் கொள்கை களை திறம்பட ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் ஆகிய வற்றில் பங்கேற்றது. இது வளரும் நாடுகளில் சுகாதார சேவையின் உள்கட்டமைப்புகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் சுதந்திர மான சமூக மற்றும் பொருளாதாரப் பாதையில் இருந்து திசைதிருப்பியது எனக் குறிப்பிட்டால் மிகையாகாது.
வலுவான அமைப்பை கட்டமைக்க…
அரசாங்கங்களின் நிதியை அதிகரிக்க உலக சுகாதார அமைப்பின் தலைமையிடமிருந்து சில முயற்சிகள் இருந்தன. ஆனால், அது பயனளிக்க வில்லை. உலக சுகாதார நிர்வகிப்பில் மைய அதி காரம் பெற்ற அமைப்பாக உலக சுகாதார அமைப்பின் நிலையை வலுவாக்கிட பல உறுப்பினர்களும் பல தரப்பு அமைப்புகளும் முனைப்புக் காட்டவில்லை. எடுத்துக்காட்டாக, சர்வதேச சுகாதார நடை முறைகள் மற்றும் உலகளாவிய சுகாதார நிர்வா கத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வரக்கூடிய ஒரு தொற்றுநோய் ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை தற்போது உலக சுகாதார அமைப்பில் நடத்தப்படுகிறது. ஆனால், இதே கட்டத்தில் உரு வாக்கப்படும் பிற செயல்முறைகள் உசுஅ-வைக் குறைத்து மதிப்பிடச் செய்கின்றன. ஜி20 மற்றும் உலக வங்கியின் முன்முயற்சியான தொற்று நோய் நிதியம், Pandemic Fund, அதன் கொள்கை வகுப்பில் உசுஅ-வை ஒரு பார்வையாளராக மட்டுமே வைத்துள் ளது. காலநிலை நெருக்கடி மற்றும் தொற்று நோய்க் கான தயார்நிலையைச் சமாளிக்கும் நோக்கில் எடுக்கப் பட்ட ஐஎம்எப் (IMF) இன் மற்றுமொரு முன்முயற்சி, உடல்நலம் அல்லது உசுஅ தேவைகளை மனதில் கொண்டு உருவாக்கப்படவில்லை. பிப்ரவரியில், இந்த இரண்டு நிறுவனங்களும், ராக்ஃபெல்லர் அறக் கட்டளையின் ஆதரவுடன், உசுஅ- வின் பங்கேற்பு இல்லாமல் மாற்று உலகளாவிய சுகாதார அமைப் பைத் திட்டமிட பெல்லாஜியோவில் கூடியது. அதன் 75ஆவது ஆண்டு விழாவில், உலக சுகாதார அமைப்பின் முக்கியத்துவம் மற்றும் நாம் முன்னோக் கிச் செல்ல வேண்டிய அமைப்பு பற்றி சிந்திக்க வேண்டிய காலம் இது. கடந்த கால செயல்களை மதிப்பிடுவதற்கும், அதன் நோக்கத்தை நிறைவேற்றுவ தற்கான நடவடிக்கை எடுப்பதற்கும் இந்த வாய்ப்பை நாம் பயன்படுத்த வேண்டும். இல்லையெனில், சக்தி வாய்ந்த நன்கொடையாளர்கள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களின் கட்டுப்பாட்டின் கீழ் உலக சுகாதார அமைப்பு மேலும் வீழ்ச்சியடையும் அபாயம் உள்ளது. உலக சுகாதார அமைப்பின் இறையாண்மையைக் காக்க வலுச்சேர்க்க வேண்டிய தருணத்தில் ஒன்றி ணைந்து பணியாற்றிட வேண்டும்!
ஆதாரம்: எம் ஆர் ஆன்லைன் (MR ONLINE)