articles

img

சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க வேண்டும்!

சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க வேண்டும்!

இந்தியாவில் பிராந்திய அளவில் உச்சநீதிமன்ற கிளை கள் அமைக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அனைவருக்கும் நீதி  பெறுவதற்கான உரிமையை உத்தரவா தப்படுத்தி இருக்கிறது. உச்சநீதி மன்றத்தின் கிளைகள் பிராந்திய அளவில் அமைக்கப்பட வேண்டும் என்று சட்டக் கமிஷன்களும், நாடாளு மன்ற நிலைக்குழுக்களும் வழிகாட்டி யிருக்கின்றன.

வழக்கறிஞர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் பார்கவுன்சில்களும், அகில  இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகளும் பிராந்திய அளவில் உச்சநீதிமன்ற கிளைகள் அமைக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை வைத்து போராடி வரு கிறார்கள். ஜனநாயகத்தில் அதிகாரங்கள் பரவலாக்கப்படும் போதுதான் அது கடைக்கோடியில் உள்ள மக்களுக்கு சென்ற டையும். இந்தியாவின் தென் மாநிலங்களில் உள்ள மக்களுக்கு  தங்கள் சட்ட உரிமையை நிலைநாட்ட இரண்டாயிரம் கிலோ மீட்டர்  தொலைவில் புதுதில்லியில் உள்ள உச்சநீதிமன்றம் வரை சென்று  பெரும் தொகை செலவு செய்து வழக்கு நடத்துவது என்பது மிகவும் சிரமத்தை ஏற்படுத்தி வருகின்றது.

நீதி பெறுவதற்கான உரிமையை அனைத்துப் பகுதி மக்க ளுக்கும் கொண்டு சேர்ப்பதன் மூலமே சட்டத்தின் ஆட்சியை, உண்மையான ஜனநாயகத்தை நிலைநிறுத்த முடியும். சென்னையில் உச்சநீதிமன்ற கிளையை அமைப்பதன் மூலமே  சாதாரண மக்களும் உச்சநீதிமன்றத்தை நாடுவதற்கான  வாய்ப்பும் வழக்குகளை முடிப்பதற்கான வாய்ப்பும்  உருவாகும். எனவே, உச்சநீதிமன்றத்தின் கிளையை சென்னை யில் அமைக்க ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநாடு  கோருகிறது. இந்த தீர்மானத்தை முன்மொழிந்தவர் பாலச்சந்திரபோஸ், வாலிபர் அரங்கம், வழிமொழிந்தவர்  பிருந்தா, மாணவர் அரங்கம்.