பூணூலின் முக்கியத்துவத்தை கூறவந்த மனுதர்மம் “உபநயனஞ் செய்து கொள்ளுவதற்கு முன்பு சூத்திரனுக்கு ஒப்பானவன் (2:172)” என்பதன் மூலம் பூணூல்தான் பார்ப்பனர்களை உயர்ந்தவர்களாக்குகிறது, மற்றவர்களை இழிவானவர்களாக்குகிறது என்று அறிவிக்கிறது.
2023 அக்டோபர் 4 அன்று கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்குடி வட்டம், ஆதனூரில் நடைபெற்ற நந்த னார் பிறந்த நாள் நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பங்கேற்றுள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசை, தொடர்ந்து விமர்சித்து வரும் ஆளுநர், தீண்டாமைக் கொடுமையால் படு கொலை செய்யப்பட்ட நந்தனார் பிறந்த நாள் நிகழ்வில் பட்டியலினத்தவர் 100 பேருக்கு பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சி யில் பங்கேற்று அவர்களை ‘மோட்சம்’ அடையவைத்துள்ளார்.வழக்கம் போல வரலாற்றுப் பதிவுகளை திரித்துப் பேசியுள்ளார். நந்தனார் குறித்த பொய் மையை ஏற்றும் புரட்டுத்தனமே இந்த நிகழ்ச்சியின் நோக்கம் ஆகும்.
திருநாளைப் போவார் நாயனார்
நந்தனார் கதையை, பெரிய புராணத் தின் பகுதியாக படிக்கும் எவரும் உண் மையை உணர முடியும். பக்திமானாக இருந்த அவர், கோயிலுக்கு வெளியே நின்றே கடவுளை வழிபட்டு வந்ததையும் அதற்கு அவரின் பிறந்த குலமே கார ணமாக இருந்ததையும் இலக்கியப் பதிவு கள் சொல்கின்றன. அன்று இருந்த நிலப் பிரபுத்துவ சூழலில் நில உடமையாளரி டம் வேலை செய்த நந்தனார் தனது ஆண்டையிடம் சிதம்பரம் கோவிலுக்கு செல்ல அனுமதி கேட்டு நின்றதும், அவரது ஆண்டை நாளை போகலாம் என தினமும் பதில் சொன்னதும், அதனால் நந்தனாரின் பெயர் ‘திருநாளைப் போவார் நாயனார்’ என வந்ததும் வர லாற்றுப் பதிவுகளே. மேலும், சிதம்பரம் தில்லை நடராசர் கோயிலில் வழிபட விரும்பிய அவருடைய ஏக்கம் முற்றிய நிலையில், ஓமகுளம் அருகில் அவர் வேள்வித் தீயில் இறக்கப்பட்டு கொல்லப் பட்டார் என்பதே அவரது சரித்திரம். பிறப்பின் காரணமாக இழிவு கற்பித்து, வழிபாட்டுத் தலத்திலேயே பாகுபாடு காட்டிய போக்கு இன்றளவும் தொடர்ந்து வரும் நிலையில் ஆளுநரோ சிலருக்கு பூணூல் அணிவித்து, அந்தப் போக்கை மென்மேலும் நியாயப்படுத்தியுள்ளார். அனைத்து சாதியினரும் அர்ச்சகர், பெண்கள் ஓதுவார் மற்றும் அர்ச்சகர் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னேற் றங்களை எதிர்க்கும் கூட்டம் - சாதியைப் புனிதப்படுத்தி அதன் மூலம் மோதலை விதைக்க முடியாதா என்ற குயுக்தியோடு செயல்படுவதையே இந்தச் செய்தியும் காட்டுகிறது.
எத்தனை அக்கறை அவருக்கு?
“நம் அனைவரின் மனதிலும் கடவுள் குடியிருக்கும் போது நம்முள் உயர்ந்த வர் தாழ்ந்தவர் என்ற வேறுபாடு எப்படி இருக்க முடியும்? நாம் யாரும் உயர்ந்தவர்களோ தாழ்ந்தவர்களோ அல்ல; நாம் அனைவரும் சமமானவர் கள் என கூறப்பட்டுள்ளது. பின்னர் வந்த மனிதர்கள் பிரிவினை ஏற்படுத்திவிட்டு, மாபெரும் பிரிவை சூத்திரர்கள் என பிரித்து வைத்தார்கள். இது மிகவும் அவ மானகரமான செயலாகும். இதில் இருந்து நாம் விடுதலை அடைய வேண்டும். நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் ஆனபிறகும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் வேறுபாடுகள் இருப்பது இன்னும் வேதனை அளிக்கிறது.” -மேற்கண்ட கவலை மிகுந்த உரை வேறு யாருடையதுமல்ல; வர்ணத்தை அடிப்படையாகக் கொண்ட சாதியின் பெயரால் கொடூரங்களை செய்துவரும் சனாதனத்தை இந்தியாவின் அடிப் படைத் தத்துவம் என்று சொன்ன தமிழக ஆளுநர் ரவிதான், நந்தனாரின் ஊரில் பூணூலை அணிவித்து விட்டு, இப்படிப் பேசியிருக்கிறார்.
பூணூல் எதற்காக?
“பிராமணனுக்கு பஞ்சு நூலாலும் சத்திரியனுக்கு சணப்ப நூலாலும் வைசி யனுக்கு வெள்ளாட்டின் மயிராலும் மூன்று வடமாகத் தோளில் பூணூல் தரிக்க வேண்டியது (2:44)” என்று யார் யாருக்கு எந்த வகையில் பூணூல் அணிய வேண்டுமென மனுதர்மம் கூறுகிறது. மேலும், பூணூலின் முக்கியத்துவத்தை கூறவந்த மனுதர்மம் “உபநயனஞ் செய்து கொள்ளுவதற்கு முன்பு சூத்திர னுக்கு ஒப்பானவன் (2:172)” என்பதன் மூலம் பூணூல்தான் பார்ப்பனர்களை உயர்ந்தவர்களாக்குகிறது, மற்றவர்க ளை இழிவானவர்களாக்குகிறது என்று அறிவிக்கிறது. பூணூல் அணிந்த பார்ப்பனர்களுக்கு சமூகத்தில் இருக்க வேண்டிய உயர் நிலை பற்றிப் பேசுகின்ற மனுதர்மம், “வைதீகமாக இருந்தாலும் லெளகீகமாக இருந்தாலும் அக்கினியானது எப்படி மேலான தெய்வமாகவே இருக்கிறதோ அப்படியே பிராமணன் ஞானியாக இருந்தாலும் மூடனாக இருந்தாலும் அவனே மேலான தெய்வம் (9:317)”, ”பிரா மணர்கள் கெட்ட காரியங்களில் பிர வேசித்து இருந்தாலும் சகலமான சுபா சுபங்களிலும் பூசிக்கத்தக்கவர்கள். ஏனெ னில், அவர்கள் மேலான தெய்வமல்ல வா! (9:319)” என அறிவிக்கிறது.
ஆக பட்டியலின மக்களை வைத்து இந்த நிகழ்ச்சியை முன்னெடுத்ததன் மூலம், ‘பூணூல்தான் புனிதத்தின் அடை யாளம்’ என நிலைநாட்ட விரும்பும் கூட்டத்தினர் ‘பொதுவாகவே அனைத்து மனிதர்களும் சமம்’ என்ற அரசமைப்புச் சட்ட விழுமியத்திற்கு எதிராகவே உள்ள னர். ஆளுநர் ஆர். என்.ரவியும் இந்த நிகழ்ச்சியின் அங்கமாக இருந்துள் ளார். பட்டியலின மக்களை இழிவு படுத்தியுள்ளார்.
சனாதனத்தில் இல்லையாம்!
“வேங்கைவயலில் தாழ்த்தப்பட்ட மக்கள் குடிக்கும் குடிநீரில் மலத்தை கலக் கிறார்கள். நாங்குநேரியில் 12ஆம் வகுப்பு மாணவனை ஆசிரியர்கள் பாராட்டி யதால் மாற்று சமுதாய மாணவர்கள் சர மாரியாக தாக்கினார்கள். இது போன்ற கொடுமைகள் தமிழ்நாட்டில் அதிகரித்து வருகின்றன. பள்ளியில் படிக்கும் மாண வர்கள் தங்களை வேறுபடுத்திக் காட்டு வதற்காக கையில் சாதி கயிறுகளை அணி கின்றனர். பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்துமதி என்ற பெண் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த காரணத்தால் பதவி ஏற்க முடியாத நிலை உள்ளது. நான் செய்தித்தாள்க ளில் பார்க்கிறேன். இந்த சமுதாயத்தில் மாபெரும் பிரிவினர் ஆலயத்தில் பிரவே சிக்க தடை உள்ளது. இது இந்து மதத்தி லோ, சனாதன தர்மத்திலோ இல்லை.” -இதுதான் ஆளுநரின் புதிய கண்டு பிடிப்பு. அதாவது பூணூல் அணியக்கூட அனுமதிக்காமல் சூத்திரர்களை இழிபிறப்பென கூறும் மனுதர்மத்தின் சனாதனக் கொள்கையை இப்படி புள காங்கிதம் அடைந்து பாராட்டுகிறார். தமிழ்நாட்டில் நடந்துவரும் சில சாதிய மோதல்களை குறிப்பிட்டுப் பேசியுள்ள ஆளுநர் அவற்றை வலுப்படுத்தும் சித் தாந்தத்திற்கு வால்பிடித்துக் கொண்டே, மக்களை திசைதிருப்ப கபட நாடகம் ஆடுவது மட்டுமல்ல; தான் தொடர்ந்து பேசிவரும் சனாதனக் கொள்கையை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அமலாக்கம் செய்தும், பிரச்சாரம் செய்தும் வருகிறார்.
பூணூல் அணிவதால் வாழ்க்கை உயராது
“இந்த நாட்டில் எல்லா பகுதிகளிலும் சாதியப் பாகுபாடுகள் உள்ளன. ஆனால் தமிழ்நாட்டில் நடக்கும் நிகழ்வு களைக் கேட்கும்போது மனம் வேதனை அடைகிறது” - என்று அவர் பேசியது வட மாநிலங்களில் சாதியின் பெயரால் நடக்கும் கொடூரங்களை மறைக்கும் நோக்கில் பேசப்பட்டதே. அதாவது சாதி யப் பாகுபாடு இந்தியா முழுவதும் இருந்தாலும் பாஜக ஆளும் மாநி லங்களில் தலித் மக்களின் தோலை உரிக்கும் கொடூரம் அவரது கண்களுக்கு ஒரு பொருட்டாகத் தெரியவில்லை என்பதுதான் அவரது அரசியல் உள் நோக்கம் கொண்ட பேச்சின் சாரம். ஒடுக்கப்பட்டவர்களுக்கு பூணூல் அணிவித்து அவர்களை சாதி மேல் நிலையாக்கம் செய்வதால் அவர்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படாது. அவர்கள் வாழ் நிலையை முன் னேற்றத் திட்டங்களை வகுப்பதும் அமலாக்குவதுமே முக்கியமாகும். இன்றுவரை உழைக்கும் மக்களிடம் நிலங்கள் போய்ச் சேரவில்லை. அவர்கள் அத்துக் கூலிகளாக வேலைதேடி அலையும் சூழல்தான் உள்ளது. ஆனால் கார்ப்பரேட்டுகளுக்கு நிலங்களையும், வரிச் சலுகைகளையும் வாரி வழங்கி வரும் பாஜகவின் கைப்பாவையான ஆளுநருக்கு இதெல்லாம் தெரிய வாய்ப்பில்லை. பெருமுதலாளிகள் தலைமையில் முதலாளிகளும் நில உட மையாளர்களும் அரசு எந்திரத்தை கையில் வைத்திருக்கும் வரை கோடிக் கணக்கான உழைப்பாளி மக்கள் வாழ்வில் மாற்றம் நிகழாது. ஆனால் இந்த மாற்றம் நடக்காமல் இருக்க ஒடுக்கப்பட்ட மக்களை பண் பாட்டு ரீதியில் அடிமைப்படுத்த சாதியும் மதமும் கடவுளும் ஒரு ஆயுதமாக பயன்படுத்தப்படுவதன் ஒரு பகுதிதான் இந்த பூணூல் அணியும் நிகழ்வு.