articles

img

அரசே, ஆலயங்களை விட்டு வெளியேறாதே! - அருணன்

“அரசே ஆலயங்களை விட்டு வெளியேறு” என்று சங் பரிவார அமைப்புகள் முழங்கு கின்றன. “பாஜக ஆட்சிக்கு வந்தால் அதன் முதல் கையெழுத்து இந்து சமய அறநிலை யத் துறையை ஒழிப்பதற்கே” என்று கூறியிருக்கிறார் அக்கட்சியின் மாநிலத் தலைவர். என்ன “பாபம்” செய்தது அந்தத் துறை? ஏன் அதன் மீது இவ்வளவு கோபம் சங்கிகளுக்கு? இதைப் புரிந்து கொள்ள அதன் வரலாறை சற்றே திரும்பிப் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டின் பழமையான பெரும் கோயில்கள் எல்லாம் மாமன்னர்களால் கட்டப்பட்டவை. பல்ல வன் கட்டியது காஞ்சி கைலாசநாதர் கோயில். சோழன் கட்டியது தஞ்சை பெரிய கோயில். பாண்டியன் கட்டியது மதுரை மீனாட்சி கோயில். இப்படித்தான் பல கோயில்களும் எழுந்தன. கோயில்களைக் கட்டிய மன்னர்களே அவற்றைப் பராமரித்தும் வந்தார்கள். இதற்காக அவர்கள் தானம் தந்த நிலங்கள், ஆபர ணங்கள், மனிதர்கள் பற்றிய கல்வெட்டுக்கள் கோயில் தோறும் உள்ளன. மன்னர்கள் உருவாக்கிய கோயில்கள் எல்லாம் அவர்கள் கட்டுப்பாட்டில்தான் இருந்தன.

உள்நாட்டு மன்னர்களின் ஆட்சி முடிந்து கிழக்கிந் தியக் கம்பெனியின் ஆட்சி வந்த காலத்திலும் அதன் ஆளுகையில்தான் ஆலயங்கள் இருந்தன.  1817இல் அந்த ஆட்சி போட்ட சட்டமானது கோயில்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி முத லான அறக்கொடைகள் முறையாகப் பயன்படுத்தப் படுகின்றனவா என்பதைக் கண்காணிக்க வழி வகுத்தது. இதற்கான அதிகாரம் அப்போதிருந்த வரு வாய் வாரியத்திற்குத் தரப்பட்டது. அதுமுதல் ஆயி ரக்கணக்கான ஆலயங்கள் அரசு கண்காணிப்பின் கீழ் வந்தன.

தர்மகர்த்தா கொள்ளையை கண்டுகொள்ளாத பிரிட்டிஷ் ஆட்சி 

1857இல் நடந்த சிப்பாய்கள் எழுச்சிக்குப் பிறகு உருவான பிரிட்டனின் நேரடி ஆட்சி “இனி மத விவகாரங்களில் அரசு தலையிடாது” எனும் வாக்குறு தியைத் தந்தது. இது ஊழல் பெருச்சாளிகளுக்கு வசதி யாகிப் போனது. இதுவரை அரசின் கட்டுப்பாட்டிலிருந்த பல கோயில்களும் அந்தந்தப் பகுதியைச் சார்ந்த தர்ம கர்த்தாக்கள் எனும் பெரும் நிலப்பிரபுக்கள், செல் வந்தர்கள் மற்றும் சனாதனிகளின் கைகளுக்குப் போனது. அவர்கள் கோயில் சொத்துக்களை சூறை யாடினார்கள். “சிவன் சொத்து குலநாசம்” என்று பாமரர்கள் சாபமிட்டார்கள். அதற்கெல்லாம் அசரா மல் அந்த தர்ம கர்த்தாக்கள் பலரும் அதர்ம கர்த்தாக்க ளாக ஆட்டம் போட்டார்கள். ஆனாலும் பிரிட்டிஷ் ஆட்சி கவலைப்படவில்லை. தங்களது ஏகாதி பத்திய சுரண்டலுக்கு இவர்களால் ஆபத்து இல்லை  என்றதும் இந்தக் கொள்ளையைக் கண்டுகொள்ள வில்லை. இதிலேயொரு திருப்பம், இந்தியர்களுக்கு ஆட்சி யில் கொஞ்சம் பங்கு தந்த போதுதான் வந்தது. 1920இல் நடந்த தேர்தலில் சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்தது. அதன் தலைவர்கள் தீவிர பக்திமான்கள். கோயில் சொத்துக்கள் கொள்ளை போவது பற்றி பக்தர்கள் அடுக்கடுக்கான புகார்க ளைக் கூறவும் அதைத் தடுக்க அரசு தலையிட வேண்டும் என அக் கட்சி முடிவெடுத்தது. இந்தி யர்களே இதில் தலையிடுவதால் தனக்கு பிரச்சனை இல்லை என்பதை உணர்ந்த பிரிட்டிஷ் அரசும் ஒப்புக்  கொண்டது. அப்படியாக 1927இல் இந்து சமய அறநிலைய வாரியம் உருவாக்கப்பட்டு, அதன் கீழ் கோயில்கள் கொண்டு வரப்பட்டன.

அறநிலையத்துறையை  காமராஜர் உருவாக்கியதேன்? 

நாடு சுதந்திரம் பெற்றதும் இந்து சமய அறக் கொடைகள் சட்டம் 1951இல் வந்தது.1959இல் இன்னும் முற்போக்கான சட்டம் வந்து, கோயில்களை நிர்வகிப்ப தற்கு தனியான அரசுத்துறையே உருவானது. அப்போது முதல்வராக இருந்தவர் யார்? காமராஜர்; யாருடைய ஆட்சியைக் கொண்டுவருவதே தங்களின் லட்சியம் என்று பாஜகவினர் முழங்குகிறார்களோ அவரேதான்! அவர் என்ன புரியாமலா இந்து சமய அறநிலையத் துறையை உருவாக்கினார்? காமராஜர் கொண்டுவந்த துறையை ஒழிப்பது எப்படி காமராஜர் ஆட்சியாகும் சங்கிமார்களே! இப்படி உருவான இந்து சமய அறநிலையத் துறை யின் கீழ் தற்போது 46 ஆயிரம் கோயில்கள் உள்ளன;  இவற்றில் சமணக் கோயில்களும் உண்டு. ரூபாய் பத்து லட்சத்திற்கு மேல் வருடாந்திர வருமானம் உள்ள கோயில்கள் 578. ரூபாய் இரண்டு லட்சத்திலிருந்து பத்து லட்சம்வரை வருமானம் உள்ளவை 595. ஆக, ஆயிரத்திற்கும் மேலான பெரிய கோயில்கள் உள்ளன!

அனைத்து கோயில்களுக்கும் சொந்தமாக சுமார் ஐந்து லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. இவற்றை சுமார் ஒரு லட்சத்து இருபதாயிரம் குத்தகைதாரர்கள் பயிர் செய்து வருகிறார்கள். அப்படியெனில் அவர்கள் தருகிற குத்தகைப்பணம் கோயில்களின் முக்கிய  வருமானம். விவசாய நிலங்கள் தவிர மனைகள் மற்றும் கட்டடங்களும் ஏராளமாய் உள்ளன. இவற்றின் வாட கையும் கணிசமான வருவாய். அனைத்திற்கும் மேலே  மன்னர்களும் பொதுமக்களும் கொடுத்த விலை மதிக்க முடியாத எண்ணற்ற தங்க, வைர ஆபரணங்கள் உள்ளன. வருகிற வருமானத்திலிருந்து கோயில் பராமரிப்பு போக 54 கல்வி நிறுவனங்களையும் தனது பெயருக்கு ஏற்ப அறநிலையத்துறை நடத்துகிறது. அதுமட்டுமா, கருணை இல்லங்கள் 33 உள்ளிட்ட44 இதர நிறு வனங்களையும் நடத்துகிறது. இவையெல்லாம் இந்து சமய அறநிலையத்துறையின் அதிகாரப்பூர்வ வலைத் தளம் தந்திருக்கும் விபரங்கள்.

அபத்தமான முழக்கம்

“அரசே ஆலயங்களை விட்டு வெளியேறு” என்கி றார்களே, வெளியேறினால் இவ்வளவு சொத்துக்க ளையும் பாதுகாப்பது யார்? இவ்வளவு நிறுவனங்களை யும் நிர்வகிப்பது யார்? சங்கிகளுக்கும் அறிவுக்கும் சம்பந்தம் கிடையாது என்பதை இந்த ஓர் அபத்த முழக்கத்திலிருந்தே உணரலாம். கேட்டால், பிற மதங்களது வழிபாட்டுத்தலங்களை எல்லாம் அரசு நிர்வகிக்கிறதா என்று குறுக்குசால் ஓட்டுகிறார்கள். உன் வீட்டை ஒழுங்குபடுத்து என்றால், அடுத்த வீட்டை எட்டிப் பார்ப்பார்கள்! ஆனால் 1954லேயே வக்ப் சட்டம் வந்துவிட்டது தமிழ் நாட்டில். அதன்படி வக்ப் சொத்துக்களை கணக்கிடும் பணி 1956இல் முடிவடைந்து, 1958இல் அமைக்கப்பட்ட வக்ப் வாரியத்தின் கீழ் அனைத்து சொத்துக்களும் வந்துவிட்டன. ஒன்றிய அரசு 1995இல் கொண்டுவந்த வக்ப் சட்டத்தை தொடர்ந்து தமிழ்நாடு அரசு  வக்ப் வாரி யத்தை13 உறுப்பினர்களைக் கொண்டதாக மாற்றி அமைத்தது. இப்படியாக முஸ்லிம்கள் தானமாகத் தந்துள்ள சொத்துக்களும் அரசால்தான் நிர்வகிக்கப் படுகிறது.

கூடுதலாக ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும். இஸ்லாம் ஏகத்துவத்தையும், உருவவழிபாடு மறுப்பை யும் கொண்ட மதம். அதனால் அதன் வழிபாட்டுத் தலமான பள்ளிவாசலில் தங்க, வைர ஆபரணங்கள் கிடையாது. ஆகவே அவற்றைப் பராமரிக்கும் பிரச்சனையும் கிடையாது. கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை பழைய தேவா லயங்கள் வெளிநாடுகளிலிருந்து வந்த மிஷனரிக ளால் கட்டப்பட்டவை. பின்னர் எழுந்தவை அந்தந்தப் பகுதி கிறிஸ்தவர்களால் கட்டப்பட்டவை. அவற்றைப் பராமரிக்க ஆரம்பம் தொட்டே அங்கே முறையான நிர்வாகக் கட்டமைப்பு உள்ளது, அதற்கான தேர்வு முறையும் உள்ளது. மேலும் தேவாலயங்களிலும் பாதுகாக்க வேண்டிய அளவுக்கு ஆபரணங்கள் இல்லை.

கோவில் பராமரிப்பும்  சொத்து பாதுகாப்பும்

எனவே பிற மதங்களைக் கைகாட்டும் வேலை இதில் எடுபடாது. தமிழ்நாட்டில் 88 சதவீதம் பேர் இந்துக்கள். அவர்களது ஆதரவு இல்லாமல் இங்கு எந்த வொரு அரசும் எழப்போவதில்லை. அந்த அரசானது கோயில்களை பராமரிப்பதில் அவர்களுக்கு என்ன ஆட்சேபணை இருக்கப் போகிறது? தனியார்கள் கையில் போனால்தான் கோயில் சொத்துக்கள் காணாமல் போகும். அரசு மதச்சார்பற்றதாக இருக்க வேண்டும் என்போர் கோயில்கள் விஷயத்தில் அரசு தலையீடு வேண்டும் என்பது முரண் இல்லையா என்கிறார்கள் சங்கிகள். கோயில் சொத்துக்களை பாதுகாத்து, கோயி லைப் பராமரிக்கிற வேலையில்தான் அரசின் அந்தத்  துறை ஈடுபடுகிறதே தவிர, எந்தச் சாமிக்கு என்னவகை சம்பிரதாயம் என்பதில் தலையிடுவதில்லை. அதை யெல்லாம் அர்ச்சகர்களே நிச்சயிக்கிறார்கள்.

தனியார் கைக்குப் போனால்...

தமிழ்நாட்டின் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பதால் கோயிலின் ஆட்சியையாவது பிடிக்கலாம் என்று கணக்குப் போடுகிறார்கள் சங்கிகள். இவர்கள் கையில் கோயில்கள் என்றால் அவற்றின் சொத்துக்க ளும் வருமானமும் பறிபோகும் என்பதை உண்மை யான பக்தர்கள் உணர வேண்டும். அதற்கு நல்ல உதாரணம் தீட்சிதர்கள் பிடியில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோயில். அந்தக்கோவில் இடையில் அரசு வசம் இருந்த போது தினசரி லட்சக்கணக்கான ரூபாயாக இருந்த வருமானம் மீண்டும் அவர்கள் வசம் சென்றதும் மீண்டும் ஆயிரக்கணக்கான ரூபாயாகக் குறைந்து போனது. அதுமட்டுமல்ல கோயிலில் பால்யவிவாகம் எனும் சட்ட விரோதச் செயலிலும் இறங்கியதாக வழக்கு  நடக்கிறது. சென்னைக்கு அருகில் உள்ள ஒரு தனியார் கோயில் நிர்வாகத்தின் பொறுப்பற்ற தன்மை யால் ஐந்து இளம் அர்ச்சகர்கள் அநியாயமாய் குளத்தில் மூழ்கி மாண்டு போனார்கள். இந்த நிலை யில் அனைத்து கோயில்களும் தனியார் வசம் போனால் என்னாகும் என்று மெய்யான பக்தர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஆர்எஸ்எஸ் அரவம் புகும் ஆபத்து

இதற்கெல்லாம் மேலே ஒரு பேராபத்து உள்ளது. தனியார் என்ற பெயரில் சங்கிகள் வசம் ஆலயங்கள் சென்றால் அவற்றை தங்களின் மதவெறி வேலைக்கு பயன்படுத்துவார்கள். கேரளாவில் சங்கிகள் கோயில் வளாகத்தில் ஆயுதப்பயிற்சி எடுக்கிறார்கள் என்று பக்தர்கள் அவர்கள் மீது வழக்கு தொடுத் துள்ளார்கள்! (தி வயர் 20-6-23) “அன்பே சிவம்” என்பதே மெய்யான ஆன்மீகம் எனும் பக்தர்களே ஆகப்பெரும்பாலோர். அவர்க ளுக்கு இந்தச் செய்தி நெஞ்சைப் பதற வைக்கும். அரசு ஆலயத்தைவிட்டு வெளியேறினால் ஆர்எஸ்எஸ் எனும் அரவம் உள்ளே புகுந்து விடும் என்பதை அவர்கள் உணர வேண்டும். இந்த அபாயத்தை ஆரம்பத்திலேயே கிள்ளி எறியத்தான் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை “அறநிலையத்துறை கண்காணிப்பில் ஆலயங்களைக் காப்போம்” எனும் சிறப்பு மாநாட்டை மதுரையில், ஜுன் 25 மாலையில் நடத்துகிறது. மதநல்லிணக்கத்தில் ஆர்வமும், கோயில் சொத்துக்களைக் காப்பதில் அக்கறையும் கொண்டஅனைவரும் ஆதரிக்க வேண்டிய மாநாடு இது.

கட்டுரையாளர் : தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை  மாநில ஒருங்கிணைப்பாளர்