செங்கொடி என்றதுமே எனக்கோர் ஜீவன் பிறக்குதம்மா… அது நம் கொடி என்பதிலே புதிய தோர் நாதம் பிறக்குதம்மா… என்ற வரிகள் தரும் உணர்வு கம்யூ னிஸ்டுகளின் ரத்தத்தில் கலந்து கரைந்து கிடக்கிறது. தொழிலாளி- விவசாயி வர்க்க போராட்டங்களு க்கு செங்கொடி வழி காட்டுகிறது. ஒடுக்கப்படும் சமூகப் பிரிவினரின் விடுதலைக் கீதமாய் பட்டொளி வீசிப் பறக்கிறது. தியாகமும் அர்ப்பணிப்பும் கொடியின் சிவப் பாய் பரிணமிக்கிறது.
எங்கள் கொடி
ஹிட்லரின் பாசிசத்தை ஒழித்த கொடி இது. இந்திய தேச விடு தலைப் போராட்டத்தின் தலை சிறந்த புரட்சியாளர்கள் பிடித்த கொடி இது. மேற்கு வங்க தேபாகா இயக்கத்தின் சார்பில் நிலப்பிர புக்களுக்கு சவால்விட்ட கொடி இது. புன்னப்புரா வயலாரில் விவ சாயிகளுக்கு வீரத்தை விதைத்த கொடி இது. வீரத் தெலுங்கானா வின் வரலாறு இது. வொர்லி ஆதி வாசிகளைத் தலைநிமிரச் செய்த கொடி இது. கீழவெண்மணியின் போராட்ட காவியம் இது. இந்தப் பாரம்பரியத்தின் தகுதி நிறைந்த வாரிசான பகத்சிங்கின் நினைவு தினத்தை மதுரையில் நடக்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டையொட்டி கொடி நாளா கக் கடைப்பிடிப்பது முற்றிலும் பொருத்தமானது. இந்தியச் சூழலில் சுரண்ட லுக்கு எதிரான போராட்டமும் சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமும் வர்க்கப் போராட்டத் தின் இரு பக்கங்கள் என மார்க் சிஸ்ட் கட்சியின் திட்டம் தெளி வாக வரையறுக்கிறது. சமூக ஒடுக்குமுறையில் சாதிய, பாலின ஒடுக்குமுறை இரண்டுமே உள்ள டங்கும். பாலின சமத்துவத்தைக் காக்கவும், பெண்கள் - குழந்தை கள் மீதான வன்முறைக்கு எதிராக வும் இன்றைக்கும் களத்தில் அர சியல் சித்தாந்த பண்பாட்டு ரீதி யாக நிற்கும் இயக்கம் மார்க்சிய இயக்கம்.
இது அரசியல் பிரச்சனை
பெண்கள் சந்திக்கும் பிரச்ச னையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் பிரச்சனையாகப் பார்க்கிறது. பெண்கள் பிரச்சனை கள் குறித்த மார்க்சிஸ்ட் கட்சி கண்ணோட்டம் மத்தியக்குழுவின் ஆவணமாகத் தயாரிக்கப்பட்டது. அனேகமாக சம காலத்தில் உலக கம்யூனிஸ்ட் இயக்கம் இது வரை செய்யாத ஒரு முயற்சி இது. 33 சதவீத இட ஒதுக்கீடு முதல் ஹிஜாப் பிரச்சனை வரை அனைத் திலும் கட்சியின் நிலைப்பாடு, அரசி யல் தலைமைக் குழுவின் அறிக் கையாக வெளியிடப்படுகிறது. ஆணவக் கொலைகள் மற்றும் காப் பஞ்சாயத்துகளின் ஒடுக்கு முறையை எதிர்த்து வேறு எந்தக் கட்சியும் வீதிக்கு வராத போது ஹரி யானா உள்பட பல மாநிலங்க ளில் களமாடிய இயக்கம் கம்யூ னிச இயக்கம் தான். சபரிமலை பிரச்சனை எழுந்தபோது லட்சக்கணக்கான பெண்களைத் திரட்டி மனிதச் சுவர் அமைத்து கேரளாவின் சமூகநீதி பாரம்பரி யத்தை மீட்டெடுத்தது மார்க்சிஸ்ட் கட்சியே. LGBTQ+ என்கிற வேறு பட்ட பாலின தேர்வுகளை பின் பற்றுகிற பகுதியினரை மதிக்க மறுக்கிற சமூகச் சூழலில் அவர்க ளுக்கான மனித உரிமைகளையும், கண்ணியத்தையும் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
வன்முறைக்கு எதிராக...
தமிழகத்தில் வன்முறைக்கு எதிராகக் கட்சியின் சார்பில் இக் காலகட்டத்தில் சேலத்தில் நடந்த சிறப்பு மாநாடு குறிப்பிடத்தக்கது. அதிமுக ஆட்சியின்போது 7 மாத காலத்தில் 70க்கும் மேற் பட்ட பெண் குழந்தைகள் மீதான பாலியல் வல்லுறவு சம்பவங்க ளைத் தொகுத்து தீர்மானகரமான கோரிக்கைகளோடு அரசுக்கு அனுப்பப் பட்டது. தற்போது தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட பெண்களுக்கான வரைவுக் கொள்கை குறித்த முழுமையான ஆலோசனைகளும் விமர்சனங்க ளும் அடங்கிய குறிப்பு உரு வாக்கப்பட்டது. பள்ளிகளில் அதி கரித்துவரும் பாலியல் துன் புறுத்தல் சம்பவங்களைக் கண் டித்து என்ன செய்ய வேண்டும் என்கிற கேள்வியோடு இணைய தள கருத்தரங்கு நடத்தப்பட்டு. பல மட்ட செயல்பாட்டாளர்களின் ஆலோசனைகளையும் உள் வாங்கி, முதல்வரை சந்தித்து அளிக்கப்பட்டது. வெறும் விமர்ச னம் அல்ல, ஸ்தூலமான ஆலோச னைகளுடனான அணுகுமுறை பின்பற்றப்படுகிறது. தனிப்பட்ட பல வன்முறை நிகழ்வுகளில் தனியாகவும், ஜனநாயக மாதர் சங்கத்தோடு இணைந்தும் தலை யீடு செய்யப்படுகிறது. தமிழ கத்தை உலுக்கிய பொள்ளாச்சி வன்கொடுமைகள் மக்கள் இயக்க மாக மாறியதில் நம் பங்களிப்பு உண்டு. ஜனநாயக மாதர் சங்கம் இக்கால கட்டத்தில் உணவு, வேலைக்கான இயக்கம், என் வாழ்க்கை என் உரிமை இயக்கம், மனுவாதத்தை எதிர்த்து அரசியல் சாசன பாதுகாப்பு இயக்கம், வன்முறையற்ற வாழ்க்கைக்கான இயக்கம், ஆணவக் குற்றங்கள், போதைக்கு எதிரான இயக்கம் போன்ற குறிப்பிடத்தக்க இயக்கங்களை நடத்தியுள்ளது. எண்ணற்ற வன்முறை சம்ப வங்களில் நீதி கிடைக்க செய்த தில் மாதர் இயக்கத்துக்குப் பங்குண்டு. பெண் தொழிலாளி களின் பிரத்தியேக கோரிக்கை களை, தொழிற்சங்கத்தின் பொது கோரிக்கையாக முன் வைத்துப் போராடும் இயக்கமாக சிஐடியு விளங்குகிறது. காப்பீட்டு ஊழியர் சங்கம் போன்ற மத்தியதர ஊழியர் அமைப்புகள், பெண் செயல்பாட்டாளர்களும், தலை வர்களும் உருவாக உகந்த சூழலை ஏற்படுத்துவது குறிப்பிடத் தக்கது.
புரட்சிப் படையின் தளபதியாக...
பெண்களை வாக்கு வங்கியா கவோ, கருணை காட்ட வேண்டிய பகுதியினராகவோ பார்க்காமல் சமூக மாற்றத்துக்கான புரட்சிப் படையின் முன் வரிசை தளபதிக ளாக, சக போராளிகளாகப் பார்க்கும் இயக்கம் மார்க்சியப் பேரியக்கம். திட்டவட்டமான இயக்கவியல் சூழலில் மாற்றம் ஏற்படுவதே பெண் விடுதலைக்கு வழி கோலும் என்பதை சோசலிச நாடுகள் நிரூபித்துள்ளன. இத்த கைய பாதையில் நடைபோடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு, தேரா மன்னா என்று முகத்துக்கு நேராக மன்னனை கண்ணகி விமர்சித்த ஊரில், சமூக விரோதிகளை எதிர்த்த போராட்டத்தில் கொல்லப் பட்ட தியாகி லீலாவதி வாழ்ந்த ஊரில், விவசாயிகள், விவசாயத் தொழிலாளிகள், ஆலைத் தொழி லாளிகள், பெண்களை இயக்க மாக்கிய கே.பி.ஜானகியம்மா வாழ்ந்த ஊரில், எண்ணற்ற தோழர் களப் பலி கொடுத்த தியாக பூமியான மதுரையில் நடைபெறுகிறது. கோடிக்கால் பூதமென கிளர்ந்தெழுவோம்… சுரண்டல், ஒடுக்குமுறையற்ற சமூகத்தை உருவாக்கும் பயணத்தை வேகப் படுத்துவோம்!