சர்வதேச ஆய்வு நிறுவனமான மூடிஸ், இஸ்ரே லியப் பொருளாதாரத்தின் தன்மையை “நிலையானது” என்பதில் இருந்து “எதிர்முறை யானது” என்று கடந்த மாதத்தில் மாற்றியது. இனப்படு கொலை நடக்கும் காசா மீதான தாக்குதல்களின் நேரடி விளைவாகவே இந்த மதிப்பீடு உள்ளது. ஆட்சியின் நிலையற்ற தன்மை, ஆக்கிரமிப்புப் பகுதிகளில் உள்ள மக்களிடம் அதிருப்தி, போராட்டங்கள் உள்ளிட்டவை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. 250 நாட்களுக்கு மேல் இனப்படுகொலைத் தாக்கு தல்கள் கடந்து விட்ட நிலையில் சுமார் 37 ஆயிரம் பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதில் 14 ஆயிரம் குழந்தைகள் மற்றும் சுமார் 9 ஆயிரம் பெண்கள் அடங்குவர். ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தது ஒருவராவது கொல்லப்பட்டுள்ளார். பல குடும்பங்கள் துடைத்தெறியப்பட்டுள்ளன. இனப்படுகொலையை நிறுத்துங்கள் என்று இஸ்ரேலிய ஆதரவு நிலை எடுக்கும் சில நாடுகளே சொல்லுமளவுக்கு நிலைமை மோசமாகியிருக்கிறது. 1948 ஆம் ஆண்டில் நடந்த தைவிட, இப்போது மிகக் கொடூரமான தாக்குதல்கள் நடந்து வருகின்றன என்று பாலஸ்தீன அமெரிக்க வரலாற்று ஆய்வாளரான ரஷீத் காலிதி கூறுகிறார்.
அதிர்ச்சி வைத்தியம்
போருக்கான அமைச்சரவைக்குழுவை இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு கலைத்திருக்கிறார். ஆறு அமைச்சர்கள் கொண்ட இந்தக் குழுவில் இருந்து பென்னி காண்ட்ஸ் விலகியபோதே இந்தக்குழு கலைக் கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. போரைத் தவறாகப் பிரதமர் கையாளுகிறார் என்ற கருத்து இஸ்ரேலில் வலுத்து வருகிறது. போர் தீர்வல்ல என்ற இடதுசாரி களின் கருத்தை எதிர்த்தவர்கள் கூட, அந்தக் கருத்தை முன்வைக்கும் நிலைபாட்டுக்கு வந்துள்ளனர். இது நேதன்யாகுவுக்கு அதிர்ச்சியைத் தந்திருக்கிறது.
அரசியல் தனிமை
தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு, காசாவில் நடைபெற்று வரும் இனப்படுகொலையை இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியது. இந்தத் தீர்ப்பை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும், தனது தாக்குத லைத் தீவிரப்படுத்தவே செய்தது. ஆனால், இஸ்ரே லுக்கு முட்டுக் கொடுத்து வந்த பல நாடுகளின் நிலை பாடுகள் மாறின. நெதர்லாந்து, இத்தாலி, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பல்வேறு வகையான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இஸ்ரேலின் பக்கம் முழுமையாக நின்று வந்த ஐரோப்பிய யூனியனின் வெளியுறவுத்துறைத் தலைவர் ஜோசப் போரெல், இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட போது இஸ்ரேலிய நாடாளுமன்ற கம்யூனிஸ்ட் உறுப்பினர் ஓஃபெர் காசிப், அதற்கு ஆதரவு தெரி வித்தார். அவருடைய இந்த செயலுக்கு மக்கள் மத்தி யில் ஆதரவு இருக்கிறது. ஆனால், போருக்கு ஆதர வாக நிற்கும் அரசியல் கட்சிகள் அவரது உறுப்பினர் பதவியைப் பறிக்க முயற்சி செய்தன. உறுப்பினரை வெளியேற்ற அவையில் “சூப்பர் பெரும்பான்மை” தேவைப்படுகிறது. அது இல்லாததால் பிப்ரவரியில் நடந்த வாக்கெடுப்பில் அவரைப் பதவி நீக்கம் செய்யக் கோரும் தீர்மானம் தோல்வி அடைந்தது.
இரு நாடுகள் என்ற தீர்வைத் தவிர வேறு வழி யில்லை என்று இஸ்ரேலிய கம்யூனிஸ்ட் கட்சி உறுதி யாக நம்புகிறது. சில ஐரோப்பிய நாடுகள் பாலஸ்தீனம் என்ற நாட்டை அங்கீகரித்துள்ளதை அக்கட்சி மகிழ்ச்சி யுடன் வரவேற்கிறது. “யூதரோ அல்லது அரேபியரோ, இருவருமே அமைதியை, கவுரவத்தை, நீதியை, ஒன்றாக ஒற்றுமையாக வாழ்வதை விரும்புகிறார்கள். இதைக் குறுகிய காலத்தில் அடைந்துவிட முடியாது” என்று இஸ்ரேல் கம்யூனிஸ்ட் கட்சியின் வெளியுறவு விவ காரங்களுக்கான செயலாளர் ரீம் ஹசன் கூறுகிறார்.
சீர்குலையும் பொருளாதாரம்
இந்தப் பிராந்தியத்தில் இதுவரை இல்லாத அளவுக்குப் பெரும் நெருக்கடி உருவாகியிருப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். கண்மூடித்தனமான குண்டுவீச்சும் தாக்குதல்களும் இஸ்ரேலுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஒட்டு மொத்த பொ ருளாதாரம் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. 2023 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டு பற்றி இஸ்ரேலின் மத்தியப் புள்ளிவிபரக்குழு அதிகாரப்பூர்வ மாக வெளியிட்ட விபரத்தின்படி, 20 விழுக்காடு சுருக்கம் பொருளாதாரத்தில் ஏற்பட்டது. நுகர்வோர் செல வினம், வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகியவை கடுமை யாகக் குறைந்துள்ள நிலையில், இஸ்ரேலின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 19.4 விழுக்காடு சரிவு உருவா னது. காசாத் திட்டுப் பகுதியின் மீது 2023, அக்டோபர் 7 அன்று தாக்குதல் தொடங்கப்பட்ட பின்னரே இந்த சரிவு காணப்பட்டுள்ளது. போர் தொடர்வதால் வெளிநாட்டு முதலீடுகள் கிட்டத்தட்ட நின்று போய்விட்டன. இத்தகைய நெருக்கடி யான சூழலில் தங்கள் பணத்தைப் போட அவர்கள் தயாராக இல்லை. காசாவின் மீதான தாக்குதல் என்பது மட்டுமின்றி, இஸ்ரேலின் உள்நாட்டுப் பிரச்சனை முற்றி வருவதும் இதற்குக் காரணமாக அமைந்திருக்கிறது. இஸ்ரேலிய அரசுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் பிரபல பன்னாட்டு நிறுவனங்கள் புறக்கணிப்பை எதிர் கொண்டு வருகின்றன. அரசிடம் இருந்து தள்ளி நிற்கி றோம் என்று அவர்கள் சொல்வதை மக்கள் ஏற்க வில்லை. பெரும் தொழில்நுட்பத் துறை தொடங்கி விவசாயம் மற்றும் சுற்றுலாத்துறை வரையில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மீட்க இயலாத நிலையை நோக்கி இந்த நெருக்கடி சென்று கொண்டிருப்பதாக வல்லுநர் கள் தெரிவிக்கின்றனர். இஸ்ரேலின் வரலாற்றில் அதன் பொருளாதாரத் தன்மையை முதன்முறையாக எதிர் மறையானதாக மாற்றியிருக்கிறார்கள்.போருக்கு ஆகும் செலவைத் தாக்குப் பிடிக்க முடியாது என்பதால்தான் இந்த தர இறக்கம் என்று கூறப்படுகிறது.
புறக்கணிக்கப்படும் முன்னணி நிறுவனங்கள்
இஸ்ரேலோடு நேரடியாகவோ அல்லது மறைமுகமா கவோ தொடர்புடைய பன்னாட்டு மற்றும் இஸ்ரேலிய நிறுவனங்களுக்கு எதிராக உலகளாவிய பிரச்சாரம் நடைபெறுகிறது. சீமென்ஸ், ஹியூலெட்-பாக்கர்டு, ஆக்சா டைவஸ்ட், பூமா, மக்டொனால்ட்ஸ், ஸ்டார்பக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் பெரும் இழப்பைச் சந்தித்துள் ளன. இனப்படுகொலை நடத்தும் இஸ்ரேலை ஆதரிக்கும் இந்த நிறுவனங்களின் தயாரிப்புகளை நிராகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. அமெரிக்காவில் உள்ள கூகுள், அமேசான் போன்ற பெரு நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலா ளர்களும் இஸ்ரேலிய அரசுடனான தொடர்பை நிறுவன நிர்வாகம் துண்டித்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். உளவு வேலை பார்க்க இஸ்ரேலிய ராணுவத்திற்கு தொழில்நுட்பத்தை வழங்கும் திட்டத்தை நிர்வாகம் ரத்து செய்ய வேண்டும் என்று கூகுள் நிறுவன ஊழியர்கள் வலியுறுத்தி வரு கிறார்கள். புறக்கணிப்புப் பிரச்சாரத்தின் வீச்சு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முடங்கிய சுற்றுலாத்துறை
சுற்றுலாத்துறை கிட்டத்தட்ட முடங்கிக் கிடக்கிறது. ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளுக்கு மக்கள் செல்வதை நிறுத்தி விட்டார்கள். 2023 ஜனவரியில் 14 ஆயிரம் பேர் அந்தப் பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டனர். நடப்பாண்டில் வெறும் 500 பேர்தான் பயணம் செய்தி ருக்கிறார்கள். 2019 ஆம் ஆண்டிற்கு முன்பாக, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 விழுக்காட்டை பயணத் துறை ஈட்டியது. கொரோனா பாதிப்பால் அது 1.1 விழுக் காடாக 2021இல் சரிந்தது. மீட்சி இருந்தாலும், போர் தொடங்கிய 2023 அக்டோபர் 7 முதல் பெருமளவு முடக்கத்தை அந்தத்துறை சந்தித்து வருகிறது.
காலியாகக் கிடக்கும் துறைமுகங்கள்
எந்த நடவடிக்கைகளும் இல்லாமல் இஸ்ரேலியத் துறைமுகங்கள் காலியாகக் கிடக்கின்றன. ஆக்கிர மிக்கப்பட்ட பகுதியில் உள்ள உம் அல்-ரஷ்ராஷ் துறைமுகத்தில் 90 விழுக்காடு சரிவு ஏற்பட்டுள்ளது. இதுவரையில் 25 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் என்று கணக்கு காட்டப்படுகிறது. சீனா, ஜப்பான், தென் கொரியா மற்றும் இந்தியாவுக்கு செல்ல வேண்டிய சரக்குக் கப்பல்கள் பாதுகாப்பு காரணமாக செல்ல மறுத்து வருகின்றன. விரைவில் கப்பல்களே இல்லாத துறைமுகமாக மாறும் அபாயம் இருப்பதாக துறை முகத்தின் தலைமைச் செயல் அலுவலர் கிடியோன் கோலபர் எச்சரிக்கிறார்.
ஆலைகள் மூடல்
ஆட்பற்றாக்குறையால் ஆலைகள் மூடப்பட்டுள் ளன. உற்பத்தி பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. போர் தொடர்வதால் கட்டாய ராணுவ சேவை என்ற பெயரில் 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் போர்க்களத்திற்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் பணியாற்றிக் கொண்டிருந்த ஆலைகள் மற்றும் அலுவலகங்கள் இழுத்து மூடப்பட்டு விட்டன. மேலும் லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள், தங்களையும் போர்க்களத்திற்கு அழைத்து விடுவார்களோ என்ற அச்சத்தில் வேலைக்கு வருவதை நிறுத்திவிட்டார்கள். போர் தொடங்கி முதல் மூன்று மாதங்களில் 9 லட்சத்து 50 ஆயிரம் வேலைகள் இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது எட்டு மாதங்களைக் கடந்து போர் நடந்து கொண்டிருப்பதால் இந்த இழப்பு பல மடங்காகியிருக்கி றது. இந்த வேலையிழப்புகளைக் குறிப்பிட்டு இது வரை இல்லாத அளவுக்கு பொருளாதாரச் சரிவு ஏற் பட்டுள்ளதாக புளூம்பெர்க் ஆய்வு தெரிவிக்கிறது. ஆயி ரக்கணக்கான வேலையிழப்புகள் மற்றும் கட்டாய ராணுவ சேவைக்காக அனுப்பப்பட்டதால் ஏற்பட்ட காலியிடங்கள் ஆகியவற்றால் ஒவ்வொரு வாரமும் சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இழப்பைச் சந்திப்பதாக இஸ்ரேல் வங்கி கூறியுள்ளது. இது இஸ்ரேலின் ஒரு வாரத்திற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆறு விழுக்காடாகும். தற்போதுள்ள நிலவரப்படியே, பொருளாதார மீட்சி அடைவதற்கு பத்து ஆண்டுகள் பிடிக்கும் என்று கூறப்படுகிறது. போர் தொடர்ந்தால் அது இஸ்ரேலியப் பொருளாதாரத்திற்கான சாவுமணி அடிப்பதாகவே கருத வேண்டியிருக்கும். செய்தி ஆதாரம் : பிரஸ் டிவி மற்றும் பீப்பிள்ஸ் வேர்ல்டு