1920-ஆம் ஆண்டு ஏப்ரல் 3-ஆம் தேதி உசிலம்பட்டி அருகே உள்ள பெருங்காமநல்லூர் கிராமத்தில் வெள்ளை யரின் அடக்குமுறைச் சட்டத்திற்கு எதிராக மாபெ ரும் மக்கள் திரள் போராட்டம் நடந்தது. அந்த போராட்டத்தை அடக்குவதற்காக ஆங்கிலேய அரசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ‘மாயக்காள்’ என்ற பெண் உள்பட 17 பேர் கொல்லப்பட்டனர். அடி மைத்தனத்திற்கு எதிராகத் தமிழர்கள் நடத்திய போராட்டத்தின் வலி மிகுந்த வடுவான இந்நிகழ்வு நடந்து இந்த ஆண்டோடு 103 ஆண்டு களாகின்றன.
கொடிய சட்டம்
இந்தப் போராட்டம் உலக வரலாற்றில் இயற்றப்பட்ட சட்டங்களில் மிகவும் கொடூரமான குற்றப் பரம்பரைச் சட்டத்திற்கு எதிராக நடை பெற்றது. ஒருவரைப் பிறப்பின் அடிப்படையில் குற்றவாளி என்றும் ஒரு குறிப்பிட்ட மக்கள் கூட்டத்தைக் கொடூரமானவர்கள் என்றும் அடை யாளப்படுத்தி அவரது செயல்பாடுகளைத் தொடர்ந்து கண்காணிப்பது ஐரோப்பிய சூழலில் இருந்து உருவாகிய கருத்தாக்கம். 1871-ஆம் ஆண்டு குற்றப் பரம்பரைச் சட்டம் (Criminal Tribes Act) வங்காளம், ஐக்கிய மாகா ணங்கள், வடமேற்கு எல்லைப் பகுதிகள் மற்றும் பஞ்சாப் ஆகிய வட இந்தியப் பகுதிகளில் முதலில் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதை மற்ற பகுதி களுக்கும் அமுல் செய்வதில் நடைமுறைச் சிக்கல் இருந்தது. எனவே, 1896-ல் இந்தச் சட்டம் திருத்தப்பட்டது. 1896-ல் செய்யப்பட்ட திருத்தங் கள் மேலும் கூர்மையாக்கப்பட்டு 1911 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. இந்தச் சட்டம் வந்த பிறகு மேலும் சில சாதிகளையும் பழங்குடிகளையும் குற்ற மரபினராக அறிவித்து, அவற்றைப் பதிவு செய்யத் துவங்கினர். அதன்படி, சென்னை மாகா ணம் முழுவதும் மொத்தம் 14 லட்சம் மக்கள் இச்சட்டத்தின்கீழ் கொண்டு வரப்பட்டனர்.
மதுரை மாவட்டத்தில்...
தமிழகத்தில் கைரேகைச் சட்டம் எனப்பட்ட இச்சட்டத்தில் யாரையெல்லாம் சேர்க்க வேண்டும் என்ற பட்டியலைத் தயாரித்து அனுப்ப மாவட்ட போலீசாருக்கு 1914-ல் மதராஸ் போலீஸ் தலைமை உத்தரவிட்டது. 4.5.1914 -ல் மதுரை கீழக்குயில்குடி பகுதியில்தான் தமிழ்நாட்டில் முதன்முதலில் இச்சட்டத்தை ஆங்கிலேய காவல்துறை அறிமுகப்படுத்தியது. இந்தச் சட்டத்தின்படி மாவட்ட ஆட்சித் தலை வர் எந்த ஒரு சாதியையும் குற்றப் பரம்பரையாக அறிவிக்கலாம்;
அதை நீதிமன்றம் கேள்விகேட்க முடியாது; குற்றவாளி-நிரபராதி என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது. 16 வயதுக்கு மேற்பட்ட அனை வரும் தங்கள் பெயர், முகவரி மற்றும் கைரேகை யைக் காவல்நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும். இரவில் ஆண்கள் யாரும் தங்கள் வீட்டில் தூங்கக்கூடாது. காவலர் கண்காணிப்பில் பொது மந்தை அல்லது காவல் நிலையத்தில்தான் தூங்க வேண்டும். சூரியன் தோன்றி மறையும் வரை அவர்கள் வீட்டிலிருந்து வேறு எங்காவது ஊர்களுக்குப் போய்விட்டு வர வேண்டுமென்றால் கூட ராதாரிச் சீட்டு (கிராம தலைவர்களால் வழங்கப்படும் அனு மதிச் சீட்டு) வாங்க வேண்டும். இந்த விதிகளை மீறினால் 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும். இந்தக் கொடிய கைரேகைச் சட்டத்திற்கு எதி ராகப் போராடிய பெருங்காமநல்லூர் மக்கள் மீது பிரிட்டிஷாரின் துப்பாக்கி பாய்ந்து 17 பேரின் உயி ரைக் காவு வாங்கியது. மரணம் அடைந்த 17 பேரின் உடல்களையும் கட்டை வண்டியில் ஏற்றி, உசி லம்பட்டிக்கு அருகிலுள்ள ஆற்றங்கரையில் ஒரே குழியில் புதைத்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டின் போது போராடிய மக்களுக்கு தண்ணீர் எடுத்துக் கொடுத்து உதவிய ‘மாயக்காள்’ என்ற பெண்மணி யை காவலர்கள் தாக்கி, துப்பாக்கியின் கத்தி யினால் குத்திக் கொலை செய்தனர். காட்டு மிராண்டித்தனமான துப்பாக்கிச் சூட்டில் நிலை குலைந்து சிதறியோடிய மக்களில் சுமார் 200 பேரைப் பிடித்து, கையை ஒரு காலுடன் இணைக்கும் நெடிய சங்கிலியால் விலங்கிட்டு ஆடு மாடுகளைப் போல் நடைப்பயணமாக சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள திருமங்க லத்தில் இருக்கும் நீதிமன்றத்தில் ரிமாண்ட் செய்தனர் அதிகாரிகள்.
ஜார்ஜ் ஜோசப்
இவ்வாறு சிறைப்பட்ட மக்களுக்காக வழக்க றிஞர் ஜார்ஜ் ஜோசப் ரிமாண்ட் நீதிமன்றத்தில் வழக்காடினார். இவரது பங்களிப்பினால் இந்தப் போராளிகளுக்கு விடுதலை கிடைத்தது. தனது வழக்காடுதலுக்காக எவ்வித பணத்தையும் பெற்றுக் கொள்ளவில்லை அவர். பெருங்காமநல்லூர் படுகொலையை போலீ சார் விசாரிக்கக்கூடாது என்றும் ஒரு நீதிபதி தலை மையிலான விசாரணைக்குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் போராட்டம் நடத்தினார். வழக்க றிஞர் ஜார்ஜ் ஜோசப்பின் மீது இம்மக்கள் கொண்ட அன்பின் காரணமாக அப்பகுதி கள்ளர் சமூக மக்கள் அவரை ’ரோசாப்பூ துரை’ என்றே அழைத்த னர். அவரது நினைவாக இன்றுவரை குழந்தை களுக்கு ரோசாப்பூ என்று பெயர் சூட்டும் வழக்கம் இருக்கிறது. வழக்கறிஞர் ஜார்ஜ் ஜோசப்பிற்கு பிறகு இடது சாரி தோழர்கள் இச்சட்டத்திற்கு எதிரான பிரச்சா ரங்களைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்தனர்.
பசும்பொன் தேவரும் கம்யூனிஸ்ட்டுகளும்
இத்தனை எதிர்ப்பிற்குப் பின்பும் தொடர்ந்து நடந்து வந்த இந்தக் கொடுமையை எதிர்த்து வெகு மக்கள்திரள் போராட்டத்தின் தேவையைப் பற்றி பசும்பொன்முத்துராமலிங்கத் தேவர், இது குறித்து மதுரையில் தோழர். ஜீவானந்தத்திடம் பேசி பிரச்சா ரத்திற்கு ஒருங்கிணைத்தார். பின்னர் தோழர் ஜீவா கம்யூனிஸ்ட் கட்சியின் பிற தோழர்களான தோழர் ராமமூர்த்தி, தோழர். ஜானகி அம்மாள் ஆகியோரு டன் சேர்ந்து முத்துராமலிங்கத் தேவரும் மக்க ளைத் திரட்டி, குற்றப் பரம்பரைச் சட்டத்திற்கு எதிரான தொடர் பிரச்சாரங்களை, போராட்டங் களை நடத்தினார்கள். உசிலம்பட்டிக்கு அருகே இருந்த கிராமங்களில் இவர்கள் மூவரும் பிரச்சா ரம் மேற்கொண்டதாகத் தோழர். ஜீவா தன்னிடம் தெரிவித்திருந்ததை மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் தோழர். தா. பாண்டியன் தனது, ‘ஜீவாவும் நானும்’ புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்.
‘குற்றப் பரம்பரைச் சட்டத்திற்க எதிராக குறிப்பாக செக்கானூரணி முதல் கூடலூர் வரை யிலான கள்ளர் சமூக மக்களைத் திரட்டுவ தற்கானப் பிரச்சாரங்களை ஊர் ஊராகச் சென்று முத்துராமலிங்க தேவர், தோழர்கள் ஜீவா, பி.ராம மூர்த்தி ஆகிய மூவரும் மேற்கொண்டனர். அந்த காலத்தில் கார் பயணம் என்பது அபூர்வமானது என்பதால் மாட்டு வண்டிகளிலும் குதிரை வண்டி களிலும் சாலையே இல்லாத வரப்புகளில் நடந்து சென்றும் பிரச்சாரம் மேற்கொண்டு இருக்கின்ற னர். பிரச்சாரம் செய்யச் சென்ற அவர்களுக்கு ஏழ்மையின் பிடியில் இருந்த மக்கள், கயிற்றுக் கட்டிலில் அமர வைத்து மோர் - கூழ் மற்றும் கடித்துக்கொள்ள வெங்காயம் - கருவாடு ஆகிய வற்றைக் கொடுத்து அன்பினை வெளிப்படுத்தி னார்கள்’ என்று தனது புத்தகத்தில் பதிவு செய்கி றார் தா.பாண்டியன். குற்றப் பரம்பரைச் சட்டத்தை ரத்து செய்யும் தீர்மானம் சென்னை மாகாண சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அது ஆளுநர் ஒப்புதலுக்கு 1947 மே 30 ஆம் தேதி அனுப்பப்பட்டது. ஜூன் 5-ஆம் தேதி குற்றப் பரம்பரைச் சட்டத்தை ரத்து செய்வதற்கான அரசு ஆணை வெளியிடப்பட்டது. குற்றப்பரம்பரை சட்டத்திற்கு எதிராக போராடி துப்பாக்கிச்சூட்டிற்குப் பலியான பெருங்காம நல்லூர் தியாகிகளின் 103-ஆவது நினைவு தினம் இன்று.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அஞ்சலி
வீரஞ்செறிந்த பெருங்காமநல்லூர் தியாகிகள் நினைவிடத்தில் திங்களன்று காலை சுமார் 11 மணியளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெறுகிறது. கட்சி யின் மாநிலச்செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம் தலைமையில் நடைபெறும் அஞ்சலி நிகழ்வில் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பாலா, மாவட்டச் செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள், இடைக்கமிட்டிச் செயலாளர்கள், கட்சி உறுப்பினர்கள் பல்வேறு வர்க்க-வெகுஜன அமைப்புகளின் நிர்வாகிகள் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.