articles

img

கடந்துபோன நாட்களில் காட்சி தரும் வருங்காலம் வரலாற்றின் பயன்பாட்டில் உண்மையும் புரட்டும் - ரொமிலா தாப்பர்

புகழ்பெற்ற வரலாற்றியல் அறிஞர் ரொமிலா தாப்பர் அவர்கள் எழுதி யுள்ள “The Future in the Past” என்னும் நூல் அலெப் புத்தக நிறுவனத்தின் வெளியீடாக அண்மையில் வந்துள்ளது.  ரொமிலா தாப்பரின் நீண்ட நெடிய ஆய்வுப் பணியில் செழுமை மிக்க அனுபவங்களுடன் அவர் திரட்டிய அரிய தகவல்களும், பல்வேறு பிரச்சனைகளில் அவரது மதிப்பு வாய்ந்த கருத்துக்களும் இந் நூலில் கட்டுரை வடிவில் தொ குக்கப்பட்டுள்ளன.  வரலாற்றை எடுத்து ரைப்பதில் உண்மைகளும், அதற்கு நேர்  மாறான பொய்ப் புரட்டுகளும் எங்ஙனம் பயன்படுத்தப்படுகின்றன?, ஆரியர்கள் வருகை குறித்த மாறுபட்ட கதையாடல்கள், சமூகம் குறித்த ஆய்வுகளில் மத அடிப்ப டைவாதக் கருத்துகளின் நுழைவு, இந்தியா வின் பன்முகக் கலாச்சாரத்தைச் சிதைக் கும் வகையில் வலதுசாரி சக்திகள் வெளிப் படையாகவும், வஞ்சக எண்ணத்தோடும் மேற்கொண்டு வரும் தீய முயற்சிகள், வெவ்வேறு பகுதிகளில் பலவித மாறுதல்க ளுடன் சொல்லப்படுகிற இராமாயணக் கதைகள், ஜனநாயகக் கோட்பாட்டில் மாற்றுக் கருத்துகளுக்கும் மதிப்பளிக்க வேண்டியதன் முக்கியத்துவம், பொதுப் பிரச்சனைகளில் அறிவார்ந்த சமூகத்தின் பங்களிப்பு போன்ற பல அம்சங்கள் இந்த நூலில் விவரிக்கப்பட்டுள்ளன.  

நூலிலிருந்து ஒரு பகுதி கீழே தரப்படு கிறது:

யும், நகர்வுகளையும் சரியான முறை யில் மதிப்பீடு செய்து, வருங்காலத்தின் திசைவழியில் உறுதியுடன் பயணிப்ப தற்கு, கடந்த காலம் பற்றிய தெளிவான பார் வையும், புரிதலும் மிகவும் அவசியம்.  இத்த கைய புரிதலானது, நடந்தேறிய நிகழ்வுக ளின் பின்புலத்தை உணரக்கூடியதாகவும், அவற்றை அறிவியல்பூர்வமாகப் பகுப் பாய்வு செய்யக்கூடியதாகவும், அனைத் திற்கும் மேலாக, விமர்சனப்பூர்வமான அணுகுமுறைக்கு உட்பட்டதாகவும் இருந்திட வேண்டும்.   இந்தியா விடுதலை பெற்ற பின் பல பத்தாண்டுகளாக, வரலாற்றியல் துறை யில் பங்களிப்பை நல்கிய நிபுணர்களின் கருத்தோட்டம் மேற்சொன்னவாறே அமைந்திருந்தது.  இதுவே, வரலாறு முறை யாக எழுதப்படுவதற்கு எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட, நியாயமான, நம்ப கத்தன்மை நிறைந்த ஒரு வழிமுறையாக வும் இருந்தது.  அறிஞர் பெருமக்களின் இத்தகைய ஆய்வுகள், வரலாற்றுத் தேடல்களின் வடிவமாக விளங்கியதோடு, வரலாற்றியல் கல்வியில் புதிய முறைக ளைப் புகுத்துவதற்கும்  வழிவகுத்தது. மேலும், இந்திய வரலாற்றாசிரியர்களின் இத்தகைய சிந்தனைப்போக்கு, வரலாற் றுக் கல்வியின் அறிவார்ந்த அடித்தளத்தை விரிவாகவும், விசாலமாகவும், அதே நேரம் கூர்மையுடையதாகவும் உருவாக்கிய தோடு, சரித்திரக் கல்வி பற்றிய சரியான புரிதலை ஒட்டுமொத்த தேசத்திற்கும் வழங்கியது.  

ஆனால் அண்மைக்காலமாக வர லாற்றியல் ஆய்வுகள் நேரடியாகவும், மறை முகமாகவும் ஒருசில அரசாங்க அமைப்பு களின் தாக்குதலுக்கு ஆளாகின்றன.  வர லாற்றுக் கல்வியே திட்டமிட்ட முறையில் நகைப்புக்கும், கேலிக்கும் உள்ளாக் கப்படுகிறது.  இத்தகைய இடர் நிறைந்த சூழலின் காரணமாகவே,  எங்களைப் போன்ற ஒரு சிலர், வரலாற்றியல் கல்வி யின் தேவை குறித்தும், முக்கியத்துவம் குறித்தும் பரவலாகப் பேசவும், பரப்புரை செய்யவும் முற்பட்டுள்ளோம்.

பண்பாட்டுக் கூறுகள்...

1960-களிலும், தொடர்ந்து 1970-களி லும் மேற்கூறிய வரலாற்றியல்  அறிஞர்க ளின் மகத்தான பங்களிப்பின் பயனாக, அதுகாறும் பல்வேறு அரசர்களின் போர்க்கள வெற்றிகளைப் பட்டியலிட்டும், அவற்றைப் பொற்காலம் என வரு ணித்துக் கொண்டும் இருந்த இந்திய வர லாறு குறித்த கல்வி, காலந்தோறும் மக்க ளின் சமூக, பொருளாதார வாழ்வு நிலை மைகளை ஆராயக் கூடியதாகவும், ஒட்டு மொத்த அரசியல் நிகழ்வுகளை அறுதி யிட்டு விளக்கக் கூடியதாகவும் மாற்றி அமைக்கப்பட்டது.  மக்களிடையே வழக் கத்திலிருந்த மத ரீதியான வழிபாட்டு முறை கள், பண்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு கால கட்டங்களில் நிலவிய பொரு ளாதார நிர்வாக நடைமுறைகள் ஆகியன வரலாற்றுக் கல்வியின் அங்கமாக மாறின.  இந்திய தேசத்தின் பன்முகத் தன்மை வாய்ந்த பண்பாட்டுக் கூறுகள் எவ்வாறு இந்திய நாகரிகத்தை உருவாக்கிடவும், வளர்த்தெடுக்கவும் உறுதுணையாய் இருந்தன என்பதை வரலாறு விரிவாகப் பேசியது.  

வனங்களில் வாழ்வோர், காடுகளைத் திருத்தி வேளாண்மை செய்யும் ஜூம் சாகு படியாளர்கள், கிராமப்புறங்களில் கால் நடை வளர்ப்போர், பல்வேறு பயிர்களை விளைவிக்கும் விவசாயிகள், கைவினை ஞர்கள், சிறு வணிகர்கள், குடிமைச் சமூ கத்தினர், மத வழிபாட்டு குருமார்கள் என்று  மக்கள் திரளின் அங்கமாக விளங்கும் அனைவரும் வரலாற்றுக் கல்வியின் அங்கமாக இடம் பெற்றனர்.  பல்வேறு வண்ணங்களின் கலவையைக் கொண்டு உருவாகும் சுவர்ச்சித்திரம் போல, பல வகை மனிதர்களின் வாழ்வு நிலையைக் கொண்டு வரலாறு வடிவமைக்கப்பட்டது. இதன் வழியே இந்திய தேசத்தின் பன் மைத்துவம் வாய்ந்த பண்பாட்டுக் கூறுகள் குறித்த ஆய்வு, வரலாற்றுக் கல்வி யில் இடம் பெறுவது உறுதி செய்யப்பட்டது. இம் மண்ணில் வாழ்ந்து வந்த மனி தர்களின் வாழ்நிலை அடையாளங்கள் ஒரே தன்மையில் இல்லாமல் பல வகை யில் இருந்துள்ளது குறித்தும், இத்தகு அடையாளங்கள் ஒருசில சமயங்களில் ஒன்றுக்கொன்று உரசிக் கொண்டது குறித் தும் அர்த்தம் பொதிந்த ஆய்வுகள் வர லாற்றுக் கல்வியில் இணைக்கப்பட்டன.

சமீப ஆண்டுகளில் இந்தியாவின் வர லாற்றுக் கல்வியியலில் பெரும் முன்னேற் றமும் மறுமலர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.  இந்திய வரலாற்றியலாளர்களின் பல்வேறு கருத்துகளும், விளக்கங்களும் உள்நாட் டில் மட்டுமன்றி, உலக அளவிலும் பல வர லாற்று அறிஞர்களால் கூர்ந்து கவனிக்கப் படுவதோடு, சமகால ஆய்வுகளுக்கும், பரந்துபட்ட ஒப்பீடுகளுக்கும் பெருமள வில் பயன்படுத்தப்படுகின்றன.  கடந்தகால  நிகழ்வுகளைப் பல்வேறு கோணங்களில் துல்லியமாக ஆய்வு செய்து உருவாக்கப் படுகிற கோட்பாடுகள், வரலாற்றுப்பூர்வ மான முடிவுகளை எட்டுவதற்கும், அதன் படி விளக்கங்களை எடுத்துரைப்பதற்கும் உலக அளவில் பெரிதும் துணைபுரிந்து வருகின்றன.  

கூடுதல் வெளிச்சம் பாய்ச்சுவது...

எடுத்துக் காட்டாக, பல்வேறு வடிவி லான மார்க்சிய சிந்தனைக் கூறுகள், பிரான்ஸ் நாட்டின் வரலாற்று அறிஞர்க ளைக் கொண்ட பிரெஞ்சு அன்னால்ஸ் ஸ்கூல் (French Annales School) அமைப்பின் கருத்துக்கள், கட்டமைப்புவாதக் கோட்பா டுகள் (Structuralism) போன்றவற்றின் நடைமுறை பயன்பாட்டு விவாதங்களில், இந்திய அறிஞர்களின் வரலாற்று ரீதியான விளக்கங்கள் பொருத்தமான முறையில் மேற்கோள் காட்டப்படுகின்றன. மார்க்சி யக் கண்ணோட்டத்தில் வரலாற்றை ஆய்வு செய்திடும் தொலைக்காட்சி விவாதங்க ளில் பல்வேறு கருத்துக்கள் கூர்மையாக முன்வைக்கப்படுகின்றன.  அதன் ஒரு பகுதி யாகவே, மார்க்ஸ் முன்வைத்த “ஆசியாவுக் கான உற்பத்தி முறை (Asiatic Mode of Production)” இன்றைய காலகட்டத்தி ற்குப் பொருந்தக் கூடியதாக இல்லை என்று கூறி நிராகரிக்கப்பட்டது.  அதற்கு மாற் றாக, பிற மார்க்சியக் கோட்பாடுகளின் வரலாற்றுப் பார்வை  ஆழமாக விவாதிக் கப்படுகிறது.  மார்க்சிய அறிஞர்களிடையே யும் ஒரே நிலையான பார்வை என்று இல்லா மல், சமூக, பொருளாதார வரலாறு குறித்த பல மாறுபட்ட கருத்தோட்டங்களும் ஆக்கப்பூர்வமான முறையில் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.  

மார்க்சிய அறிஞர்கள் என்கிற வரம்புக் குள் வராத வரலாற்றியலாளர்களான மார்க் பிளாச், பெர்னான்ட் ப்ரவுடல், ஹென்றி பிரேன் போன்றோரின் கருத்துக்களும் இத்தகைய விவாதங்களில் இணைத்துக் கொள்ளப்படுகின்றன.  இத்தகைய வழி முறையின் உள்ளார்ந்த நோக்கம் என்ன வெனில், “எதையும் கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்ளுதல்” என்று இல்லா மல், “ஒப்பீடுகளின் வழியே கோட்பாடுக ளுக்குக் கூடுதல் வெளிச்சம் பாய்ச்சுவது தான்”.  இத்தருணத்தில் இன்னொரு அம் சத்தையும் குறிப்பிட வேண்டும்.  ஒவ்வொரு  வரலாற்றியல் விளக்கத்தின் மீதும் விமர்ச னப் பார்வையுடன் குறைகூறி தாக்குதல் தொடுப்பவர்கள், தங்களது நேரத்தை ஒதுக்கி, வரலாற்று வரைவியலை, அதா வது வரலாற்றுக் கல்வி தோன்றி வளர்ந்த தின் வரலாற்றை, முழுமையாகக் கற்று ணர்ந்தால்,  அவர்கள் வரலாற்றியலின் மெய்த்தன்மையையும், அதன் முக்கியத்து வத்தையும் ஒருசேர உணர இயலும். 

புத்தர் கேட்ட பொருள் பொதிந்த கேள்வி

பொதுவாக, வரலாற்று ஆர்வமும், வர லாற்றியல் கோட்பாடுகளின் மீதான ஈடு பாடும் இத்தகைய விவாதங்களின் மையக் கருத்தாக இருந்து வருகின்றன. இந்திய சமூகத்தில் “சாதி” வகித்து வரும் பங்கு பற்றிய தொடர்ச்சியான, விரிவான ஆய்வின் தேவை பல மட்டங்களிலும் உணரப்பட்டு வந்துள்ளது.  இங்கு நீண்ட நெடுங்காலமாக நிலைகொண்டுள்ள சாதிய ஏற்றத்தாழ்வு கள் குறித்து விளக்குவதற்கும், சமூக மாற்றம் குறித்துச் சிந்திப்பதற்கும் இந்தப்  பிரச்சனை பற்றிய வரலாற்றியல் கண்ணோட் டம் மிகவும் அவசியம் என்பதைக் கூறவும் வேண்டியதில்லை.  இத்தகைய விவாதத் தின் போது, உலகின் பிற சமூக அமைப்புக ளில் காணப்பெற்ற பிரிவினைகள் மற்றும் பாகுபாடுகள் குறித்த பார்வையும் கவனத் தில் கொள்ளப்படுகிறது.  எடுத்துக் காட்டாக, வரலாற்றில் கிரேக்க-ரோமானிய சமூ கத்தில் இருந்து வந்த எஜமான் -அடிமை முறை அல்லது இடைக்கால உலகில் பல நாடுகளில் இருந்து வந்த நிலப்பிரபுக்கள் - பண்ணையடிமைகள் முறை அல்லது அண்மை நூற்றாண்டுகளில் கண்ணெ திரே காட்சி தரும் வர்க்க முரண்பாடு நிறைந்த சமுதாய முறை என அனைத்தின் பரிமாணங்களும் வரலாற்றியல் பார்வை யோடு ஆய்வு செய்யப்படுதல் வேண்டும்.  

பண்டைய நாட்களில் கிரேக்க சமு தாயத்தைப் பற்றிக் கேள்விப்பட்டவுடன் கௌதம புத்தர் கேட்ட அதே கேள்வியைத் தான் இன்று வரலாற்றியலாளர்களும் ஆய்வு நோக்கில் கேட்கின்றனர்.  “ஏன் சில சமுதாயங்களில் மட்டும் சாதியப் படிநிலை நிலவுகிறது? சில சமூகங்களில் எஜமான் - அடிமை என்கிற இரண்டு பாகு பாடு மட்டுமே உள்ளது? என்பது தான் பொருள் பொதிந்த அந்தக் கேள்வி.  ஆரம்ப நாட்களில் சாதியம் பற்றிய இத்தகைய ஆக்ரோஷமான கேள்விகள் பெரிய அள வில் எழுப்பப்படாத நிலையில், அதை ஏற்றுக் கொள்ளும் மனப்போக்கே சமூ கத்தில் இருந்து வந்துள்ளது என்பதையும் உணரத் தலைப்பட வேண்டியுள்ளது.

மாறி வரும் நிலப்பிரபுத்துவ முறையின் வடிவம்

இந்தியாவில் நீண்ட காலம் இருந்து வரும் நிலப்பிரபுத்துவ முறை இந்திய வர லாற்றியலாளர்கள் மற்றும் பிற நாடுக ளில் இடைக்காலத்தில் பங்களிப்பு நல்கிய வரலாற்று ஆய்வாளர்களின் கவனத்தில் உண்மையில் இருந்ததா இல்லையா என்கிற வினாவும், விவாதமும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.  நிலப்பிரபுத்து வத்தின் வகைகள் முந்தைய காலங்களைப் போல ஒரேயொரு உற்பத்தி முறையோடு சுருங்கி விடுவதில்லை என்பதையும்,  காலச்சுழலில் நிகழ்ந்துள்ள பல்வேறு வரிசை மாற்றங்கள் மற்றும் சேர்க்கைக ளின் பின்னணியில் நிலப்பிரபுத்துவ முறை யின் வடிவமும் மாறியுள்ளது என்பதையும், அதன் வழியே புதிய வகை நிலப்பிரபுத்து வம் சமூகங்களில் கோலோச்சி வருகிறது என்பதையும் வரலாற்றியலாளர்கள் உணர்ந்திட வேண்டியுள்ளது.   இந்திய நாட்டில், “இந்திய தேசியம்” என்கிற கருத்தாக்கம் உருவானதன் பின்ன ணிக் காரணிகள் குறித்த வரலாற்று ஆய்வா னது, இதே போன்று பிற நாடுகளில் எழுந்த தேசியம் குறித்த சிந்தனைகளோடு மதிப்பீடு செய்வதற்குரிய சோதனைக் கள மாக உருப்பெற்றுள்ளது.  தேசியம் எனும் கருத்தாக்கம் முகிழ்த்து வளர்ந்ததில் அறிவார்ந்த வரலாற்று ஆய்வுகளின் பங்க ளிப்பு ஒருபுறம் இருக்க, அதிக அளவு வெளியுலகில் பேசப்படாத, ஆனால் மக்களை ஈர்த்ததில் மிகவும் முக்கியமான பங்காற்றிய உள்ளூர் இயக்கங்கள் பற்றிய தகவல் திரட்டலும், கள ஆய்வும்  கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

புதுமைச்  சிந்தனையின் நீட்சி

வரலாற்று ஆய்வு என்னும் பரிமாணத் திற்குள் புதுமைச் சிந்தனையுடன் கூடிய புதிய கோட்பாடுகளும் நாளடைவில் வந்து சேர்ந்துள்ளன.  பெண்களை மையப் படுத்தி, பாலின ரீதியான ஒடுக்குமுறைக்கு எதிரான எழுச்சியின் வரலாறு தனித்து வத்துடன் தொகுக்கப்பட்டு வருவதை இங்கே குறிப்பிடலாம்.  வரலாற்று நிகழ்வு களில் பெண்களின் பாத்திரத்தை வெறு மனே ஒரு கூடுதல் பங்களிப்பாகக் கருதா மல், முதன்மைப் பங்களிப்பாக, அதற்கே உரிய முக்கியத்துவத்துடன் பதிவிட வேண்டும்.  கல்வி வளர்ச்சிக்கான சிந்தனை கள் குறித்த உரையாடலும், சமூகத்தின் செயல்பாட்டில் அதன் பிரதிபலிப்பும் உரிய முறையில் ஆய்வுக்கு உட் படுத்தப்பட வேண்டியது அவசியம்.   இது போன்றே இந்திய சமுதாயத்தின் பரந்துபட்ட மக்கள் திரளின் பலவிதமான பண்பாட்டுக் கூறுகளின் தோற்றமும், வளர்ச்சியும், அவற்றின் அடித்தளத்தில் ஒளிரும் சமூக வரலாறும் தொடர்ச்சியான ஆய்வுகளுக்கும், விவாதங்களுக்கும் உட்படுத்தப்பட வேண்டும்.  இவற்றின் நீட்சியாக அல்லது இன்னொரு முகமாக, மக்களின் மத ரீதியான நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் மற்றும் வழிபாட்டு முறைகள், சமூகத்தில் அவற்றின் தாக்கம் ஆகியனவும் வரலாற்றியல் கோணத்தில் வரையறுக்கப்பட வேண்டும்.  மேலும், சுற்றுச்சூழல் பிரச்சனைகள் தொடர்பான கள ஆய்வுகளும், வரலாற்றுப்பூர்வமான விவாதங்களும், தொழில் வளர்ச்சி என்ற போர்வையில் காடுகள் அழிக்கப் படுதல், அதிவேகமாக விரிவாக்கம் பெறும் நகர்ப்புறங்கள், நீர் வளங்கள் பயன் பாட்டில் நாளும் நிகழும் மாற்றங்கள் என்று அனைத்து அம்சங்களும் வரலாற்றுக் கல்வியின் விரிவான தளத்தில் இடம் பெறக் கூடியவையே.  

முடக்கி வைக்கும் அழிவுப்பாதை

இவ்வாறு கடந்த பல பத்தாண்டுகளாக இந்தியாவில் அறிவார்ந்த மறுமலர்ச்சிப் பாதையில் வளர்த்தெடுக்கப்பட்ட வர லாற்றியல் கல்வி, திடீரென நின்றுபோய் நிறுத்தப்படக் கூடிய ஒரு சூழலை ஆட்சி யதிகாரத்தில் உள்ளவர்கள் தற்போது திட்ட மிட்டு ஏற்படுத்தி வருகிறார்கள்.  சுமார் பத் தாண்டுகளுக்கு முன்னால் துவங்கிய  இந்த அழிவுப் பாதை, தற்போது வர லாற்று  ஆய்வில் புதிய சிந்தனைகளை யும், புதுப்புது முயற்சிகளையும் முற்றிலு மாகத் தடுத்து நிறுத்தி முடக்கி வைப்ப தில் போய் முடிந்திருக்கிறது. இன்னும் கூடு தலாக, வரலாற்று ஆய்வில் இதுகாறும் நிலவி வந்த சுதந்திரமான, அறிவார்ந்த செயல்பாடுகளைச் சீர்குலைத்து இழி வுபடுத்தவும், இந்திய சமூகத்தின் கடந்த காலம் பற்றிய வரலாற்றுப் புரிதலை மழுங்க டித்து மறுதலிக்கவும் அனைத்து விதமான சூழ்ச்சிகளும் ஆட்சியாளர்களால் மேற் கொள்ளப்படுகின்றன.  

இத்தகைய தீங்கு நிறைந்த செயல் பாடு விதவிதமான வடிவங்களில் நடை பெறுகிறது.  சில நேரங்களில் இத்தகு போக்கு அரசியல் நடவடிக்கையாக அரங் கேற்றப்படுகிறது.  வேறு சில சமயங்களில் கல்விப் புலம் சார்ந்த ஆய்வுகளை மேற் கொள்ளும் அறிவுசார் நிறுவனங்களை அப்படியே இழுத்து மூடுவதாக அமைந்துள்ளது.  அண்மை நிகழ்வாக, பள்ளிக் குழந்தைகளின் பாடப் புத்தகங்க ளைத் தணிக்கை செய்வது, இடைக்காலத் திய நிகழ்வுகளை இந்திய வரலாற்றுப்  பாடத் திலிருந்து முழுவதுமாக அகற்றுவது, பள்ளிக் கல்வியைப் போட்டித் தேர்வுக ளின் தன்மைக்கு வெட்டிச் சுருக்குவது, வர லாற்றுக் கல்வியின் பாடத் திட்டத்தை, மிகவும் கேள்விக்குரிய தன்மையில், பெரும்பான்மை சமூகத்தின் எண்ணங்க ளுக்குச் சாதகமாகத் திருத்தி அமைப்பது என்று பல்வேறு வடிவங்களில் ஆட்சியா ளர்களால் செயல்படுத்தப்படுகிறது.  இந்த  ஒவ்வொரு நடவடிக்கைக்கும் பின்னால் ஒளிந்திருப்பது ஆளும் தரப்பினரின் வகுப்புவாதச் சிந்தனை தான் என்பது யாவரும் அறிந்ததே. 

நியூஸ் கிளிக் இணைய இதழின்  நூல் அறிமுகம் பகுதியிலிருந்து  தமிழ் வடிவம்: கடம்பவன மன்னன்