- நீதிக்கட்சியை சேர்ந்த அழகிரிசாமி என்பவரால் சிறு வயதிலேயே ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தவர் கலைஞர். அதனாலேயே தன் மகனுக்கு அழகிரி என்று பெயரிட்டார்.
- கலைஞர் முதன்முதலில் வசனம் எழுதியத் திரைப்படம் 1947 ஆம் ஆண்டில் வெளிவந்த ராஜகுமாரி. இதுவே எம்.ஜி.ஆர் முதன்முறையாகக் கதாநாயகனாக நடித்தத் திரைப்படம் ஆகும்.
- 1950 ஆம் ஆண்டு காலகட்டத்திலிருந்து 1970 ஆம் ஆண்டு வரை தமிழ்த்திரையுலகில் கோலோச்சிய எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி கணேசன் ஆகியோருக்கு மாபெரும் வெற்றிப்படங்களை அளித்தவர் கலைஞர். குறிப்பாக சொல்ல வேண்டுமானால் எம்.ஜி.ஆருக்கு மலைக்கள்ளன், மந்திரிக்குமாரி. சிவாஜிக்கு பராசக்தி, மனோகரா.
- 1947 ஆம் ஆண்டில் ராஜகுமாரித் தொடங்கி 2011 ஆம் ஆண்டில் பொன்னர் சங்கர் வரை சுமார் 64 வருடங்கள் திரையுலகில் கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு என்றுப் பலத்துறைகளிலும் பணியாற்றினார் கலைஞர்.
- டாக்டர் கலைஞர் கடைசியாக வசனம் எழுதியத் தொலைக்காட்சி தொடர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய “ஶ்ரீ ராமானுஜர்”. அதை எழுதியப் போது அவருடைய வயது 92.
- கலைஞர், 10 சமூக நாவல்களையும், 6 சரித்திர நாவல்களையும், 21 நாடகங்களையும் எழுதியுள்ளார். மேலும், “இனியவை 20” என்ற பெயரில் ஒரு பயண நூலையும் எழுதியுள்ளார்.
- கலைஞர் பணியாற்றிய தமிழ்த் திரைப்படங்களின் எண்ணிக்கை 69.
- கலைஞர் கதை வசனத்தில் எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்தப் திரைப்படங்களின் எண்ணிக்கை 9.
- கருணாநிதிக்கு “கலைஞர்” என்ற பட்டத்தை வழங்கியவர் “நடிகவேள்” எம்.ஆர்.ராதா. தூக்குமேடை என்ற நாடகத்தைப் பார்த்த பின்பு அந்தப் பட்டத்தை வழங்கினார்.
- கலைஞர் தம் வாழ்நாளில் 13 முறை சட்டசபைத் தேர்தலில் பங்கேற்று, 13 முறையும் வெற்றி வாகை சூடினார்.
- 1957லிருந்து சட்டமன்ற உறுப்பினராக 60 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றியக் கலைஞர், குறுகியக் காலம் சட்டமேலவை உறுப்பினராகவும் (MLC) இருந்துள்ளார்.
- கலைஞர் முதன் முதலாக சட்ட மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது, அவருடைய வயது 33.
- கலைஞர் முதன் முறையாக முதலமைச்சராகப் பதவியேற்ற போது, அவருடைய வயது 45.
- கலைஞர் சட்டமன்றப் பேரவையில் சட்டமன்றக் கட்சிக் கொறடா, எதிர்க்கட்சித் துணைத்தலைவர், எதிர்க்கட்சித் தலைவர், பொதுப்பணித்துறை அமைச்சர், முதலமைச்சர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.
- முதன் முதலாக கலைஞர் சட்டமன்ற உறுப்பினராகப் போட்டியிட்டு வென்றத் தொகுதி குளித்தலை (1957). இரண்டாவது முறையாக வென்றது தஞ்சாவூர் தொகுதியில் (1962).
- இரண்டாவதுத் தேர்தலில் (தஞ்சாவூர் தொகுதி, 1962) ஒரு சுவாரசியமான வேடிக்கைத் தகவல் என்னவென்றால், அவர் பிரச்சாரத்தைத் தொடங்கியபோது, அவர் முதன் முதலாக வாக்கு சேகரிக்க சென்றதுத் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரசை சேர்ந்த பரிசுத்த நாடார் வீட்டிற்குத்தான்.
- கலைஞர் மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வென்றத் தேர்தல், 1980ல் அண்ணாநகர்த் தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுகவை சேர்ந்த ஹண்டேயை வெறும் 699 வாக்கு வித்தியாசத்தில் வென்றார்.
- கலைஞர் மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றத் தேர்தல், 2016 ஆம் ஆண்டில் திருவாரூர் தொகுதியில் 68,366 வாக்கு வித்தியாசத்தில் வென்றார். அந்தத் தேர்தலில் இதுவே மாநிலத்திலேயே மிக அதிக வாக்குவித்தியாசமாக இருந்தது.
- கலைஞர் முதன்முதலாக சட்டப்பேரவையில் பேசி விட்டு அமர்ந்தபோது, அப்போதைய சட்டப்பேரவைத் தலைவராக செயலாற்றிய கிருஷ்ணாராவ், கலைஞரின் உரையை “very good speech” என்றுப் பாராட்டினார்.
- சட்டசபை விவாதங்களில் சிறப்பாகப் பங்காற்றியவர் கலைஞர். ஒருமுறை தாழ்த்தப்பட்டவர்கள் கோவில் கருவறைக்குள் செல்ல அனுமதியில்லை என்றுக்கூற, அப்போது இந்திய தேசியக் காங்கிரசை சேர்ந்த அனந்த நாயகி,
- கோவிலுக்கே செல்லாத கருணாநிதி இதைப்பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்? என்றுக் கேட்டார். உடனே கலைஞர் அவர்கள் “குற்றவாளிகள் மட்டுமா கோர்ட்டுக்கு செல்கிறார்கள். வாதாடுபவர்களும் சென்றுத்தானே ஆக வேண்டியிருக்கிறது” என்று பதிலளிக்க சமயோசிதமான அவருடைய பதிலைக்கேட்டு சபை ஆரவாரித்தது.
- 1974 ஆம் ஆண்டுக்கு முன்பாக சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய நாட்களில், மாநிலங்களில் ஆளுநர்கள் தான் கொடியேற்றி வந்தார்கள். அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியிடம், இதுகுறித்து பேசி, மாநிலங்களில் முதல்வர்களே கொடியேற்றலாம் என்ற நியதியைக் கொண்டு வந்து, 1974 சுதந்திரத்தன்று, சென்னை ஜார்ஜ் கோட்டையில் முதன் முதலாகக் கொடியேற்றினார் கலைஞர்.
- அண்ணா மறைவுக்குப்பிறகு முதல்வரான போதுத் தான் உடன் பிறப்பே என முரசொலியில் கடிதம் எழுத ஆரம்பித்தார் கலைஞர். அதன்பின் 1971 முதல், என் உயிரினும் மேலான உடன் பிறப்பே எனப் பேசவும் தொடங்கினார்.
- “உடன்பிறப்பே” என்றத் தலைப்பில் கலைஞர் எழுதியக் கடிதத் தொடர், உலகின் மிக நீண்டத் தொடர்களில் ஒன்று. முரசொலி ஆரம்பித்த காலத்திலிருந்து 2016 ஆம் ஆண்டில் தன் உடல் நிலைக்குன்றும் வரை தொடர்ச்சியாக எழுதினார். அப்படி அவர் எழுதியக் கடிதங்களின் எண்ணிக்கை ஏழாயிரத்துக்கும் மேல்.
- சங்கத்தமிழ், தொல்காப்பிய உரை, இனியவை இருபது, கலைஞரின் கவிதை மழை என 150க்கும் மேலான நூல்களை எழுதியுள்ளார் கலைஞர். அவர் உடன்பிறப்புக்கு எழுதியக் கடிதங்கள் பன்னிரண்டு தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.
- “நெஞ்சுக்கு நீதி” என்றத் தலைப்பில் தன் வாழ்க்கை வரலாற்றை “முரசொலி” நாளிதழிலும், “குங்குமம்” வார இதழிலும் எழுதினார் கலைஞர்.
- ஒரு சினிமா வசனகர்த்தாவாக கலைஞருக்கு மாபெரும் புகழைக் கொடுத்தது “பராசக்தி” திரைப்படம் தான். வசனங்களுக்காகவே அந்தத் திரைப்படம் இன்றளவும் பேசுப் பொருளாக உள்ளது.
- கல்லக்குடி ரயில் மறியல் போராட்டம் தான் கலைஞரை அரசியலில் ஒரு முக்கியத் தலைவராக பரிணமிக்க செய்தது.
- சென்னையில் மிக பிரபலமான ஜெமினி மேம்பாலம், கலைஞரின் ஆட்சிக்காலத்தில் வெறும் 21 மாதங்களில் கட்டப்பட்டு, 1973 ஜூலை 1 ஆம் தேதி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.