மார்க்சியம் இந்தியாவை சிதைத்து விட்டது என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சமீபத்தில் வரலாற்றுக்கு புறம்பான கருத்தினை பேசி இருந்தார். மார்க்சியமும், கம்யூனிஸ்ட் இயக்கமும் நவீன இந்தியாவின் உருவாக்கத்தில் மகத் தான பங்களிப்பை செய்துள்ளதை எவரா லும் மறுக்க முடியாது. நவீன இந்தியா, எல்லோருக்குமான இந்தியா எவ்வாறு இருக்க வேண்டும் என முற்போக்கு கருத் துக்களை முன் வைத்ததோடு கம்யூ னிஸ்ட்டுகள் நின்று விடவில்லை. அதற்கான களச்செயல்பாட்டையும் ஒருங்கே முன் எடுத்தனர். அதற்கான வரலாற்றுக் குறிப்புக ளை, மறைக்கப்படுகிற, மறைக்க முற்படுகிற குறிப்புகளை மீண்டும் உரத்துப் பேசுகிற தருணமாக இது அமைந்திருக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் உரு வான 20ஆம் நூற்றாண்டின் துவக்க காலத்தி லேயே அறிவியல்ரீதியான, பொருள்முதல் வாத அடிப்படையிலான ஆய்வினை வழங்கி வந்ததோடு, விடுதலை பெற்ற இந்தி யாவில் மக்களின் வாழ்நிலை மற்றும் அரசியல் கட்டமைப்புகளை மேம்படுத்துவ தற்குத் தேவையான தீர்வுகளையும் வழங்கி வந்துள்ளது. கம்யூனிஸ்ட் கட்சி உருவாகிய தருணத்தில் இருந்தே, தேசிய இயக்கத் தின் நிகழ்ச்சி நிரலின் மீது செல்வாக்கு செலுத்தத் துவங்கியது. 1921ஆம் ஆண்டு அகமதாபாத் நகரில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்திலேயே பிரிட் டிஷ் ஆட்சியிடமிருந்து முழுமையான விடு தலை தேவை என்ற கருத்தை முன் வைக்கும் தீர்மானம் ஒன்றை மவுலானா ஹஸ்ரத் மொஹானி, சுவாமி குமாரனந்தா ஆகியோர் முன்வைத்தனர்.
அனைவரையும் உள்ளடக்கிய இந்தியா...
சுதந்திர இந்தியா ஒரு மதச்சார்பற்ற, ஜனநாயக குடியரசாக இருக்க வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியின் கண்ணோட் டம். இதற்கு உடன்பட்ட அதே நேரத்தில், நாம் பெறும் அரசியல் சுதந்திரத்தை, ஒவ் வொரு இந்தியரின் சமூக பொருளாதார, சுதந்திரத்தை சாத்தியமாக்கும் திறன் பெற்ற சோசலிசத்தை நோக்கி விரிவுபடுத்த வேண்டுவது அவசியம் என்பதாக கம்யூ னிஸ்ட்டுகளின் தொலைநோக்கு அமைந்து இருந்தது. முஸ்லீம் லீக் ஒரு இஸ்லாமிய அரசை கோரியது எனில், ஆர்எஸ்எஸ் இந்து ராஷ்டிராவை கோரியது. அனைவரையும் உள்ளடக்கிய இந்தியா என்ற கருத்தாக்கம் உருப்பெறுவதில் கம்யூனிஸ்ட் கட்சி மிக முக்கியமான பங்கினை வகித்தது.
முதலாவதாக, கம்யூனிஸ்ட்டுகள் நடத் திய நில கோரிக்கைக்கான போராட்டங் கள். நிலச் சீர்திருத்தங்கள் தொடர்பான பிரச்சனையை மைய நிலைக்கு கொண்டு வந்ததாகும். இதன் விளைவாக ஜமீந்தாரி முறை மற்றும் அபரிமிதமான நிலக் குவிப்பு ஆகியவற்றின் நிலப்பிரபுத்துவ அடி மைத்தனத்திலிருந்து கோடிக்கணக்கான மக்களை விடுவித்திடும் முழக்கத்தையும், போராட்டங்களையும் முன் எடுத்தது. இத்தகு போராட்டங்கள், கிராமப்புற இந்தி யாவில் இருந்த சுரண்டப்பட்ட பிரிவினரை விடுதலை இயக்கத்திற்குள் ஈர்த்தது.
இரண்டாவதாக, சுதந்திர இந்தியா வில் மாநிலங்களின் மொழிவாரி மறு சீரமைப்பிற்கான மக்கள் போராட்டங்க ளுக்கு கம்யூனிஸ்ட் கட்சி தலைமை தாங்கி யது. ஆகவே, ஓரளவிற்கு நியாயமான வகை யிலும், அறிவியல் மற்றும் ஜனநாயகப் பூர்வமான வகையிலும், இன்றைய இந்தி யாவின் அரசியல் வரைபடத்தை உரு வாக்குவதற்கு அதுவே முக்கிய காரண மாக அமைந்து இருந்தது.
பன்முகத்தன்மையை பாதுகாக்கும் மதச்சார்பின்மை
மூன்றாவதாக, மதச்சார்பின்மை குறித்த இடதுசாரிகளின் உறுதிப்பாடு இந்தி யாவின் யதார்த்தத்தை அங்கீகரிப்பதை அடிப்படையாகக் கொண்டது. 1920களில் இனவாதக் கலவரங்கள் எழும்பிய பின்ன ணியில், வகுப்புவாதப் பிரிவுக்கு ஒரே மாற்று மருந்து ஏகாதிபத்தியத்திற்கும், சுரண்டும் வர்க்கங்களுக்கும் எதிரான, அனைத்து சாதிகள் மற்றும் சமூகங்களைச் சார்ந்த உழைக்கும் வர்க்க ஒற்றுமையே என்று கட்சியின் சார்பாக எம்.என்.ராய் எழுதினார்.
இந்தியாவின் அபரிமிதமான பன்முகத் தன்மை மட்டுமின்றி இந்த பன்முகத் தன்மைக்குள் நிலவும் பொதுவான பிணைப்புகளை வலுப்படுத்துவதன் மூலம் மட்டுமே இந்த ஒற்றுமையை பராமரிக்க முடியும். மதச்சார்பின்மை என்பதற்கு அர சியலில் இருந்து மதத்தைப் பிரிப்பது என்று தான் பொருள். இதன் பொருள் தனிநபர் தனது மத நம்பிக்கையைத் தேர்ந்தெ டுப்பதை அரசு எவ்வித தயக்கமின்றி பாது காக்கும் அதே நேரத்தில், அது எந்த ஒரு மதத்தின் மீதான சார்பையும் வெளிப் படுத்தவோ, விரும்பவோ கூடாது. சுதந்தி ரத்திற்குப் பின்பு நடைமுறையில், மதச்சார் பின்மை என்பது அனைத்து மதங்களையும் சமமாகக் கருதுவது என்பதாக இது குறுக்கப்பட்டது.
பெரும்பான்மையினரின் மத நம்பிக்கையை நோக்கிய உள்ளார்ந்த சார்பு இதற்குள் பொதிந்துள்ளது. உண்மை யில் இதுதான், இன்றைய வகுப்புவாத மற்றும் அடிப்படைவாத சக்திகளுக்குத் தீனி போடுவதாகவும் அமைகிறது. இந்திய கம்யூனிஸ்ட்டுகள் மிகப் பெரும் வர்க்கப் போர்களை வழிநடத்திய பெருமைமிக்க சாதனையைக் கொண்ட வர்கள். தேச விடுதலைக்காகவும், தொழி லாளி வர்க்கம், விவசாயிகள் மற்றும் பல லட்சக்கணக்கான ஒடுக்கப்பட்ட பிரிவின ரின், சுரண்டப்பட்ட வர்க்கங்களின் பாது காப்பிற்காகவும் மகத்தான தியாகங்களைச் செய்தவர்கள். இந்தியாவில் புரட்சிகர இயக்கத்தின் மிகச்சிறந்த மரபுகளை பிரதி நிதித்துவம் செய்பவர்களாகவும் கம்யூ னிஸ்ட்டுகள் திகழ்கின்றனர். மார்க்சியம் – லெனினியம் என்பது படைப்பூக்கம் மிக்க தொரு அறிவியல் ஆகும். இந்தியாவில் சுதந்திரப் போராட்டத் தில் கம்யூனிஸ்ட்டுகள் ஒரு முக்கியப் பங்கை வகித்த போதிலும், தலைமைப் பொறுப்பை அவர்களால் ஏற்க முடிய வில்லை. சுதந்திரத்திற்குப் பின், கேரளா வில் 1957ஆம் ஆண்டில் உருவான முதல் கம்யூனிஸ்ட் அரசாங்கம், பின்னர் மேற்கு வங்கத்தில் உருவான இடது முன்னணி அரசுகள், திரிபுராவில் சிபிஐ(எம்) தலை மையிலான இடது முன்னணி அரசு ஆகிய வற்றோடு, இந்திய நாடாளுமன்றத்தில் அதன் பங்களிப்பு ஆகியவையும், நவீன இந்திய அரசியலின் பரிணாம வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியது.
சுரண்டல், அடிமைத்தனம், சாதி ஒழிப்புக்கு...
இதே காலப்பகுதியில், சுரண்டப்படும் வர்க்கங்களின், குறிப்பாக தொழிலாளி வர்க்கம் மற்றும் விவசாயிகளின் போராட் டங்களை முன்நின்று நடத்தும் முக்கிய சக்தியாக சிபிஐ(எம்) இருந்து வருகிறது. இந்தப் போராட்டங்கள் தான் பொது விவாதத்திலிருந்து எவ்வகையிலும் அழித்துவிட முடியாத வகையில் முக்கிய மான பல பிரச்சனைகளை தேசிய அளவி லான விவாதப் பொருளாக முன்னுக்கு கொண்டு வந்தன. தொடர்ந்து அதைச் செய்தும் வருகின்றன. 1931 மார்ச் மாதம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது செயல் மேடைக்கான வரைவு திட்டத்தை கொண்டு வந்தது. அதில், வேலை நாளை வயது வந்தோர்களுக்கு 8 மணி நேரமாகவும், நிலக்கரிச் சுரங்கங் கள் உள்ளிட்டுஅனைத்து அபாயகரமான தொழில்களிலும் வேலை நாளை 6 மணி நேரம் எனவும் அறிமுகப்படுத்துவது; தொழிற்சங்கங்கள் அமைப்பது, பெண் கள், இளைஞர்கள், ஆண்களுக்கு சமமான வேலைக்கு சமமான ஊதியம் வழங்குவது; கட்டாய ஒப்பந்த தொழிலாளர் முறை, தொழிலாளர்களை சட்டப்பூர்வமாக அடி மைத்தனத்தில் வைத்திருக்கும் முறை ஆகியவற்றை முழுமையாக ரத்து செய்வது என பிரகடனம் செய்தது. மேலும் அத்திட்டத்தில், சாதி அமைப்பை எவ்வித இரக்கமின்றி முற்றிலு மாக அழித்தொழிப்பது மட்டுமே, விவசாயப் புரட்சி மட்டுமே, பிரிட்டிஷ் ஆட்சியை பல வந்தமாக தூக்கி எறிவது மட்டுமே, தீண்டத் தகாத அடிமைகளான உழைக்கும் மக்க ளின் முழுமையான சமூக, பொருளாதார, கலாச்சார, சட்டரீதியான விடுதலைக்கு வழி வகுக்கும் என அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறது.
பெண்கள், தலித்துகள் உரிமைக்கு...
பெண் விடுதலை குறித்தும் திட்டம் விவ ரிக்கிறது. இந்தியாவிலுள்ள பெண்கள் அரை அடிமை நிலையில் இருந்து வருகின்ற னர். உழைக்கும் பெண்களுக்கு தங்களது எதிர்காலத்தினை தீர்மானிப்பதற்கான எந்தவிதமான உரிமையும் இல்லை. பொது விவகாரங்களில் பங்கேற்கும் உரிமையும் அவர்களுக்கு இல்லை. தங்களது சக மனிதர்களை சுதந்திரமாகவும், வெளிப் படையாகவும், சந்திக்கவோ, தெருக்க ளில் சுதந்திரமாக நடமாடவோ அவர்க ளுக்கு உரிமை இல்லை. இந்நிலையில் பெண்களின் சமூகரீதியான, பொருளா தாரரீதியான, சட்டரீதியான சமத்துவத் திற்காகவே இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் போராடி வருகிறது. தொழிலாளர்கள், விவசாயத் தொழிலா ளர்களின் உரிமைகளுக்காக கம்யூனி ஸ்ட்டுகள் எப்போதெல்லாம் போராட்டங்க ளை நடத்துகிறார்களோ அப்போதெல்லாம் இந்த வர்க்கங்களிடையே தலித்துகளின் கோரிக்கைகளையும் அவர்கள் உணர்வுப் பூர்வமாக எழுப்பி வந்தனர். உதாரணமாக, 1928ஆம் ஆண்டு பம்பாய் நகரில் நடந்த தொழிலாளி வர்க்கப் போராட்டத்தின் போது துணி நெய்யும் பிரிவில் பணிபுரிய தலித்துகள் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை கம்யூனிஸ்ட்டுகள் எழுப்பினர். இப்பிரிவில் நூல் சுற்றும் கரு வியை இயக்கும் போது அதில் பணிபுரி யும் தொழிலாளி தனது எச்சிலைத் தொட்டுத் தான் நூலை ஈரப்படுத்த வேண்டியிருக்கும்.
இந்த கோரிக்கையை எழுப்பியதானது தலித்துகள் பலரையும் கம்யூனிஸ்ட் இயக் கத்திற்குள் கவர்ந்திழுத்தது. கம்யூனிஸ்ட்டு களின் இத்தகைய நடவடிக்கைகளை நேரடியாக பார்த்த பிறகே டாக்டர் அம்பேத் கரின் நெருங்கிய சகாவான ஆர்.பி.மோரே கம்யூனிஸ்ட் இயக்கத்தை நோக்கி கவரப் பட்டார். மகத் தலித் மாநாடு, சத்யாகிரகம் ஆகியவற்றை நடத்தியவரும் அவரே. இந்தி யாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை வளர்த் தெடுத்த முதல் தலைமுறை கம்யூனி ஸ்ட்டுகளில் மோரேயும் ஒருவர். கம்யூனிஸ்ட் இயக்கம் உருவான காலம் தொட்டு இன்று வரையிலும், நாளையும் நவீன சமூகத்திற்கான போராட்டங்களை, சமதர்ம சமூகத்திற்கான போராட்டங்களை முன் எடுக்கும். ஒன்றை தெளிவாக எடுத்து வைக்கிறீர்கள் ஆளுநரே, உங்களது சித்தாந்த எதிரி மார்க்சியம் தான் என்பதை. சகலவிதமான ஒடுக்குமுறைகளுக்கும் ஆணிவேராக இருக்கும் சுரண்டும் வர்க்கத் தை தோற்கடிக்கும் வல்லமை உழைக் கும் வர்க்கத்திற்கு உண்டு. உழைக்கும் வர்க் கத்தின் பேராயுதம் மார்க்சியம். அது வளரும் அறிவியல். அதற்கு அழிவேதும் இல்லை கார்ப்பரேட் - பாசிசத்தின் தூதுவரே.
தொகுப்பு: கே.ஜி.பாஸ்கரன்
ஆதாரம்: இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டுப் பயணம் மற்றும் அந்நூலின்
தோழர் சீத்தாராம் யெச்சூரியின் அணிந்துரை.